நமையாண்டிடும்
வலிமையென்னுமோர் நாள்வரட்டுமே!
சுமையாகவே
சினமென்பதை துரத்திடுவமே!
எமையென்றுமே
பொறுமைமட்டுமே இயக்கட்டுமே!
எந்தவேளையும்
குறைகூறுதல் எதிர்த்திடுவமே!
அந்தகாலமே
இங்குமலரும் அமைதிமட்டுமே!
தவறென்பதும்
சிலவேளையில் தவிர்த்தலில்லையே!
மறந்தேயதைப் பொறுத்தருள்வது மாந்தநெஞ்சமே!
அதனால்
சினமதை என்றுமே சிறையில் வைத்தே
மனமதைக் காப்போம் மண்ணிலே,
மனத்தினில் அன்பையே மையமாய் வைத்துமே!
No comments:
Post a Comment