முயற்சிப்போரை வளர விடுங்கள் – அன்பு ஜெயா பா வகை: கழி நெடிலடி ஆசிரிய பதினொன்றாம் சீர் மண்டிலம்.

ஆற்றலில்லா மாந்தருமே ஆற்றல்தான் பெற்றிடவே

    அன்புடனே முயன்றிடுதல் ஏற்பீர் – அன்றேல்

    அவர்களையே குறைகூறல் தவிர்ப்பீர்!

ஏற்றமுடன் எல்லோரும் வாழ்ந்திடவே மாந்தரெல்லாம்

    இயன்றதொருப் பங்கினையே தாரும் – வையம்

    எல்லோர்க்கும் இன்பமென மாறும்!    (1)

 

ஏற்றமது கண்டிடவே முயல்பவரின் உழைப்பிற்கே

    இயன்றவரை உதவிதன்னைச் செய்வீர் – அன்றேல்

    ஏளனமாய்ப் பேசுவதைத் தவிர்ப்பீர்!

போற்றவொரு மனமிருந்தால் போற்றுங்கள் முயற்சியினைப்

    போரிட்டுத் தோற்றோரின் பெருமை – அதுவே

    போரிட்டோர் மீண்டெழுப்பும் திறமை!     (2)

------------------------------------------

 

No comments: