ட்ரம்பை சந்தித்த இந்திய பிரதமர் .. இருவருக்கும் இடையே நடந்த உரையாடல் என்ன?
செர்னோபில் அணுஉலையை ரஸ்ய ஆளில்லா விமானம் தாக்கியது
ஜேர்மனியில் பொதுமக்கள் மீது காரால் மோதிய ஆப்கானை சேர்ந்த புகலிடக்கோரிக்கையாளர்- 30 பேர் காயம்
உக்ரைன் குறித்த அமெரிக்காவின் கொள்கைகளில் மாற்றம்?
புட்டினுடன் டிரம்ப் தொலைபேசி உரையாடல் - உக்ரைனிற்கு துரோகமிழைக்கின்றதா அமெரிக்கா என சர்வதேச அரசியல் அரங்கில் கேள்வி
ட்ரம்பை சந்தித்த இந்திய பிரதமர் .. இருவருக்கும் இடையே நடந்த உரையாடல் என்ன?
14 Feb, 2025 | 11:07 AM
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையே இன்று வெள்ளைமாளிகையில் சந்திப்பு இடம்பெற்றது
அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்தித்த பிரதமர் மோடி வர்த்தகம் வரிக் கொள்கைகள் சட்டவிரோத குடியேற்றம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்.
வெள்ளை மாளிகைக்கு சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ட்ரம்பை சந்தித்த பிரதமர் மோடி பரஸ்பர நட்பு பாராட்டினார். பின்னர் பிரதமர் மோடி மற்றும் அதிபர் ட்ரம்ப் இணைந்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
மோடி பேசுகையில்
’அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்களை மீண்டும் இந்தியாவிற்கே திரும்ப அழைத்துக் கொள்ள தயாராக இருக்கிறோம். எனினும் அவர்களுக்கு பின்னால் இருக்கும் சட்டவிரோத கடத்தல் கும்பலை அழிக்கும் பணியை இந்தியா- அமெரிக்கா இணைந்து மேற்கொள்ளும். இருநாடுகளுக்கும் பரஸ்பரமாக பயனளிக்கும் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்த முயற்சிகள் எடுக்கப்படும்.
எண்ணெய் எரிசக்தி வர்த்தகம் அணுசக்தி உற்பத்தி பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற இருக்கிறோம்.
இந்தியா நடுநிலையானதா?
நான் எப்பொழுதும் ரஷ்யா மற்றும் உக்ரைன் உடன் நெருங்கிய நட்பு பாராட்டிவருகிறேன். இருநாடுகளின் தலைவர்களையும் சந்தித்துள்ளேன். பலர் இந்தியா இந்த விவகாரத்தில் நடுநிலையாக இருக்கிறது என்று தவறுதலாக நினைத்துகொண்டிருக்கிறார்கள்.
ஆனால் இந்தியா நடுநிலையாக இல்லை என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன். இந்தியா அமைதியின் பக்கம் இருக்கிறது. ரஷ்யா அதிபர் புடின் என்னுடன் இருந்தபோது ’இது போருக்கான நேரம் இல்லை’ என்று செய்தியாளர்களிடம் நான் கூறினேன். இன்றும்கூட போருக்கான தீர்வுகளை நாம் போர்க்களத்தில் காணமுடியாது என்பதுதான் எனது நம்பிக்கை. போருக்கான தீர்வு என்பது இரு நாடுகளும் ( உக்ரைன் இரஷ்யா) அமர்ந்து அது குறித்து விவாதிக்கும்போதுதான் கிடைக்கும்.
இந்தவகையில் காசா மற்றும் உக்ரைன் விவகாரங்களில் ட்ரம்ப் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை பாராட்டுகிறேன். எனது ஆதரவை தெரிவிக்கிறேன். “
கௌதம் அதானிக்கு எதிரான விஷயங்கள் விவாதிக்கப்பட்டதா?
மேலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான சந்திப்பில் தொழிலதிபர் கௌதம் அதானிக்கு எதிரான விஷயங்கள் விவாதிக்கப்பட்டதா என்று செய்தியாளர்கள் கேட்டபோது
“ இந்தியா என்பது ஒரு ஜனநாயகநாடு மற்றும் எங்களது கலச்சாரம் “ ( இந்த உலகம் ஒரே குடும்பம்) .இந்த உலகத்தையே நாங்கள் ஒரே குடும்பமாகதான் கருதுகிறோம். ஒவ்வொரு இந்தியர்களும் என்னுடையவர்கள் என்பதை நான் நம்புகிறேன். இரு நாடுகளின் இரண்டு தலைவர்களும் இதுபோன்ற தனிப்பட்ட பிரச்னைகளை பற்றி ஒருபோதும் விவாதிப்பதில்லை.” என்று பதிலளித்தார். .
ட்ரம்ப் பேசும்போது...
”இவர் ( நரேந்திர மோடி) என்னைவிட மிகச்சிறந்த பேச்சுவார்த்தையாளர். இந்தியாவுடன் இணைந்து மிகப்பெரிய வளர்ச்சிக்கான மாற்றங்களை மேற்கொள்ள ஆர்வமாக இருக்கிறோம். மேலும் அமெரிக்காவில் உள்ள பயங்கரவாதி தஹாவூர் ராணா விரைவில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார். பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரப்படுத்தும்.
பிரிக்ஸ் கூட்டமைப்பு டாலருக்கு நிகராக புதிய நாணயத்தை உருவாக்க நினைத்தால் அந்த கூட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கு 100 விழுக்காடு வரிகள் விதிக்கப்படும். ஜி8 கூட்டமைப்பில் இருந்து ரஷ்யாவை விலக்கியது தவறு. எனவேஇ மீண்டும் ரஷ்யா ஜி8 கூட்டமைப்பில் இணைவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளே அமெரிக்கா பொருட்களுக்கு அதிக வரிகளை விதிக்கிறது. அமெரிக்கா பொருட்களுக்கு எந்த நாடு அதிக இறக்குமதி வரியை விதிக்கிறதோ அதற்கு நிகராக அமெரிக்காவும் வரியை விதிக்கும். ” என்று தெரிவித்தார்.
மேலும் இதற்கான சட்ட ஆவணத்தில் கையெழுத்திட்ட ட்ரம்ப் அமெரிக்காவின் நட்பு நாடுகளே தங்களுக்கு எதிராக இருப்பதாக ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். மேலும் மற்ற நாடுகளை விட இந்தியாவே அமெரிக்காவின் பொருட்களுக்கு அதிக வரிகளை விதிப்பதாக சூசகமாக ட்ரம்ப் தெரிவித்தார். நன்றி வீரகேசரி
செர்னோபில் அணுஉலையை ரஸ்ய ஆளில்லா விமானம் தாக்கியது
14 Feb, 2025 | 02:31 PM
பெருமளவு வெடிபொருட்கள் நிரம்பிய ஆளில்லா விமானமொன்று செர்னோபில் அணுஉலை மீது மோதியுள்ளது என உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
செர்னோபில் அணுஉலையின் அழிக்கப்பட்டநான்காவது உலையை பாதுகாக்கும் பாதுகாப்பு கவசத்தைவெடிமருந்துகள்நிரம்பிய ஆளில்லா விமானம் தாக்கியது என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஆளில்லா விமானம் தாக்குவதை காண்பிக்கும் வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். சிதைவுகளையும் வீடியோவில் காணமுடிகின்றது.
நன்றி வீரகேசரி
ஜேர்மனியில் பொதுமக்கள் மீது காரால் மோதிய ஆப்கானை சேர்ந்த புகலிடக்கோரிக்கையாளர்- 30 பேர் காயம்
14 Feb, 2025 | 07:41 AM
ஜேர்மனியின் மியுனிச் நகரில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் பொதுமக்கள் மீது காரை மோதி மேற்கொண்ட தாக்குதலில் 30க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
ஜேர்மனியில் அடுத்தவார தேர்தலிற்கு முன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாதுகாப்பு மாநாட்டிற்காக அமெரிக்க துணை ஜனாதிபதி உக்ரைன் ஜனாதிபதி உட்பட முக்கிய தலைவர்கள் வருகைதருவதற்கு இரண்டு மணிநேரத்திற்கு முன்னதாக இந்த தாக்குதல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களிற்கு பாதுகாப்பளித்துக்கொண்டிருந்த பொலிஸ்காரர்களை நோக்கி சென்ற வெள்ளை கார் பின்னர் வேகமாக சென்று பொதுமக்கள் மீது மோதியுள்ளது.
24வயது நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். நன்றி வீரகேசரி
உக்ரைன் குறித்த அமெரிக்காவின் கொள்கைகளில் மாற்றம்?
13 Feb, 2025 | 12:40 PM
உக்ரைன் தொடர்பில் அமெரிக்க தனது வெளிவிவகார கொள்கைகளில் மாற்றங்களை அறிவித்துள்ளது.
உக்ரைன் 2014இல் அதன் எல்லைகள் காணப்பட்ட நிலைக்கு மீண்டும் திரும்புவது சாத்தியமற்ற விடயம் என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர்பீட்டே ஹெக்செத் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் நேட்டோவில் இணைவது பேச்சுவார்த்தைகள் மூலம் சாத்தியமாக கூடிய விடயமில்லை என தெரிவித்துள்ள அவர்உக்ரைனின் பாதுகாப்பை ஐரோப்பா உறுதி செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை ரஸ்ய ஜனாதிபதியுடன் தொலைபேசி மூலம் நீண்டநேரம் பயனுள்ள உரையாடலை மேற்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை உடனடியாக ஆரம்பிக்கவேண்டும் என இருவரும் இணங்கியதாக அவர் தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
புட்டினுடன் டிரம்ப் தொலைபேசி உரையாடல் - உக்ரைனிற்கு துரோகமிழைக்கின்றதா அமெரிக்கா என சர்வதேச அரசியல் அரங்கில் கேள்வி
Published By: Rajeeban
14 Feb, 2025 | 03:11 PM
ரஸ்ய உக்ரைன் யுத்தம் குறித்து உக்ரைன் இல்லாமல் அமெரிக்காவும் ரஸ்யாவும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் என அமெரிக்க ஜனாதிபதி அறிவித்துள்ளதை தொடர்ந்து உக்ரைனிற்கு அமெரிக்கா துரோகமிழைக்கின்றதா என்ற கேள்வி சர்வதேச அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.
எனினும் இதனை மறுத்துள்ள அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் பீட்டர் ஹெக்செத் அமெரிக்கா உக்ரைனிற்கு துரோகமிழைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ரஸ்ய ஜனாதிபதியை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
மில்லியன் கணக்கான உயிர்களை காப்பாற்றுவதற்காக நான் ரஸ்யாவுடன் உடனடியாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டிரம்பின் இந்த கருத்திற்கு சர்வாதிகாரத்திற்கான வெகுமதி என விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.
எனினும் இதனை நிராகரித்துள்ள அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் அது உங்களுடைய மொழி என்னுடையதில்லை இது நிச்சயமாக துரோகமில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை உக்ரைன் இல்லாமல் எந்த வித பேச்சுவார்த்தைகளும் இடம்பெறக்கூடாது என ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது.
ரஸ்யா என்பது உக்ரைனிற்கு மாத்திரம் அச்சுறுத்தல் இல்லை என்பதை நினைவில் வைத்திருப்பது அவசியம் என பிரிட்டனின் பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் ஹீலி தெரிவித்துள்ளார்.
எதிர்கால பேச்சுவார்த்தைகளில் ஐரோப்பிய ஒன்றியமும் உக்ரைனும் உள்வாங்கப்படுவது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் இல்லாமல் உக்ரைன் குறித்து பேச்சுவார்த்தைகள் இல்லை என பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் தொடர்பில் அமெரிக்க தனது வெளிவிவகார கொள்கைகளில் மாற்றங்களை அறிவித்துள்ளது.
உக்ரைன் 2014இல் அதன் எல்லைகள் காணப்பட்ட நிலைக்கு மீண்டும் திரும்புவது சாத்தியமற்ற விடயம் என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர்பீட்டே ஹெக்செத் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் நேட்டோவில் இணைவது பேச்சுவார்த்தைகள் மூலம் சாத்தியமாக கூடிய விடயமில்லை என தெரிவித்துள்ள அவர்உக்ரைனின் பாதுகாப்பை ஐரோப்பா உறுதி செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment