சிவஞானச் சுடர்
பல்வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார்
(வாழ்நாள் சாதனையாளர்)
சிட்னி -அவுஸ்திரேலியா
உடலுக்கு உரமளிக்க உடற்ப யிற்சி! -
எங்கள்
உயிருக்;கு
உயர்வுதரும் சிவத்தி யானம்!
சடப்பொருளாய் அழிந்திடுமே மனிதரின் உறுப்பு! -
உயிர்
தான்செயும்; வினையாலே எடுத்திடும் பிறப்பு!
ஆறறிவு மனிதர்களும் பக்குவம் என்று - வாழ்வில்
ஆற்றிடுவர் அரன்பணியை அறவழி நின்று
பேரறிவை
நோக்கியவர் எடுத்திடும் பயணம் - ஈற்றில்
பெரும்பயனைத் தரவைக்கும் சிவத்தி யானம்.
தியானத்தின் மூலதனம் உளத்தின் தூய்மை - புறத்
தேகத்தின் சுத்தங்கூடப் பலனைக் கூட்டும்!
மயானத்தின் அமைதிநிலை சூழலிற் தேவை - பின்
மனதும்ஒரு முகமாகிpப்
பாதையைக் காட்டும்!
தியானமென்ப தெம்மனத்தின் ஒருமுகப் பயணம்!
-அது
தெரியாததைத் தெரியவைக்கும் உள்முகப் பயணம்!
நியாயமாகப் பார்த்தாலது உணர்வின் விழிப்பை -
எம்மில்
நிலைக்கவைத்து வெளிக்கொணரும் உண்மை பலதை!
ஒருமுகமாய் உள்முகமாய் மனதை அடக்கி - நீவிர்
உறுதியுடன் பயணித்தால் அமைதி மலரும்;!
அருமருந்தாய்; விழிப்புணர்வு அன்பொடு கலந்து - எங்கள்
அகத்திலெழப் பொலிவினொளி; முகத்தினில் நிலவும்!
மனநோயை அகற்றுவதும் தியானம் அல்லவா- மேலும்
மனிதனவன் புத்திதனை வளர்க்கும் அல்லவா?
இனந்தெரியா நிம்மதியும் பிறக்கும் அல்லவா?- இது
என்றும்மன நிறைவைத்தரும் உபாயம் அல்லவா?
தியானமென்றும் இரத்தழுத்தம் தீர்க்கு மல்;லவா?-- நோயின்
தீவிரத்தை எதிர்க்கும்; சக்தி கொண்ட தல்லவா
வியாதிநீக்கி மேனிதன்னை மினுங்க வைக்குமே! - இறை
விரும்பியின்பம் தரும்நிலையும் விரைந்து கிட்டுமே!
எம்மிடையே தூங்குகின்ற இறையின் சக்தியை - நாம்
இயற்றிவரும்
தியானம் என்றும்
வெளிக்கொணருமே!
பெம்மானிடம் பத்திவைக்க வழிவ குத்திடும் - அது
பிறப்பறுத்துப் பிறக்கவைக்கும் பேரா னந்தமே!’
No comments:
Post a Comment