"ஊர்மிளா! நீ எப்படி இங்கு வந்தாய்? நீ தான் அரளி
விதையை அரைத்துக் குடித்து இறந்து விட்டாயே?நீ உயிருடன்தான் இருக்கிறாயா?" என்று கேட்டுக்
கோண்டிருந்தபோதே அவள்அந்த யூகலிப்டஸ்
மரத்தினடியில் பார்த்ததைப் போலவெள்ளை நிற
புடவையுடனும் விரித்த தலைமுடியுடனும் கண்களில்
பிரகாசமான ஒளியுடனும் மாறி விகாரமாய்ச் சிரித்தாள்.
அப்போது அதிர்ச்சியில் பெரிதாகத் திறந்த எனது வாய்,
"ஊர்மிளா......ஊர்மிள்....... ஆ......ஆ......" என்றபடியே நின்றது. கண்கள் மிரண்டு அந்த மிரட்சியுடனேயே
நின்றன. மூச்சுதிணற மூக்கிலிருந்து ஏதோ வடிய எனது
உடலிருந்து உயிர்விடை பெற்று செல்வதை என்னால் உணர முடிகிறது. அன்று ஊர்மிளாவுக்கு
தீங்கிழைத்தேன். அதற்கு தண்டனை கிடைத்து
விட்டது. இன்று ஒன்றுமறியா கற்பகத்தையும் அல்லவா ஏமாற்றிச் செல்கிறேன் என்று நினைக்கும் போதே என்கண்ககளில் இருந்து நீர் வடிய... எங்கோ..................…..
எங்கோ................................தொலைவாக........................................எங்கேயோ..............................................போய்க்கொண்டே...............................................................
(முற்றும்)
-சங்கர சுப்பிரமணியன்.
No comments:
Post a Comment