அவுஸ்திரேலியக் கம்பன் கழகம் மாண்புடன் வழங்கும் ஆடல் வேள்வி 2023.

. கலா இரசிகர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். புகழ்பூத்த பரதநாட்டியக் கலைஞர் 'நாட்டிய சிரோன்மணி' ஊர்மிளா சத்தியநாராயணன் அவர்களும், அவர்தம் இரு சிரேஷ்ட மாணவிகள் அகிலா பாலசுப்பிரமணியம் மற்றும் சௌஜன்யா வினய் என்போரும் இணைந்து வழங்கும், பரதநாட்டிய மார்க்கம். அருணகிரிநாதரில் வர்ணம், பரிபாடலில் தில்லானா எனத் தமிழோடிசைபாடும் உருப்படிகள் கொண்ட சிறப்பு நிகழ்வு. பரதநாட்டியக் கலைபயிலும் சிட்னிவாழ் நல்லிளம் மாணவர்கள், கண்டு மகிழ்ந்து பயன்பெறக்கூடிய சிறந்ததொரு நிகழ்வு. ஆடல் வேள்வியானது, அவுஸ்திரேலியக் கம்பன் கழகம் நடாத்திவரும் தொண்டார்வ நிகழ்வுகளான, கம்பன் விழா, தமிழ் இலக்கிய வகுப்புகள், வெல்லும் சொல் திறனாளர் போட்டிகள், நாநலம், தமிழ்ப் பேச்சுக்கலைப் பயிற்சிப் பட்டறைகள் போன்ற பல்வேறு இயல் நிகழ்வுகளை நாம் தொடர்ந்து எம்மனோர்க்காக வழங்குவதற்கான நிதி சேகரிக்கும் நிகழ்வும்கூட. உங்கள் அன்பார்ந்த ஆதரவை வேண்டி நிற்கின்றோம். உங்களனைவரது வருகையால் நிகழ்வு சிறப்புற அமையவேண்டும் என விரும்புகின்றோம். சற்றுத் தூரமெனினும், M4 நெடுஞ்சாலை வழியாக சுலபமாக வந்து சேரக்கூடிய மண்டபம் பென்ரித்தில் அமைந்திருக்கின்ற Joan Sutherland Performing Arts Centre மண்டபத்தில், இம்முறை ஆடல் வேள்வி 2023 நடைபெறவுள்ளது. வாகன வசதிகள் தேவைப்படின் எம்மோடு தொடர்பு கொள்ளுங்கள். நுழைவுச் சீட்டுகளை இவ்விணைய வழிமூலமும் பெற்றுக் கொள்ளலாம்: இங்கே அழுத்துக இந்நிகழ்வு பற்றிய 'நிருத்தியச் சூடாமணி' ஊர்மிளா சத்தியநாராயணன் அவர்களின் குறுங் காணொளி: இங்கே அழுத்துக ஆடல்வேள்வியில் தம் பங்கேற்புப் பற்றி, ஊர்மிளா அவர்களின் சிரேஷ்ட மாணவர்கள் பேசுகிறார்கள்: இங்கே அழுத்துக மேலதிக விபரங்களுக்கு: ஜெய்ராம் ஜெகதீசன்: 0432 796 424 | பூர்வஜா நிர்மலேஸ்வரன்: 0403 906 206 "அன்னவர்க்கே சரண் நாங்களே" அன்புடன், ஜெய்ராம்

No comments: