ஈழத்தின் இறுதிப் போர் வாழ்வியலைப் பதிவாக்கிய 🎞️ வெந்து தணிந்தது காடு 🎞️ படைப்பாளி மதிசுதா பேசுகிறார்

VTK.png

ஈழ சினிமாவை ஆத்மார்த்தமாக நேசிக்கின்ற ஒரு கலைஞன், அதனைப் படைப்பு ரீதியாகவும் சமரசமில்லாது கொடுப்பதில் தீவிரமான படைப்பாளி அன்புச் சகோதரன் மதி சுதா.

வெந்து தணிந்தது காடு படத்தை உருவாக்கியதில் பட்ட சிரமங்களையும், சவால்களையும் எட்ட நின்று பார்த்தவர்களில் நானும் ஒருவன்.

ஈற்றில் தன்னுடைய படைப்பின் தலைப்புக்காகக் கூடப் போராட வேண்டிய சூழல் எழுந்தது. ஆனாலும் ஓர்மத்தோடு அதே முகவரியோடே கொடுக்கிறார்.
இன்று விருதுகளை நாலாபுறமும் குவித்துக் கொண்டிருக்கிறது வெந்து தணிந்தது காடு.

ஈழ சினிமாவில் மதி சுதா ஒரு அழுத்தமான தனி அத்தியாயம்.
வெந்து தணிந்தது காடு தற்போது ஈழத்து வெண் திரைகளில் காண்பிக்கப்படுகிறது. 

வெந்து தணிந்தது காடு படத்தின் உருவாக்கம் குறித்தும், அந்தப் பட்டம் உலக அரங்கில் எழுப்பிய அதிர்வலைகளையும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் படத்தின் இயக்குநர் மதிசுதா







No comments: