மெல்பனில் ஷோபா சக்தியின் புதிய நூல் அறிமுகமும் கருத்தாடலும்


பிரான்ஸில் வதியும் பிரபல எழுத்தாளரும்  நாடக, திரைப்பட கலைஞருமான ஷோபா சக்தி,  இம்மாதம் மெல்பனுக்கு வருகை தருகின்றார்.

அவருடனான சந்திப்பும் கதையாடலும் இம்மாதம் ( ஜூலை )  23 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5-30 மணிக்கு மெல்பனில் வேர்மன் தெற்கு சமூக இல்லத்தில் ( Vermont South Learning Centre - 1 Karo bran Drive, Vermont South VIC 3133. ) நடைபெறும்.

ஆஸ்திரேலியத் தமிழ் இலக்கியக் கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், ஷோபாசக்தியின் புதிய நாவல் ஸலாம் அலைக் அறிமுகப்படுத்தப்படும்.

கலை, இலக்கிய ஆர்வலர்கள் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.




No comments: