சிட்னி துர்க்கை அம்மன் ஆலயத்தில் தேர்த் திருவிழா 31/07/2022


துர்க்கா> லஷ்மி> சரஸ்வதி
ஆகிய முப்பெருந்தேவிகளும் அமைந்த அருள்மிகு சிட்னி  துர்க்கை அம்மன் ஆலயத்தில் அம்பிகையின் விசேஷ நாட்களான ஆடிச்செவ்வாய் வெகு விமர்சையாக கொண்டாட அம்பிகை அருள்கூடியுள்ளது. 19.07.2022> 26.07.2022> 02.08.2022> 09.08.2022> 16.08.2022 ஆகிய செவ்வாய் கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகளும் அலங்கார ஊர்வலமும் நடைபெற உள்ளது.

 இவ்வுலகில் உள்ள தீய சக்திகளை அழித்து மக்களின்


குறைகளை நீக்குவதற்காக சக்தி வடிவான அம்பிகை அவதரித்த நாளாக போற்றப்படும் விசேட நாளான திரு ஆடிப்பூரம் ஜூலை 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை; ஸ்ரீ துர்கை அம்மன் ஆலயத்தில் காலை 09:00 மணி முதல் விஷேட பூஜை;களுடன் தேர்த் திருவிழா நடைபெற திருவருள் கூடியுள்ளது.

இந்த விசேட ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஜூலை; 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை; 05.30 முதல் விசேட கலச பூஜையும் 108 பால்குட அபிஷேகமும் நடைபெற ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட மாதம் 05 ஆம் திகதி வரலஷ்மி விரதத்தை முன்னிட்டு மாலை 05.00 மணி முதல் விசேட ஹோமங்கள்> அபிஷேகங்கள் தீப ஆராதனைகள் பக்தர்களுக்காக ஒழுங்குகள் செய்ய திருவருள் கூடியுள்ளது.


வரலஷ்மி விரத நாளில் துர்க்கை அம்மன் கோவிலில் வரலஷ்மி விரத நூலும்> அம்மனுக்கு சாத்திய வளையல்களும் வழங்கப்பட உள்ளன. அத்துடன் பூஜைகளை தொடர்ந்து மாலை 07.30க்கு 108 திருவிளக்கு பூஜையும் நடைபெற உள்ளன. அவ்வமயம் கன்னி பெண்களும்> சுமங்கலிப் பெண்களும்> மற்றும் பக்தகோடிகள்> அம்மனடியார்கள்> மெய்யன்பர்கள் தவறாது கலந்து கொண்டு அம்பாளின் அருளை பெற்று வளமான வாழ்விற்கும்> சுபிட்சமான வாழ்விற்கும் பிரார்த்தித்து இலட்சுமி கடாச்சமும் பெற வேண்டுகிறோம்.

 இந்தவிசேஷ வைபவங்களில் உபயங்கள் ஏற்பதற்கும் மேலதீக விபரங்களுக்கும் ஆலய நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ளவும்.


(02) 96446682>  0450209724

No comments: