நீர்கொழும்பில் தமிழ் குடும்பத்தில் கணவனும் மனைவியும் அடுத்தடுத்து மரணம் பிள்ளைகள் வெளிநாடுகளில்


சமகால கொரோனோ தொற்றினால்   ஒரு வார காலத்தில் கணவனும் மனைவியும் இறந்துள்ள  துயரச் சம்பவம் கம்பகா மாவட்டத்தில்  நீர்கொழும்பில் நடந்துள்ளது.

நடராஜா கருணாலிங்கம்  ( வயது 75 ) என்னும் மின்சார தொழில் நுட்பவியலாளர் கடந்த 11 ஆம் திகதி கொரோனோ தொற்றினால் மரணமடைந்ததையடுத்து,  அவரது மனைவி ஜெயலக்‌ஷ்மி ( வயது 75 )  நேற்று 17 ஆம் திகதி மரணமடைந்துள்ளார்.

இவர்களது  ஒரு மகன்  அவுஸ்திரேலியாவிலும் ஒரு மகள் இங்கிலாந்திலும் வசிக்கின்றனர்.

இந்த அடுத்தடுத்த மரணங்களினால் இவர்களது குடும்பத்தினரும் உறவினர்களும் ஆழ்ந்த சோகத்திற்குள்ளாகியுள்ளனர்.

சமூக இடைவெளிபேணவேண்டிய சூழலில்  இறுதி நிகழ்வுகளும் நடைபெறவில்லை.










No comments: