செயல்வடிவமும் நம்பகத்தன்மையும்

26/10/2019 ஜனா­தி­பதித் தேர்தல் நெருங்­கிக்­கொண்­டி­ருக்­கி­றது. நாடு முழு­வதும் வேட்­பா­ளர்கள் தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு வரு­கின்­றார்கள். இந்தத் தேர்­தலில் எந்த வேட்­பாளர் வெற்­றி­பெறப் போகின்றார்? என்று மக்கள் எதிர்­பார்த்துக் காத்­தி­ருக்­கின்­றனர். இத்­தேர்­தலில் புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ச­விற்கும், பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பாளர் கோத்­த­பாய ராஜபக் ஷ உள்­ளிட்ட ஏனைய சில வேட்­பா­ளர்­க­ளுக்கும் சிறு­பான்மைக் கட்­சிகள் ஆத­ரவு வழங்கி வரு­கின்­றன. மலை­யகக் கட்­சி­களைப் பொறுத்­த­வ­ரையில் தமிழ் முற்­போக்கு கூட்­டணி சஜித் பிரே­ம­தா­ச­விற்கும், இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் கோத்­த­பா­ய­விற்கும் பூரண ஆத­ர­வினை தெரி­வித்­துள்­ளன என்­பதும் தெரிந்த விட­ய­மாகும். இக்­கட்­சிகள் மலை­யக மக்­களின் நலன்­க­ருதி வேட்­பாளர் களிடம் பல்­வேறு கோரிக்­கை­களை முன்­வைத்­தி­ருக்­கின்­றன. இது ஒரு­பு­ற­மி­ருக்க பிர­தான கட்­சிகள் மலை­யக மக்­களின் அபி­வி­ருத்தி கருதி தன்­ன­கத்தே எத்­த­கைய கொள்­கை­களைக் கொண்­டி­ருக்­கின்­றன என்­பது குறித்தும் நாம் ஆழ­மாகக் கவனம் செலுத்­த­வேண்­டி­யுள்­ளது. மேலும் கட்­சி­களின் கோரிக்­கை­களை நிறை­வேற்றித் தரு­வ­தாகக் கூறும் வேட்­பா­ளர்கள் தேர்தல் வெற்­றியின் பின்னர் எவ்­வாறு நடந்­து­கொள்­ளப்­போ­கின்­றார்கள்? வாக்­கு­று­திகள் செயல்­வ­டிவம் பெறுமா? அல்­லது காற்றில் பறக்­க­வி­டப்­ப­டுமா? என்ற நியா­ய­மான சந்­தே­கத்­தி­னையும் பலர் எழுப்பி இருக்­கின்­றனர். 

ஜனா­தி­பதி தேர்தல் பணிகள் தீவி­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. தேர்தல் திணைக்­களம் இத்­தேர்­தலை சிறப்­பாக நடத்தும் பொருட்டு பல்­வேறு நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொண்டு வரு­கின்­றது. இத்­தேர்­த­லுக்­கான மொத்த செலவு நான்கு தொடக்கம் 4.5 பில்­லியன் ரூபா­வாக இருக்கும் என்று ஆணைக்­குழு ஆரம்ப மதிப்­பீ­டு­களைச் செய்­தி­ருந்­தது. எனினும் தற்­போது தேர்­தல்கள் ஆணைக்­குழு 07 பில்­லியன் ரூபாய்­களை ஒதுக்­கு­மாறு திறை­சே­ரி­யிடம் கோரி­யுள்­ளது. இதே­வேளை பிளாஸ்டிக் வாக்குப் பெட்­டிகள் குறித்தும் ஆணைக்­குழு ஆராய்ந்து வரு­கின்­றது. பிளாஸ்ரிக் வாக்குப் பெட்­டி­க­ளுக்குச் செல்ல முடிவு செய்­ததால் தேர்தல் செலவு மேலும் அதி­க­ரிக்­கக்­கூடும் என்றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. காகிதச் செலவின் அதி­க­ரிப்பு, அச்­சிடும் நேரத்தின் அதி­க­ரிப்பு, வேட்­பாளர் தொகை என்­ப­வற்றின் கார­ண­மா­கவும் தேர்­த­லுக்­கான செலவு அதி­க­ரிக்கும் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 
இதே­வேளை ஜனா­தி­பதி தேர்தல் வன்­மு­றை­களும் வேக­மாக அதி­க­ரித்து வரு­வ­தனை அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக உள்­ளது. 13 நாட்­க­ளுக்குள் ஜனா­தி­பதி தேர்தல் வன்­மு­றைகள் குறித்து ஆயி­ரத்து 134 முறைப்­பா­டுகள் கிடைக்­கப்­பெற்­றுள்­ள­தாக சுயா­தீன தேர்தல் ஆணைக்­குழு தெரி­வித்­துள்­ளது. இந்­நி­லையில் கடந்த திங்­கட்­கி­ழமை (21) வரை பெப்ரல் அமைப்­பிற்கு 140 முறைப்­பா­டுகள் தேர்தல் வன்­மு­றைகள் தொடர்­பாகக் கிடைத்­தி­ருப்­ப­தாக பெப்ரல் அமைப்பின் பணிப்­பாளர் ரோஹண ஹெட்­டி­யா­ராச்சி தெரி­வித்­தி­ருந்தார். தேர்தல் ஆணைக்­கு­ழுவின் அறி­வு­றுத்­தல்­களை மீறிச்­செ­யற்­ப­டு­ப­வர்­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்றும் சுயா­தீன முறையில் தேர்தல் நடை­பெ­று­வ­தனை உறு­திப்­ப­டுத்­து­வது அனை­வ­ரதும் பொறுப்­பாகும் என்றும் ரோஹண மேலும் வலி­யு­றுத்தி இருந்தார். ஜனா­தி­பதி தேர்தல் கண்­கா­ணிப்பில் உள்­நாட்டு மற்றும் வெளி­நாட்டுக் கண்­கா­ணிப்பு குழுக்கள் இடம்­பெற உள்­ளன. இத­ன­டிப்­ப­டையில் ஐரோப்­பிய ஒன்­றிய தேர்தல் கண்­கா­ணிப்­புக்­குழு, தென்­னா­சிய நாடு­களின் தேர்தல் ஆணைக்­கு­ழுக்­க­ளுடன் நெருக்­க­மாக இயங்கும் ‘பெம்­போசா’ என்ற கண்­கா­ணிப்­புக்­குழு, சிவில் அமைப்­புக்­களின் சார்பில் செயற்­படும் ஆசிய தேர்­தல்கள் கண்­கா­ணிப்பு வலை­ய­மைப்பு எனப்­படும் ‘அன்ப்பல்’ என்ற குழு உள்­ளிட்ட நான்கு சர்­வ­தேச கண்­கா­ணிப்புக் குழுக்கள் ஜனா­தி­பதி தேர்தல் கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட உள்­ளன. 
ஆதிக்கம்
இலங்­கையில் இடம்­பெற்ற கடந்­த­கால தேர்­தல்­களில் சிறு­பான்­மை­யினர் தனது ஆதிக்­கத்தைச் செலுத்தி வந்­தி­ருக்­கின்­றனர். ஜனா­தி­பதி தேர்தல், பாரா­ளு­மன்ற தேர்தல், உள்­ளூ­ராட்சி மற்றும் மாகாண சபை தேர்­தல்கள் என்று எது­வா­ன­போதும் சிறு­பான்­மை­யினர் தனது ஆதிக்­கத்தை வெளிப்­ப­டுத்தத் தவ­ற­வில்லை. எனினும் இம்­முறை இடம்­பெற உள்ள ஜனா­தி­பதி தேர்­தலில் சிறு­பான்­மை­யி­னரின் ஒத்­து­ழைப்­பின்றி தேர்­தலில் வெற்றி கொள்ளும் முனைப்­பு­களும் இடம்­பெற்று வரு­கின்­றமை நீங்கள் அறிந்த விட­ய­மாகும். இந்­நிலை சிறு­பான்­மை­யி­னரின் எதிர்­காலம் தொடர்பில் பல்­வேறு கேள்­வி­க­ளையும் எழுப்பி இருக்­கின்­றது. சிறு­பான்­மை­யி­னரின் ஆதிக்கம் வலுப்­பெ­றா­த­வி­டத்து அது பாரிய பின்­வி­ளைவு களுக்கும் இட்டுச் செல்­வ­தாக அமையும் என்று அர­சியல் அவ­தா­னிகள் கருத்து தெரி­விக்­கின்­றனர். பல்­லின மக்கள் வாழ்­கின்ற ஒரு நாட்டில் சகல இனங்­க­ளி­னதும் உரி­மைகள் உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும். வேற்­று­மைக்குள் ஒற்­றுமை காணப்­ப­டுதல் வேண்டும் என்­றெல்லாம் பேசப்­பட்டு வரு­கின்ற நிலையில் இதற்கு வலு­சேர்ப்­ப­தா­கவே வேட்­பா­ளர்­களின் செயற்­பா­டுகள் அமைதல் வேண்டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. இத­னை­வி­டுத்து தேர்தல் வெற்­றிக்­காக சிறு­பான்மையினரின் மனங்­களில் கீறல்­களை ஏற்­ப­டுத்தும் வகையில் செயற்­பா­டுகள் அமையுமானால் இது பாதக விளை­வு­க­ளுக்கு உந்­து­சக்­தி­யாக அமையும் என்­ப­தையும் மறுப்­ப­தற்­கில்லை. 
சிறு­பான்­மை­யி­னரை அர­வ­ணைக்­கின்ற மனப்­பாங்கு பெரும்­பான்மை கட்­சி­க­ளிடம் காணப்­ப­டுதல் வேண்டும். ‘இலங்­கையர்’ என்ற பொது­நோக்கு நாட்டின் அபி­வி­ருத்­திக்கும் ஐக்­கி­யத்­திற்கும் தோள் கொடுக்கும் என்­ப­தோடு இலங்கை மீதான சர்­வ­தே­சத்தின் சந்­தேகப் பார்­வை­யையும் இல்­லாது செய்யும். எனவே நல்­லி­ணக்கச் செயற்­பா­டு­களின் ஊடாக ‘இலங்­கையர்’ என்ற பொது வரை­ய­றைக்கு வித்­திட வேண்டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. 
வேட்­பா­ளர்கள் இன­வாத அடிப்­ப­டையில் தேர்தல் பிர­சா­ரங்­களில் ஈடு­ப­டு­வ­தனை கண்­டித்தும் மக்­க­ளி­டையே விரி­சல்­களை வளர்க்க வேட்­பா­ளர்கள் துணை­போகக் கூடாது என்றும் பல அமைப்­புகள் கண்­டனம் தெரி­வித்­தி­ருக்­கின்­றன. இத்­த­கைய அமைப்­பு­களின் நியா­ய­மான கண்­ட­னத்தை வேட்­பா­ளர்கள் புரிந்து நடந்­து­கொள்ள வேண்­டி­யதும் அவ­சி­ய­மாகும். 
தமிழ் கட்­சிகள்
யாழ்ப்­பாணம் மற்றும் கிழக்கு பல்­க­லைக்­க­ழக மாணவர் ஒன்­றி­யங்­க­ளினால் ஒழுங்­க­மைக்­கப்­பட்டு பொது உடன்­பாட்டு ஆவணம் தயா­ரிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. இந்த பொது உடன்­பாட்டு ஆவ­ணத்தில் தமி­ழ­ரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்­டணி, ரெலோ, பிளட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய கட்­சிகள் கையொப்­ப­மிட்­டி­ருந்­தன. புதி­தாக உரு­வாக்­கப்­படும் அர­சி­ய­ல­மைப்பில் ஒற்­றை­யாட்சி முறை­மையை நிரா­க­ரித்து தமிழ் தேசத்­தினை அங்­கீ­க­ரித்து அதற்கு தனித்­து­வ­மான இறைமை உண்டு என்­ப­த­னையும் தமிழ் மக்கள் சர்­வ­தேச சட்­டத்தின் கீழ் சுய­நிர்­ணய உரி­மைக்கு உரித்­து­டை­ய­வர்கள் என்­ப­த­னையும் அங்­கீ­க­ரித்து சமஷ்டி ஆட்சி முறையின் கீழ் இலங்­கையின் தமிழ்த் தேசியப் பிரச்­சி­னைக்கு தீர்வு காணப்­பட வேண்டும். இறுதிப் போரில் இடம்­பெற்ற போர்க்­குற்­றங்கள் மற்றும் மனித குலத்­துக்கு எதி­ரான குற்­றங்கள் மற்றும் இனப்­ப­டு­கொலை என்­ப­வற்­றுக்கு முழு­மை­யான பக்­கச்­சார்­பற்ற சர்­வ­தேச பொறி­மு­றை­யி­லான சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்றம், சர்­வ­தேச தீர்ப்­பாயம் ஊடாக விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும். பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் நீக்­கப்­படல் வேண்டும். தமிழ் அர­சியல் கைதிகள் அனை­வரும் நிபந்­த­னை­யின்றி விடு­தலை செய்­யப்­பட வேண்டும். வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்டோர் விவ­கா­ரத்தில் சர்­வ­தேச பொறி­மு­றையின் கீழ் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நீதி வழங்­கப்­பட வேண்டும். வடக்கு–கிழக்கு மாகா­ணங்­களில் அரச ஆத­ர­வுடன் இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருக்கும்   சிங்­க­ள­  ம­ய­மாக்கல், பௌத்த மய­மாக்கல் மற்றும் சிங்­கள குடி­யேற்­றங்கள் உட­ன­டி­யாக நிறுத்­தப்­ப­ட­வேண்டும் என்ற பல விட­யங்கள் பொது உடன்­பாட்டு ஆவ­ணத்தில் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளன. 
இவ்­வா­றாக 13 கோரிக்­கை­களை உள்­ள­டக்­கி­யுள்ள இந்த ஆவணம் குறித்து இப்­போது வேட்­பா­ளர்­களும், பெரும்­பான்மை மக்­களும் அதி­க­மா­கவே பேசத் தொடங்கி இருக்­கின்­றனர். ஏற்­க­னவே நல்­லாட்சி அர­சியல் யாப்பு குறித்த நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டபோது புதிய அர­சியல் யாப்பில் சமஷ்­டிக்கு முக்­கி­யத்­து­வ­ம­ளிக்­கப்­பட்­டது. இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்­கப்­பட வேண்டும் என்று தமிழ்­த­ரப்­புகள் வலி­யு­றுத்தி இருந்­தன. எனினும் சமஷ்டி என்ற சொல்லே பெரும்­பான்­மை­யி­னரில் சில­ருக்கு வேப்­பங்­கா­யாக இருந்­தது. சமஷ்­டியின் ஊடாக நாடு பிள­வு­படும் அபாயம் காணப்­ப­டு­வ­தாக இவர்கள் தூக்கிப் பிடித்துக் கொண்­டி­ருந்­தனர். சமஷ்டி குறித்த அறி­வற்­ற­வர்­கள்­கூட இன­வா­தத்தை மையப்­ப­டுத்தி எதிர்ப்­பினை வெளிப்­ப­டுத்தி இருந்­த­மையை அவ­தா­னிக்­கக்­கூ­டி­ய­தாக இருந்­தது. இந்­நி­லையில் சமஷ்டி ஆட்சி முறையின் கீழ் இலங்­கையின் தமிழ்த்­தே­சிய இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காணப்­பட வேண்டும் என்று பொது உடன்­பாட்டு ஆவ­ணத்தில் வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. 
தொல்­லியல் திணைக்­களம், வன­வள திணைக்­களம், வன உயி­ரி­னங்கள் திணைக்­களம் உட்­பட பல அரச திணைக்­க­ளங்கள் ஊடாக மேற்­கொள்­ளப்­பட்டு வரும் நில, வழி­பாட்­டுத்­தல ஆக்­கி­ர­மிப்­புகள் அனைத்தும் உட­ன­டி­யாக நிறுத்­தப்­பட வேண்டும் என்றும் பொது உடன்­பாட்டு ஆவ­ணத்தில் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது. எனினும் இந்த பொது உடன்­பாட்டு ஆவ­ணத்தை பெரும்­பான்மைக் கட்­சிகள் அல்­லது பிர­தான வேட்­பா­ளர்கள் ஏற்­றுக்­கொள்­வதில் தொடர்ந்தும் இழு­பறி நிலை இருந்து வரு­கின்­றது. இதே­வேளை பொது உடன்­பாட்டு ஆவ­ணத்தில் உள்ள விட­யங்கள் சில இன­வா­தத்­திற்கு வித்­தி­டு­வ­தாக உள்­ள­தா­கவும், நாடு துண்­டா­டப்­ப­டு­வ­தற்கு இந்த ஆவணம் உந்­து­சக்­தி­யாக அமை­யு­மென்றும் கருத்­துகள் பலவும் வெளிப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. இந்த பொது உடன்­பாட்டு ஆவ­ணத்தை ஏற்­றுக்­கொள்ளும் வேட்­பாளர் தமி­ழீ­ழத்­திற்கு வலு­சேர்ப்­பவர் என்று சிலரால் முத்­திரை குத்­தப்­ப­டு­வ­த­னையும் எம்மால் அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக இருக்­கின்­றது. இத­னி­டையே கூட்­ட­மைப்பின் நிபந்­த­னைக்கு ஒரு­போதும் அடி­ப­ணியப் போவ­தில்லை என்று எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்­தி­ருக்­கின்றார். இக்­க­ருத்­தா­னது பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பாளர் கோத்­த­பாய ராஜபக் ஷ மீதான பெரும்­பான்­மை­யி­னரின் கரி­ச­னையை மேலும் அதி­க­ரிக்கச் செய்யும் என்றும் பெரும்­பான்­மை­யி­னரின் வாக்­கு­களை இவர் இன்னும் அதி­க­மாக பெற்­றுக்­கொள்ளும் சூழ்­நி­லையை உரு­வாக்கும் என்றும் நம்­பப்­ப­டு­கின்­றது. 
இத­னி­டையே கோரிக்­கை­களை நிரா­க­ரித்­துள்ள கோத்­த­பாய ராஜபக் ஷவுடன் எவ்­வி­த­மான பேச்சும் இல்லை என்றும் ஐந்து தமிழ்க் கட்­சி­களும் இந்த வாரம் இறுதித் தீர்­மா­னத்தை எடுக்கும் என்றும் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் செய­லாளர் மாவை சேனா­தி­ராஜா தெரி­வித்­தி­ருக்­கின்றார். ஒரு­வேளை கூட்­ட­மைப்பு சஜித் பிரே­ம­தா­சவை ஆத­ரிக்­கு­மாக இருந்தால் அம்­மு­டிவு பொது­ஜன பெர­மு­ன­வுக்கு சர்க்­கரைப் பொங்கல் கிடைத்­த­தாக இருக்கும். தனது பிர­சார நட­வ­டிக்­கை­க­ளுக்கு பிர­தான துரும்­பாக அக்­கட்சி இதனை பயன்­ப­டுத்தும் என்­பதும் ஐய­மில்லை. 
உள்­ள­டக்கம்
பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­த­பா­ய­வி­டமும், புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ச­வி­டமும் மலை­யகக் கட்­சிகள் பல்­வேறு கோரிக்­கை­க­ளையும் முன்­வைத்­தி­ருக்­கின்­றன. குறிப்­பாக சஜித்­திற்கு ஆத­ர­வ­ளிக்கும் தமிழ் முற்­போக்குக் கூட்­டணி அவ­ரிடம் பல்­வேறு கோரிக்­கை­களை முன்­வைத்­தி­ருக்­கின்­றது. மலை­ய­கத்­துக்­கென்று தனி­யாக பல்­க­லைக்­க­ழகம் ஒன்று ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்று பேரா­சி­ரியர் சோ.சந்­தி­ர­சே­கரன் போன்­ற­வர்கள் நீண்­ட­கா­ல­மா­கவே குரல் கொடுத்து வரு­கின்­றனர். எனினும் அது இன்னும் சாத்­தி­ய­மா­காத ஒரு நிலையே காணப்­ப­டு­கின்­றது. இந்­நி­லையில் மலை­யக பல்­க­லைக்­க­ழகம் தொடர்­பான கோரிக்­கை­யினை தமிழ் முற்­போக்குக் கூட்­டணி சஜித்­திடம் முன்­வைத்­தி­ருக்­கின்­றது. இதைப்­போன்றே மலை­யக மக்­களின் அபி­வி­ருத்தி கரு­திய மேலும் பல விட­யங்­களும் முன்­வைக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக மலை­யக மக்கள் முன்­ன­ணியின் செய­லாளர் நாயகம் ஏ.லோரன்ஸ் தெரி­விக்­கின்றார். இத­ன­டிப்­ப­டையில், மலை­யக மக்­களின் வீட­மைப்பு நட­வ­டிக்­கைகள் குறித்து கவனம் செலுத்­தப்­படல் வேண்டும். தோட்டத் தொழி­லா­ளர்கள்  அல்­லா­த­வர்­க­ளுக்கும் வீடும் காணியும் வழங்­கப்­ப­டுதல் வேண்டும். பிர­தேச செய­ல­கங்கள் பிர­தேச சபைகள் என்­பன புதி­தாக மலை­யகப் பகு­தி­க­ளில் ஏற்­ப­டுத்­தப்­ப­டுதல் வேண்டும். கிராம அலு­வலர் பிரி­வுகள் அதி­க­ரிக்கப்­ப­டுதல் வேண்டும். தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பளப் பிரச்­சி­னைக்­கு­ரிய தீர்­வினைப் பெற்­றுக்­கொ­டுக்க வேண்டும். தொழி­லா­ளர்­களை சிறு தோட்ட உரி­மை­யா­ள­ராக்­கும் நட­வ­டிக்கை குறித்த கவனம் செலுத்த வேண்­டும். இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தர அர­சியல் தீர்வு பெற்றுக் கொடுக்­கப்­ப­டு­மி­டத்து மலை­யக மக்­களின் பிரச்­சி­னைகள் குறித்தும் கவனம் செலுத்­தப்­பட வேண்டும். தொழிற் பயிற்சி நிலை­யங்கள் ஏற்­ப­டுத்­தப்­பட்டு மலை­யக இளைஞர், யுவ­தி­களின் வேலை­யில்லாப் பிரச்­சி­னைக்கு தீர்­வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் கல்­விக்­கல்­லூ­ரிகள் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்று மேலும் பல கோரிக்­கை­க­ளையும் தமிழ் முற்­போக்குக் கூட்­டணி, சஜித் பிரே­ம­தா­ச­விடம் முன்­வைத்­தி­ருப்­ப­தாக லோரன்ஸ் மேலும் தெரி­வித்தார். இக் கோரிக்­கை­க­ளுக்கு வேட்­பாளர் சஜித்­திடம் இருந்து சாத­க­மான பதில்
 கிடைத்­தி­ருப்­ப­தாகவும் அவர் தெரி­வித்தார். இத­னி­டையே மலை­யக தோட்டத் தொழி­லா­ளர்­களை சிறு தோட்ட உரி­மை­யாளர் களாக மாற்ற உள்­ள­தா­கவும் இதற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும் என்றும் சஜித் பிரே­ம­தாச வாக்­கு­று­தியும் வழங்கி இருக்­கின்றார். அண்­மையில் தமிழ முற்­போக்கு கூட்­ட­ணியின் ஏற்­பாட்டில் பிர­சாரக் கூட்டம் இரத்­தி­ன­பு­ரியில் இடம்­பெற்­ற­போதே சஜித் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தி­ருந்தார். மேலும் தோட்டத் தொழி­லா­ளர்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­காணும் வகையில் ஜனா­தி­பதி செய­லணி உரு­வாக்­கப்­படும். தோட்டத் தொழி­லா­ளர்கள் மிகுந்த கஷ்­டங்­களை அனு­ப­வித்து வரு­கின்­றனர். எனது தந்தை தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு பிரஜா உரி­மையைப் பெற்­றுக்­கொ­டுத்தார். நான் சுபிட்­ச­மான வாழ்க்­கை­யினைப் பெற்­றுத்­த­ருவேன் என்றும் இக்­கூட்­டத்தில் அவர் உறு­தி­ய­ளித்­தி­ருந்தார். தோட்டத் தொழி­லா­ளர்களின் சம்­பள உயர்வு குறித்து இப்­போது அதி­க­மா­கவே பேச்­சுகள் அடி­ப­டு­கின்­றன. வேட்­பா­ளர்கள் பலர் சம்­பள உயர்வின் அவ­சியம் தொடர்பில் தனது நிலைப்­பாட்டை வலி­யு­றுத்தி வரு­கின்­றனர். ஜனா­தி­பதி தேர்தல் வேட்­பா­ளர்­க­ளான சஜித் பிரே­ம­தாச, கோத்­த­பாய ராஜபக் ஷ, தேசிய மக்கள் சக்­தியின் வேட்­பாளர் அனு­ர­கு­மார திசா­நா­யக்க எனப் பலரும் இதில் உள்­ள­டங்­கு­கின்­றனர். இந்த வகையில் கோத்­த­பாய ராஜபக் ஷ தொழி­லா­ளர்­களின் பொரு­ளா­தார நிலை­மைகள் மிகவும் மோச­டைந்­துள்­ள­தா­கவும் தொழி­லா­ளர்­க­ளுக்கு நியா­ய­மான சம்­ப­ளத்தைப் பெற்­றுக்­கொ­டுக்க தான் உறுதி பூண்­டுள்­ள­தா­கவும் தெரி­வித்­தி­ருக்­கின்றார். இத­னி­டையே தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு தான் ஜனா­தி­ப­தி­யா­னதும் 1500 ரூபா­வினை நாட் சம்­ப­ள­மாக வழங்கப் போவ­தாக சஜித் பிரே­ம­தாச தெரி­வித்­திருக்­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். நான்கு பேரைக் கொண்ட குடும்பம் ஒன்­றிற்கு மாதாந்த செல­வாக 50 தொடக்கம் 55 ஆயிரம் ரூபாய் தேவைப்­ப­டு­கின்­றது. இந்­நி­லையில் தோட்டத் தொழி­லா­ளர்கள் 700 ரூபாய் நாட் சம்­ப­ளத்தை வைத்துக் கொண்டு வாழ்க்­கையை கொண்டு நடத்­து­வ­தென்­பது சிர­ம­மான காரி­ய­மாகும்.
எனவே நான் ஆட்­சிக்கு வந்தால் உங்­களை வழி நடத்தும் திகாம்­பரம், இரா­தா­கி­ருஷ்ணன் ஆகி­யோரின் சார்­பாக நாள் ஒன்­றுக்கு ஆயி­ரத்து 500 ரூபாய் சம்­ப­ள­மாக வழங்­குவேன் என்று சஜித் தெரி­வித்­திக்­கின்றார். இந்த வாக்­கு­றுதி எந்­த­ள­வுக்கு நம்­ப­கத்­தன்மை மிக்­கது? என்று விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. முத­லா­ளிமார் சம்­மே­ளனம் இந்தத் தொகையை வழங்­கு­வ­தற்கு பச்சைக் கொடி காட்­டுமா? 1500 ரூபாய் சம்­ப­ளத்தை பெற்­றுக்­கொ­டுப்­பதில் சஜித்தின் உறு­திப்­பாடு தேர்தல் வெற்­றிக்குப் பின்­னரும் நிலைத்­தி­ருக்­குமா? கடந்த பொதுத் தேர்தல் கால­கட்­டத்தில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு ஆயிரம் ரூபா சம்­ப­ளத்தைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தாக உறு­தி­ய­ளித்­தி­ருந்தார். எனினும் இன்­று­வரை இது சாத்­தி­யப்­ப­ட­வில்லை. இந்த நிலையில் பச்சைக் கட்­சியைச் சேர்ந்த சஜித்தின் வாக்­கு­றுதி சாதக விளை­வு­களை ஏற்­ப­டுத்­துமா? என்­றெல்லாம் கேள்­விகள் எழுப்­பப்­பட்டு வரு­வ­தையும் காதில் கேட்கக் கூடி­ய­தாக உள்­ளது.
ஒப்­பந்தம் இல்லை
தமிழ் முற்­போக்குக் கூட்­டணி, சஜித்­துடன் ஒப்­பந்தம் எத­னையும் கைச்­சாத்­தி­டாத நிலையில் கோரிக்­கை­களை முன்­வைத்­தி­ருக்­கின்­றது. இந்த நிலையில் ஒப்­பந்தம் இல்­லாத கோரிக்­கைகள் எந்­த­ள­வுக்கு செயல்­வ­டி­வத்­திற்கு இட்­டுச்­செல்லும்? என்ற பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தில­க­ரா­ஜிடம் வின­வினேன். அதற்கு தில­கராஜ் பதி­ல­ளிக்­கையில்;
ஒப்­பந்தம் என்­பது மக்­களை ஏமாற்­று­கின்ற செய­லாகும். இத்­த­கைய ஒப்­பந்­தங்கள் சட்ட வலு இல்­லா­த­வை­யாகக் காணப்­ப­டு­கின்­றன. ஜனா­தி­ப­தி­யா­னவர் ஒப்­பந்­தத்­திற்­க­மைய மலை­யக மக்­களின் நலன்­க­ரு­திய செயற்­பா­டு­களை மேற்­கொள்வார் என்று எதிர்­பார்க்க முடி­யாது. ஒப்­பந்தம் என்­பது போலி­யான ஒரு விட­ய­மாகும். ஜனா­தி­பதி ஒப்­பந்­தத்­திற்கு அமைய நன்­மை­களைப் பெற்றுக் கொடுக்­க­ாவிட்­டால் எம்மால் அவரை ஒன்றும் செய்ய முடி­யாது. கூட்டு ஒப்­பந்தம் நடை­மு­றையில் இருந்து வரு­கின்­ற­போதும் அதனால் உரிய நன்மை தொழி­லா­ளர்­க­ளுக்கு கிடைக்­கின்­றதா? இல்­லையே. புரிந்­து­ணர்­வு­ட­னான செயற்­பா­டு­களே மக்­களின் நலன்­க­ளுக்கு தோள் கொடுப்­ப­தாக அமையும்.
ஜனா­தி­பதித் தேர்தல், பொதுத்­தேர்தல், மாகாண சபைத் தேர்தல், உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் என்­ப­வற்றில் என்­னென்ன
 கோரிக்­கை­களை முன்­வைக்­க­வேண்டும் என்று தெரிந்து கொண்டு அதற்­கேற்ப உரிய கோரிக்­கை­களை முன்­வைக்­க­வேண்டும். ஜனா­தி­பதி தேர்தல் வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­சவிடம் தமிழ் முற்­போக்கு கூட்­டணி கொள்கை சார்ந்த விட­யங்கள் பல­வற்றை முன்­வைத்­தி­ருக்­கின்­றது. புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் எமது கோரிக்­கைகள் உள்­ள­டக்­கப்­படும் என்று தில­கராஜ் மேலும் தெரி­வித்தார்.
32 அம்ச கோரிக்கை
இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் இம்­முறை ஜனா­தி­பதி தேர்­தலில் பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பாளர் கோத்­த­பாய ராஜபக் ஷவிற்கு ஆத­ரவு வழங்­கு­வது தெரிந்த விட­ய­மாகும். இ.தொ.கா. 32 அம்ச கோரிக்­கை­களை முன்­வைத்­தி­ருந்­தது. இக் கோரிக்­கை­களை ஏற்­ப­வர்­க­ளுக்கே ஜனா­தி­பதி தேர்­தலில் ஆத­ர­வினை வழங்கப்போவ­தா­கவும் இ.தொ.கா. ஏற்­க­னவே அறி­வித்­தி­ருந்­தது. இந்­நி­லையில் கோத்­த­பாய ராஜ­பக் ஷ இக்­கோ­ரிக்­கையை ஏற்­றுக்­கொண்­டுள்­ளதால் தாம் அவ­ருக்கு ஆத­ரவு வழங்க முன்­வந்­த­தாக இ.தொ.கா. தெரி­விக்­கின்­றது. மேலும் இக் கோரிக்­கை­களை பொது­ஜன பெர­முன தனது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் உள்­ள­டக்­கு­வ­தற்கு இணக்கம் தெரி­வித்­துள்­ள­தா­கவும் இ.தொ.கா. தெரி­விக்­கின்­றது. முழு­மை­யான பல்­க­லைக்­க­ழகம் ஒன்­றினை நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் அமைக்­க­வேண்டும். இலங்கை திறந்த பல்­க­லைக்­க­ழ­கத்தின் பிராந்தியக் கிளையை ஹட்டனில் நிறுவுதல், பெருந்தோட்ட மக்கள் அதிகளவில் வாழுகின்ற 14 மாவட்டங்களில் உயர்தர விஞ்ஞான, வர்த்தகப் பிரிவுகளை உள்ளடக்கிய பாடசாலைகளை தேவையான அளவு உருவாக்குதல், தோட்டப்புற வைத்தியசாலைகளை அரசு பொறுப்பேற்று அபிவிருத்தி செய்தல், கிளங்கன் ஆதார வைத்தியசாலையினை தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்துதல், ஆரம்ப சுகாதார மையங்களை பெருந்தோட்டங்களில் உருவாக்குதல், பிரதேச செயலக அதிகரிப்பு, கிராம உத்தியோகத்தர் பிரிவு எல்லைகளை அமைத்தல், நுவரெலியா மாவட்டத்தில் புதிய நகர சபைகளையும், மாநகர சபைகளையும் உருவாக்குதல், புதிதாக உதவி தொழில் ஆணையாளர் காரியாலயங்களை அமைத்தல், தரிசு நிலப்பயன்பாடு, ஊவா மற்றும் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சினை வலுப்படுத்தல், காணி உறுதிப்பத்திரங்களை வழங்குதல் உள்ளிட்ட மேலும் பல விடயங்கள் இ.தொ.கா. வின் 32 அம்ச கோரிக்கையில் உள்ளடக்கப்பட்டிருந்தன.
இந்த கோரிக்கைகளை பூரணமாக நிறைவேற்ற பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய வெற்றி பெற்றால் எந்தளவுக்கு ஒத்துழைப்பு வழங்குவார் என்பதனைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது. இ.தொ.கா. மற்றும் பொதுஜன பெரமுன  என்பவற்றுக்கு இடையில் அண்மையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டமையும் நீங்கள் அறிந்த விடயமாகும். மலையக கட்சிகள் வேட்பாளர்களிடம் கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றன. எனினும் பிரதான கட்சிகள் மலையக மக்களின் அபிவிருத்தி கருதி தன்னகத்தே என்ன கொள்கைகளையும் கேட்பாடுகளையும் வைத்திருக்கின்றன என்று நோக்க வேண்டியுள்ளது. மலையக மக்களை ஏற்கனவே இக்கட்சிகள் கிள்ளுக் கீரையாக நினைத்து செயற்படுவதாக குற்றச்சாட்டுக்கள் இருந்து வருகின்றன. இந்நிலையில் இக்கட்சிகள் மலையக மக்கள் கருதிய தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும். ஏற்கனவே தேர்தல் விஞ்ஞாபனங்களிலும் தேர்தல் மேடைகளிலும் மலையக மக்களின் மேம்பாடுகருதி பிரதான கட்சிகளினால் பல்வேறு வாக்குறுதிகளும் வழங்கப்பட்டன. இவையெல்லாம் ஏட்டளவில் முற்றுப்பெற்றும், காற்றோடு கலந்தும் விட்டன. இனியும் இந்நிலைமை தொடர இடமளிக்கலாகாது. வரலாற்றில் மலையக மக்கள் தொடர்ச்சியாகவே ஏமாற்றப்பட்டு வந்திருக்கின்றார்கள். இது இனியும் தொடரக்கூடாது. தேர்தல் விஞ்ஞாபனத்தில் மட்டுமே மலையக மக்களை திருப்திப்படுத்தும் நடவடிக்கையை கட்சிகள் கைவிட வேண்டும். செயற்பாடுகளே அவசியம்.
துரைசாமி நடராஜா - நன்றி வீரகேசரி 





No comments: