வெற்றிக்கு வித்திடும் பௌத்த மேலாதிக்கம்

இலங்­கையின் எட்­டா­வது ஜனா­தி­பதி தேர்தல் மூன்று முக்­கிய விட­யங்­களில் சுற்றிச் சுழல்­கின்­றது.  இரா­ணுவ நலன்­களை முதன்­மைப்­ப­டுத்­திய தேசிய பாது­காப்பு, பொரு­ளா­தார மேம்­பாடு, சிறு­பான்மை இன மக்­களின் தேவைகள், கோரிக்­கைகள் புறக்­க­ணிப்பு என்ற மூன்று  விட­யங்­க­ளுக்­கான பரப்­பு­ரைகள் தீவி­ர­மாக முடுக்­கி­வி­டப் ­பட்­டி­ருக்­கின்­றன.
ஜனா­தி­பதி தேர்தல் என்­பது மிக முக்­கி­ய­மா­னது. நாட்டின் அதி­உயர் அரச தலை­வ­ர் ஜனா­தி­ப­தியை நாட்டின் அனைத்து மக்­களும் ஒன்­றி­ணைந்து நேரடி வாக்­க­ளிப்பு மூலம் தெரிவு செய்­வது. இவ்­வாறு தெரிவு செய்­யப்­ப­டு­கின்ற ஒருவர் கட்சி அர­சியல் நலன்­க­ளுக்கு அப்பால் தேசிய அளவில் பொது­வா­ன­வ­ராக அனைத்து மக்­க­ளி­னதும் நலன்­களைப் பேணி பாது­காப்­ப­வ­ராகச் செயற்­பட வேண்டும்.
அந்த வகையில் நாட்டின் பொது­வான முன்­னேற்­றத்­தையும் பொது­மக்­களை சம­மான முறையில் முதன்­மைப்­ப­டுத்­திய நிலையில் தேசிய நலன்­க­ளையும் கருத்திற் கொண்­ட­வ­ராக இருத்தல் வேண்டும். அவற்றில் அக்­க­றையும் மிகுந்த கவனம் செலுத்­து­ப­வ­ரா­கவும் இருத்தல் அவ­சியம்.
ஆனால் இந்தத் தேர்­தலில் வேட்­பா­ள­ராகக் கள­மி­றங்­கி­யி­ருப்­ப­வர்கள் பன்­ மு­கத்­தன்மை கொண்ட தேசிய கொள்கை நிலைப்­பாட்டைக் கொண்­டி­ருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. இன ரீதி­யான, பக்கம் சார்ந்த கொள்­கை­க­ளையும், அர­சியல் நிலைப்­பாட்­டையும் கொண்­ட­வர்­க­ளா­கவே தோன்றுகிறார்கள்.  அந்த வகை­யி­லேயே விட­யங்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் அளித்­தி­ருக்­கின்­றார்கள்.
இதனால் நாட்டின் பொது­மக்­க­ளா­கிய வாக்­கா­ளர்கள் இந்தத் தேர்­தலில் நியா­ய­மான நிலையில் யாரை ஆத­ரிப்­பது, எந்த வேட்­பா­ளரைத் தெரிவு செய்­வது என்­பதில் குழப்­ப­ம­டைய நேரிட்­டுள்­ளது. குறிப்­பாக சிறு­பான்மை இன மக்­களின் நிலைமை திரி­சங்கு நிலை­மையை ஒத்­த­தாக மோச­ம­டைந்­தி­ருக்­கின்­றது என்றே கூற வேண்டும்.
விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கும் அர­ச­ப­டை­க­ளுக்கும் இடையில் இடம்­பெற்ற நீண்­ட­கால யுத்தம் முடி­வுக்குக் கொண்டு வரப்­பட்டு பத்து வரு­டங்கள் கழிந்­து­விட்­டன. யுத்­தத்தை  இரா­ணுவ  வழி­மு­றையில், வன்­முறை வடி­வத்தில் முடி­வுக்குக் கொண்டு வரு­வ­தற்­காகத் தலை­கீ­ழாக நின்று பல்­வேறு உத்­தி­களைக் கையாண்டு செயற்­பட்­டி­ருந்த மஹிந்த ராஜ­பக்ஷ அணி­யி­னரே இந்தத் தேர்­தலில் முதன்மை பெற்­றி­ருப்­ப­தாகத் தோன்­று­கின்­றது. யுத்த வெற்­றி வாதத்தை உயிர் மூச்­சாகக் கொண்டு அவர்கள் தங்­க­ளு­டைய தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தி­ருக்­கின்­றனர்.
தமிழ்மக்கள் தமது அர­சியல் உரி­மை­களை வென்­றெ­டுப்­ப­தற்­காக மேற்­கொண்ட நீண்ட போராட்­டத்தில் வேறு வழி­யின்றி ஆயுதப் போராட்ட வழி­மு­றையில் கால் பதிக்க வேண்­டி­ய­வர்­க­ளா­னார்கள். அவர்­களின் அற­வழிப் போராட்­டத்தை அரச படை­களைக் கொண்டு அர­சுகள் அடக்கி ஒடுக்க முயன்­ற­தனால் ஏற்­பட்ட அச்­சு­றுத்­தல்கள், உயி­ரா­பத்­துக்­களில் இருந்தும் தங்­களைப் பாது­காத்துக் கொள்ள வேண்­டிய நிலை­மையும் அவர்­களை ஆயு­த­மேந்த நிர்ப்­பந்­தித்­தி­ருந்­தது.
அற­வழிப் போராட்­டங்கள் தோல்­வி­யுற்­ற­தனால் முன்­னெ­டுக்­கப்­பட்ட ஆயுதப் போராட்­டத்தைப் பயங்­க­ர­வா­த­மாகச் சித்­தி­ரித்து, பயங்­க­ர­வா­தி­களை இல்­லாமல் செய்­வ­தற்­கான  இரா­ணுவ நட­வ­டிக்கை என்ற பெயரில் யுத்­தத்தைத் தீவி­ர­மாக முன்­னெ­டுத்த மஹிந்த ராஜ­பக் ஷ அர­சாங்கம் அதீத இரா­ணுவ வலி­மையைப் பயன்­ப­டுத்தி யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்து வெற்­றி­வாகை சூடி­யது. 
இந்த வெற்­றி­வா­தத்­தையே தமது வாழ்நாள் அர­சியல் கொள்­கை­யா­கவும் அர­சி­ய­லுக்­கான முத­லீ­டா­கவும் கொண்டு ராஜ­பக் ஷ குழு­வினர் செயற்­பட்டு வரு­கின்­றனர்.  இரா­ணு­வ­மயம் சார்ந்து, பௌத்த மதத்தை முதன்­மைப்­ப­டுத்தி மேலாண்மை நிலையில் வைத்துப் பேணி வளர்ப்­ப­து­வுமே அவர்­க­ளது அர­சியல் கொள்­கை­களின் உயிர்­நாடி. அர­சியல் போக்கில் குடும்ப ஆட்சி அர­சி­யலைப் பிணைத்து வளர்ந்­தோங்கச் செய்­வ­திலும் அவர்கள் தீவி­ர­மாக ஈடு­பட்­டி­ருக்­கின்­றனர்.
இத்­த­கைய அர­சியல் கொள்கைப் படிப்பின் பின்­ன­ணி­யி­லேயே மஹிந்த ராஜ­பக் ஷவின் சகோ­த­ர­ரான கோத்­த­பாய ராஜ­பக் ஷ வேட்­ப­ாள­ராகக் கள­மி­றக்­கப்­பட்­டுள்ளார். விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ராகக் கடும்­போக்­கி­லான தாக்­குதல் வழி­மு­றை­களைப் பின்­பற்றி எப்­ப­டி­யா­வது யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்­து­விட வேண்டும் என்­ப­தற்­காக, பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் என்ற வகையில் மிகத் தீவி­ர­மாக அவர் செயற்­பட்­டி­ருந்தார்.  
பாது­காப்பு அமைச்சின் செய­லா­ள­ராக பதவி வழியில் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட அதி­கா­ரங்­க­ளையே அரச அதி­காரி என்ற வகையில் அவர் கொண்­டி­ருந்தார். ஆனாலும் நிறை­வேற்று அதி­கா­ரங்­களை நிய­தி­க­ளுக்கு அப்பால் வரை­ய­றை­யற்ற முறையில் கொண்­டி­ருந்த ஜனா­தி­ப­தி­யா­ன தமது சகோ­த­ரரின் அதி­கார உரி­மை­க­ளையும் அவர் வலிந்து எடுத்துக் கொண்டு யுத்தச் செயற்­பாட்டில்  இரா­ணு­வத்தை வழி­ ந­டத்­தி­யி­ருந்தார்.
அதீத அதி­காரப் பிர­யோ­கத்தில்  இரா­ணு­வத்தைப் பயன்­ப­டுத்தி மேற்­கொண்ட செயற்­பா­டு­களே அவரை போர்க்­குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு ஆளாக்கி உள்­ளது.  இரா­ணுவ நட­வ­டிக்­கை­களின் போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள், சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்­ட­மீ­றல்­களின் அடிப்­ப­டையில் அவர் மீதான போர்க்­குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன.
மறு­பு­றத்தில் தனது சகோ­தரர் மஹிந்த ராஜ­பக்ஷ 2005ஆம் ஆண்டு ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்ட சூட்­டோடு சூடாக அவ­சர அவ­ச­ர­மாக பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் பத­வியைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக, தனது அமெ­ரிக்க குடி­யு­ரி­மையைத் துறந்து மீண்டும் இலங்கைக் குடி­யு­ரி­மையைப்பெற சட்ட நடை­மு­றை­க­ளுக்கு முர­ணான வழி­மு­றை­களே கையா­ளப்­பட்­டன என்ற குற்­றச்­சாட்­டுக்கும் அவர் பதி­ல­ளிக்க வேண்­டி­ய­வ­ரா­னார்.
இத்­த­கைய அர­சியல் மற்றும் மனித உரிமை மீறல் பின்­பு­லத்­தி­லேயே அவர் நாட்டின் ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­ப­டு­வ­தற்­கான தேர்­தலில் வேட்­பா­ள­ராகக் கள­மி­றக்­கப்­பட்­டுள்ளார்.
வழ­மைக்கு மாறாக மும்­முனைப் போட்டி
மறு­பு­றத்தில் கோத்­த­பாய ராஜ­பக் ஷ ­வுக்கு எதி­ரான முன்­னணி வேட்­பா­ள­ராக ஐக்­கிய தேசிய கட்­சியின் சார்பில் கள­மி­றங்­கி­யுள்ள சஜித் பிரே­ம­தாச, முன்னாள் ஜனா­தி­பதி ரண­சிங்க பிரே­ம­தா­சவின் புதல்வர் என்ற அர­சியல் அந்­தஸ்தைக் கொண்­டுள்ளார். இருப்­பினும் பல்­வேறு நெருக்­க­டி­க­ளையும் தகி­டு­தத்­தங்­க­ளையும் கொண்­டுள்ள நாட்டு அர­சி­யலில் முக்­கிய விட­யங்­களில் அவர் முன்­ன­ணியில் முகம் காட்­டாத ஒரு­வ­ரா­கவே திகழ்­கின்றார்.
தேசிய நலன்கள் சார்ந்த பல அர­சியல் விட­யங்கள் இடம்­பெற்­றி­ருந்த போதிலும் அவை எவற்­றிலும் அவரை முன்­னணி நிலையில் கண்ட அனு­பவம் நாட்டு மக்­க­ளுக்குக் கிடைக்­க­வில்லை. உள்­நாட்டு அர­சி­ய­லிலும் வெளி­வி­வ­கார அர­சியல் நட­வ­டிக்­கை­க­ளிலும் ஆளுமை உள்­ள­வ­ரா­கவோ பரிச்­சயம் உள்­ள­வ­ரா­கவோ அறி­யப்­ப­டாத ஒரு­வ­ரா­கவே அவர் கணிக்­கப்­ப­டு­கின்றார். ஜனா­தி­பதி தேர்தல் களத்தில் அவர் ஒரு புதிய வரவு.  
மற்­று­மொரு வேட்­பா­ள­ரா­கிய ஏ.கே.டி. என்ற பெயர் குறி­யீட்டைக் கொண்­டுள்ள ஜே.வி.பி. கட்­சியின் தலை­வ­ரா­ன அனு­ர­கு­மார திசா­நா­யக்க நாட்டின் மூன்­றா­வது அர­சியல் சக்­தியின் பிர­தி­நி­தி­யாகத் தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்றார். இட­து­சாரி கொள்­கையைக் கொண்ட கட்­சியின் தலைவர் என்ற அடை­மொ­ழியைக் கொண்­டி­ருந்த போதிலும், அந்தக் கொள்­கைக்கும் அவர்­க­ளுக்கும் காத தூரம் என்றே கூறப்­ப­டு­கின்­றது. அத்­துடன் தேசிய அர­சியல் விவ­கா­ரங்­களில் பெரும்­பான்மை இன மக்­களின் மனங்­க­ளையே அர­சியல் ரீதி­யாக வெற்றி பெறு­வ­தற்குத் தொடர்ச்­சி­யாகப் போரா­டு­கின்ற வளரும் தலை­வ­ரா­கவே அவர் திகழ்­கின்றார்.
முப்பத்தைந்து வேட்­பா­ளர்கள் கள­மி­றங்­கி­யுள்ள இந்தத் தேர்­தலில் இந்த மூன்று வேட்­பா­ளர்­க­ளுமே முக்­கி­யத்­துவம் பெற்­றி­ருக்­கின்­றார்கள். அதனால்; வழ­மை­யாக நில­வு­கின்ற இரு­முனை போட்டி என்ற நிலையைக் கடந்து இம்­முறை மும்­முனை போட்­டி­யாக இந்த ஜனா­தி­பதி தேர்தல் பரி­ண­மித்­துள்­ளது.
ஆனாலும், ஊழல், மோசடி, அதி­காரப் போட்டி, இன­வாத போக்கு,  இரா­ணுவ மய அணு­கு­முறை, வாக்­கு­று­திகள் நிறை­வேற்­றப்­ப­டாமை, மனித உரி­மைகள், அர­சியல் உரி­மை­களை மீறுதல், பொறுப்பு கூறு­கின்ற கடப்­பாட்டில் இருந்து நழுவிச் செல்­லுதல், மக்கள் நலன்­களில் அக்­க­றை­யற்ற அர­சியல் போக்கு, தேசிய பாது­காப்பு விவ­கா­ரங்­க­ளில்­கூட போதிய அக்­க­றை­யற்ற அதி­காரப் போக்கு என்­ப­வற்றைப் பின்­பு­ல­மாகக் கொண்­டுள்ள அர­சியல் கட்­சி­களின் முகா­மைத்­து­வத்தில் இரண்டு பிர­தான வேட்­பா­ளர்கள் தேர்­தலில் நிறுத்­தப்­பட்­டுள்­ளார்கள்.
இந்த இரு­த­ரப்பு அர­சியல் முகாம்­களின் செயற்­பா­டுகள் குறித்து இந்தத் தேர்­தல்­கால சூழலில் உள்­நாட்­டிலும், சர்­வ­தேச அள­விலும் கடு­மை­யான கருத்­துக்கள் வெளிப்­பட்­டி­ருக்­கின்­றன.
நாடா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழுவின் இடித்­து­ரைப்பு
ஏப்ரல் மாத உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தல்கள் பற்­றிய உண்மை நிலையைக் கண்­ட­றி­வ­தற்­காக விசா­ரணை நடத்­திய பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழு­ வெளி­யி­ட்டுள்ள  அறிக்­கையில் தேசிய பாது­காப்­புக்குப் பொறுப்­பான பிரி­வினர் மட்­டு­மல்­லாமல் பல்­வேறு தரப்­பினர் மீதும் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.
குறிப்­பாக, ஜனா­தி­பதி முக்­கி­ய­மான சந்­தர்ப்­பங்கள் பல­வற்றில் உரிய தலை­மைத்­து­வத்தை வழங்கத் தவ­றி­விட்டார் என்று சுட்­டிக்­காட்­டி­யுள்ள அந்த அறிக்கை தேசிய முக்­கி­யத்­துவம் மிக்க  விட­யங்கள் பேசப்­பட்ட கூட்­டங்­களில் இருந்த முக்­கி­யஸ்­தர்­களை விலக்கி வைத்­த­துடன், தேசிய பாது­காப்பு தொடர்­பி­லான கூட்­டங்­களை உரிய தரு­ணங்­களில் நடத்தத் தவ­றி­ய­துடன், முக்­கி­ய­மான அரச நிர்­வாக நடை­மு­றை­களைப் புறந்­தள்ளிச் செயற்­பட்­டி­ருந்தார் என்று சாடி­யுள்­ளது.
அர­சுக்குள் 2018 ஆம் ஆண்டு நெருக்­க­டி­களை உரு­வாக்கி அதன் மூலம் ஆட்சி நடை­மு­றை­களில் பிரி­வி­னையை ஏற் ­ப­டுத்தி அரச நடை­மு­றை­களை மலி­னப்  ­ப­டுத்­தி­யுள்ளார் என்றும் அந்த அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
அது­மட்­டு­மல்­லாமல் பிர­தமர், இராஜாங்க பாது­காப்பு அமைச்சர், சட்­டமா அதிபர் திணைக்­களம், பாது­காப்­புக்குப் பொறுப்­பான பாது­காப்புப் புல­னாய்வு பிரிவின் முக்­கி­யஸ்­தர்கள் என உயர் மட்­டத்தைச் சேர்ந்த பலர் மீதும் விரல் நீட்டி இந்த அறிக்கை குற்றம் சுமத்­தி­யி­ருக்­கின்­றது.
பாது­காப்புப் பொறி­முறை, நீதிப்­பொ­றி­மு­றையில் சட்­டமா அதிபர் திணைக்­களம் என்­ப­வற்றின் மறு­சீ­ர­மைப்பு, மதத்­தீ­வி­ர­வாதச் செயற்­பாட்டில் கண்­கா­ணிப்பு, அதீத நிதி­தொ­டர்­பி­லான மேற்­பார்­வைக்­கான பொறி­முறை, போலிச்­செய்தி வெளி­யிடல், பயங்­க­ர­வாதச் செயற்­பாடு என்­ப­வற்றை உரிய முறையில் கண்­கா­ணித்தல், பொறுப்­பு­டை­ய­வர்­க­ளாக இருப்­பதன் அவ­சி­யத்தை   மக்கள் பிர­தி­நி­தி­க­ளா­கிய அர­சி­யல்­வா­தி­களை உணரச் செய்தல் உள்­ளிட்ட 8 விட­யங்­களில் முக்­கிய கவனம் செலுத்­தப்­பட வேண்டும் என பாராளு­மன்றத் தெரி­வுக் ­கு­ழுவின் அறிக்கை பரிந்­து­ரைத்­துள்­ளது.
அர­சாங்கத் தரப்­பி­ன­ருக்கு பதவி           அந்­தஸ்து பாராமல் முகத்தில் அடித்­தாற்­போல அறி­வு­றுத்­தல்­க­ளுடன் கூடிய பரிந்­து­ரை­களை சட்­ட­வாக்­கத்­து­றை­யா­கிய பாரா­ளு­மன்­றத்தின் தெரி­வுக்­குழு இடித்­து­ரைக்கும் வகையில் அறிக்கை வடிவில் முன்­வைத்­துள்­ளது.
நாட்டின் முக்­கிய தேர்­த­லா­கிய ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான பரப்­பு­ரைகள் இடம்­பெற்று வரு­கின்ற ஓர் அர­சியல் தரு­ணத்­தில் ­இ­ரண்டு பிர­தான வேட்­பா­ளர்­களைக் கள­மி­றக்­கி­யுள்ள நாட்டின் முக்­கிய இரண்டு கட்­சி­களின் முக்­கி­யஸ்­தர்­களை நோக்கி விரல் நீட்டி பல விட­யங்­களைச் சுட்­டிக்­காட்­டி­யுள்ள இந்த அறிக்கை நெற்­றி­யடி பாணியில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.  
நாட்டின் அர­சியல் நிலை­மை­களை அக்­கு­ வேறு ஆணி­வே­றாக மக்கள் இந்தச் சந்­தர்ப் ­பத்தில் உணர்ந்து கொள்­வ­தற்கு இந்த அறிக்கை வாய்ப்­ப­ளித்­துள்­ளது.  
இன­வாத மத­வாத பிர­சா­ரத்­தி­லேயே கவனம்
அதே­வேளை, யுத்தம் முடி­வுக்கு வந்து ஒரு தசாப்த காலம் கடந்­து­விட்ட போதிலும், போர்க்­குற்றச் செயற்­பா­டு­க­ளுக்குப் பொறுப்பு கூறும் விட­யத்தில் ஏனோ­தானோ என்றும், மனித உரிமை நிலை­மை­களைச் சீர் செய்­வதில் அக்­க­றை­யற்றுச் செயற்­ப­டு­வ­தையும் சுட்­டிக்­காட்­டி­யுள்ள அமெ­ரிக்க நாடா­ளு­மன்ற வெளி­வி­வ­கார ஆசிய பசுபிக் பிராந்­திய துணைக்­குழு இலங்கை மீதான அமெ­ரிக்­காவின் கண்­கா­ணிப்­புடன் கூடிய அழுத்தம் கொடுக்கும் நட­வ­டிக்கை தொடர்ந்து இடம்­பெறும் என்று தெரி­வித்­துள்­ளது.
ஜனா­தி­பதி ஒரு­வரைத் தெரிவு செய்­வ­தற்­கான தேர்தல் நட­வ­டிக்­கை­களில் அர­சியல் கட்­சி­களும் நாட்டு மக்­களும் தீவிர அர­சியல் சிந்­த­னை­யிலும் செயற்­பா­டு­க­ளிலும் மூழ்­கி­யுள்ள தரு­ணத்தில் சர்­வ­தேச மட்­டத்­தில்­இ­ருந்து இலங்­கையின் நிலைமை குறித்து வந்­துள்ள அமெ­ரிக்­காவின் நிலைப்­பாடு முக்­கிய கவ­னத்­திற்கு உரி­ய­தா­கி­றது.
நிலை­மா­று­கால நீதியை நிலை­நாட்­டு­வ­தற்­கான பொறி­மு­றை­களை நிறுவி மனித உரிமை மீறல்கள் தொடர்­பி­லான விட­யங்­க­ளுக்குப் பொறுப்பு கூறவும், பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கும் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கும் நீதியை நிலை­நாட்டி உரிய இழப்­பீட்­டுக்­கான வழி­மு­றை­களைச் செயற்­ப­டுத்­தவும்,  இரா­ணு­வத்தின் பிடியில் உள்ள காணி­களை விடு­வித்தல், அர­சியல் கைதிகள் விவ­கா­ரத்­திற்குத் தீர்வு காணுதல், பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தை நீக்­குதல், புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக அர­சியல் தீரவு கண்டு நாட்டில் நல்­லி­ணக்­கத்தை உரு­வாக்­கவும் நட­வ­டிக்­கைகள் எடுக்­கவும் அரசு முற்­பட்­டி­ருக்க வேண்டும்.
ஆனால் அவற்றில் அரசு தாம­த­மான அக்­க­றை­யற்ற போக்­கி­லேயே செயற்­பட்டு வந்­துள்­ளது. இது குறித்து அமெ­ரிக்க வெளி­வி­வ­கார ஆசிய பசுபிக் பிராந்­திய துணைக்­கு­ழுவில் ஆரா­யப்­பட்­டி­ருக்­கின்­றது. அங்கு இந்த விட­யங்கள் தொடர்பில் ஆழ­மான கருத்­துக்­களும் வெளி­யி­டப்­பட்­டி­ருக்­கின்­றன. இலங்கை மீதான அமெ­ரிக்­காவின் அழுத்தம் தொடர்ந்து மேற்­கொள்­ளப்­படும் என்றும் பாது­காப்பு தொடர்பில் இலங்­கை­யு­ட­னான அமெ­ரிக்­காவின் செயற்­பா­டு­களில் முக்­கிய மாற்­றங்கள் நிகழும் என்றும் இங்கு சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருக்­கின்­றது.
முன்னாள்  இரா­ணுவ அதி­கா­ரி­க­ளையும், முன்னாள் வட­மா­காண ஆளு­நராகச் செயற்­பட்ட ஒரு முன்னாள்  இரா­ணுவ அதி­காரி உட்­பட இரண்டு பேரையும் பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பா­ள­ரா­ன கோத்­த­பாய ராஜ­பக்ஷ­வுக்­காக தமிழ்ப்­பி­ர­தே­ச­மா­ன வட­மா­கா­ணத்தில் பரப்­புரை நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டுத்­தி­யி­ருப்­பது  இரா­ணு­வ­மய அர­சியல் போக்­கிற்­கான கட்­டி­யங்­கூ­று­கின்ற செயற்­பா­டா­கவே நோக்க வேண்­டி­யுள்­ளது.
சிங்­கள பௌத்த தேசி­யத்தை வெளிப்­ப­டை­யா­கவே அர­சி­யலில் கையில் எடுத்­துள்ள ராஜ­பக்ஷ குழு­வினர் சார்­பி­லான வேட்­பாளர் கோத்­த­பாய ராஜபக்ஷ தேர்­தலில் வெற்றிபெற்றால் நாட்டின் ஆட்சி முறை எவ்­வா­றி­ருக்கும் என்­ப­தையே இந்த அர­சியல் பிர­சார நட­வ­டிக்­கைகள் கோடிட்டுக் காட்­டி­யி­ருக்­கின்­றன.
மறு­பு­றத்தில் ஐக்­கிய தேசி­ய­கட்­சியின் வேட்­பா­ள­ரா­ன சஜித் பிரே­ம­தா­சவும் மஹிந்த ராஜ­பக்ஷ குழு­வி­னரைப் பின்­பற்றி இன­வாத, மத­வாத பிர­சா­ரங்­க­ளி­லேயே கவனம் செலுத்­தி­யி­ருப்­பதைக் காண முடி­கின்­றது. இனங்­க­ளுக்­கி­டை­யி­லான ஐக்­கி­யத்­தையும் நல்­லி­ணக்­கத்­தையும் உரு­வாக்­கு­வது குறித்து ஐக்­கிய தேசிய கட்சி அர­சி­யல்­வா­திகள் அவ்­வப்­போது கருத்­துக்­களை வெளி­யிட்டு வந்­த­போ­திலும், வேட்­பா­ள­ரா­கிய சஜித் பிரே­ம­தாச பௌத்த மதத்தின் மேலாண்மை நிலை­மையில் அதிக அக்­கறை செலுத்தி சிங்­கள மக்­களின் வாக்­கு­களைப் பெறு­வ­தற்­கான மத­வாத பிர­சா­ரத்­தி­லேயே கவனம் செலுத்­தி­யி­ருப்­பதைக் காண முடி­கின்­றது.
தேர­வாத பௌத்த நாட்­டுக்­கான சிந்­தனை
வர­லாற்றில் முன்­னெப்­போதும் இல்­லாத அளவில் பௌத்த சாசன மேம்­பாட்­டுக்கு நிதி­யொ­துக்கிச் செயற்­ப­டப்­போ­வ­தாக குரு­ணா­க­லையில் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார். அத்துடன் அரச திணைக்களங்கள் பலவற்றின் ஊடாக பௌத்த மத மேம்பாட்டுக்கான நிதியொதுக்கப்படும் என்பதுடன் நாடளாவிய ரீதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பௌத்த விகாரைகள் அமைக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
மறுபுறத்தில் சிறுபான்மை இன மக்கள் தொடர்பில் மென்போக்கு அரசியல் நிலைப்பாட்டைக் கடைப்பிடிப்பவராகக் காட்டிக்கொள்ளும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டின் தென்பகுதியில் கட்டுகம்பளை நகர தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில், உலகின் பொருளாதார வலிமைமிக்க தேரவாத பௌத்த நாடாக இலங்கையைக் கட்டியெழுப்புவதே தங்களின் எதிர்பார்ப்பு என சூளுரைத்துள்ளார்.
சிறுபான்மை இன மக்கள் மீதும், சிறுபான்மை மதங்கள் மீதும் பௌத்த மத மேலாண்மை போக்கைக் கடைப்பிடித்து, பௌத்த மதத்தைத் திணிக்கின்ற ஆக்கிரமிப்புச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள ஒரு சூழலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் இருந்து தேர்தல் கால கருத்தாக இலங்கையை வலிமையான தேரவாத நாடாக உருவாக்கவேண்டும் என்ற ஆவல் வெளிப்பட்டிருப்பது சிறுபான்மை இன மக்களை கவலையடையவே செய்யும் என்பதில் சந்தேகமில்லை.
இனவாதமும் மதவாதமுமே சிங்கள அரசியல்வாதிகளின் அரசியலுக்கான உயிர் மூச்சு. இதன் அடிப்படையிலேயே நாட்டின் அரச இயந்திரம் செயற்பட்டு வருகின்றது. தேர்தல்களில் வெற்றியை நிச்சயிப்பதும் இவையே. ஆனாலும் மோசமான நீண்டகால யுத்தத்திற்குப் பின்னர் நாட்டின் ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பி நாட்டை முன்னேற்றிச் செல்வதில் கவனத்தைக் குவிப்பதை விடுத்து, பௌத்த மதத்தின் மேம்பாட்டுக்காக அரசியல் நடத்துகின்ற போக்கு நல்லதல்ல.
தேர்தல் காலத்தில் மட்டுமல்ல. சாதாரண நிலைமையிலும்  ராணுவ மயப்போக்கும் பௌத்த மத மேலாண்மை கொண்ட ஆட்சி நிர்வாகச் செயற்பாடும் நாட்டில் நிலையான சமாதானத்திற்கும் ஐக்கியத்திற்கும் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்க மாட்டா என்பதே நிதர்சனம்.
பி.மாணிக்­க­வா­சகம்  - நன்றி வீரகேசரி 











No comments: