உலகச் செய்திகள்


சீனாவில் 3 மாநிலங்களை இணைக்கும் பிரம்மாண்ட மேம்பாலம்

சிறுமிகளை துஸ்பிரயோகம் செய்தார்- டிரம்ப் - கிளின்டனின் நண்பரிற்கு எதிராக குற்றச்சாட்டு

பப்புவா நியுகினியில் கர்ப்பிணிகள் உட்பட 25 பேர் படுகொலை-உடல்கள் துண்டுதுண்டாக சிதைப்பு

சர்ச்சைக்குரிய சட்டமூலத்துக்கு முடிவு - ஹொங்கொங் தலைவர் அறிவிப்பு

ரஷ்­யா­வையும் சீனாவையும் இணைக்கும் 1,250 மைல் நீள நெடுஞ்­சாலை

இந்தியாவுக்கு எதிராக ட்ரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு

பிரிட்டனின் எண்ணெய் கப்பலை கைப்பற்ற முயன்ற ஈரானிய படகுகள்- கடும் எச்சரிக்கை விடுத்த போர்க்கப்பல்


சீனாவில் 3 மாநிலங்களை இணைக்கும் பிரம்மாண்ட மேம்பாலம்

09/07/2019 தென்மேற்கு சீனாவில் 3 மாநிலங்களை இணைக்கும் வகையில்  உயரத்தில் பிரம்மாண்ட மேம்பாலம் கட்டப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்காக தயார் நிலையிலுள்ளது என அந்நாட்டு ஊடகம் தகவலை வெளியிட்டுள்ளது. 
ஆசியாவிலேயே பரப்பளவில் மிகப்பெரிய நாடான சீனா உலகில் ரஷ்யா, கனடா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாகப் பரப்பளவின்படி மூன்றாவது பெரிய நாடாகும். 

 உலகில் மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் சீனா முதலிடம் வகிக்கிறது. சீனப் பெருஞ்சுவர் இந்நாட்டின் தொன்மை வாய்ந்தது. சீனாவின் வர்த்தகத் தலைநகராகச் ஷாங்காய் உள்ளது.
சீனாவின் தென்மேற்கு பகுதியில் தற்போது 50 மாடி கட்டட உயரத்தில் பிரம்மாண்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு இந்த மேம்பாலம் கட்டத் தொடங்கப்பட்டது. 
இதற்கு 'ஜிமிங்சான்ஷெங்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம்  கிட்டதட்ட தயாராகி விட்டது. பணியில் ஈடுபட்டபோது சுண்ணாம்புக் கற்கள் மற்றும் கரடு முரடான நிலப்பகுதிகளால் அதிகம் பாதிக்கப்பட்டதாகவும், 3 வருட உழைப்பு வீணாகாமல் சரியான முறையில் செயல்பட்டு இதர பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த மேம்பாலம் தென்மேற்கு சீனாவின் யுனான், குய்சோ, சிச்சுவான் ஆகிய 3 மாநிலங்களை இணைக்கின்றன. இந்த ஆண்டின் இறுதிக்குள் மேம்பாலம் மக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த மேம்பாலம் மக்களின் பயன்பாட்டிற்கு வந்தபின்னர் சீனாவின் பொருளாதாரம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.    நன்றி வீரகேசரி 










சிறுமிகளை துஸ்பிரயோகம் செய்தார்- டிரம்ப் - கிளின்டனின் நண்பரிற்கு எதிராக குற்றச்சாட்டு


09/07/2019 அமெரிக்க  ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன் ஆகியோரின் நெருங்கிய நண்பரான கோடீஸ்வரர் ஜெவ்ரே எப்ஸ்டெய்ன் சிறுமிகளை பாலியல் நோக்கத்திற்காக கடத்தினார் என  எப்பிஐ அதிகாரிகள் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.
2002 முதல் 2005 வரையான காலப்பகுதியில் புளோரிடா மற்றும் நியுயோர்க்கில் பல சிறுமிகளை எப்ஸ்டெய்ன் துஸ்பிரயோகம் செய்தார் என குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள அதிகாரிகள் இது தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் அதனை தெரிவிக்குமாறு  பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
சிறுமிகளை கடத்தினார் மற்றும் துஸ்பிரயோகம் செய்தார் என்ற இரு குற்றச்சாட்டுகளை எவ்பிஐ  அதிகாரிகள் சுமத்தியுள்ளனர்.
எவ்பிஐ அதிகாரிகள் சோதனை நடவடிக்கையின் போது ஜெவ்ரே எப்ஸ்டெய்னின் மாளிகையிலிருந்து  சிறுமிகளின் நிர்வாணப்புகைப்படங்களை மீட்டுள்ளனர் எனவும் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்
சிறுமிகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த பின்னர் தனது தவறை மறைப்பதற்காக பெருமளவு பணத்தை ஜெவ்ரே எப்ஸ்டெய்ன் வழங்கினார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
அவர் தான் பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கியவர்களிற்கு பணம் கொடுத்து புதிதாக சிறுமிகளை அறிமுகப்படுத்தும் படி கேட்டுக்கொண்டார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் அவர் ஒரு வலையமைப்பை உருவாக்கியிருந்தார் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்
செல்வந்தரிடம் பணிபுரிந்தவர்கள் உட்பட அவரிற்கு நெருக்கமான பலர் இந்த துஸ்பிரயோக நடவடிக்கைகளிற்கு உதவியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிலர் ஜெவ்ரே எப்ஸ்டெய்னின் இச்சையை பூர்த்தி செய்வதற்காக சிறுமிகளை நியுயோர்க்கிற்கு அழைத்து வந்தனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  நன்றி வீரகேசரி 










பப்புவா நியுகினியில் கர்ப்பிணிகள் உட்பட 25 பேர் படுகொலை-உடல்கள் துண்டுதுண்டாக சிதைப்பு

10/07/2019 பப்புவா நியுகினியில் கர்ப்பிணிப்பெண்கள் குழந்தைகள் உட்பட 25 ற்கும் அதிகமானவர்கள்  பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
பப்புவா நியுகினியின் ஹெலா மாகாணத்தில்  பழங்குடியினத்தவர்களிற்கு  இடையில் இடம்பெற்றுவரும் தொடர்மோதல்களின் போதே இந்த படுகொலைகள் இடம்பெற்றுள்ளன
டரிபொரி மாவட்டத்தின் இரு கிராமங்களில் இந்த படுகொலைகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
முனிமா கிராமத்திலும் கரிடா கிராமத்திலும் இந்த படுகொலைகள் இடம்பெற்றுள்ளன படுகொலை செய்யப்பட்டவர்களில் இருசர் கர்ப்பிணிப்பெண்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கரிடா கிராமத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களி;ன் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன
தடியொன்றுடன் பிணைக்கப்பட்டுள்ள நிலையில் பல உடல்களை அந்த படங்களில் காணமுடிகின்றது.
சிலர் துண்டுதுண்டாக வெட்டப்பட்டுள்ளனர் அவர்களின் உடல்பாகங்களை அடையாளம் காணமுடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
படுகொலைகளில் ஈடுபட்டவர்களை கைதுசெய்வதாக உறுதியளித்துள்ள பப்புவாநியுகினியின் பிரதமர் ஜேம்ஸ் மராப்பே தனது வாழ்க்கையின் மிகவும் துயரமான நாள் இது என குறிப்பிட்டுள்ளார்
நான் காலையில் எழுந்து எனது சமையலறைக்கு சென்றவேளை துப்பாக்கி சத்தங்கள் கேட்டன சில வீடுகள் எரிந்துகொண்டிருந்தன என கரிடா உhப சுகாதார நிலையத்திற்கு பொறுப்பாகவுள்ள பிலிப் பிமுவா என்ற நபர் தெரிவித்துள்ளார்.
நான் எதிரிகள் கிராமத்திற்கு வந்துவிட்டார்கள் என்பதை உணர்ந்து அங்கிருந்து தப்பியோடி மரங்களிற்குள் ஒளிந்திருந்தேன்  என மேலும் தெரிவித்துள்ள அவர் நான் திரும்பி வந்து பார்த்தவேளை  உடல்கள் துண்டுதுண்டாக வெட்டப்பட்ட நிலையில் காணப்பட்டன வீடுகள் எரிக்கப்பட்டிருந்தன எனவும் தெரிவித்துள்ளார்.
கொல்லப்பட்டவர்கள் அனைவரையும் எனக்கு தெரியும் அவர்கள் அனைவரும் எனது மக்கள் ஆனால் அவர்களது உடல்கள் மிக மோசமாக சிதைக்கப்பட்டுள்ளதால் அவர்களது உடல்களை எங்களால்  அடையாளம் காணமுடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் துண்டுதுண்டாக வெட்டப்பட்டிருந்தனர் சில உடல்பாகங்களை அடையாளம் காணமுடியவில்லை எது கை எது கால் என்பது தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் உடல்களை நுளம்புவலையில் சுற்றி எடுத்தபடி அந்த கிராமத்திலிருந்து தப்பியோடி வந்துவிட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  நன்றி வீரகேசரி 










சர்ச்சைக்குரிய சட்டமூலத்துக்கு முடிவு - ஹொங்கொங் தலைவர் அறிவிப்பு

10/07/2019 ஹொங்கொங் தலைவர் காரிலாம்  அந்தப் பிராந்­தி­யத்தில் கைது­செய்­யப்­பட்டவர்களை விசா­ர­ணைக்­காக சீன பிர­தான நிலப் முடி­வுக்கு பகு­திக்கு அனுப்பும் சர்ச்­சைக்­கு­ரிய சட்­ட­மூலம் கொண்டுவரப்­பட்­டுள்­ள­தாக நேற்று செவ்­வாய்க்­கி­ழமை அறி­விப்புச் செய்துள்ளார்.
ஊட­க­வி­ய­லாளர் மாநா­டொன்றில் கலந்துகொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இந்த அறி­விப்பைச் செய்­தார். அந்த சட்­ட­மூலம் தொடர்­பான அர­சாங்­கத்தின் பணி முற்­று­மு­ழு­தாக  ஒரு தோல்­வி­யா­க­வி­ருந்­த­தாக  அவர்  தெரி­வித்தார்.
ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களின் கோரிக்­கைக்கு அமைய அந்த சட்­ட­மூலம் முழு­மை­யாக வாபஸ் பெற்­றுக்­கொள்­ளப்­ப­டு­வ­தாக அவர் கூறினார். 
அந்த சட்ட­மூ­லத்­திற்கு எதி­ராக ஹொங் ­கொங்கில் இடம்­பெற்ற பாரிய ஆர்ப்­பாட்­டங்­க­ளை­ய­டுத்து அந்த சட்­ட­மூ­லத்தின் அமு­லாக்கம் ஏற்­க­னவே கால­வ­ரை­ய­றை­யின்றி இடை­நி­றுத்தம் செய்­யப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.
எனினும் அர­சாங்­கத்தின் நேர்மை தொடர்­பான சந்­தேகங் கள் மற்றும்  அர­சாங்கம் சட்­ட ­ச­பை­யி­னூ­டாக அந்த சட்­ட­மூ­ல த்தை மீண்டும் முன்­னெ­டுக்­கலாம் என்ற கவ­லைகள் தற்­போதும் நீடித்­துள்­ள­தாக குறிப்­பிட்ட காரி லாம், ''அதனால் அத்­த­கைய திட்டம் எதுவும் இங்கு இல்லை என்­ப­தையும் அந்த சட்­ட­மூலம் மர­ணித்து விட்­டது என்­ப­தையும் நான் இங்கு வலி­யு­றுத்­து­கிறேன்"  என்று தெரி­வித்தார்.
அந்த சட்­டமூலம் 2020 ஆம் ஆண்டு தற்போதைய சட்டமன்ற தவணை முடிவு றும் போது  முடிவுக்கு கொண்டுவரப்படும் என அவர் இதற்கு முன் கருத்து வெளியி டுகையில் தெரிவித்திருந்தமை குறிப்பி டத்தக்கது.  நன்றி வீரகேசரி 












ரஷ்­யா­வையும் சீனாவையும் இணைக்கும் 1,250 மைல் நீள நெடுஞ்­சாலை


11/07/2019 ரஷ்­யா­வா­னது ஐரோப்­பா­வையும் சீனா­வையும் இணைக்கும் வகையில் தனது பிராந்­தி­யத்­தினூடாக சீனா­வுக்கு 1,250 மைல்  நீள­மான நெடுஞ்­சாலையை  நிர்­மா­ணிப்­ப­தற்கு  அங்­கீ­கா­ர­ம­ளித்­துள்­ளது.


தனிப்­பட்ட ரீதியில் நிதி­வ­ச­தி­ய­ளிக்­கப்­பட்ட இந்த மெரி­டியன் நெடுஞ்­சாலை பெலா­ர­ஸு­ட­னான ரஷ்ய எல்­லை­யி­லி­ருந்து கஸ­கஸ்தான் வரை சென்று ஹம்பேர்க் பிராந்­தி­யத்­தி­லி­ருந்து சீனாவின் ஷங்காய் நகர் வரை விரி­வு­படும் நெடுஞ்­சாலை வலைப்­பின்­னலின் அங்­க­மாக  அமை­ய­வுள்­ளது.




சீன ஜனா­தி­பதி ஸி ஜின்­பிங்கின் பட்­டை­யொன்று பாதை­யொன்று திட்­டத்தின் அங்­க­மான இந்த நெடுஞ்­சா­லையை ஸ்தா­பிக்கும் திட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.



இந்தப் பாதை ஸ்தா­பிக்­கப்­பட்­டதும் அது ஐரோப்­பா­வுக்கும் சீனாவுக்­குமி­டையில் பொருட்­களை கொண்டு செல்­வ­தற்­கான குறு­கிய பாதை­யாக அமையும்.  நன்றி வீரகேசரி 















இந்தியாவுக்கு எதிராக ட்ரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு

10/07/2019 அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் நாடாக இந்தியா நீண்ட காலமாக உள்ளது. இதனை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், இந்தியா மீது மீண்டும் குற்றச்சாட்டியுள்ளார்.
இது குறித்து ட்ரம்ப் தனது டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது,
அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா கூடுதலான வரி விதிப்பதாக  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டி வருகின்ற நிலையில், முன்னுரிமை வர்த்தக நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியாவை அவர் அண்மையில் நீக்கினார்.
இந்நிலையில், கடந்த 28 ஆம் திகதி ஜப்பானின் ஒசாகா நகரில் இடம்பெற்ற ஜி-20 உச்சி மாநாட்டின்போது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும், இந்தியப் பிரதமர் மோடியும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில்,வர்த்தக பிரச்சினைகள் குறித்து இருதரப்பு வர்த்தக அமைச்சர்கள் சந்தித்து பேசுவது என முடிவானது.இந் நிலையிலேயே ட்ரம்ப் இவ்வாறான குற்றச்சாட்டை இந்தியா மீது சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 












பிரிட்டனின் எண்ணெய் கப்பலை கைப்பற்ற முயன்ற ஈரானிய படகுகள்- கடும் எச்சரிக்கை விடுத்த போர்க்கப்பல்

11/07/2019 பராசீக வளைகுடாவில் பயணித்துக்கொண்டிருந்த பிரிட்டனின் எண்ணெய்க்கப்பலை ஈரான் கைப்பற்ற முயற்சி செய்ததாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையணியின் படகுகள்  பிரிட்டனின் எண்ணெய் கப்பலை இடைமறித்து கைப்பற்ற முயன்றன என  அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனின் ஹெரிட்டேஜ் என்ற எண்ணெய்கப்பல்  பாரசீக வளைகுடாவிலிருந்து ஹார்முஸ் ஜலசந்திக்கு செல்ல முயன்றவேளை ஈரானிய படகுகள் அந்த கப்பலை நோக்கி சென்றதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
படகிலிருந்தவர்கள் பிரிட்டனின் எண்ணெய் கப்பலை பாதை மாறி பயணிக்குமாறும் ஈரானின் கடல்பகுதிக்கு செல்லுமாறும் உத்தரவிட்டனர் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவ்வேளை அந்த பகுதியின் மேலாக பயணித்துக்கொண்டிருந்த அமெரிக்க விமானமொன்று அதனை படம் பிடித்துள்ளது.
இதேவேளை ஈரானின் எண்ணெய் கப்பலிற்கு பாதுகாப்பாக சென்று கொண்டிருந்த  பிரிட்டனின் கடற்படை கப்பலான எச்எம்எஸ் மொன்டிரோஸ் ஈரானிய படகுகள் மீது தனது துப்பாக்கி திருப்பி கடும் எச்சரிக்கை விடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை மூன்று ஈரானிய படகுகள் சர்வதேச சட்டத்திற்கு முரணாக பிரிட்டனின் எண்ணெய் கப்பலை கைப்பற்ற முயன்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது என பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து பிரிட்டனின் போர்க்கப்பல்  ஈரானிய படகுகளிற்கும் பிரிட்டனின் எண்ணெய்கப்பல்களிற்கும் இடையில் நுழைந்து ஈரானிய படகுகளிற்கு கடும் எச்சரிக்கையை விடுத்ததாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.
நாங்கள் இந்த சம்பவத்தினால் ஆழ்ந்த கவலையடைந்துள்ளோம் அந்த பகுதியில் பதட்டத்தை குறைக்குமாறு ஈரானை கேட்டுக்கொள்கி;ன்றோம் என பிரிட்டன் தெரிவித்துள்ளது.

நன்றி வீரகேசரி










No comments: