ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணம் 2019 அரையிறுதி ஆட்டங்கள்


இந்தியாவின் வெற்றிக்கு 240 ஓட்டங்கள்

சரணடைந்தது இந்தியா ; இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து

தடுமாறிய ஆஸி.யை மீட்டெடுத்த ஸ்மித்

27 வருடங்களுக்குப் பிறகு இறுதிப் போட்டியில் இங்கிலாந்து


இந்தியாவின் வெற்றிக்கு 240 ஓட்டங்கள்

10/07/2019 இந்திய அணிக்கு எதிரான முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 239 ஓட்டங்களை குவித்துள்ளது.

மழையால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் இடைநிறுத்தப்பட்ட இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கிடையேயான முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று மாலை 3.00 மணிக்கு மான்செஸ்டரில் ஆரம்பமானது.
46.1 ஓவருக்கு 211 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து நிலையில்  ஆட்டத்தை ஆரம்பித்த நியூஸிலாந்து அணி இறுதியாக நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து 239 ஓட்டங்களை பெற்றது.
நியூஸிலாந்து அணி சார்பில் மார்டின் குப்டில் ஒரு ஓட்டத்தையும், ஹென்றி நிக்கோலஷ் 28 ஓட்டத்தையும், கேன் வில்லியம்சன் 67 ஓட்டத்தையும், ஜேம்ஷ் நீஷம் 12 ஓட்டத்தையும், கிரேண்ட்ஹோம் 16 ஓட்டத்தையும், டெய்லர் 74 ஓட்டத்தையும், டொம் லெதம் 10 ஓட்டத்தையும், ஹென்றி ஒரு ஓட்டத்தையும்  பெற்று ஆட்டமிழந்ததடன் மிட்செல் சாண்டனர் 9 ஓட்டத்துடனும், டிரெண்ட் போல்ட் 3 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுக்களையும், பும்ரா, பாண்டியா, ஜடேஜா, சஹால் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.  நன்றி வீரகேசரி 












சரணடைந்தது இந்தியா ; இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து

10/07/2019 இந்திய அணியை 18 ஓட்டத்தினால் வீழ்த்தி நியூஸிலாந்து அணி இரண்டாவது தடவையாகவும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.
ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டம் இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கிடையே நேற்று மாலை 3.00 மணிக்கு மான்செஸ்டரில் ஆரம்பமானது. 
நேற்றைய தினம் நியூஸிலாந்து அணி 46.1 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 211 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை மழை காரணமாக போட்டி இடை நிறுத்தப்பட்டு இன்றைய தினம் தொடரப்பட்டது.
இன்றைய தினம் 211 ஓட்டத்துடன் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி இறுதியாக 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 239 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
240 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இந்திய அணியின் முன்னணி வீரர்கள் நியூஸிலாந்து அணியின் பந்து வீச்சுகளில் திணறி அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறி அதிர்ச்சியளித்தனர்.  
ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ராகுல் ஆகியோர் தலா ஒவ்வொரு ஓட்டத்துடன் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேற அடுத்த வந்த தினேஷ் கார்த்திக்கும் சற்று நேரம் தாக்குப் பிடித்தாடி ஒன்பதாவது ஓவரின் இறுதிப் பந்தில் 6 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். 
இதனால் இந்திய அணி முதல் 10 ஓவரில் 4 விக்கெட்டுக்களை இழந்து 24 ஓட்டங்கள‍ை பெற்றது. 5 ஆவது விக்கெட்டுக்காக ரிஷாத் பந்த் மற்றும் பாண்டியா ஜோடி சேர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.
அதனால் இந்திய அணி 15 ஓவரில் 4 விக்கெட்டுக்களை இழந்து 43 ஓட்டத்தையும், 20 ஓவரில் 70 ஓட்டத்தையும் பெற்றது. எனினும் 22.5 ஆவது ஓவரில் ரிஷாத் பந்த் 32 ஓட்டத்துடன் மிட்செல் சாண்டனரின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார் (71-5) .
தொடர்ந்து தோனி களமிறங்கிய துடுப்பெடுத்தாட மறுமுணையில் பாண்டியா 30.3 ஆவது ஓவரில் 32 ஆட்டமிழந்தார் (92-6).
7 ஆவது விக்கெட்டுக்காக களமிறங்கிய ஜடேஜா தோனியுடன் கைகோர்த்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பிக்க இந்திய அணியின் ஓட்ட குவிப்பு வேகம் அதிகரித்தது. அதன்படி 35 ஓவரில் 119 ஓட்டங்களையும், 40 ஓவரில் 150 ஓட்டங்களையும் இந்தியா பெற்றது. இந் நிலையில் 41.5 ஆவது ஓவரில் ஜடேஜா அரைசதம் விளாசினார். 
இதேவேளை 44 ஆவது ஓவருக்காக ஜேம்ஸ் நீஷம் பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ள அந்த ஓவரில் இரண்டு பிடியொடுப்புக்களை நியூஸிலாந்து அணி நழுவ விட்டது. 
ஒரு கட்டத்தில் இந்திய அணி 45 ஓவருக்கு 6 விக்கெட்டுக்களை இழந்த் நிலையில் 188 ஓட்டங்கள‍ை பெற்றது. ஆடுகளத்தில் ஜடேஜா 66 ஓட்டத்துடனும், தோனி 33 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடிவர வெற்றிக்கு 30 பந்துகளுக்கு 52 ஓட்டம் தேவைப்பட்டது. 
இதன் பின்னர் தோனி மற்றும் ஜடேஜாவின் இணைப்பாட்டம் 45.3 ஆவது ஓவரில் 100 ஓட்டங்களை தொட்டதுடன் இந்திய அணி 46.3 ஓவரில் 200 ஓட்டங்களை பெற்றது. 
இந் நிலையில் ஜடேஜா 47.5 ஆவது ஓவரில் மொத்தமாக 59 பந்துகளை எதிர்கொண்டு 4 நான்கு ஓட்டம், 4 ஆறு ஓட்டம் அடங்கலாக 77 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேறினார் 208-7) இதனால் வெற்றிவாய்ப்பு நியூஸிலாந்து அணிப் பக்கம் திரும்பியது. 
ஒரு கட்டத்தில் இந்திய அணியின் வெற்றிக்கு 12 பந்துகளில் 31 ஓட்டம் என்ற நிலையுமிருக்க தோனி 48.3 ஆவது ஓவரில் 50 ஓட்டத்துடன் ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து சஹால் களமிங்கி துடுப்பெடுத்தாட இந்திய அணி இறுதியாக 49.3 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 221 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 18 ஓட்டத்தினால் வெற்றிபெற்றது.
பந்து வீச்சில் நியூஸிலாந்து அணி சார்பில் ஹென்றி 3 விக்கெட்டுக்கயைும், டிரெண்ட் போல்ட், மிட்செல் சாண்டனர் ஆகியோர் 2 விக்கெட்டுக்களையும், லொக்கி பெர்குசன் மற்றும் ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். 
photo credit ; ICC











தடுமாறிய ஆஸி.யை மீட்டெடுத்த ஸ்மித்

11/07/2019 ஸ்மித்தின் நிதானமான ஆட்டத்தினால் தடுமாறிய அவுஸ்திரேலிய அணி இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் 223 ஓட்டங்களை குவித்துள்ளது.
உலகக் கிண்ணத் தொடரின் இரண்டாவது அயைிறுதி ஆட்டம் ஆர்ரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய அணிக்கும், இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கிடையிலும் இன்று மாலை 3.00 மணிக்கு பேர்மிங்கமில் ஆரம்பமானது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலாவதாக துடுப்பெடுத்தாட தீர்மானித்து களமிறங்கியது. கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஜோப்பர் ஆச்சரின் பந்து வீச்சுகளில் அவுஸ்திரேலிய அணியின் முதல் 3 விக்கெட்டுக்களும் 14 ஓட்டத்துக்கு வீழ்த்தப்பட்டது.
1.1 ஆவது ஓவரல் ஜேப்பர் ஆச்சரின் வீசிய முதல் பந்தில் பிஞ்ச் எதுவித ஓட்டமின்றி ஆட்டமிழக்க 2.4 ஆவது ஓவரில் கிறிஸ் வோக்ஸின் பந்து வீச்சில் டேவிட் வோர்னர் 9 ஓட்டத்துடனும், அடுத்து வந்த ஹேண்ட்ஸ்கோப் 6.1 ஆவது ஓவரில் 4 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதனால் இங்கிலாந்து அணி 6.1 ஓவருக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து 14 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தடுமாறியது. எனினும் 4 ஆவது விக்கெட்டுக்காக அலொக்ஸ்கரி - ஸ்டீவ் ஸ்மித் ஜோடி சேர்ந்து விக்கெட்டுக்களை பறிகொடுக்காது நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.
அதனால் அவுஸ்திரேலிய அணி முதல் 10 ஓவரில் 27 ஓட்டத்தையும், 20 ஓவரில் 78 ஓட்டத்தையும், 25 ஓவரில் 103 ஓட்டத்தையும் பெற்றது. இவர்களின் இந்த இணைப்பாட்டமானது தடுமாறிய அவுஸ்திரேலிய அணிக்கு பெரும் உதவியாக அமைந்தது. எனினும் 27.2 ஆவது ஓவரில் அடில் ரஷித்துடைய பந்தில் 46 ஓட்டத்துடன் அலெக்ஸ்கரிஆட்டமிழந்தார் (117-4).
அலெக்ஸ் கரியின் ஆட்டமிழப்பையடுத்து களமிறங்கிய ஸ்டோனிஸும் அதே ஓவரில் தான் எதிர்கொண்ட இரண்டாவது பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
இதன் பின்னர் ஜேடி சேர்ந்த ஸ்மித் - மெக்ஸ்வெலின் இணைப்பாட்டமும் அவுஸ்திரேலிய அணிக்கு சற்று கைகொடுத்தது. அதனால் அவுஸ்திரேலிய அணி 34 ஓவரில் 5 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 152 ஓட்டங்களை குவித்தது. 
இந் நிலையில் 34.5 ஆவது ஓவரில் மெக்ஸ்வெல் 22 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க, அடுத்து வந்த பேட் கம்மின்ஸ் 6 ஓட்டத்துடன் 37.4 ஆவது ஓவரில் ரூட்டிடம் பிடிகொடுத்து பெவிலியன் திரும்பினார் (166-7).
8 ஆவது விக்கெட்டுக்காக களமிறங்கிய மிட்செல் ஸ்டாக்குடன் ஸ்டீவ் ஸ்மித் ஜோடி சேர்ந்தாட 40 ஓவரில் 175 ஓட்டத்தையும், 45 ஓவரில் அவுஸ்திரேலிய அணி 206 ஓட்டத்தையும் பெற்றது. ஆடுகளத்தில் ஸ்மித் 82 ஓட்டத்துடனும், மிட்செல் ஸ்டாக் 22 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடி வந்தனர்.
இதேவேளை 47.1 ஆவது ஓவரில் ஸ்டீவ் ஸ்மித் மொத்தமாக 119 பந்துகள‍ை எதிர்கொண்டு 6 நான்கு ஓட்டம் அடங்கலாக 85 ஓட்டத்துடன் ரன்அவுட் முறையில் ஆட்டமிழக்க மறுமுணையில் அதே ஓவரின் 2 ஆவது பந்தில் மிட்செல் ஸ்டாக் 29 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.
இறுதியாக அவுஸ்திரேலிய அணி 49 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 223 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் கிறிஸ் வொக்ஸ் மற்றும் அடில் ரஷித் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும், ஜோப்பர் ஆர்ச்சர் 2 விக்கெட்டுக்களையும் மார்க்வுட் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
photo credit : icc
நன்றி வீரகேசரி













27 வருடங்களுக்குப் பிறகு இறுதிப் போட்டியில் இங்கிலாந்து


11/07/2019 உலகக் கிண்ணத் தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்களினால் வெற்றியீட்டி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.
உலகக் கிண்ணத் தொடரின் இரண்டாவது அயைிறுதி ஆட்டம் ஆர்ரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய அணிக்கும், இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கிடையிலும் இன்று மாலை 3.00 மணிக்கு பேர்மிங்கமில் ஆரம்பமானது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடி 49 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 223 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர். 
224 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இங்கிலாந்து அணியின் ஆரம்ப வீரர்களான ஜோசன் ரோய் - ஜோனி பெயர்ஸ்டோ நல்லதொரு இணைப்பாட்டத்தை பகிர்ந்து கொண்டனர்.
இதனால் இங்கிலாந்து அணி 5 ஓவரில் 19 ஓட்டத்தையும், 10 ஓவரில் 50 ஓட்டத்தையும் பெற்றது. 14.5 ஆவது ஓவரில் ரோய் ஒரு நான்கு ஓட்டத்தை விளாசித் தள்ளி அரைசதம் கடக்க இங்கிலந்து அணி 15 ஓவர் நிறைவில் 95 ஓட்டங்களை பெற்றது.
16 ஆவது ஓவருக்கா ஸ்டீவ் ஸ்மித் பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ள அந்த ஓவர‍ை எதிர்கொண்ட ரோய் தொடர்ச்சியாக மூன்று ஆறு ஓட்டங்களை விளாசித் தள்ளினார். அதனால் அந்த ஓவரில் மாத்திரம் இங்கிலாந்து அணி 21 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இந் நிலையில் 17.2 ஆவது ஓவரில் இங்கிலாந்து அணியின் முதல் விக்கெட் 124 ஓட்டத்துக்கு வீழ்த்தப்பட்டது. அதன்படி பெயர்ஸ்டோ மொத்தமாக 43 பந்துகளை எதிர்கொண்டு 5 நான்கு ஓட்டம் அடங்கலாக 34 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க, அதிரடிகாட்டி வந்த ரோய் 19.4 ஆவது ஓவரில் பேட் கம்மின்ஸின் பந்து வீச்சில் மொத்தமாக 65 பந்துகளை எதிர்கொண்டு 9 நான்கு ஓட்டம், 5 ஆறு ஓட்டம் அடங்கலாக 85 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார் (147-2).
தொடர்ந்து 3 ஆவது விக்கெட்டுக்காக ஜோ ரூட் - இயன் மோர்கன் ஜோடி சேர்ந்து சிறப்பாக அவுஸ்திரேலிய அணியின் பந்துகளை நான்கு திசைகளிலும் அடித்தாட இங்கிலாந்து அணி 29.2 ஆவது ஓவரில் 2 விக்கெட்டுக்களை இழந்து 200 ஓட்டங்களை கடந்தது. 
இறுதியாக இங்கிலாந்து அணி ஓவரில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 226 ஓட்டங்களை பெற்று அவுஸ்திரேலிய அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்தது.
ஆடுகளத்தில் ரூட் 45 ஓட்டத்துடனும், மோர்கன் 49 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி நான்காவது முறையாகவும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளதுடன், 1992 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஒருநாள் உலகக் கிண்ண அரங்கில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி 27 வருடகால தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
அத்துடன் 1992 ஆம் ஆண்டுக்கு பின்னர் உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளதும் விசேட அம்சமாகும்.
இந் நிலையில் எதிர்வரும் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள நடப்பு உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியுடன் இங்கிலாந்து பலப்பரீட்சை நடத்தவுள்ளமையும் குறிப்பித்தக்கது. 
நன்றி வீரகேசரி








No comments: