தமிழ் சினிமா - இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைவிமர்சனம்



ஹரிஷ் கல்யாண், காளி பட புகழ் ஷில்பா மஞ்சுநாத் ஆகியோர் நடித்துள்ள படம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும். படத்தின் தலைப்பை பார்த்தே இது காதல் கதை என அனைவருக்கும் விளங்கியிருக்கும். படம் எப்படி வாருங்கள் பார்ப்போம்.
கதை:
கவுதம் (ஹரிஷ் கல்யாண்) சின்ன வயதிலேயே தன் அம்மா வேறொருவருடன் ஓடிப்போவதால்
பெரிய ஏமாற்றமடைந்து கோபத்துடனேயே வாழ்கிறார். எந்த விஷயத்தையும் பொறுமையாக ஹண்டில் செய்ய தெரியாதவர். அடுத்த உடனேயே அடி தான்.
தாரா (ஷில்பா மஞ்சுநாத்) பெரிய இடத்து பெண். இவர்கள் இருவருக்கும் நடுவில் தமிழ்சினிமா வழக்கம்போல மோதலில் ஆரம்பித்து பின்னர் காதலில் முடிகிறது.
கவுதம்-தாரா இடையிலான காதல், மோதல், பிரிவு, குடும்பத்தின் எதிர்ப்பு தான் இந்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படம்.
உருகி உருகி காதலிக்கும் இருவருக்குள்ளும் அடிக்கடி பிரச்சனைகள் வர துவங்குகிறது. தன் அம்மாவை போல இவளும் நம்மை விட்டு விட்டு போய்விடுவாளோ என்கிற குழப்பம் ஹரிஷ் கல்யாணுக்கு, இவனை நம்பி போகலாமா என்ற குழப்பம் ஹீரோயினுக்கு. இன்னொருவருடன் நிச்சயதார்த்தம் ஆகும் தருவாயிலும் முடிவெடுக்க தயங்குகிறார். ஹரிஷ் கல்யாண் கோபத்தில் செய்யும் சில விஷயங்கள் தான் அதற்கு காரணம். இவர்கள் இறுதியில் சேர்ந்தார்களா இல்லையா என்பது தான் மீதி கதை.
படத்தை பற்றிய அலசல்:
ஹரிஷ் கல்யாண் இதற்கு முன்பு நடித்த படங்களை விட இந்த படத்தில் வித்யாசமான ரோல். எப்போதும் கோபத்துடனேயே இருக்கும் இளைஞர் ரோலுக்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார்.
ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் மெச்சூரிட்டி இருந்தாலும் படத்தில் அவரது குரல் சில சமயங்களில் படத்திற்கு செட் ஆகாத பீல் தான் கிடைக்கிறது. ஹீரோயின் ரோலும் ரொம்ப மெச்சூராகத்தான் வடிவமைத்துள்ளார் இயக்குனர். பார்த்தவுடன் காதலிக்காமல் பொறுமையாக நான்கைந்து முறை யோசித்து முடிவெடுப்பதில் இருந்து அவன் தன்னை துன்புறுத்தும்போது 'திஸ் ஐஸ் த எண்டு' என அரை மனதோடு சொல்வது வரைஅனைத்திலும் ஈர்க்கிறார்.
ஹரிஷ் கல்யாணின் நண்பர்களாக நடித்துள்ள பாலசரவணன், மகபா ஆனந்த் காமெடியில் பெரிதாக எதுவும் இல்லை என்றாலும் ரோலை கச்சிதமாக செய்துள்ளனர்.
க்ளாப்ஸ்:
ஒரு சாதாரண காதல் கதை, அதில் சில ஏற்ற இறக்கங்களை கொடுத்து வித்யாசமான கிளைமாக்ஸுடன் படத்தை முடித்த இயக்குனர், இன்னும் சில மாற்றங்களை செய்திருந்தால் படம் இரண்டாம் பாதியில் நம் பொறுமையை சோதிக்காமல் இருந்திருக்கும்.
முதல் பாதியில் போர் அடிக்காமல் சொல்லவந்ததை கச்சிதமாக காட்டியிருந்த இயக்குனர், இரண்டாம் பாதியில் பெரிய தடுமாற்றம் அடைந்துள்ளார்.
பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை என்றாலும் சாம் சி எஸ்சின் பின்னணி இசை படத்திற்கு பெரிதும் உதவியுள்ளது. கவின் ராஜின் ஒளிப்பதிவு பெர்பெக்ட்.
பல்ப்ஸ்:
- பொறுமையை சோதிக்கும் இரண்டாம் பாதி படம்.
- படம் பார்ப்பவர்கள் மனதில் எழும் பல கேள்விகளுக்கு படத்தில் பதில் இல்லை. ஹரிஷ் கல்யாணுக்கு அந்த பெண் பின்னாடி சுத்துவதை தவிர வேறு வேலையே உலகத்தில் இல்லை என்பது போல காட்டியிருப்பது. மொத்த படத்தையும் சினிமாத்தனம் இல்லாமல் எதார்த்தமாக எடுத்திருந்தாலும் சில விஷயங்களில் இயக்குனர் கோட்டை விட்டுள்ளார்.
மொத்தத்தில் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் நாம் நிஜ வாழ்விலேயே பலமுறை பார்த்துள்ள ஒரு சாதாரண காதல் கதையாக இருந்தாலும், நிச்சயம் அனைத்து இளைஞர்களுக்கும் கனெக்ட் ஆகும். 
நன்றி Cine Ulagam





No comments: