2018 மெல்பேர்ன், சிட்னி, பிறிஸ்பேன், அடிலெயிட், பேர்த், கன்பரா 2018 மாவீரர் நாள் நிகழ்வுகள் பற்றிய விபரங்கள்!!!


தமிழீழ விடுதலைக்காக இறுதிவரை போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவுகொள்ளும் தேசிய நினைவெழுச்சிநாள் ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்துகொண்டிருக்கும் இவ்வேளையில்நவம்பர் 27ம் திகதி தமிழர்கள் வாழும்அனைத்து நாடுகளிலும் மாவீரர்நாள் நிகழ்வுகள் நடைபெறவிருகின்றனஇந்தவகையில் ஸ்ரேலிய  நாட்டிலும் மாவீரர் நினைவுநாள் நிகழ்வுகள் அனைத்து மாநிலங்களிலும் நடைபெறும் நிலையில்,  ஒஸ்ரேலியாவின்  விக்ரோரிய மாநில, மெல்பேர்ன் ஸ்பிரிங்வேல் நகர மண்டபத்தில் எதிர்வரும் நவம்பர் மாதம் 27ம் திகதிசெவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் தேசிய நினைவெழுச்சிநாள் (மாவீரர் நாள்) நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.

சிட்னி மாநிலத்தில் Newington Reserve, Holker St, Silverwater இல் நவம்பர் மாதம் 27ம் திகதி, செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணிமுதல் மாவீரர் நாள் நிகழ்வுகள் ணர்வு பூர்வமாக  அனுஷ்டிக்கப்படவுள்ளது. 

****மெல்பேண் மாவீரர் நாள் நிகழ்வில் மலேசியாவைச் சேர்ந்த தமிழின உணர்வாளரும், தமிழ் இலக்கியப் பேச்சாளரும், ஈழ விடுதலைப் போராட்டத்தின் நீண்டநாள் ஆதரவாளரும், மலேசியா தமிழ்நெறிக் கழகத்தின் தலைவருமாகிய திரு இரா. திருமாவளவன் அவர்கள் மாவீரர் சிறப்புரை ஆற்றவுள்ளார்.***

==> அத்துடன் மெல்பேண் ஸ்பிரிங்வேல் மண்டபத்தை அண்டி புனர் நிர்மாணப் பணிகள் இடம்பெறுவதால், வாகன தரிப்பிட வசதிகள் குறைவாக உள்ள காரணத்தால், நேரத்துடன் நிகழ்வுக்கு மக்களை வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள், அத்துடன் மண்டபத்தை அண்டிய வீதிகளிலும், வியு வீதி (View Road) இலும் தாரளமான வாகன தரிப்பிட வசதிகள் உள்ளன.

நவம்பர் 27ம்திகதி எம் தேசத்து புதல்வர்களை நினைவில் நிறுத்தி மரியாதை செய்ய நம் பேதங்களை மறந்து  அனைவரும் திரண்டு வருவோம்...



No comments: