23/11/2018 பொலிவியாவில் பயணிகள் விமானமொன்று தரையிறங்கும்போது ஓடுபாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
பெரு நாட்டிலிருந்து 122 பயணிகள் உட்பட 127 பேருடன் பொலிவியா தலைநகர் லாபோஸ் நோக்கிப் புறப்பட்ட விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
லா போசில் உள்ள எல் ஆல்டோ விமான நிலையத்தில் குறித்த விமானம் தரையிறங்கும்போதே நிறுத்தற் பொறி (லேண்டிங் கியர்) உடைந்ததன் காரணமாகவே கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையை விட்டு விபத்துக்குள்ளானது.
எனினும் இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 122 பயணிகளுக்கும், 5 விமான ஊழியர்களுக்கும் எந்த காயமும் இன்றி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து காரணமாக ஓடுபாதை உடனடியாக மூடப்பட்டு, சில விமானங்களின் வருனை இரத்து செய்யப்பட்டன. சில விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றதுடன் விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி