யாழ் இந்துக்கல்லூரியின் நூல் வெளியீடு - உலகம் பலவிதம்

.

யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்க கொளும்புக்கிழையினர் அண்மையில் உலகம் பலவிதம் என்ற நூலை வெளியிட்டிருந்தனர் . இந்நூல் ஆசிரியர்  யாழ் இந்துக்கல்லூரியின் முன்னை நாள் ஆசிரியரும்  ( 1912 - 1947 )  அன்றைய யாழ்ப்பாணத்தின் முன்னணி பத்திரிகைகளில் ஒன்றான இந்துசாதனத்திற்கு 1912 இல் இருந்து 1921 வரை உதவி ஆசிரியராகவும்  1921 இல் இருந்து 1951 வரை பிரதம ஆசிரியராகவும் இருந்த ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளை அவர்கள் ஆவார்.
இந்நூல் உலகில் பல நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது . கடந்த ஞாயிற்றுக்கிழமை ( 18.02.2018) அன்று சிட்னி அவுஸ்ரேலியாவில் யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்க சிட்னிக் கிளையினரின் ஆதரவில் வெளியிடப்பட்டது .
நூல் வெளியீட்டு விழாவை தற்போதைய தலைவர் திரு மு.தனபாலசிங்கம் தொடக்கி வைக்க ,  வெளியீட்டு விழா தொடர்பாளர் திரு மு.குணசிங்கத்தின் அறிமுக உரையுடன் ஆரம்பமானது.  நயப்புரை அரங்கு திரு திருநந்தகுமார் தலைமையில்  இடம்பெற்றது நயப்புரையை திரு செ.பாஸ்கரன், திரு மு.கோவிந்தராஜன் , திரு அ.சந்திரஹாசன் , திரு. ரஞ்சகுமார் , திரு. சிறிக்குமார் மற்றும் திருமதி சாந்தி துஸ்யந்தன் ஆகியோர் வழங்கினார்கள் . நூலின் முதல் பிரதிஜை யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்க மெல்பெர்ன் கிளையின் தலைவர் வழங்க சிட்னி  தமிழ் அறிவகத்தின் சார்பில் திரு மோகன்குமார்  அவர்கள் பெற்றுக்கொண்டார். நன்றியுரையை செயலாளர் திரு குமணன் அவர்கள் வழங்க விழா நிறைவு பெற்றது .







tamilmurasuaustralia

tamilmurasuaustralia

tamilmurasuaustralia


tamilmurasuaustralia

tamilmurasuaustralia

tamilmurasuaustralia

tamilmurasuaustralia

tamilmurasuaustralia

tamilmurasuaustralia

tamilmurasuaustralia

tamilmurasuaustralia

tamilmurasuaustralia

tamilmurasuaustralia

tamilmurasuaustralia

tamilmurasuaustralia

tamilmurasuaustralia

tamilmurasuaustralia

tamilmurasuaustralia

tamilmurasuaustralia

tamilmurasuaustralia

tamilmurasuaustralia

tamilmurasuaustralia

tamilmurasuaustralia

No comments: