06/09/2017 பெங்­க­ளூரில் பத்­தி­ரிகை ஆசி­ரியர் ஒருவர் இனந்­தெ­ரி­யா­தோரால் நேற்று சுட்­டுக்­கொல்­லப்­பட்­டுள்ளார். பெங்­க­ளூரில் வெளி­வரும் லங்கேஷ் எனும் பத்­தி­ரிகை ஆசி­ரியர் கெளரி லங்­கேஷே சுட்­டுக்­கொல்­லப்­பட்­ட­வ­ராவார்.
பெங்­க­ளூரில் உள்ள ராஜ­ரா­ஜேஸ்­வரி நகரில் உள்ள அவ­ரது வீட்டில் வைத்து நேற்று மாலை சுட்டுக் கொல்­லப்­ப­பட்­டுள்ளார். மாலை 6.30 மணி­ய­ளவில் இக்­கொ­டிய சம்­பவம் நடந்­துள்­ளது. 
மிகவும் துணிச்­ச­லான பத்­தி­ரி­கை­யா­ள­ராக அறி­யப்­பட்­டவர் கெளரி. அவரை மிகக் கோழைத்­தா­ன­மாக சுட்டுக் கொன்­றுள்­ளனர் கொலை­யா­ளிகள். வெளியே போய் விட்டு வீட்­டுக்குத் திரும்­பிய கெளரி, காரை விட்டு இறங்கி வீட்டு கேட்டை திறந்­துள்ளார். அப்­போது அங்கு வந்த அடை­யாளம் தெரி­யாத நபர்கள் கெள­ரிக்கு மிக நெருக்­கமாக சென்று சுட்­டுள்­ளனர். 7 முறை அவர் மீது சுடப்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது. இதில் அவர் சம்­பவ இடத்­தி­லேயே பரி­தா­ப­மாக பலி­யானார்.
கன்­னட பத்­தி­ரி­கை­யான லங்கேஷ் பத்­தி­ரி­ கையை நடத்தி வந்­தவர் கெளரி. மிகத் தைரி­ய­மாக பேசக் கூடி­யவர், எழுதக் கூடி­ய வர். யாருக்கும் அஞ்­சாத துணிச்­சல்­காரர்.
இதனால் அவ­ருக்கு எதி­ரிகள் அதிகம். குறிப்­பாக மத­வெ­றி­யர்­க­ளி­ட­மி­ருந்து  பெரும் மிரட்­டல்கள் வந்தவண்ணம் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி