மரண அறிவித்தல்


திரு வைத்திலிங்கம் கனகசபாபதி


திரு வைத்திலிங்கம் கனகசபாபதி யாழ் கந்தர்மடம் மணல்த்தறை ஒழுங்கையை பிறப்பிடமாகவும் சிட்னியில் வசித்து வந்தவருமாகிய திரு வைத்திலிங்கம் கனகசபாபதி அவர்கள் 9-9-2017 சனிக்கிழமையன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், தில்லைப்பிள்ளை தம்பதிகளின் மனனும் காலஞ்சென்றவர்களான வல்லிபுரம், செல்லாச்சிப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும் காலஞ்சென்ற இலட்சுமிப்பிள்ளையின் அன்புக்கணவரும் ஸ்ரீசுதர்ஸன் (சிட்னி), குமணன் (சிட்னி), காலஞ்சென்றவர்களான சசிகரன் மற்றும் தர்மதாவின் அன்புத் தந்தையும் காலஞ்சென்ற மனோன்மணி, கனகலிங்கம் (லண்டன்), பரமேஸ்வரி (ஓக்லண்ட்), யோகேஸ்வரி (கந்தர்மடம்), மற்றும் காலஞ்சென்ற கனகேஸ்வரி ஆகியோரின் சகோதரரும் காலஞ்சென்ற பொன்னுச்சாமி, சுசீலா (லண்டன்), நாகரத்தினம் (ஓக்லண்ட்), பத்மநாதன் (கந்தர்மடம்), இளைப்பாறிய பேராசிரியர் ஆறுமுகம் (உரும்பிராய்), காலஞ்சென்ற காராளசிங்கம், தெய்வசோதி (ஆவரங்கால்), காலஞ்சென்ற திரவியம் தெய்வநாயகி (கொழும்பு) ஆகியோரின் மைத்துனரும் செல்வராணி (உரும்பிராய்), தர்மேஸ்வரி (பரிஸ்), மகாதேவன் (ஆவரங்கால்), ஆயித்தர் (துண்ணாலை) மற்றும் சுபாஷ்சந்திரன் (கொழும்பு) ஆகியோரின் சகலனும் ஆதவன், வித்தகன், ஆருதி, ஆதிபன், சங்கவி, நிருஜா, மிதுஷன் மற்றும் வாஷினியின் அன்புப் பேரனுமாவர்.

அன்னாரின் பூதவுடல் இறுதி மரியாதைக்காக செவ்வாய்க்கிழமை 12-09-2017ம் திகதி Lidcombe Rookwood மயானித்தின்  South Chapel யில் காலை 9-30 முதல் காலை 11-30 வரை வைக்கப்பட்டு, ஈமக்கிரிகைகள் அதே இடத்தில் காலை 11-30 முதல் மாலை 12-30 வரை நடைபெற்று தகனம் செய்யப்படும்.

இவ்வறித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு தாழ்மையாக வேண்டிக் கொள்கிறோம். மேலதிக தொடர்புகளுக்கு:

ஸ்ரீசுதர்ஸன் 0416 063 482
குமணன் 0411 139 756

No comments: