கவிஞர் வைதீஸ்வரனுக்கு சிற்பி இலக்கிய விருது

.
அவுஸ்ரேலிய கவிஞா வைத்தீஸ்வரனை தமிழ்முரசு வாழ்த்துகிறது .

என்.ஜி.எம்., கல்லுாரியில், சிற்பி அறக்கட்டளை சார்பில், இலக்கிய விருது வழங்கும் விழா நடந்தது. கவிஞர் வைதீஸ்வரனுக்கு, 2016ம் ஆண்டுக்கான இலக்கிய விருது; இசையறிஞர் மம்மதுவுக்கு, மா.சுப்பிரமணியம் விருது வழங்கப்பட்டது. விருதுகளை கல்லுாரி தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் வழங்கினார். சிற்பி பாலசுப்ரமணியத்தின், 'கட்டுரை களஞ்சியம்' நுால் வெளியிடப்பட்டது.

விழாவில், மயில்சாமி அண்ணாதுரை பேசுகையில், ''முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் வல்லரசு கனவு, விரைவில் நனவாகும். படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்த கட்டத்துக்கு, தமிழ் மொழியை கொண்டு செல்ல வேண்டும்,'' என்றார்.
கவிஞர் வைதீஸ்வரன் பேசுகையில், ''கவிஞனின், கவிதைகள் தான் அதிகம் பேச வேண்டும். இலக்கியத்தில், அரசியல் கூடவே கூடாது,'' என்றார்.

தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுப்ரமணியம், சாகித்ய அகாடமி விருதாளர் செல்லகணபதி, நன்னெறிக்கழகம் தலைவர் இயகோகா சுப்ரமணியம், முனைவர் சேதுபதி,
கல்லுாரி முதல்வர் பழனிசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

Nantri dinamalar.com

No comments: