உலகச் செய்திகள்


சோமா­லி­யாவில் அர­சாங்கத் தலை­மை­ய­கத்தை இலக்­கு­வைத்து கார் குண்டுத் தாக்­கு­தல்கள்

இத்தாலியில் பாரிய பூமியதிர்ச்சி ; உயிரிழப்பு 159 பேராக அதிகரிப்பு

உலகின் மிகப்பெரிய பலூன் விமானம் விபத்துள்ளானது

சோமா­லி­யாவில் அர­சாங்கத் தலை­மை­ய­கத்தை இலக்­கு­வைத்து கார் குண்டுத் தாக்­கு­தல்கள்

22/08/2016 சோமா­லி­யாவில் பகு­தி­யாக தன்­னாட்சி நிலவும் புன்ட்லாண்ட் பிராந்­தி­யத்தில் கலக்­கயோ நக­ரி­லுள்ள உள்ளூர் அர­சாங்கத் தலை­மை­ய­கத்தை இலக்குவைத்து நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை நடத்­தப்­பட்ட கார் குண்டுத் தாக்­கு­தல்­களில் குறைந்­தது 10 பேர் பலி­யா­கி­யுள்­ள­துடன் பலர் காயமடைந்­ துள்­ளனர்.


பலி­யா­ன­வர்­களில் பாது­காப்புப் படை­யி­னரும் பொது­மக்­களும் உள்­ள­டங்­கு­வ­தாக பிராந்­திய பொலிஸ் அதி­கா­ரி­யான அலி அஹ்மெட் தெரி­வித்தார்.
இந்தத் தாக்­கு­த­லுக்கு அல் – ஷபாப் தீவி­ர­வா­திகள் உரி­மை­கோ­ரி­யுள்­ளனர்.
இரு தற்­கொலைக் கார் குண்டுத் தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டுள்­ளன என அந்த தீவி­ர­வாத குழுவின் பேச்­சா­ள­ரான அப்­டி­யாஸிஸ் அபு முஸாப் கூறினார்.
முத­லா­வது கார் குண்டுத் தாக்­குதல் நடத்­தப்­பட்டு ஒரு நிமிட காலத்தில் இரண்­டா­வது கார் குண்டுத் தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது. காய­ம­டைந்­த­வர்­களில் பலரின் நிலைமை கவ­லைக்­கி­ட­மா­க­வுள்­ள­தாக அங் ­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்கின்­றன.
நன்றி வீரகேசரி













இத்தாலியில் பாரிய பூமியதிர்ச்சி ; உயிரிழப்பு 159 பேராக அதிகரிப்பு

25/08/2016 இத்தாலியில் நேற்று இடம்பெற்ற பூமியதிர்ச்சியில் 159 பேர் உயிரிழந்துள்ளதாகசர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மத்திய இத்தாலியில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் ஏற்பட்ட பூமியதிர்ச்சி 6.2 ரிச்டராக பதிவாகியுள்ளது.
இந்நிலையில் குறித்த பூமியதிர்ச்சியினால் ஏற்பட்ட இடிபாடுகளுக்குள் சிக்கி 159 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100 பேரை காணவில்லையென அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மீட்பு பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கைஅதிகரிக்க கூடும் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
 
நன்றி வீரகேசரி














உலகின் மிகப்பெரிய பலூன் விமானம் விபத்துள்ளானது

25/08/2016 உலகின் மிகப்பெரிய பலூன் விமானம் தனது 2 ஆவது பரீட்சார்த்த நடவடிக்கையின் போது விபத்துக்குள்ளானது.
பிரிட்டனின் ஹைபெர்ட் ஏர் வேக்கிள்ஸ் என்ற விமான தயாரிப்பு நிறுவனம்ஏர்லான்டர்-10 என்ற பெயரில் உலகின் மிகப்பெரிய பலூன் விமானத்தைவடிவமைத்ததுள்ளது.
முதல் சோதனை ஓட்டம் கடந்த 19 ஆம் திகதி நடந்ததுஅதில் வெற்றிகரமாக தனது பயணத்தினை நிறைவு செய்தது.
இந்நிலையில்பெட்போர்ட்ஷயர் கவுண்டி பகுதியில் நேற்று 10 டொன் பாரத்தினை சுமந்து தனது  2 ஆவது சோதனை  மேற்கொண்டது.
அப்போது விமானத்தின் முன்பாகம்  திடீரென தரையில் மோதி விமான விபத்திற்குள்ளாகியது.
எனினும்குறித்த விமானத்தில் பயணித்தவர்களுக்கு  எவ்வித ஆபத்தும்ஏற்படவில்லையென  வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.
நன்றி வீரகேசரி













No comments: