5 நிமிடங்களில் டெல்லியை தாக்க முடியும் பாக். விஞ்ஞானி கருத்தால் சர்ச்சை
குழந்தைக்காக சுட்டுக்கொல்லப்பட்ட கொரில்லா : பெற்றோர் மீது வழக்கு தொடர தீர்மானம்
பலூஜா நகரை கைப்பற்ற ஈராக் படை தீவிரம்; ஐ.எஸ். இற்கு பின்னடைவு
நவாஸிற்கு மோடியிடமிருந்து வந்த அழைப்பு
கொரிலாவிடம் சிக்கிய சிறுவனின் புகைப்படம் வெளியானது : தாய் நன்றி தெரிவிப்பு
மாயமான எகிப்து விமானத்தின் கறுப்புப்பெட்டி கண்டுபிடிப்பு
மோடி அமெரிக்காவிற்கு விஜயம்
பிரான்ஸ், ஜேர்மனியில் தொடர்ந்து வௌ்ளப்பெருக்கு ; 11 பேர் பலி
5 நிமிடங்களில் டெல்லியை தாக்க முடியும் பாக். விஞ்ஞானி கருத்தால் சர்ச்சை

30/05/2016 ஐந்து நிமிடங்களில் இந்தியத் தலைநகர் டெல்லியை தாக்க முடியுமென சர்ச்சையான கருத்தொன்றை பாகிஸ்தான் விஞ்ஞானி ஏ.கியு. கான் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்தில் இடம்பெற்ற விழாவொன்றிலேயே இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
பாகிஸ்தானின் அணுசக்தியின் தந்தை என்றழைக்கப்படும் ஏ.கியு. கான் இவ்வாறான கருத்தை வெளிப்படுத்தியுள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராவல் பிண்டி அருகிலுள்ள கதுவா தளத்திலிருந்து ஏவுகணை மூலம் 5 நிமிடங்களில் இந்தியத் தலைநகர் டெல்லியை தாக்க முடியுமென இவர் தெரிவித்துள்ளார்.
இந்த கருத்திற்கெதிராக இந்தியா தமது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் இந்திய முன்னாள் இராணுவ தளபதி என்.சி.விஜ் கூறுகையில், இந்தியாவிற்கு ஒட்டுமொத்த பாகிஸ்தானையும் தாக்கும் திறன் உள்ளது ஆனால் இந்திய தரப்பினர் இதனை பற்றி பேசுவதில்லை என தெரிவித்துள்ளதோடு இந்த கருத்து அர்த்தமற்றது என்றும் குறிப்பிட்டுள்ளார். நன்றி வீரகேசரி
குழந்தைக்காக சுட்டுக்கொல்லப்பட்ட கொரில்லா : பெற்றோர் மீது வழக்கு தொடர தீர்மானம்
31/05/2016 கொரிலா இருந்த தண்ணீர்; தொட்டி ஒன்றுக்குள் சிறுவன் ஒருவன் தவறி விழுந்ததையடுத்து குறித்த சிறுவனை காப்பாற்றுவதற்காக கொரில்லாவை பாதுகாவலர்கள் சுட்டு கொன்ற சம்பவம் தொடர்பில் சிறுவனின் பெற்றோர்களுக்கு வழக்கு தொடர போவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தின் சின்சினாட்டில் விலங்கியல் பூங்கா ஒன்று உள்ளது.
குறித்தப் பூங்காவில் கொரிலாக்கள் இருந்த தண்ணீர் தொட்டி ஒன்றுக்குள் 4 வயது சிறுவன் ஒருவன் தவறி விழுந்துள்ளான்.
இதன்போது, அங்கிருந்த 17 வயதுடைய 'ஹரம்பே' எனப்பெயரிடப்பட்ட ஆப்பரிக்க கொரில்லா ஒன்று சிறுவனை தூக்கிச் சென்றதோடு சுமார் 10 நிமிடங்கள் அங்கும் இங்குமான இழுத்துச் சென்றது.
இதனை கண்ட பாதுகாவலர்கள் குழந்தையை காப்பாற்றும் நோக்கில் கொரில்லாவை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று குழந்தையை பாதுகாப்பாக மீட்டனர்.
கொரில்லா இறப்பதற்கு ஒரு நாள் முன்னரே தனது 17ஆவது பிறந்த நாளை கொண்டாடியுள்ளது.
கொரில்லாவை மயக்க ஊசி போட்டு குழந்தையை காப்பாற்றுவதற்கு பதிலாக சுட்டு கொலை செய்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஓஹியோ பொலீசார் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், ‘பெற்றோரின் கவனயீனம் காரணமாகவே குழந்தை தவறி கொரில்லா அருகில் விழுந்துள்ளது.
குழந்தை கொரில்லா கையில் கிடைத்தவுடன் வேறுவழியின்றி அதனை சுட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, பெற்றோரின் அலட்சத்தியத்தால் ஏற்பட்ட இந்த சம்பவம் தொடர்பாக அவர்கள் மீது வழக்கு தொடுக்க முடிவு செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். நன்றி வீரகேசரி
பலூஜா நகரை கைப்பற்ற ஈராக் படை தீவிரம்; ஐ.எஸ். இற்கு பின்னடைவு
31/05/2016 ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு தம்வசப்படுத்தியிருந்த ஈராக்கின் பலூஜா நகர் மீது ஈராக் பாதுகாப்பு படையினர் கடும் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈாராக் பாதுகாப்பு படையினர் மற்றும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கிடையில் கடும் துப்பாக்கிப் பிரயோகங்களும் குண்டுத் தாக்குதல்களும் இடம்பெற்று வருகின்றன.

குறித்த தாக்குதல்களில் பலூஜா நகரின் தென் பகுதியிலுள்ள நய்மியா மாவட்டம் வரையில் ஈராக் பாதுகாப்பு படையினர் முன்னேறியுள்ளனர்.
இதேவேளை தீவிரவாதிகள் தப்பிச்செல்ல முடியாதவாறு பலூஜா நகரின் மூன்று பாகங்களிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐ.எஸ் தீவிரவாதிகள் கடந்த 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பலூஜா நகரை தம்வசப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
நவாஸிற்கு மோடியிடமிருந்து வந்த அழைப்பு
31/05/2016 இருதய சத்திர சிகிச்சைக்காக இங்கிலாந்துக்கு செல்லவிருந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீபிற்கு இந்தியா பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டு நலம் விசாரித்துள்ளார்.

குறித்த தொலைபேசி அழைப்பின் போது நவாஸ் ஷரீப் வெகு விரைவில் குணமடைய தான் பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை , குறித்த சத்திர சிகிச்சையின் பின் அவர் குறைந்தது ஒரு வாரகாலம் இங்கிலாந்தில் தங்கவுள்ளார்.
கடந்த 5 வருட காலத்திற்குள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் மேற்கொள்ளும் 2 ஆவது இருதய சத்திர சிகிச்சை இதுவென்பது குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
கொரிலாவிடம் சிக்கிய சிறுவனின் புகைப்படம் வெளியானது : தாய் நன்றி தெரிவிப்பு

01/06/2016 கொரிலா ஒன்றிடம் சிக்குண்டு உயிருடன் மீட்கப்பட்ட சிறுவனின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தின் சின்சினாட்டில் விலங்கியல் பூங்கா ஒன்று உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்தப் பூங்காவில் கொரிலா இருந்த தண்ணீர் தொட்டி ஒன்றுக்குள் 3 வயது சிறுவன் ஒருவன் தவறி விழுந்துள்ளான்.
இதன்போது, அங்கிருந்த 17 வயதுடைய 'ஹரம்பே' எனப்பெயரிடப்பட்ட ஆப்பரிக்க கொரில்லா ஒன்று சிறுவனை தூக்கிச் சென்றதோடு சுமார் 10 நிமிடங்கள் அங்கும் இங்குமான இழுத்துச் சென்றது.

இதனை கண்ட பாதுகாவலர்கள் குழந்தையை காப்பாற்றும் நோக்கில் கொரில்லாவை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று குழந்தையை பாதுகாப்பாக மீட்டனர்.
கொரில்லா இறப்பதற்கு ஒரு நாள் முன்னரே தனது 17ஆவது பிறந்த நாளை கொண்டாடியுள்ளது.
கொரில்லாவை மயக்க ஊசி போட்டு குழந்தையை காப்பாற்றுவதற்கு பதிலாக சுட்டு கொலை செய்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் கொரிலாவிடம் சிக்கிய சிறுவன் இறந்திருக்கலாம் என பலராலும் நம்பப்பட்ட போதும் சிறுவன் தொடர்பில் எவ்வித தகவல்களும் புகைப்படங்களும் வெளிவராமல் இருந்தது.
இந்நிலையில் முதன் முதலாக சிறுவனின் புகைப்படம் சிறுவனின் விபரங்கள் பெற்றோரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
3வயதுடைய இசாஹா டிக்சர்சன் என்ற சிறுவனே இவ்வாறு கொரிலாவிடம் சிக்குண்டவன் ஆவான்.

குறித்த சிறுவன் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள தாயாரான 32 வயதுடைய மிச்சல் கிரிக்,
'எனது மகனுக்காக கடவுளிடம் செபம் செய்த மற்றும் தனது அனுதாபங்களை தெரிவித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கின்றேன். எனது மகனை பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் கடவுள் காப்பாற்றியுள்ளார். எனது மகனுக்கு பலத்த காயங்களோ, எலும்பு முறிவுகளோ ஏற்படவில்லை. சிறு காயம் மாத்திரமே ஏற்பட்டுள்ளது. அவன் நன்றாக நடக்கின்றான். இந்த சம்பவம் சகல பெற்றோர்களுக்கும் ஒரு படிப்பினையாக அமைந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு பின்னர் எனது மகனை கண்ணும் கருத்துமாக பார்த்து கொள்கின்றேன். என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஓஹியோ பொலீசார் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், ‘பெற்றோரின் கவனயீனம் காரணமாகவே குழந்தை தவறி கொரில்லா அருகில் விழுந்துள்ளது.
குழந்தை கொரில்லா கையில் கிடைத்தவுடன் வேறுவழியின்றி அதனை சுட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, பெற்றோரின் அலட்சத்தியத்தால் ஏற்பட்ட இந்த சம்பவம் தொடர்பாக அவர்கள் மீது வழக்கு தொடுக்க முடிவு செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஓஹியோ பொலிசார் தமது அறிக்கையில், 

'பெற்றோரின் கவனயீனம் காரணமாக தான் குழந்தை தவறி கொரில்லா அருகில் விழுந்துள்ளது.
குழந்தை கொரில்லா கையில் கிடைத்தவுடன் வேறுவழியின்றி அதனை சுட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, பெற்றோரின் அலட்சத்தியத்தால் ஏற்பட்ட இந்த சம்பவம் தொடர்பாக அவர்கள் மீது வழக்கு தொடுக்க முடிவு செய்துள்ளோம்.
கொரில்லாவை கொல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட இணைய மனுவில் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
இச்சம்பவத்துக்கு சிறுவனின் பெற்றோரே பொறுப்பு கூற வேண்டும் என்று அந்த மனு கூறியுள்ளது.
நன்றி வீரகேசரி 
மாயமான எகிப்து விமானத்தின் கறுப்புப்பெட்டி கண்டுபிடிப்பு
02/06/2016 காணாமல்போன எகிப்து விமானத்தின் கறுப்புப்பெட்டியானது மத்திய தரைக்கடல் பகுதியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரான்சிலிருந்து எகிப்து நோக்கிப் பயணித்த எகிப்துக்குச் சொந்தமான விமானமொன்று கடந்த மாதம் 66 பேருடன் காணாமல் போயிருந்தது.

குறித்த விமானம் காணாமல்போனதற்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை.
இந்நிலையில், மத்திய தரைக்கடல் பகுதியிலிருந்து கிடைக்கப்பெற்ற ஒலி அலைகளின் சமிக்ஞைகள் மூலம் குறித்த விமானத்தின் கறுப்புப்பெட்டியானது கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட கப்பல் ஒன்றின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கண்டுபிடிக்கப்பட்ட கறுப்புப்பெட்டியின் உதவியுடன் குறித்த விமானம் பற்றிய பல புதிய தகவல்கள் வெளிவருமென வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நன்றி வீரகேசரி
மோடி அமெரிக்காவிற்கு விஜயம்
02/06/2016 இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் வாரம் அமெரிக்காவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இதன் போது , அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை சந்தித்து கலந்துரையாடலொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
குறித்த சந்திப்பின் போது இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான வியாபார ஒப்பந்தங்கள் தொடர்பாக கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
பிரான்ஸ், ஜேர்மனியில் தொடர்ந்து வௌ்ளப்பெருக்கு ; 11 பேர் பலி
03/06/2016 பிரான்ஸின் பாரிஸ் நகரில் செயின் ஆற்றின் நீர் மட்டமானது சாதாரண மட்டத்திலிருந்து 19 அடி வரை உயர்ந்ததால் அந்நகரில் பல பிராந்தியங்களில் வரலாறு காணாத பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த வௌ்ள அனர்த்தம் காரணமாக பாரிஸ் நகரிலுள்ள உலகப் பிரபல லோவுர் அருங்காட்சியம் மற்றும் ஒர்சே அருங்காட்சியம் என்பன மூடப்பட்டு அவற்றின் கீழ் மாடிகளிலிருந்த விலைமதிப்பற்ற கலைப்படைப்புகள் மேல் மாடிகளுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன.
வெள்ள அனர்த்தம் காரணமாக பிரான்ஸிலும் ஜேர்மனியிலும் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் மத்திய ஐரோப்பாவில் மேலும் கடும் மழைவீழ்ச்சி இடம்பெறலாம் என எதிர்வுகூறப்படுகின்ற நிலையில் வெள்ளம் இன்னும் தீவிரமடையலாம் என அஞ்சப்படுகிறது.
தென் ஜேர்மனியிலுள்ள பல நகர்களும், பெல்ஜியமும் போலந்தும் இந்த வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கொயிஸ் ஹொலண்ட் பாதிக்கப்பட்ட பிராந்தியங்களில் அவசரகால நிலைமையைப் பிரகடனப்படுத்தியுள்ளார்.
மத்திய பாரிஸில் சியன் ஆற்றங்கரையோரமாக அமைந்த புகையிரதப்பாதை மூடப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் மட்டும் வெள்ள அனர்த்தத்தில் சிக்கி குறைந்தது 9 பேர் பலியாகியுள்ளதுடன் பலர் காணாமல்போயுள்ளனர்.
பவேரியா பிராந்தியத்தில் சிம்பச் எனும் இடத்திலுள்ள வீடொன்றின் கீழ் தளத்தில் 78 வயது பெண்ணொருவரும் அவரது 56 வயதுடைய மகளும் 28 வயதான பேத்தியும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் அந்தப் பிராந்தியத்தில் 75 வயது ஆணொருவரது சடலமும் மீட்கப்பட்டுள்ளது. அதேசமயம் அதன் அயல் கிராமமான ஜுல்பச்சில் 80 வயது பெண்ணொருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஜேர்மனிய அதிபர் அஞ்ஜெலா மெர்கெல் தெரிவிக்கையில், இந்த வெள்ள அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்காக முழு நாடும் துக்கம் அனுஷ்டிப்பதாக கூறினார். நன்றி வீரகேசரி