இலங்கைச் செய்திகள் '


தொடரும் முன்னாள் போராளிகளின் கைது: பிரபாவும் கைது

கட்டி­பு­ரண்டு சண்­டை­யிட்­டனர், ஒருவருக்கு இரத்த வடிந்தது, சிலருக்கு முகம் வீங்கியது, ஆடைகள் கலைந்தன : பாராளுமன்றத்தில் நடந்தது என்ன? (முழு விபரம்)

வரலாற்றுச் சம்பவம் : சுவாமிநாதன் கூறுகின்றார்

இன்று தாயகம் திரும்புகின்றனர் தமிழகத்திலுள்ள அகதிகள்

வெள்ளை வேன் கடத்தல் வேண்டாம்' மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டப் பேரணி






தொடரும் முன்னாள் போராளிகளின் கைது: பிரபாவும் கைது



02/05/2016 தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் பிரபா என அழைக்கப்படும் கலைநேசன் (46) இன்று காலை மட்டக்களப்பில் வைத்து பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாயில் உள்ள அவரது வீட்டில் வைத்து பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸார், தனது கணவரை கைது செய்துள்ளதாக  அவரது மனைவி கயல்விழி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் திருக்கோவில் பகுதியில் வைத்து முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் ராம் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து திருகோணமலை அரசடிப் பகுதில் வைத்து கலையரசன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை தமி­ழீழ விடு­த­லைப் ­பு­லி­களின் சாள்ஸ் அன்­ரனி படைப்­பி­ரிவின் தலை­வர்­களில் ஒரு­வ­ரான நகுலன் என அழைக்­கப்­படும் கண­ப­திப்­பிள்ளை சிவ­மூர்த்தி என்­பவர் நீர்­வேலி தெற்குப் பகு­தியில் அமைந்­துள்ள அவ­ரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில் இன்று பிரபா என அழைக்கப்படும் கலைநேசன் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி














கட்டி­பு­ரண்டு சண்­டை­யிட்­டனர், ஒருவருக்கு இரத்த வடிந்தது, சிலருக்கு முகம் வீங்கியது, ஆடைகள் கலைந்தன : பாராளுமன்றத்தில் நடந்தது என்ன? (முழு விபரம்)


03/05/2016 முன்னாள் ஜனா­தி­ப­தியும், தற்­போ­தைய குரு­ணாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்த ராஜ­ப­க் ஷவின் இரா­ணு­வ
பாது­காப்பு நீக்­கப்­பட்டமை தொடர்பில் மஹிந்த ஆதரவு அணி­யி­ன­ர்  இன்று பாராளுமன்றத்தில் எழுப்பிய சர்ச்சையையடுத்து அவர்களுக் 
கும் ஆளும் தரப்­புக்­கு­மி­டையே ஏற்­பட்ட வாய்த்த­ர்க்கம் திடீ­ரென கைக­லப்­பாக மாறி­யது.
இதன்­போது ஆளும்கட்சி மற்றும், மஹிந்த ஆதரவு அணி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சபா மண்­ட பத்தின் மத்­தியில் ஒரு­வ­ரை­யொ­ருவர் தாக்கி­ய­துடன், கட்டி­பு­ரண்டு சண்­டை­யிட்­டனர்.
 இதனால் சபை அல்லோல கல்லோலமானது.
குறித்த கைக­லப்­பின்­போது இரண்டு தரப்பினரும் சண்­டையில் ஈடு­பட்ட உறுப்­பி­னர்­களை கட்­டுப்­ப­டுத்த முனைந்­தனர். எனினும் இரு­த­ரப்பு உறுப்­பி­னர்­களும் கும்­ப­லா­கவே மோதி­யதால் எவ­ரெவர் சண்­டையில் ஈடு­பட்டு வரு­கின்­றனர் என்­பதை அவ­தா­னிக்க முடி­யாத நிலை காணப்­பட்­டது.
கைகலப்பு நிலை­மையானது ஏனைய உறுப்­பி­னர்­க­ளினால் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்ட நிலையில் உறுப்­பி­னர்­களின் காலணிகள் சபா மண்­ட­பத்தில் காணப்­பட்­ட­தோடு, ஆடைகள் கலைந்த நிலை­யிலும் காணப்­பட்­டனர். அதே­நேரம் சில உறுப்­பி­னர்­களின் முகப்­ப­கு­தியில் வீக்­கங்­களும் காணப்­பட்­ட­தோடு, ஆளும் தரப்பு உறுப்­பினர் ஒருவர் இரத்தம் வடிந்­த­வாறு நின்­ற­த­னையும் அவ­தா­னிக்க முடிந்­தது.
தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு மற்றும் ஜே.வி.பி.யின் உறுப்­பி­னர்கள் ஆச­னங்­க­ளுக்கு அருகில் நின்­றி­ருந்­த­தோடு, சிரேஷ்ட உறுப்­பி­னர்­களும்  ஆச­னங்­களில் கூடி­நின்று உரை­யா­டிக்­கொண்­டி­ருந்­தனர்.
இந்­நி­லையில் மேதலில் ஈடு­பட்ட உறுப்­பி­னர்கள் சிலர் காய­ம­டைந்­துள்ள நிலையில் ஐ.தே.க. எம்.பி.யான சஞ்­சித சம­ர­சிங்க மேல­திக சிகிச்­சை­க­ளுக்­காக உட­ன­டி­யாக வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்­லப்­பட்டு அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்தார்.

பாரா­ளு­மன்றம் இன்று செவ்­வாய்க்­கி­ழமை பிற்­பகல் 1.00 மணிக்கு சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரியா தலை­மையில் கூடி­யது. அதனை தொடர்ந்து சபா­நா­யகர் அறி­விப்பு மனுக்கள் சமர்ப்­பிப்பு என்­பன நிறை­வ­டைந்த நிலையில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆத­ரவு அணியைச் சேர்ந்த தினேஷ் குண­வர்­தன எம்.பி. ஆச­னத்­தி­லி­ருந்து எழுந்து தான் ஒரு­வி­ட­யத்தை சபையின் கவ­னத்­திக்கு கொண்­டு­வர விரும்­பு­வ­தாக கூறினார்.
முன்னாள் ஜனா­தி­ப­தியும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்த ராஜ­ப­க்ஷ­விற்கு இரா­ணு­வத்­தினர் வழங்­கிய பாது­காப்பு  நீக்­கப்­பட்­டுள்­ளது என்­பதை சபையின் கவ­னத்­திற்கு கொண்­டு­வர விரும்­பு­வ­தாக குறிப்­பிட்டார். இத் தரு­ணத்தில் வாய்­மூ­ல­மான வினாக்­க­ளுக்­கான நேரத்தில் பின்னர் குறித்த விடயம் தொடர்­பான வினா­வுக்கு இட­ம­ளிப்­ப­தாக சபா­நா­யகர் குறிப்­பிட்டார்.
அதனை ஏற்க மறுத்த தினேஷ் குண­வர்­தன, ஏற்­க­னவே இவ்­வி­ட­யத்தை சபையின் கவ­னத்­திற்கு கொண்­டு­வந்­த­தா­கவும், அதன்­போது சபையின் முதல்­வரும் அமைச்­ச­ரு­மான லக்ஷ்மன் கிரி­யெல்ல வாக்­கு­று­தி­ய­ளித்­த­தா­கவும் சுட்­டிக்­காட்­டினார். அத்­தோடு அவ­ருக்­கான பாது­காப்பு உடன் வழங்­கப்­ப­டு­வதை (அர­சாங்கம்) உறுதி செய்ய வேண்­டு­மெ­னவும் வலி­யு­றுத்­தினார்.
இதற்கு பதி­ல­ளிப்­ப­தற்கு சபையின் முதல்­வரும், அமைச்­ச­ரு­மான லக்ஷ்மன் கிரி­யெல்ல ஆச­னத்­தி­லி­ருந்து எழுந்­த­போது பிர­தமர் ரணில்­விக்­கி­ரம சிங்க திடீ­ரென எழுந்து குறித்த விடயம் தொடர்­பாக பதிலளிக்க  முனைந்தார். 
அவ­ரு­டைய பதிலை குறு­கிய நேரத்தில் வழங்­கி­விட்டு பாது­காப்பு விடயம் என்­பதால் அது தொடர்­பாக பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும், அமைச்­ச­ரு­மான சரத்­பொன்­சே­கா உரிய பதிலை வழங்­குவார் எனக் கூறி அமர்ந்தார்.
அதனை தொடர்ந்து பீல்ட் மார்சல்  சரத்­பொன்­சே­கா­வுக்கு பதி­ல­ளிப்­ப­தற்­கான அவ­காசம் வழங்­கப்­பட்­டது. இருப்­பினும் மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆத­ரவு அணி எம்.பி.க்கள் அனை­வரும் ஆச­னங்­க­ளி­லி­ருந்து எழுந்து கூடி­ நின்று கடு­மை­யான தொனியில் வச­னங்­களை வெளியிட்­டனர்.

இவ்­வா­றான கூச்­ச­லுக்கு மத்­தியில் அமைச்சர் சரத்­பொன்­சேகா தொடர்ந்தம் உரை­யாற்றிக் கொண்­டி­ருந்தார். விசே­ட­மாக முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ தொடர்­பாக விட­ய­மொன்றை குறிப்­பிட்­ட­போது, மஹிந்த ராஜ­பக்ஷ அணியை சேர்ந்த அனைத்து உறுப்­பி­னர்­களும் ஒன்­று­கூடி கோஷ­மிட்­ட­வாறு சபா மண்­ட­பத்தின் மத்­திற்கு வருகை தந்­தனர். அத்­தோடு நின்­று­வி­டாது சபா­நா­ய­கரை பார்த்து கடு­மை­யான கோஷங்­க­ளையும், அவ் அணியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்கள் எழுப்­பினர்.
இச் சம்­ப­வத்தில் ஆளும் தரப்பு உறுப்­பி­னர்கள் முன்­வ­ரி­சையில் அமர்ந்­தி­ருந்த பிர­தமர் ரணில்­விக்­கி­ரமசிங்க, சபை முதல்வர் உள்­ளிட்ட சிரேஷ்ட உறுப்­பி­னர்கள் மற்றும் இரண்­டா­வது வரி­சையில் உரை­யாற்றிக் கொண்­டி­ருந்த அமைச்சர் சரத்­பொன்­சேகா ஆகி­யோரை சுற்றி வளைத்து நின்­றனர். இத் தரு­ணத்தில் படைக்­கல சேவி­தர்கள், சபா­நா­யகருக்கும் செங்கோலுக்கும் கடு­மை­யான பாது­காப்பை வழங்­கி­னார்கள்.
இவ்­வா­றான நிலையில் மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆத­ரவு அணி­யினர் கடு­மை­யான கோஷங்­களை எழுப்­பி­ய­வாறு சபா மண்­ட­பத்தில் தொடர்ந்தும் நின்­று­கொண்­டி­ருந்­தனர். சபா­நா­யகர் ஆச­னங்­களில் அம­ரு­மாறு உத்­த­ர­விட்டார். 
எனினும் அவர்கள் ஆசனங்களில் அத­னைத்­தாண்டி கோஷம் எழுப்­பி­ய­வாறே இருந்­தனர். நேரம் சரி­யாக 1.20 மணி­யா­கும்­போது பீல்ட் மார்சல், அமைச்­ச­ரு­மான சரத்­பொன்­சே­காவின் உரையை நிறுத்­து­மாறு சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய கூறி­ய­தோடு, ஒலி­வாங்­கி­யையும் செய­லி­ழக்கச் செய்­தார்.
எனினும் சரத்­பொன்­சேகா தொடர்ந்தும் உரை­யாற்றிக் கொண்­டி­ருக்­கையில் அவ­ரு­டைய உரையை தொடர்­வ­தற்­கான அனு­ம­தி­தயை வழங்­கு­மாறு பிர­தமர் ரணில்­விக்­கி­ரம சிங்க, சபை முதல்வர் லக்ஷ்மன் கி­யெல்ல ஆகியோர் சைகையால் சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரி­ய­வுக்கு அறி­வித்­தனர். இத­னை­ய­டுத்து பீல்ட் மார்சல் சரத்­பொன்­சேகா உரை­யாற்­று­வ­தற்­கான மேல­திக நேரம் சபாநாய­க­ரினால் வழங்­கப்­பட்­டது.
இத­னை­ய­டுத்து கடு­மை­யாக விசனமடைந்த மஹிந்த ராஜ­பக்ஷ அணியைச் சேர்ந்த தினேஷ் குண­வர்­தன, மகிந்­தா­னந்த அளுத்­கமே, கெஹெலிய ரம்­புக்­வெல, பந்­துல குண­வர்­தன போன்­ற­வர்கள் சபா­நா­ய­க­ருடன் கடு­மை­யான தர்க்­கத்தில் ஈடு­பட்­டனர். 
அதன்­போது அவர்­களை ஆச­னங்­களில் சென்று அம­ரு­மாறு சபா­நா­யகர் கோரினார். எனினும் அவர்­களை அதனை நிரா­க­ரித்து தொடர்ந்தும் கோஷங்­களை எழுப்பிக் கொண்­டே­யி­ருந்­தனர்.
இந்­நி­லையில் அனைத்து உறுப்­பி­னர்­களும் அவர்­க­ளது ஆச­னங்­க­ளுக்கு சென்று அமர்ந்­தனர். இதன்போது சபையின் இன்­றைய நாள  பிர­தான செயற்­பாட்­டுக்கு செல்ல வேண்­டி­யுள்­ளது என சபா­நா­யகர் கடு­மை­யான தொனியில் கூறினார். இருப்­பினும் சபா மண்­ட­பத்தின் நடுவில் ஆளும் மற்றும் மஹிந்த தரப்பின் ஆத­ரவு உறுப்­பி­னர்கள் கடு­மை­யான தர்க்­கத்தில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருந்­தனர். தர்க்கம் வலு­வ­டைந்து கொண்­டி­ருக்­கையில் திடீ­ரென ஐ.தே.க.வின் களுத்­துறை மாவட்ட எம்.பி.யும், பிர­தி­ய­மைச்­ச­ரு­மான பாலித்த தேவப்­பெ­ரு­ம­வுக்கும், கம்­பஹா மாவட்­டத்தைச் சேர்ந்த ஐ.ம.சு.வின் எம்.பி.யும், மஹிந்த ஆத­ரவு அணியின் உறுப்­பி­ன­ரு­மான பிர­சன்ன ரண­வீர ஆகி­யோ­ருக்­கி­டையில் தர்க்கம் முற்­றி­யது. இதன்­போது பாலித்த தேவப்­பெ­ரு­மவை பிர­தி­ய­மைச்சர் சுஜி­வ­சேனசிங்க மற்றும் நலின் பண்­டார ஆகியோர் தடுத்துக் கொண்­டி­ருந்­த­போது அவர்­களை தள்­ளி­விட்டு சபைக்கு நடுவில் சென்று பிர­சன்ன ரண­வீ­ரவை மார்­பில் கை வைத்து தள்­ளினார். இதன்­போது பிர­சன்ன ரண­வீர ஏதோ கூறவும் அவ­ரு­டைய முகத்தில் பாலித்த தேவப்­பெ­ரும ஓங்கி குத்­தினார். இதன்­போது இரு அணி­யி­னரும் இரு­வ­ரையும் தடுத்து நிறுத்­து­வ­தற்கு முற்­பட்டுக் கொண்­டி­ருக்­கையில், ஐ.தே.க.வின் கேகாலை மாவட்ட எம்.பி.யுமான சந்தித் ­ச­மர சிங்க சர­மா­ரி­யாக பிர­சன்ன ரண­வீர எம்.பியை தாக்­கினார்.
இத­னை­ய­டுத்து இரு­த­ரப்­பி­னரும் யாரை யார் தாக்­கு­கி­றார்கள் என்­றி­யில்­லாது பரஸ்­பர தாக்­கு­த­லையும் தடுப்­ப­தற்­கான முயற்­சி­க­ளையும் மேற்­கொண்­டனர். எனினும் இதற்கு மத்­தியில் பிர­சன்ன ரண­வீர, சந்தித் சம­ர­சிங்க ஆகியோர் சபைக்கு நடுவில் கட்­டிப்­பு­ரண்டு ஒரு­வ­ரை­யொ­ருவர் தாக்­கு­தலில் ஈடு­பட்­டனர்.
இதன்­போது இரு­த­ரப்பு உறுப்­பி­னர்­களும் கால்களால் பரஸ்பர தாக்­கு­தல்கள் மேற்­கொள்ள ஆரம்­பித்­தனர். இதனால் சண்­டையில் ஈடு­ப­டு­ப­வர்கள் யார் அதனை தடுக்க முயல்­ப­வர்கள் யாரென அறிய முடி­யாத நிலை­ காணப்பட்டது.
சபா மண்­ட­பத்தில் மோதல் உக்­கி­ர­மாக இடம்பெற்றுக் கொண்­டி­ருந்­த­போது பிர­தமர் ரணில்­விக்­கி­ரம சிங்க, சபைத் தலைவர் லக்ஷ்மன் கிரி­யெல்ல, எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன் உள்­ளிட்ட உறுப்­பி­னர்கள் எதிர்க்­கட்சி கொற­டாவும், ஜே.வி.பி. தலை­வ­ரு­மான அநு­ர­கு­மார திஸா­நா­யக உள்­ளிட்­ட­வர்­கள் சிரேஷ்ட உறுப்­பி­னர்கள் அமர்ந்­தி­ருக்கும் ஆச­னத்தில் அமர்ந்­தி­ருந்­தனர்.
இரு­த­ரப்பு உறுப்­பி­னர்­களின் மோதலால் சபை யுத்த கள­மா­னது. இந்த சந்­தர்ப்­பத்தில் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்­களால் கல­ரியில் அமர்ந்­தி­ருந்த பாட­சாலை மாண­வர்கள் பொது மக்கள் உட­ன­டி­யாக வெ ளியேற்­றப்­பட்­டனர்.
இதனையடுத்து இருதரப்பு மோதலை கட்டுப்படுத்த இருதரப்பு சிரேஷ்ட உறுப்பினர்களும் முயற்சித்தனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ சபா மண்டபத்தில் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ எம்.பி.யுடன் உரையாடிக் கொணடு வேடிக்கை பார்த்தவாறிருந்தார்.
இதன்போது உதயகம்மன்பில, பந்துல குணவர்தன எம்.பி.க்கள் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனிடம் ஏதோ கூறினர். அதன்பின் சற்றுநேரத்திற்கு பின்னர் சம்பந்தன் சபையிலிருந்து வெ ளியேறியிருந்தார். ஆளும் தரப்பு அமைச்சர்களான ரிஷாத் பதியூதின், மலிக் சமரவிக்கிரம, போன்றவர்கள் மஹிந்த ஆதரவு அணியின் உறுப்பினர்களுடன பேசி அமைதியை ஏற்படுத்த முனைந்தனர்.
15 நிமிடங்களுக்கும் மேலாக அல்லோல கல்லோலப்பட்டு காணப்பட்ட சபையை 1.35 க்கு சபாநாயர் கருஜயசூரிய சபையை ஒத்திவைப்பதாக அறிவித்தர். பின்னர் 1.29 க்கு பின்னராக 3.00 மணிக்கு மீண்டும் கூடிய சபை இன்று புதன்கிழமை வரை ஒத்திவைப்பதாக அறிவித்த சபாநாயகர் கடுமையான கண்டனத்தையும் வெ ளியிட்டார்.  நன்றி வீரகேசரி








வரலாற்றுச் சம்பவம் : சுவாமிநாதன் கூறுகின்றார்

03/05/2016 ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமாகிய ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பு கெம்பல் மைதானத்தில் இடம்பெற்ற மே தினக் கூட்டத்திற்கு யாழில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்துகொண்டுள்ளனர். இது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சருமான டி.எம் சுவாமிநாதன் தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர்,
கொழும்பில் இடம்பெற்ற மேதின கூட்டமொன்றில் யாழ்ப்பாணத்திலிருந்து பாரியளவிலான மக்கள்  கலந்துக்கொண்டமை வரலாற்றில் இதுவே முதல்முறையாகும். இதனையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.
மேலும் யாழ். மக்களின் முக்கிய பிரச்சினையாக காணப்படும் காணி பிரச்சினைக்கான தீர்வு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். நன்றி வீரகேசரி







இன்று தாயகம் திரும்புகின்றனர் தமிழகத்திலுள்ள அகதிகள்


03/05/2016 தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் வசிக்கும் ஏழு பெண்கள் உட்பட 24 இலங்கையர்கள் இன்று தாயகம் திரும்பவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. 
உள்நாட்டு போர் முடிவுக்கு வந்ததையடுத்து இலங்கையிலிருந்து அகதிகளாக வெளியேறிய தமிழ் மக்களை அவர்களது தாயகத்திற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்துடன் இணைந்து அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, திருகோணமலை மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 24 பேரே இன்று இலங்கைக்கு மீளத் திரும்பவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி










வெள்ளை வேன் கடத்தல் வேண்டாம்' மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டப் பேரணி

06/05/2016 காணாமல் போனோரின் குடும்ப ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணி, காந்தி பூங்காவுக்கு முன்பாக ஆரம்பமாகி மாவட்டச் செயலகம் வரை சென்று அங்கிருந்து மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம் வரை சென்று நிறைவடைந்தது.
இதன்போது,  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மட்டக்களப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் மகஜர்கள் காணாமல் போனோரின் குடும்ப ஒன்றியத்தால் கையளிக்கப்பட்டன.
வெள்ளை வேன் கலாசாரத்தை ஒழிப்பதாக வாக்குறுதி அளித்த நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் மீண்டும் அந்தக் கலாசாரம் ஆரம்பமாகியுள்ளமை எம்மை அதிர்ச்சியடைய வைத்துள்ளதுடன், மீண்டும் பயங்கரவாதம் தலை தூக்கியுள்ளதா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகின்றது.
 நல்லாட்சி அரசாங்கத்தின் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் முயற்சியை தோற்கடிக்கும் நோக்கில் அல்லது அரசாங்கத்தின் அரசியல் தேவைகளுக்காக மக்களை அச்சம் கொள்ளச் செய்யும் இந்த வெள்ளை வேன் கலாசாரம், எதிர்காலத்தில் இடம்பெறுவதற்கு இடமளிக்க முடியாது.  இந்தச் சட்டவிரோத கடத்தல் குறித்து விசாரணை செய்து இதற்கு பொறுப்பானவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்களை தடுக்குமாறும் மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நன்றி வீரகேசரி