மெல்பன் நினைவரங்கில் கலந்துகொள்ளும் மூன்று இலங்கை இலக்கியவாதிகள்


அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் எதிர்வரும் மே மாதம் 14 ஆம் திகதி சனிக்கிழமை மெல்பனில் ஒழுங்குசெய்துள்ள நினைவரங்கிலும் இலக்கியச்சந்திப்பிலும் இலங்கையிலிருந்து வருகை தந்துள்ள மூன்று இலக்கியவாதிகள் உரைநிகழ்த்துகிறார்கள்.


அண்மையில்  இலங்கையில்  அடுத்தடுத்து  மறைந்தவர்களான  படைப்பாளி செங்கை  ஆழியான்,  நூலியல்  பதிவு  ஆவணக்காப்பாளர்  புன்னியாமீன், ஊடகவியலாளரும்  எழுத்தாளருமான  கே. விஜயன்  ஆகியோரின் வாழ்வையும்   பணிகளையும்  நினைவுகூரும்  நிகழ்ச்சியும்   இலக்கியச்சந்திப்பும்



   எதிர்வரும்   மே  மாதம்  14   ஆம் (14-05-2015 )  திகதி  சனிக்கிழமை  மாலை 3 மணிக்கு   மெல்பனில்   VERMONT  SOUTH   COMMUNITY  HOUSE    (1,  Karobran Drive - Vermont   South, Vic - 3133)   மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 

 இந்நிகழ்ச்சியில்   இலங்கையிலிருந்து  மெல்பனுக்கு  வருகை  தந்துள்ள  மூத்த   படைப்பாளிகள்   ஞானம்  ஆசிரியர்  டொக்டர் தி. ஞானசேகரன், யாழ்ப்பாணம்   சாந்திகம்  அமைப்பின்  திட்ட  இணைப்பாளர்  திரு. இர. சந்திரசேகரன்,    கொழும்பு  தமிழ்ச்சங்கத்தின்  இலக்கியக்குழுச்செயலாளர் திரு.  இரகுபதி  பாலஸ்ரீதரன்  ஆகியோரும்   கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.    அவுஸ்திரேலியா   தமிழ்  இலக்கிய  கலைச்சங்கத்தின்  நடப்பாண்டு தலைவர்    பேராசிரியர் ஆசி. கந்தராஜா   தலைமையில்   இரண்டு அமர்வுகளில்   இந்நிகழ்ச்சி  ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. முதல்  அமர்வில்  இடம்பெறும்  நினைவரங்கில்  அமரர்  செங்கை ஆழியான்  நினைவுரையை  எழுத்தாளர்   ஜே,கே. ஜெயக்குமாரன் நிகழ்த்துவார்.
புன்னியாமீன்   தொடர்பான    நினைவுரையை    யாழ்ப்பாணம்  சாந்திகம்  திட்ட   இணைப்பாளர்  திரு. இர. சந்திரசேகரனும்,    கே. விஜயன்  பற்றிய நினைவுரையை    கொழும்பு   தமிழ்ச்சங்கத்தின்  இலக்கியக்குழுச்செயலாளர் திரு. இரகுபதி  பாலஸ்ரீதரனும்  நிகழ்த்துவர்.
இதனைத்தொடர்ந்து  நடைபெறவுள்ள  இரண்டாவது  அமர்வில்
   " கடந்த    கால்நூற்றாண்டுகளில் - ஈழத்  தமிழ்  இலக்கிய  தடங்கள்இனிவரும் மாற்றங்கள் "    என்னும்  தலைப்பில்   மூத்த   படைப்பாளியும்   ஞானம்  இதழின்  ஆசிரியருமான  டொக்டர்  தி. ஞானசேகரன்   உரையாற்றுவார்.    அதனைத் தொடர்ந்து கலந்துரையாடல்  இடம்பெறும்.
கலை   இலக்கிய   ஆர்வலர்கள்  அன்புடன்   அழைக்கப்படுகின்றனர்.