அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் எதிர்வரும் மே மாதம் 14 ஆம் திகதி சனிக்கிழமை மெல்பனில் ஒழுங்குசெய்துள்ள நினைவரங்கிலும் இலக்கியச்சந்திப்பிலும் இலங்கையிலிருந்து வருகை தந்துள்ள மூன்று இலக்கியவாதிகள் உரைநிகழ்த்துகிறார்கள்.
அண்மையில் இலங்கையில் அடுத்தடுத்து மறைந்தவர்களான
படைப்பாளி செங்கை ஆழியான், நூலியல் பதிவு ஆவணக்காப்பாளர் புன்னியாமீன், ஊடகவியலாளரும் எழுத்தாளருமான கே. விஜயன் ஆகியோரின் வாழ்வையும் பணிகளையும் நினைவுகூரும் நிகழ்ச்சியும் இலக்கியச்சந்திப்பும்
எதிர்வரும் மே
மாதம்
14
ஆம் (14-05-2015 ) திகதி சனிக்கிழமை மாலை 3 மணிக்கு மெல்பனில் VERMONT SOUTH
COMMUNITY HOUSE (1,
Karobran Drive - Vermont South,
Vic - 3133) மண்டபத்தில்
நடைபெறவுள்ளது.
புன்னியாமீன் தொடர்பான நினைவுரையை யாழ்ப்பாணம் சாந்திகம் திட்ட இணைப்பாளர் திரு. இர. சந்திரசேகரனும், கே. விஜயன் பற்றிய நினைவுரையை கொழும்பு
தமிழ்ச்சங்கத்தின் இலக்கியக்குழுச்செயலாளர் திரு. இரகுபதி பாலஸ்ரீதரனும் நிகழ்த்துவர்.
இதனைத்தொடர்ந்து
நடைபெறவுள்ள இரண்டாவது அமர்வில்
" கடந்த கால்நூற்றாண்டுகளில் - ஈழத் தமிழ் இலக்கிய தடங்கள் - இனிவரும் மாற்றங்கள் " என்னும் தலைப்பில்
மூத்த படைப்பாளியும் ஞானம் இதழின் ஆசிரியருமான டொக்டர் தி. ஞானசேகரன் உரையாற்றுவார். அதனைத் தொடர்ந்து கலந்துரையாடல் இடம்பெறும்.
கலை
இலக்கிய ஆர்வலர்கள் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.