லக்சுமி ஹோல்ம்ஸ்டோம் காலமானர் - மௌனகுரு

.

தமிழ் இலக்கியம் தமிழகத்தில் மாத்திரமல்ல இலங்கையிலும், புலம் பெயர்ந்தும் நீட்சி பெற்றுள்ளது என எடுத்துகாட்டிய லக்சுமி ஹோல்ம்ஸ்டோம் காலமானர்


இந்தியாவில் பிறந்தவரும்
பிரித்தானிய எழுத்தாளருமான லக்சுமி ஹோல்ம்ஸ்டோம் காலமானார்.
இவர் சமகாலத் தமிழ் எழுத்தாளர்களான
மாதவையர்,
புதுமைப்பித்தன்,
மௌனி,
அம்பை,

அசோகமித்திரன்

,பாமா
இமயம்,
சுந்தர ராமசாமி.
நா. முத்துசாமி
.
சல்மா,
சேரன்
ஆகியோரின் படைப்புகளை சிலவற்றையும்
சிலப்பதிகாரம்,மணிமேகலை ஆகிய காவியங்களையும்
ஆங்கிலத்தில் அழ்குற மொழிபெயர்த்தவராவார்.




அண்மையில் வெளியிட்ட
Lost Evenings, Lost Lives
ஆங்கில மொழியாக்கம், ஈழத்தின் மூத்த தலைமுறை முதல் இன்றைய தலைமுறைக் கவிஞர்களின் தேர்ந்தெடுத்த கவிதைகளைஉள்ளடக்கியுள்ளது.

தமிழ் இலக்கியத்தையும்
அதனூடாகத் தமிழர் வாழ்க்கை அனுபவங்களையும்
அவர்களது உணர்வுகளையும்
துன்ப துயரங்களையும்
பிற மொழி பேசுவோர்க்கு அறிமுகம் செய்து வைத்தவர் லக்சுமி ஹோல்ம்ஸ்டோம்
இம்மொழி பெயர்ப்புகளுக்காக
விருதுகளும் பெற்றவர் அவர்
இந்திய தமிழ் இலக்கியங்களையே தமிழ் இலக்கியங்களாக பலரும் எண்ணியும் எழுதியும் கொண்டிருக்கும் இன்றைய சூழலில்
தமிழ் இலக்கியம் இலங்கைவரை மாத்திரமல்ல புலம் பெயர்ந்தும் நீட்சி பெற்றுள்ளது என எடுத்துக்காட்டிய அவரது செயற் பாடுகள் அவர் மீது எமக்குப் பெரும் மரியாதையை ஏற்படுத்துகிறது
என் துணவியார் சித்திரலேகாவுடன் நெருக்கமான உறவுகள் கொண்டிருந்தார்
நண்பர் என்ற வகையிலும்,
காத்திரமான தமிழ் எழுத்துக்களை தமிழ்மொழி தெரியாதோர்க்கு அறிமுகம் செய்தவர் என்ற வகையிலும் அவர் மறைவு  பெரும் கவலை தருகிறது

.