பாப்பரசரின் ஆசிர்வாதத்தையடுத்து ஒரு வருடத்தில் புற்றுநோயிலிருந்து பூரண குணமடைந்த சிறுமி
மேற்கு சிரியாவில் குண்டுத்தாக்குல்களில் 32 பேர் பலி
ஐ.எஸ். தீவிரவாதிகளின் காதல் வலையில் சிக்கிய இந்திய விமானப்படை வீரர் கைது
பஞ்சாப் விமானப் படை தளம் மீது தாக்குதல்: 4 தீவிரவாதிகள், 2 விமானப் படை வீரர்கள் பலி
பாப்பரசரின் ஆசிர்வாதத்தையடுத்து ஒரு வருடத்தில் புற்றுநோயிலிருந்து பூரண குணமடைந்த சிறுமி
28/12/2015 புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் ஒரு வருடத்துக்கு முன்னர் ரோம் நகரில் பாப்பரசரின் ஆசிபெற்ற 12 வயது சிறுமியொருவர் நோயிலிருந்து முழுமை யாக விடுதலை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க நியூ ஜெர்ஸி மாநிலத்தைச் சேர்ந்த கிரேஸ் என்ற சிறுமியே இவ்வாறு அதிசயிக்கத்தக்க வகையில் புற்றுநோயி ருந்து முழுமையாக குணமடைந்துள்ளார்.
கிரேஸுக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச் சையும் அவரது அளவுகடந்த நம்பிக்கையுமே அவருக்கு புற்றுநோயிலிருந்து விடுதலை பெற உதவியதாக தெரிவிக்கப்படு கிறது. நன்றி வீரகேசரி
மேற்கு சிரியாவில் குண்டுத்தாக்குல்களில் 32 பேர் பலி
28/12/2015 மேற்கு சிரியாவில் ஹோம்ஸ் நகரத்தில் இன்று இரண்டு குண்டுத்தாக்குல்களில் 32 பேர் உயிரிழந்துள்ளதுடன் 90க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
ஹோம்ஸ் நகரின் சஃர் பகுதியில் இன்று மதியம் , சிற்றூர்ந்து குண்டு தாக்குதல் மற்றும் தற்கொலை குண்டு தாக்குதலால் இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு எந்த ஒரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்க வில்லை. நன்றி வீரகேசரி
ஐ.எஸ். தீவிரவாதிகளின் காதல் வலையில் சிக்கிய இந்திய விமானப்படை வீரர் கைது
31/12/2015 இந்தியாவின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த இராணுவ இரகசியங்களை அறிந்துகொள்ள இங்கிலாந்தில் இருந்து காதல் வலை வீசிய ஐ.எஸ். உளவாளிப் பெண்ணின் காதல் வலையில் கேரள மாநிலத்தை சேர்ந்த இந்திய விமானப்படை வீரர் ஒருவர் விழுந்த அதிர்ச்சிகர சம்பவத்தில் சில ருசிகர தகவல்கள் வெளியாகியுள்ளன.
கேரள மாநிலத்தை சேர்ந்த ரஞ்சித் என்பவர் இந்திய விமானப்படையின் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றியதோடு, இந்திய விமானப்படை நிலையங்களில் போர் விமானங்களை பராமரித்து, கண்காணிக்கும் குழுவில் உயர்பொறுப்பு வகித்துவந்துள்ளார். இவருக்கு மூன்றாண்டுகளுக்கு முன்னர் பேஸ்புக் மூலம் இங்கிலாந்தை சேர்ந்த ஒரு அழகிய இளம்பெண் அறிமுகமாகியுள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள பீஸ்டன் பகுதியில் வசிப்பதாகவும், புலனாய்வு பத்திரிகையில் பணியாற்றிவருவதாகவும் தன்னைப்பற்றி அறிமுகப்படுத்தி கொண்ட அந்தப்பெண் அடிக்கடி பேஸ்புக் வாயிலாக ரஞ்சித்துடன் ஆங்கில மொழிவாயிலாக தொடர்பை ஏற்படுத்தி அவரை காதல் வலையில் சிக்கவைத்துள்ளார். இதனால் ரஞ்சித் பேஸ்புக்கே கதியென ஆகியுள்ளார்.
இதன்பின்னர் ரஞ்சித்தின் தொழில் தொடர்பாக அப்பெண் விசாரிக்க தொடங்கியுள்ளார். இதன்போது போர் பயிற்சிகள் மற்றும் இந்திய விமானப்படை விமானங்களின் செயற்திறன் ஆகியவற்றைப்பற்றிய முக்கிய தகவல்களை தெரிவித்த ரஞ்சித் தனது பணியைப்பற்றிய விபரங்கள் அனைத்தையும் வழங்கியதோடு தன்னுடைய சில புகைப்படங்களையும் வாட்ஸ்அப் மற்றும் ஸ்கைப் மூலம் பரிமாற தொடங்கியுள்ளார். பின்னர், இருவரும் இணைய அழைப்பின்மூலம் பேசிக் கொள்ள தொடங்கியுள்ளனர்.
இதனையடுத்து மெதுவாக, தனது திட்டத்தின் முதல்காயை அந்த ஐ.எஸ். தீவிரவாத பெண் நகர்த்தியுள்ளார். அதாவது இந்திய விமானப்படையில் என்னென்ன ரக விமானங்கள் உள்ளன? அவற்றின் செயற்திறன் என்ன? என்பது தொடர்பாக ரஞ்சித்திடம் ஒரு பேட்டியை எடுத்த அவர், அதை தான் தொழில் செய்யும் பத்திரிகையில் பிரசுரிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.
அடுத்தகட்டமாக, குவாலியர் நகரில் இயங்கிவரும் இந்திய விமானப்படையின் இரகசியக்கூடம் பற்றிய தகவல்களை அளிக்குமாறு அவர் கேட்க, இந்திய பாதுகாப்பு துறையின் மிகஉயர்ந்த இரகசிய கூடமான அந்த திட்டத்தைப் பற்றிய தகவல்களை வெளியிட ரஞ்சித் மறுத்துள்ளார். இதற்கிடையே பெல்காம், சென்னை, டில்லி மற்றும் பஞ்சாப்பில் உள்ள பதின்டா ஆகிய இடங்களில் மாறிமாறி தொழில் செய்துவந்த ரஞ்சித்தின் இணையதள நடவடிக்கைகளை இராணுவ புலனாய்வு மற்றும் தேசிய பாதுகாப்பு முகாமைத்துவ அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க தொடங்கினர்.
குவாலியர் நகரில் இயங்கிவரும் இந்திய விமானப்படையின் இரகசியக்கூடம் பற்றிய தகவல்களை அளிக்க மாட்டேன் என ரஞ்சித் பிடிவாதம் பிடித்துவந்த நிலையில், 'இதற்கு முன்னர் இந்திய போர் விமானங்களின் தொழில்நுட்பம் பற்றி பேஸ்புக்கில் பரிமாறிய ரகசிய தகவல்கள், அளித்த பேட்டியின் பதிவுகள் போன்றவற்றை அம்பலப்படுத்தி உன்னை காட்டிக் கொடுத்து விடுவேன். மரியாதையாக, குவாலியர் இரகசியக்கூடம் பற்றிய தகவல்களை எனக்கு தெரிவித்தே ஆகவேண்டும்' என அந்த இளம்பெண் மிரட்டத் தொடங்கியுள்ளார்.
இந்நிலையில், ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் முகவராக பணியாற்றிவந்த அந்த இங்கிலாந்து பெண்ணுடனான ரஞ்சித்தின் மொத்த தொடர்புகளுக்கான ஆதாரங்களை முழுமையாக சேகரித்த இராணுவ புலனாய்வு மற்றும் டில்லி பொலிஸ் அதிகாரிகள் நேற்று முன்தினம் பஞ்சாப்பில் உள்ள பதின்டா விமாப்படைத்தளத்தில் ரஞ்சித்தை கைது செய்துள்ளனர். நன்றி வீரகேசரி
பஞ்சாப் விமானப் படை தளம் மீது தாக்குதல்: 4 தீவிரவாதிகள், 2 விமானப் படை வீரர்கள் பலி
02/01/2016 பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப் படை தளத்துக்குள் இராணுவ சீருடையுடன் நுழைந்து தீவிரவாதிகள் இன்று அதிகாலை தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இம்மோதலில் 2 விமானப் படை வீரர்களும் உயிரிழந்தாக தெரிவிக்கப்படுகின்றது.
பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், இமாச்சலபிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களின் எல்லையில் உள்ள பதான்கோட் விமானபடை தளத்தில் இன்று அதிகாலை 4 தீவிரவாதிகள் புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கியால் தாக்குதல் மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து பதிலடி கொடுத்த விமானப் படையினர் 2 தீவிரவாதிகளையும் சுட்டுக் கொன்றனர்.
விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்றும் குறிப்பிட்ட பகுதிக்குள் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனரா எனவும் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவத்தைத் தொடர்ந்து அனைத்து இராணுவ நிலைகளும் மிகவும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் பஞ்சாப்பின் குருதாஸ்பூரில் இதேபோல் தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தியிருந்தனர். அதில் மொத்தம் 7 பேர் பலியாகி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி