இலங்கைச் செய்திகள்


பணிப்பெண்களாக 29 871 பேர் வெளிநாட்டில்

நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு துமிந்த சில்வா அழைப்பானை

பெப்­ர­வ­ரியில் இலங்கை வரு­கிறார்

பிசராந்தனுக்கு மீண்டும் விளக்கமறியல்

நாமலிடம் விசாரணை

பணிப்பெண்களாக 29 871 பேர் வெளிநாட்டில்

28/12/2015 கடந்த 2014ம் ஆண்டு கிழக்கு மாகாணத்திலிருந்து 14871 பெண்களும், 2015ம் ஆண்டு சுமார் 15000 பணிப்பெண்களுமாக 29871 பெண்கள்  கடந்த இரு ஆண்டுகளில் மாத்திரம் பணிப்பெண்களாக வெளிநாடு சென்றுள்ளனர்.




2016ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை குறைவதற்கான வாய்ப்புண்டு. 2017ம் ஆண்டில் கிழக்கு மாகாணத்திலிலுந்து பெண்கள் பணிப்பெண்ணாக வெளிநாட்டுக்கு செல்வதை நிறுத்துவதற்கான வேலைத்திட்டங்களை உருவாக்க நடவடிக்கை எடுத்துவருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்ற சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பு (ஒசா) நடாத்திய 500 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை பைகளை வழங்கி வைக்கும் வைபவத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள முக்கிய பிரச்சினை வேலயில்லாப்பிரச்சினை யாகும். இம்மாகாணத்தில் மாத்திரம் சுமார் 2 இலட்சம் இளைஞர் யுவதிகள்  வேலையில்லாதவர்களாக இருக்கின்றனர்.
கிழக்கு மாகாணத்தில் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கு 4000 மில்லியன் ரூபா கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம் என்று மேலும் அவர் தெரிவித்தார்.  நன்றி வீரகேசரி 

நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு துமிந்த சில்வா அழைப்பானை

28/12/2015 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தமது பதவிக்காலத்தில் சொத்து விபரங்களை வெளியிடத் தவறியமை தொடர்பில் கொழும்பு நீதவான் நீதிமன்றம் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுத்துள்ளது.

ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு அவருக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்த வழக்கிற்கு அமைவாகவே இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
துமிந்த சில்வா பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த 2011 தொடக்கம் 2013 ஆண்டு வரை தமது சொத்து விபரங்கள் தொடர்பில் அறிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டிலேயே ஊழல் விசாரணை ஆணைக்குமு வழக்கு தொடர்ந்துள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் 13 ஆம் திகது கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இன்று உத்தரவிடப்பட்டுள்ளது.   நன்றி வீரகேசரி

பெப்­ர­வ­ரியில் இலங்கை வரு­கிறார்



29/12/2015 ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் அடுத்த வருடம் பெப்­ர­வரி மாத­ம­ளவில் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொள்­ள­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இந்த விஜ­யத்­தின் ­போது அவர் அர­சாங்க தரப்பின் முக்­கி­யஸ்­தர்­களை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்­ள­துடன் வட பகு­திக்கு விஜயம் செய்­ய­வுள்­ள­தாக தக­வல்கள் தெரி­வித்­தன.
அத்­துடன் வடக்கு விஜ­யத்­தின்­போது வட மாகாண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வ­ர­னையும் சந்­தித்து ஐக்­கிய நாடு கள் மனித உரிமை ஆணை­யாளர்
செய்ட் அல் ஹுசேன் பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார்.
விசே­ட­மாக அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள உள்­ளக விசா­ரணை பொறி­முறைக் கட்­ட­மைப்பில் வட மாகா­ணத்தின் பங்­க­ளிப்பு முக்­கி­யத்­து­வ­மிக்­க­தாக உள்­ளதால் இந்த சந்­திப்பு நிச்­சயம் இடம்­பெறும் என தெரி­ய­வ­ரு­கின்­றது.
இதே­வேளை முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள உள்­ளக விசா­ரணை பொறி­முறைக் கட்­ட­மைப்பு குறித்த செயற்­பா­டு­களை மதிப்­பீடு செய்­வதும் அது தொடர்­பாக ஆராய்ந்து பார்ப்­ப­துமே செய்ட் அல் ஹுசேனின் இலங்கை விஜ­யத்தின் முக்­கிய நோக்­க­மா­க­வுள்­ளது.
கடந்த ஜன­வரி மாதம் எட்டாம் திகதி நாட்டில் இடம்­பெற்ற ஆட்சி மாற்­றத்தின் பின்னர் இலங்கை அர­சாங்கம் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யா­ளரை இலங்கை வரு­மாறு அழைப்பு விடுத்­தி­ருந்­தது.
கடந்த வருடம் ஜூன் மாதம் ஜெனி­வாவில் இடம்­பெற்ற ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை பேர­வையின் 29 ஆவது கூட்டத் தொடரில் உரை­யாற்­றிய வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர செய்ட் அல் ஹுசேனை இலங்­கைக்கு விஜயம் மேற்­கொள்­ளு­மாறு நேர­டி­யாக அழைப்பு விடுத்­தி­ருந்தார்.
இந்­நி­லையில் எதிர்­வரும் 2016 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் இலங்­கைக்கு வரு­வ­தற்கு ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் இணங்­கி­யி­ருந்­த­தாக கூறப்­பட்­டது. அந்­த­வ­கை­யி­லேயே அடுத்த வருடம் பெப்­ர­வரி மாதம் அல் ஹுசேன் இலங்கை வர­வுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது.
ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 

பிசராந்தனுக்கு மீண்டும் விளக்கமறியல்


29/12/2015 பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் (TMVP) கட்சியின் பொதுச் செயலாளரான பூபாலப்பிள்ளை பிரசாந்தன் மீதான தடுப்பு காவல் உத்தரவு மட்டக்களப்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தினால்  எதிர்வரும் ஆண்டு 2016 ஜனவரி 12ம் திகதி வரை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் 2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் திகதி அரசாங்க படசாலையொன்றின் ஆசிரியரான தமிழ்நாடு என அழைக்கப்படும் கிருஸ்ணபிள்ளை மனோகரன் உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
குறித்த கொலைச் சம்பவம் தொடர்பாக கிருஸ்ணபிள்ளை மனோகரனின் சகோதரியொருவர் காத்தான்குடி பொலிஸாருக்கு வாக்கு மூலமொன்றை அளித்திருந்தார்.
குறித்த வாக்கு மூலத்தையடுத்து விசாரனைகளை மேற்கொண்டிருந்த காத்தான்குடி பொலிஸாரால் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.    நன்றி வீரகேசரி 


நாமலிடம் விசாரணை


30/12/2015 பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணை மேற்கொண்டுவருதாக தெரிவிக்கப்படுகின்றது.  நன்றி வீரகேசரி