உயிர்க்கும் உண்மைகள் 1 - நோர்வே நக்கீரா

.
மதவேற்றுமைகளில் ஒற்றுமை (மதங்கள் ஒன்றே என்பதற்கான பதிவு)

அவதாரம் என்றால் வானத்தில் இருந்து இறங்கி வருபவர் என்று பொருள் என்றால் இறங்கி வருபவனுக்கு ஊடகம் தேவைப்படும். வானத்தில் இருந்து நேரடியாக வந்தாலும் அண்டவெளி எனும் ஊடகம் தேவைப்படும். யேசு, புத்தர், இராமர், நபி, அனைவரும் இந்திரிய, சூலகத் தொடர்புடையவர்களே. இவைவும் ஊடகமே. அப்படி என்றால் அவதாரம் என்றால் என்ன? அவதாரம் என்பது "இறங்கி வருதல்" என்று மட்டுமே என்று தான் பொருள் கொள்ள முடியும். தன் உயர்நிலையில் இருந்து மனிதநிலைக்கு தாழ்ந்து வருதலாகும். விஸ்ணு இராமனாகவும், கர்த்தர் யேசுவாகவும், அல்லாவின் தூதனாக நபிகளையும் கருதலாம்.

அவதாரம் என்பதை வடமொழியான சமஸ்கிருதத்தில் அவ்வுத்-தார் என்னும் இருசொற்களின் இணைப்பே ஆகும். இதை வானத்தில் இருந்து அண்வெளி எனும் ஊடகத்தினூடாகவும் இறங்கி வரலாம். தாயின் சூலகத்தில் இருந்தும் இறங்கி வரலாம் என்று ஏன் கொள்ள முடியாது? தெய்வநிலையில் இருந்து மனிதராக தரமிறங்குதலை அவதாரம் எனலாம். 

இன்று பல அறிவுசார் இஸ்லாமியர்கள் பகவதம், கல்கி அவதாரம் பற்றிய உண்மைகளை ஒத்துக்கொள்ள ஆரம்பித்துள்ளார்கள்.  அவர்கள் கல்கி அவதாரம் என்பது நபிகள் நாயகமே என்பதை நிரூபிக்க முயல்கின்றனர்.


பூகோள ரீதியாகவும், இனப்பரம்பல் ரீதியாகவும் இந்தியாவை எடுத்துக் கொண்டால் வடக்கில் இருந்து வந்தவர்களே வடவித்தியர்களாகக் கருதலாம். சுருக்கமாகச் சொன்னால் வந்தேறிகள் எனலாம். அதாவது அரபு, பாரசீகம், ஆப்கானிஸ்தான், நேபாளம் மத்திய ஆசியாவில் இருந்து வந்தவர்களாகவே கருதமுடியும். இவர்கள் தமது நம்பிக்கைகளுடனேயே கீழ்நோக்கி நகர்ந்தனர். அதேவேளை இந்தியாவில் ஒருபெரு இனம் தன்னை நிரந்தப்படுத்தி நாகரீகத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தது. அவர்களே பண்டைய தமிழர்கள். இவர்கள் இயற்கை வணக்கத்துடன் (முக்கியமாக சூரிய வாயு மின்னல் வணக்கங்கள்) லிங்க வணக்கத்தையும் கொண்டவர்களாகவே கருதப்பட்டனர். அங்கே லிங்கம் என்பது இயற்கையின் ஒரு பிரதியாகவே காணப்பட்டது. இங்கே நாகரீகம் அடைந்தநிலையில் இருந்த தமிழர்களுடன் மேய்வனவுடன் வடக்கில் இருந்து வந்து ஏறியவர்களின் நம்பிக்கைகளும் இணைந்து கொண்டன. இந்த நம்பிக்கைகளின் இணைவே இந்துமத்தின் முக்கிய பிரிவுகளான சைவம், வைணவம் எனலாம்.

யூதம், கிறிஸ்தவம், இஸ்லாத்தின் அடிப்படைக்கூறுகளை எடுத்து நோக்கினால் அவற்றை வைணவ புராணங்களில் காணலாம். பகவதம், கல்கி அவதாரங்கில் கூறப்படுவன நபியின் பிறப்பை உறுதிப்படுத்தியதாக சில இஸ்லாமியர்கள் கருத்துக் கொள்கின்றனர். 

கல்கி அவதாரம் பற்றி பகவத்புராணம் தொகுதி 12, அத்தியாயம் 2, சுலோகம் 18-20வரை சொல்வதாவது சம்பாலா எனும் ஊரில், ஊர்த்தலைவரின் வீட்டில் விஸ்ணுயாஸ் என்பவருக்கும், சுமதி என்பவருக்கும் மகனாக கல்கி அவதரிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் கூறுவதாவது கல்கி 8 குணங்கள் கொண்டவர் என்றும், தேவர்களால் கொடுக்கப்பட்ட வெள்ளைக்குதிரையில் வலதுகையில் வாளை ஏந்தியபடி வருவார் என்றும், சுலோகம் 25ல் மன்னவர்கள் எல்லாம் கொள்ளையர்களாக மாறும் வேளையே கல்கி அவதாரம் உருவாகும் என்றும் இவருக்கு நான்கு தோழர்கள் உதவியாக இருப்பார்கள் என்றும், மாதவ மாதம் 12ம் திகதி பிறப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது. அப்பிறப்பு நடந்ததோ இல்லையோ என்பது இந்துக்களுக்குத் தெரியாது. இது நடந்ததாகவும் அவர்தான் நபிகள் நாயகம் என்றும் இஸ்லாமிய அறிவு ஜீவிகள் உணர முயல்கின்றனர். 

விஸ்ணுயாஸ் என்றால் இறைவனான விஸ்ணுவை யாசிப்பவன் என்றுபொருள் அதன் அர்த்தம் இறைநம்பிக்கை உடையவன் என்பது ஆகும். தாய் பெயர் சுமதி என்பது சுகம், அமைதி என்று பொருள் கொள்ளும். இந்தக் கல்கி இடம்பெயர்வார் என்றும் மலைக்குகையில் வாழ்வார் என்றும் தெய்வீக ஞானம் கிடைக்கும் என்றும் இவரே இறுதியான விஸ்ணுவின் அவதாரம் கல்கி என்றும் கூறப்பட்டுள்ளது. 

இதை இஸ்லாத்தில் பார்த்தால் முகமது நபியின் தந்தை பெயர் அப்துல்லா அதாவது இறைவனின் அடியாள் என்றும், தாய் ஆமினா என்றால் சாந்தி அமைதி என்றும் சம்பாலா என்றால் அமைதியான இடம் மெக்கா சாந்தமும் அமைதியுள் உள்ள இடம் என்றும் கல்கி அவதாரமே கடசியானது அதேதான் முகமது நபியும் இறுதியான முனி என்றும் குரான் கூறுகிறது. ஆக பகவதம், விஸ்ணுபுராணம், கல்கி அவதாரங்களில் வைணவம் சொன்ன கல்கி அவதாரம்தான் நபிகள் என்று கருதினால் அதை முன்கூட்டியே உலகுக்குச் சொன்ன இந்துக்களாக இந்துக்களுடன் நட்புடன் இஸ்லாமியர்கள் இருப்பார்களா? அடிப்படையில் இந்துக்களை அதிகமாக அழித்தவர்கள் இஸ்லாமியர்களே. மேற்கூறிய நபிகள் பற்றிய தரவுகளை சுரா அல் அஹ்ஜாப்பில் இருந்து எடுத்துத் தந்தவர் டாக்டர் ஜாகீர் நாயக் என்பவராவார். கல்கி அவதாரத்தில் கூறியதுபோல் நபிகளும் குகையில் வாழந்தார் என்றும் வடக்கே சென்று திரும்பினார் என்றும் அவருக்கு அல்லுர் மலையில் உள்ள கிராக்குகையில்தான் தெய்வ அறிவிப்புக் கிடைத்தது. இந்த மலையை ஒளியின் மலை என்று கருதப்பட்டது. இதனால் நபிகளே கல்கி அவதாரம் என்பதை டாக்டர் ஜாகீர் நாயக் நிரூபிக்க விளைகிறார். எது எப்படியோ இஸ்லாத்தின் அடிப்படைய ஆதிமதம் இந்துப்புராணங்களில் சொல்லியிருக்கிறது என்பது உறுதியாகிறது. 

இறைவனானவன் 8 குணங்கள் கொண்டவன் என்பதை வள்ளுவரும் "எண்குணத்தான் தாளை வணங்காத் தளை" என்றார். ஆக மதங்களின் அடிப்படைகள் அனைத்தும் ஒன்றாக அமைந்தாலும் மனிதனே அதை வேற்றுமைப்படுத்தி மதத்தை மனிதம் தாண்டி யுத்தத்த களத்துக்கு அழைத்துச் சொல்கிறான். இந்த அடிப்படைத்தந்துவங்களை மதங்களில் ஆதிமதமான இந்துப்புராணங்கள் கூறியுள்ளன. 

யூத, கிறிஸ்தவ, இஸ்லாத்தின் ஆணிவேர் என்று கருதப்படும் ஆபிரகாமுக்குப் பிள்ளை பிறக்காது என்றும், அவர் தன்னை ஈகம் செய்தால் மட்டுமே பிள்ளைப்பலன் உண்டு என்றும் ஞானிகளால் அறிவுறுத்தப்பட்டது. அவர் இறைவனை வேண்டி அவருக்கு ஒரு ஆண்குழந்தை ஈசாக் பிறந்தான். அந்தப்பிள்ளையை மலையில் உச்சியில் வைத்துக் கொன்று விடு என்று இறை அசரீரி கேட்டது. இவர் ஈகம் செய்வாரா என்பதை இறைவன் சோதித்தான். அவர் அக்கூற்றை ஏற்று அப்பிள்ளையை கொல்லும் போது தேவதைகளை வந்து தடுத்து அப்பிள்ளையை வாழவைத்தன. இந்த ஈசாக்கே கிறிஸ்தவ இல்லாமியர்களின் பொதுத்ததந்தையாவான். 

இதேபோன்ற கதை அல்லது புராணத்தை இந்துவேதத்தில் வாசித்தேன். ஆனால் முடிவு மட்டும் வித்தியாசமாக இருந்தது. அதாவது அக்குழந்தையைக் கொல்லுமாறு உத்தரவு கிடைத்தபோது இந்துத் தந்தை இறைவனுடன் வாதிட்டு அக்குழந்தையைக் காப்பாற்றுகிறான். இவ்விரண்டு கதைகளிலும் தந்தை சோதிக்கப்படுகிறான், பிள்ளை காப்பாற்றப்படுகிறது ஆனால் காப்பாற்றப்பட்ட மார்க்கமே வித்தியாசமானது. மத்தியகிழக்கு மதங்களில் முக்கியமாக இஸ்லாம் கடவுளின் கட்டளைக்கு எந்தக் கேள்வி நியாயமும் இன்றிப்பணிய வேண்டும். இதை கூரானே கூறியுள்ளது. ஆனால் இந்து மதத்தில் மனிதன் கடவுளிடம் கேள்வி கேட்கலாம் பேரம் பேசலாம் வாதிடலாம். இந்த சுதந்திரம் இந்து மதத்தில் உண்டு. கண்ணை மூடிக்கொண்டு கடவுளை ஏற்ற வேண்டிய அவசியம் கிடையாது. சிந்திக்கும் உரிமை சுதந்திரமாக இந்துக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆக மதங்கள் கூறுவது அனைத்தும் ஒன்றே. ஆனார் மார்க்கங்களே வித்தியாசமானவை.

இனிமேலாவது எனது மதம்தான் சரியானது மற்றைய மதங்கள் முழுக்கப் பிழையானவை என்று மதம்மாறுவதையும், மதவேற்றுமைகளையும் விடுத்து மற்றைய மதங்களை அடிமை கொள்வதையும் நிறுத்துவார்களா? மதங்களில் மனிதம் முன்னிறுத்தப்படுமா? மதங்களில் மனிதமனம் நிலவுமா?