உலகச் செய்திகள்

.
போலந்து பாரா­ளு­மன்ற தேர்­தலில் எதிர்க்­கட்சி வெற்றி

பல்மைரா நகரிலுள்ள தூண்களில் கட்டி வைத்து வெடிக்க வைத்து மூவருக்கு மரணதண்டனை

ஆஸி.யின் மோர்லாண்ட் நகரின் மேயராக இலங்கைப் பெண் தெரிவு

போலந்து பாரா­ளு­மன்ற தேர்­தலில் எதிர்க்­கட்சி வெற்றி

27/10/2015 போலந்து பாரா­ளு­மன்றத் தேர்­தலில் பழை­மை­வாத எதிர்க்­கட்­சி­யான சட்­டமும் நீதியும் கட்சி வெற்றி பெற்­றுள்­ளது. இது­வரை வெளி­யான பெறு­பே­று­களின் பிர­காரம் அந்தக் கட்சி 39 சத­வீத வாக்­கு­களைப் பெற்­றுள் ளது.
அந்தக் கட்சி பாரா­ளு­மன்­றத்தில் தனித்து ஆட்சி அமைப்­ப­தற்கு தேவை­யான ஆச­னங்­களைப் பெற்­றுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
மேற்­படி கட்­சியின் தலைவர் ஜரோஸ்லோ கக்­சின்ஸ்கி பிர­தமர் வேட்­பா­ள­ராக தனது உற­வி­ன­ரான பீற்றா ஸசிட்­லோவை தெரிவு செய்­தி­ருந்தார்.



இந்­நி­லையில் பத­வியை விட்டு வெளி­யேறிச் செல்லும் பிர­தமர் ஈவா கொப்பாக்ஸ் தனது தோல்­வியை ஒப்புக் கொண்­டுள்ளார்.
சட்­டமும் நீதியும் கட்­சி­யா­னது கிராமப் பிராந்­தி­யங்­களில் பெரும் ஆத­ரவைப் பெற்­றுள்­ளது.

ஜரோஸ்லோ கக்­சின்ஸ்கி 2001 ஆம் ஆண்டில் தனது சகோ­த­ர­ரான லெச் கக்­சின்ஸ்­கி­யுடன் இணைந்து சட்­டமும் நீதியும் கட்­சியை ஸ்தாபித்­தி­ருந்தார்.
அவர் 2006/-2007 ஆம் ஆண்டு காலப் பகு­தியில் தனது சகோ­தரர் லெச் ஜனா­தி­ப­தி­யாக பதவி வகித்த கால கட்­டத்தில் பிர­த­ம­ராக பதவி வகித்­தி­ருந்தார்.
லெச் 2010 ஆம் ஆண்டில் ரஷ்­யாவில் இடம்பெற்ற விமான விபத் தில் உயி­ரி­ழந்தார்.

தேர்தல் வெற்­றி ­யை­ய­டுத்து ஜரோ ஸ்லோ கக்சின் ஸ்கி உரையாற்­ று­கையில், தமது அரசாங்கம் சட்ட அமு­லாக் கத்தில் கவனம் செலுத்தும் என
வும் பழி­வாங் கும் நட­வ­டிக்­கைகள் எதுவும் மேற்­கொள்­ளப்­படமாட்­டாது எனவும் கூறினார்.

“தமது சொந்தத் தவ­று­களால் விழுந்­த­வர்­களை உதைக்கும் நட­வ­டிக்­கைகள் எதுவும் மேற்­கொள்­ளப்­பட மாட்­டாது" என அவர் குறிப்­பிட்டார்.
அதே­ச­மயம் புதிய பிர­த­ம­ராக தெரி­வா­கி­யுள்ள பீற்றா ஸசிட்லோ, தனக்கு ஆத­ரவு வழங்­கி­ய­மைக்­காக போலந்து மக்­க­ளுக்கு நன்­றியைத் தெரி­வித்தார்.

''மறைந்த ஜனா­தி­பதி லெச் கக்­சின்ஸ்­கியைப் பின்­பற்றி எமக்கு முன்­னா­லுள்ள அனைத்து சவால்­க­ளையும் எதிர் கொள்வோம்'' என அவர் கூறினார்.
"போலந்து மக்கள் தமது எதிர்­பார்ப் ­புகள் மற்றும் தேவைப்பாடுகள் குறித்து எமக்குத் தெரிவித்து எமக்கு வாக்களித் திருக்காவிட்டால் நாம் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்க முடியாது" என அவர் தெரிவித்தார். நன்றி வீரகேசரி 








பல்மைரா நகரிலுள்ள தூண்களில் கட்டி வைத்து வெடிக்க வைத்து மூவருக்கு மரணதண்டனை


28/10/2015 ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் சிரி­யா­வி­லுள்ள பண்­டைய நக­ரான பல்­மை­ரா­வி­லுள்ள தூண்­களில் மூவரை கட்டி வைத்த பின்னர் அந்த தூண்­களை வெடி வைத்து தகர்த்து அவர்­க­ளுக்கு மர­ண­தண்­டனை நிறை­வேற்­றி­யுள்­ள­தாக சிரிய மனித உரி­மைகள் அவ­தான நிலையம் தெரி­வித்­துள்­ளது.
ஞாயிற்­றுக்­கி­ழமை நிறை­வேற்­றப்­பட்ட இந்த மர­ண­ தண்­ட­னைகள் குறித்து சர்­வ­தேச ஊட­கங்கள் செவ்­வாய்க்­கி­ழமை செய்­தி­களை வெளியிட்­டுள்­ளன.

மேற்­படி மூவ­ருக்கும் எதற்­காக மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டது என்­பது தொடர்பில் தகவல் எதுவும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.
அந்த மூவ­ருக்­கு­மான மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­பட்ட இடத்­திற்கு உள்­ளூர்­வா­சிகள் சென்ற போது அங்கிருந்த அலங்காரத் தூண்கள் வெடித்துச் சிதறியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.  நன்றி வீரகேசரி 
காணாமல்போன ரஷ்ய விமானம் வெடித்து சிதறியது






ஆஸி.யின் மோர்லாண்ட் நகரின் மேயராக இலங்கைப் பெண் தெரிவு


30/10/2015 அவுஸ்திரேலியாவின் மோர்லாண்ட் நகர மேயராக இலங்கைப் பெண் ஒருவர்  முதல்முறையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் கிறீன் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்ட சமந்தா இரட்ணம் என்ற பெண்ணே இவ்வாறு மேயராகத் தெரிவாகியுள்ளார்.
 சமாந்தா, தொழிற்கட்சி வேட்பாளரைத் தோற்கடித்து தோ்தலில் வெற்றியீட்டியுள்ளதுடன், இதற்கு முன்னர் இரு தடவைகள் மேயர் பதவிக்காக போட்டியிட்ட போதிலும் வெற்றிபெறவில்லை.
இலங்கையில் பிறந்த சமந்தா இரட்ணம், உள்நாட்டு யுத்தம் காரணமாக பெற்றோருடன்  கடந்த 1989 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் குடியேறியுள்ளார்.
வெற்றியைப் பொறுத்தவரை கடந்த இரு வருடங்களைவிட இவ் வருடம் அதிக நம்பிக்கையுடன் இருந்ததாக சமந்தா தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி






காணாமல்போன ரஷ்ய விமானம் வெடித்து சிதறியது

31/10/2015 காணாமல்போன ரஷ்ய விமானம் வெடித்துச் சிதறியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

எகிப்தின் ஷாம் எல்ஷேக் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட  சிறிது நேரத்திலேயே ரஷ்ய விமானமான ஏ - 321 என்ற விமானம் வெடித்துச் சிதறியுள்ளது.

குறித்த விமானத்தில்  217 பயணிகளும் 7 விமான பணியாளர்களும்  பயணித்துள்ளனர்.
விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானம் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்தது. 
விமானத்தில் ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் அதிகமாக பயணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.  எகிப்து எல்லையை கடந்து ரஷ்யா நோக்கி சென்ற போது சின்னை தீபகற்பத்திற்கு அருகில் விமானம் வெடித்து சிதறியுள்ளது. 
விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது. இதனை எகிப்து பிரதமர் உறுதி செய்துள்ளார். இதனை அடுத்து தேடுதல் நடவடிக்கை முடிக்கி விடப்பட்டுள்ளது.  நன்றி வீரகேசரி




No comments: