'உயிருடன் இருக்க வேண்டும் என இறைவனிடம் வேண்டினேன்': சிறுவனின் சடலத்தை எடுத்த பொலிஸ் அதிகாரி
சிரியாவிலுள்ள பிரதான எண்ணெய் வயலின் பகுதிகளைக் கைப்பற்றிய ஐ.எஸ். தீவிரவாதிகள்
குடியேற்றவாசிகளுக்கு உதவுவதற்கு 6 பில்லியன் யூரோ நிதி ஒதுக்கீடு
பிரிட்டிஷ் எயார்வேஸ் விமானத்தில் பாரிய தீ விபத்து: 14 பேர் காயம்
ஜப்பானில் கடும் மழை : 90 ஆயிரம் பேர் பாதிப்பு
மக்கா பள்ளிவாசலில் பாரந்தூக்கி சரிந்து வீழ்ந்ததில் 107 பேர் மரணம்! 230 பேர் காயம்
'உயிருடன் இருக்க வேண்டும் என இறைவனிடம் வேண்டினேன்': சிறுவனின் சடலத்தை எடுத்த பொலிஸ் அதிகாரி
07/09/2015 “சிறுவனை பார்த்த போது உயிருடன் இருக்க வேண்டும் என இறைவனிடம் வேண்டினேன். ஆனால் உயிரிழந்து காணப்பட்டான்' என்று துருக்கி கடற்கரையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்ட சிறுவனின் சடலத்தை எடுத்த துருக்கி பொலிஸ் அதிகாரி மெக்மெட் சிப்லாட் தெரிவித்துள்ளார்.
சிரியாவின் இடம்பெறும் உள்நாட்டுப் போர் காரணமாக அந்நாட்டு மக்கள் துருக்கி வழியாக அண்டை நாடான ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்து வருகின்றனர்.
ஆனால் தனது நாடுகளில் அகதிகள் குடியேறுவதை ஐரோப்பிய நாடுகள் வண்மையாக எதிர்த்து வந்தன.
இந்நிலையில் துருக்கி கடற்கரையில் கடலில் உயிரிழந்து கிடந்த சிறுவனின் புகைப்படம், உலகையே சோகத்தில் உலுக்கி விட்டது. இதனையடுத்து ஐரோப்பிய நாடுகளின் அகதிகள் தொடர்பான நிலைப்பாட்டிலும் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது.
துருக்கியில் கடலில் பலியாகிக்கிடந்த குழந்தை அய்லான் சடலத்தை எடுத்த பொலிஸ் அதிகாரி மெக்மெட் சிப்லாட் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
“என்னுடைய சொந்த மகன் என்றே நினைத்தேன்,”என்று கூறிஉள்ளார். மெக்மெட் சிப்லாட் பேசுகையில், “
சிறுவனை பார்த்ததும் அவன் உயிருடன் இருக்கவேண்டும் என்றே கடவுளிடம் வேண்டிக்கொண்டேன். சிறுவன் உயிருடன் இருப்பான் என்றே நம்பினேன். ஆனால் சிறுவன் சடலமாக கிடந்தான். நான் அழுதுவிட்டேன். எனக்கும் 6 வயதில் மகன் உள்ளான். சிறுவனை பார்த்ததும் என்னுடைய மகனை போன்றே நினைத்தேன். என்னுடைய துன்பத்தை கூறுவதற்கு வார்த்தையே கிடையாது. மிகவும் சோகமாக இருந்தது என்றார்.
மேலும் சிறுவனின் உடலை தூக்கி எடுத்த போது எனக்கு புகைப்படம் எடுக்கப்படுகின்றது என்பதை அறிந்திருக்கவில்லை. நான் என்னுடைய பணியைதான் செய்தேன் என்றும் மெக்மெட் குறிப்பிட்டுள்ளார். நன்றி வீரகேசரி
சிரியாவிலுள்ள பிரதான எண்ணெய் வயலின் பகுதிகளைக் கைப்பற்றிய ஐ.எஸ். தீவிரவாதிகள்
08/09/2015 ஐ.எஸ் தீவிரவாதிகள் சிரியாவில் அரசாங்கக் கட்டுப்பாட்டிலிருந்த இறுதிப் பிரதான எண்ணெய் வயலின் பகுதியை கைப்பற்றியுள்ளதாக சிரிய மனித உரிமைகள் அவதான நிலையம் திங்கட்கிழமை தெரிவித்தது.
ஐ.எஸ். தீவிரவாதிகள் ஜஸால் எண்ணெய் வயலின் பகுதிகளைக் கைப்பற்றியுள்ளதாகவும் அந்த எண்ணெய் வயலின் ஏனைய பகுதிகளை தீவிரவாதிகள் கைப்பற்றுவதை அரசாங்கப் படையினர் தடுத்துள்ளதாகவும் அந்த நிலையம் குறிப்பிட்டுள் ளது.
தீவிரவாதிகள் முன்னேறி வருவதால் ஹொம்ஸ் மாகாணத்திலுள்ள மேற்படி எண்ணெய் வயலிலான எண்ணெய் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக சிரிய மனித உரிமைகள் அவதான நிலையத்தின் தலைவர் ரமி அப்டெல் ரஹ்மான் தெரிவித்தார்.
இதற்கு முன் ஜஸால் எண்ணெய் வயலில் தினசரி சுமார் 2,500 பீப்பா எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. நன்றி வீரகேசரி
குடியேற்றவாசிகளுக்கு உதவுவதற்கு 6 பில்லியன் யூரோ நிதி ஒதுக்கீடு
08/09/2015 ஜேர்மனிக்குள் பிரவேசிக்கும் பெருந்தொகையான குடியேற்றவாசிகளுக்கு உத வும் முகமாக 6 பில்லியன் யூரோ நிதியைச் செலவிட அந்நாட்டு கூட்டமைப்பு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
ஜேர்மனிய அதிபர் அஞ்ஜெலா மெர் கெல் குடியேற்றவாசிகளுக்கு நாட்டின் எல்லைகளைத் திறந்து வைத்ததன் மூலம் அபாயகரமான சூழ்நிலையொன்றை .உருவாக்கியுள்ளதாக அவரது எதிர்ப்பாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
புகலிடம் தொடர்பான விதிகளைத் தளர்த்துவதற்கு ஆஸ்திரியா மற்றும் ஹங்கேரியுடன் செய்து கொண்ட உடன்படிக்கையொன்றையடுத்து வார இறுதியில் சுமார் 18,000 குடியேற்றவாசிகள் ஜேர்மனிக்குள் பிரவேசித்துள்ளனர்.
இந்நிலையில் இவ்வாறு அவசரகால நிலைமையின் கீழ் புகலிட விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதை முடிவுக்குக் கொண்டு வர வேண்டியுள்ளதாக ஆஸ்திரிய அதிபர் வெர்னர் பேமான் தெரிவித்தார்.
குடியேற்றவாசிகள் தொடர்பான நிலைமை படிப்படியாக வழமைக்குக் கொண்டு வரப்படும் என அவர் கூறினார்.
ஜேர்மனிய அதிபர் அஞ்ஜெலா மெர் கெல் மற்றும் ஹங்கேரிய பிரதமர் விக்டர் ஒர்பான் ஆகியோருடன் தொலைபேசியில் உரையாடியதையடுத்தே அவர் இவ்வாறு கூறினார்.
ஹங்கேரி இதற்கு முன் குடியேற்றவாசிகள் மேற்கு ஐரோப்பாவுக்குள் பிரவேசிப்பதற்கு தடை விதித்திருந்தது ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை மேற்படி கட்டுப்பாடுகளை அந்நாடு கைவிட்டிருந்தது.
அதேசமயம் சேர்பியாவுடனான ஹங்கேரிய எல்லையில் தடுப்பு வேலியொன்றை நிர்மாணிக்கும் பணி தொடர்ந்து வருகிறது.
ஜேர்மனிய அதிபர் அஞ்ஜெலா மெர்கெலின் கூட்டமைப்பைச் சேர்ந்த இரு கட்சிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு பேச்சுவார்த்தைகளை நடத்தியதையடுத்து மேலதிக நிதி தொடர்பான அறிவிப்பு இடம்பெற்றுள் ளது.
இந்நிலையில் ஜேர்மனிய அரசாங்கம் குடியேற்றவாசிகள் தொடர்பில் மாநிலங்களுக்கும் உள்ளூராட்சி சபைகளுக்கும் 3 பில்லியன் யூரோவையும் நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் உதவிக் கொடுப்பனவுகளுக்காக மேலும் 3 பில்லியன் யூரோவை வழங்கவும் இணக்கம் தெரிவித்துள்ளது.
ஜேர்மனி இந்த வருடத்தில் 800,000 அகதிகளையும் குடி யேற்றவாசிகளையும் ஏற்க எதிர்பார்த்துள் ளது.
இந்நிலையில் ஜேர்மனிக்குள் தற்போது புதிதாக விஜயம் செய்துள்ள குடியேற்றவாசிகளுக்கு அந்நாட்டு மக்களால் மகிழ்ச்சியுடன் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
எனினும் புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்கவைக்கப்பட்டிருந்த இரு நிலையங்களுக்கு எதிர்ப்பாளர்களால் ஞாயிற்றுக்கிழமை இரவு தீ வைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின் றன.
தென் மேற்கு மாநிலமான படென் வுயர்டெம்பேர்க்கில் ரொட்டென்பேர்க் எனும் இடத்திலுள்ள புகலிடக்கோரிக்கையாளர்களுக்கான நிலையத்தில் ஏற்பட்ட தீயில் ஐவர் காயமடைந்துள்ளனர்.
அதேசமயம் மத்திய மாநிலமான துறிங்கியாவில் எபெலெபென் எனும் இடத்தி லுள்ள புகலிடக்கோரிக்கையாளர்களுக்கான நிலையத்தில் இரண்டாவது தீ வைப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது அரசியல் நோக்குடைய தீவைப்பு சம்பவம் என பொலிஸார் நம்புகின்றனர்.
மேற்படி இரு மாநிலங்களிலும் அண் மைய வாரங்களில் புகலிடக்கோரிக்கையா ளர்களது தங்குமிடங்களை இலக்கு வைத்து பல தீவைப்புகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
பிரிட்டிஷ் எயார்வேஸ் விமானத்தில் பாரிய தீ விபத்து: 14 பேர் காயம்
09/09/2015 அமெரிக்காவின் லாஸ் வேகாசில் இருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு செல்லவிருந்த பிரிட்டிஷ் எயார்வேஸ் விமானத்தில், திடீரென பாரிய தீ விபத்து ஏற்பட்டதால் 14 பேர் காயமடைந்ததோடு பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
லண்டன் நகரில் இருந்து 159 பயணிகள் மற்றும் 13 ஊழியர்களுடன் செல்லவிருந்த பிரிட்டிஷ் எயார்வேஸ் போயிங் 777 விமானத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து விமானத்தில் இருந்தவர்கள் பயந்து கூச்சலிட்டுள்ளனர்.
இந்த விபத்தில் 14 பேர் காயமடைந்துள்ள போதும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
விமானத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து சுமார் 50 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
பயணிகள் அனைவரும் உடனடியாக அவசர வழியாக கவனமாக வெளியேற்றப்பட்டனர்.
லாஸ் வேகாஸ் விமான நிலையத்தில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக எங்களுக்கு தகவல் தெரியும், எங்களுடைய குழுவானது இதுதொடர்பாக மேலும் தகவல்களை பெற்று வருகிறது. விமானம் தீ விபத்தில் சிக்குவதற்கான காரணம் தெரியவரவில்லை. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. என விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நன்றி வீரகேசரி
ஜப்பானில் கடும் மழை : 90 ஆயிரம் பேர் பாதிப்பு
10/09/2015 ஜப்பானில் ஏற்பட்டிருக்கும் கடும் வெள்ளத்தின் காரணமாக 90 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வெள்ளத்தின் காரணமாக, வீடுகளின் மேல் நின்றவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.
ஜப்பானின் கிழக்குப் பகுதியில் பெய்து வரும் கடும் மழையின் காரணமாக, மேலும் ஆயிரக்கணக்கானவர்களை தங்களது வீடுகளை விட்டு வெளியேறும்படி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஃபுகுஷிமா உட்பட ஜப்பானின் கிழக்கு, வட கிழக்குப் பகுதிகளின் பெரும்பாலானவற்றில் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
கடந்த மாதம் ஜப்பானின் தென்கோடியில் இருக்கும் கையுஷு தீவை கோணி புயல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்ததுடன் 70 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
மக்கா பள்ளிவாசலில் பாரந்தூக்கி சரிந்து வீழ்ந்ததில் 107 பேர் மரணம்! 230 பேர் காயம்
13/09/2015 சவூதி அரேபியாவின் மக்கா வில் உள்ள அல் ஹரம் பள்ளிவாசலில் பாரந்தூக்கி (கிரேன்) ஒன்று சரிந்து வீழ்ந்ததில் 107 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழப்பின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வரும் நிலையில் மஸ்ஜிதுல் ஹரமின் மசாஆ பகுதி கூரை திருத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்த பாரம் தூக்கி ஒன்றே சரிந்து வீழ்ந்துள்ளது.
இம்மாதப் பிற்பகுதியில் ஹஜ் யாத்திரை தொடங்கவிருக்கும் நிலையில் இந்த விபத்து நடந்துள்ளமை மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இவ் விபத் தில் 230 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
ஜோதிட கணிப்பின்படி சில நாட்களை, திகதிகளை அதிர வைக்கும், உலகத்தை உலுக்கும் சம்பவங்கள், நிகழ்வுகள் ஏற்படும் என்று கணிப்பர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இந்தச் சம்பவம் உலகை உலுக்கியுள்ளது.
கடந்த 2001ஆம் ஆண்டு செப்டெம்பர் 11ஆம் திகதி இதே நாளில் தான் உலக வல்லரசான அமெரிக்காவை ஆட்டம் காண வைத்தது. அதாவது, ஒஸாமா பின்லேடன் தலைமையிலான அல்கைதா இயக்கத்தினர் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத்தின் மீது தாக்குதல் நடத்தினர்.இதில், மூவாயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர்.
இந்த நாளை இன்று வரை அமெரிக்கா துக்க நாளாக அனுஷ்டித்துவருகின்றது. அதேபோன்று 2012 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 இல் பாகிஸ்தானில் இரு அரச அலுவலகங்கள் மீது ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 315 மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் சவூதி அரேபியாவில் இன்னொரு சோகச் சம்பவம் நேர்ந்துள்ளது. இந்தச் சோகச் சம்பவம் இப்பொழுது உலகம் முழுவதும் பேசப்படும் முக்கிய செய்தியாக மாறியுள்ளது.
பள்ளிவாசல் விரிவாக்கம் மக்காவில் புனித யாத்திரிகர்கள் கூட்ட நெரிசல் ஏற்பட்டு கடந்த 2006 ஆம் ஆண்டு பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் 300 பேர் வரையிலானோர் உயிரிழந்தனர். அத்துடன் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற நெருக்கடியில் 200 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து மெக்காவில் ஆண்டுதோறும் அனுமதிக்கப்படும் புனித யாத்திரிகர்களின் எண்ணிக்கையை சவூதி அரசு கண்காணிக்கத் தொடங்கியது.
நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment