ஷிராந்தி ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பதிவு
பொரளை பள்ளிவாசல் மீது தாக்குதல்;கண்ணாடிகள் சேதம் : பொலிஸார் தீவிர விசாரணை
சிறுமியை காட்டுக்குள் கடத்திச் சென்ற நபர் : பிரதேச மக்களால் நையப்புடைப்பு
கொழும்பு - யாழ் பஸ் விபத்தில் நான்கு பேர் பலி : 35 பேர் காயம்
நீதிமன்ற தாக்குதல் சம்பவம் 44 பேர் இன்று நீதிமன்றில் ஆஜர்
20 ஆவது சட்டமூலம் தொடர்பில் சிறுபான்மை இன சிறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆராய்வு
ஷிராந்தி ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பதிவு
01/06/2015 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவிடம் தற்போது நிதிமோசடி தடுப்பு பொலிஸ் பிரிவினரால் வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதாக
தெரிவிக்கப்படுகின்றது. நன்றி வீரகேசரி
01/06/2015 கொழும்பு பொரளையில் அமைந்துள்ள ஆப்தீன் ஜும்ஆ பள்ளிவாசல் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு 10.45 மணியளவில் இனந்தெரியாதோரின் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளது.
தாக்குதல்களினால் பள்ளிவாசல் ஜன்னல் கண்ணாடிகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன் பள்ளிவாசலினுள் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் காயங்கள் எதுவுமின்றி தப்பியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் அங்கு ஆரம்ப விசாரணைகளை நடத்தியதுடன் தடயப் பொருளான கற்களை சேகரித்துக்கொண்டனர்.
தற்போது பள்ளிவாசலுக்கு 24 மணி நேர பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சம்பவத்தைக்கேள்வியுற்ற கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாத்பதியுதீன், மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத்சாலி, மேல் மாகாண சபை உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், பைரூஸ் ஹாஜி ஆகியோர் சனிக்கிழமை இரவே ஸ்தலத்துக்கு விஜயம் செய்து சேத விபரங்களைப் பார்வையிட்டனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எ.எச்.எம். அஸ்வர், முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அலவி மௌலானா ஆகியோர் பள்ளிவாசலுக்கு சென்று சம்பவத்தை கேட்டறிந்ததுடன் ளூஹர் தொழுகையிலும் கலந்து கொண்டனர்.
சம்பவம் தொடர்பில் பள்ளிவாசல் நிர்வாக சபைத்தலைவர் எம்.ஆர்.எம். அவ்தார்ட்டிடம் கேட்டபோது,
பள்ளிவாசலுக்கருகில் முச்சக்கரவண்டி நிறுத்துமிடத்திலிருந்த முச்சக்கர வண்டி சாரதியொருவர் தனது பேர்ஸ் காணாமற் போய்விட்டதாக சனிக்கிழமை மாலை 5 மணிக்கு பொலிஸில் புகார் செய்துள்ளார். இதனையடுத்து முறைப்பாட்டுக்காரர்களுடன் பொலிஸார் வந்து சிசிரிவி கமராவை பார்ப்பதற்கு அனுமதி கோரியுள்ளனர்.
ஒரு வார காலமாக சிசிரிவி கமரா செயலிழந்து இருப்பதாக பள்ளிவாசல் முகாமையாளர் பொலிஸாருக்கு தெரிவிக்கவே பொலிஸார் அங்கிருந்து சென்று விட்டனர்.
இச்சம்பவத்தையடுத்து அன்று இரவு 10.45 மணியளவில் பள்ளிவாசல் தாக்கப்பட்டிருக்கின்றது. இதனை யார் மேற்கொண்டார்கள் என்று தெரியவில்லை. பொலிஸார்தான் கண்டு பிடிக்க வேண்டும். 70 வருட வரலாற்றினைக் கொண்ட இப்பள்ளிவாசலுக்கு இதுவரை இப்படியான ஒரு சம்பவம் நடக்கவில்லை. பள்ளிவாசல் ஜமா அத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் ஏனைய சமூகத்துடன் நல்லுறவுடனேயே வாழ்கின்றார்கள் என்றார்.
கல் என்னருகில் வீழ்ந்தது பயந்து எழும்பினேன் பள்ளிவாசலுக்குள் நித்திரையிலிருந்த புத்தளத்தைச் சேர்ந்த வாஹித் ஜென்சாத் என்பவர் கருத்து தெரிவிக்கையில்இ
நான் கடந்த 22 நாட்களாக பள்ளிவாசலில் தங்கியிருக்கின்றேன். என்னுடன் மேலும் இருவர் தங்கியிருக்கின்றார்கள். எனது 6 மாத குழந்தை பொரள்ளை லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றது.
இரவு நாங்கள் நித்திரையில் இருந்தோம். இரவு கல் எனது பக்கத்தில் வந்து வீழ்ந்தது. பயத்தினால் நான் சத்தமிட்டேன். மேல் மாடியிலிருந்த ஹஸரத்இ மோதீன் என்போர் ஓடி வந்து முன் கதவை திறந்தார்கள். எனக்கு காயம் ஏற்படவில்லை என்றார்.
நானும் பள்ளிவாசலில் மேல் மாடியில் உறங்கிக் கொண்டிருந்தேன். கீழ் மாடியில் நித்திரையிலிருந்தவர்களின் சப்தம் கேட்டு ஓடி வந்தோம். வந்து பார்க்கையில் சிறிய காரொன்று அங்கிருந்து வேகமாக சென்றது. பள்ளிவாசலைத் தாக்கியவர்கள் அவர்கள்தான் என்று நினைக்கின்றேன் என்றார். நன்றி வீரகேசரி
சிறுமியை காட்டுக்குள் கடத்திச் சென்ற நபர் : பிரதேச மக்களால் நையப்புடைப்பு
01/06/2015 எட்டு வயது சிறுமி ஒருவரை காட்டுப் பகுதிக்குள் பலவந்தமாக கடத்திச் சென்ற நபர் ஒருவரை கையும் மெய்யுமாக பிடித்த பிரதேச மக்கள், குறித்த நபரை நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் இன்று பகல் புத்தளம் தில்லையடி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தினால் குறித்த பகுதியில் சில மணிநேரம் பதற்ற நிலை நிலவியது.
புத்தளம், தில்லையடி பகுதியில் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் குறித்த சிறுமி பாடசாலை விட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, சந்தேக நபர் ஒருவர் குறித்த சிறுமியை பலவந்தமாக காட்டுக்குள் தூக்கிச் செல்வதை சிலர் அவதானித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பிரதேச மக்களுக்கு அறிய வந்ததையடுத்து, குறித்த காட்டுப்பகுதிக்குள் சிறுமியை தேடியுள்ளனர். சிறுமி மீட்கப்பட்ட போதும் சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளார்.
பின்னர் நீண்ட மணிநேர தேடுதலுக்கு பின்னர் சந்தேக நபரை பிடித்த பிரதேச மக்கள் குறித்த நபர் மீது சரமாரியாக தாக்குதலை மேற்கொண்டு புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இச் சம்பவமானது தில்லையடி பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நன்றி வீரகேசரி
கொழும்பு - யாழ் பஸ் விபத்தில் நான்கு பேர் பலி : 35 பேர் காயம்
02/06/2015 முல்லைத்தீவு மாங்குளம் - கிழவன்குளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் 35 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த சொகுசு பஸ் வண்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வண்டியுடன் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சாரதியின் தூக்க மயக்கமே குறித்த விபத்துக்கு காரணம் என பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நன்றி வீரகேசரி
நீதிமன்ற தாக்குதல் சம்பவம் 44 பேர் இன்று நீதிமன்றில் ஆஜர்
03/06/2015 யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்ற கட்டடம் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 44 பேர் இன்று யாழ். நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்படவுள்ளனர்.
இதேவேளை பொலிஸ் காவலரண் மீதான தாக்குதல், யாழ். சிறைச்சாலை வாக னம் மீதான தாக்குதல், மற்றும் பொலி ஸ் உத்தியோகத்தர் மீதான தாக்குதல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 47 பேர் நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.
இவர்களில் முதலாவது சந்தேகநபரான யாழ். பல்கலைக்கழக கல்லூரி மாணவன் உட்பட 9 பேரின் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா சட்டத்தரணி எஸ். தேவராஜாவின் அனுசரணையுடன் ஆஜரானார். இதனைவிட ஏனைய சந்தேக நபர்களின் சார்பில் சட்டத்தரணிகளான எம்.ஏ. சுமந்திரன், திருமதி ஜோய் மகாதேவன், வி.ரி. சிவலிங்கம், வி. விஜயரட்ணம், எம்.பி. எம். மாஹீர், ஆகியோரும் ஆஜராகியிருந்தனர்.
இதேவேளை நாளை வியாழக்கிழமை யும் நீதிமன்றத் தாக்குதல் குற்றச் சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு ள்ள 33 பேர் நீதிமன்றில் ஆஜர்செய்யப் படவுள்ளமை குறிப்பிடத்தக்க தாகும். நன்றி வீரகேசரி
20 ஆவது சட்டமூலம் தொடர்பில் சிறுபான்மை இன சிறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆராய்வு
03/06/2015 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பாக சிறுபான்மை இன, சிறு அரசியல் கட்சிகளின் நேற்றைய சந்திப்பிலும் இறுதிமுடிவு எட்டப்படவில்லை.
இவ்வாறிருக்கையில் பல்வேறு சர்ச்சைகளுடன் இழுபறியில் இருக்கும் இத்திருத்தச்சட்டம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரைவில் இறுதி முடிவை வெளியிடுவார் என உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம் பெற்ற இச்சந்திப்பில் அமைச்சர் பழனி திகாம்பரம், கல்முனை மாநகர மேயரும் மு.கா.வின் பிரதி தவிசாளருமான நிஸாம் காரியப்பர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் வை.எல்.எஸ்.ஹமிட், ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவர் குமரகுருபரன் மற்றும் முரளிரகுநாதன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
20ஆவது திருத்தச்சட்ட மூலம் தொடர்பாக அமைச்சர் ஹக்கீம் மற்றும் ஹெல உறுமயவின் தலைவரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கும் இடையில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடு, அதன் பின்னர் ஹெல உறுமயவின் பிரதிநிதிகள் வெளியிடும் கருத்துக்கள், 20ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பாக இறுதியான முடிவு ஆகியவை தொடர்பாக கலந்துரையாடுவதற்கே இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும் குறித்த கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஜாதிக ஹெல உறுமய, ஜனநாயக மக்கள் காங்கிரஸ், ஈழமக்கள் ஜனநாயக கட்சி, நவசமசமாஜக்கட்சி உட்பட மேலும் சில கட்சிகள் பங்கேற்றிருக்கவில்லை. இதன் காரணத்தால் சட்டமூலம் தொடர்பாக இச்சந்திப்பின் போது இறுதிமுடிவெதுவும் எடுக்கப்படவில்லை.
இச்சந்திப்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறுகையில் இரட்டை வாக்குச் சீட்டை உள்வாங்கவேண்டும் என்ற கோரிக்கை மறுக்கப்படும் பட்சத்தில் அது பாரிய விளைவை சிறுபான்மையினருக்கு ஏற்படுத்திவிடும். அவ்வாறான ஒரு சட்டமூலம் கொண்டுவரப்படுமாயின் அது எமது அதிருப்திக்குரியதாகவே இருக்கும் என்றார்.
இந்நிலையில் எதிர்வரும் தினங்களில் மீண்டும் சிறுபான்மை சிறு அரசியல் கட்சிகள் கலந்துரையாடவிருப்பதாக தெரிய வருகின்றது.
முன்னதாக இறுதியாக நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது 20ஆவது திருத்தச்சட்ட மூலம் தொடர்பாக அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோரிடையே இரட்டை வாக்குச்சீட்டை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கடுமையான வாய்த்தர்க்கம் இடம்பெற்றிருந்தது.
அதனைத் தொடர்ந்து மு.கா தலைமை, பிரதி செயலாளர் ஆகியோரை மையமாக வைத்து ஜாதிக ஹெல உறுமய கடுந்தொனியில் கருத்துக்களை முன்வைத்ததுடன் இரட்டை வாக்குச்சீட்டை ஏற்கமுடியாது எனவும் குறிப்பிட்டிருந்தது.
மறுபுறத்தில் 20ஆவது திருத் தச்சட்டமூலம் தொடர்பாக ஜனாதிபதி தனது இறுதி முடிவை எடுப்பதற்காக கட்சிகளால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை ஆராய்வதற்காக குழுவொன்றை நியமித்திருந்தார். இந்நிலையில் வெகு விரைவில் குறித்த சட்ட மூலம் தொடர்பாக இறுதி முடிவை ஜனாதிபதி அறிவிப்பார் என அரச உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment