தமிழ் ஊக்குவிப்புப் போட்டி - சிவசுதன்

.
தமிழ் ஊக்குவிப்புப் போட்டி 2015 , விக்டோரிய மாநிலத்தில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளதுஇம்முறை தேசிய நிகழ்வுகளும் மெல்பேனில் நடைபெறவுள்ளனபோட்டி குறித்த மேலதிகவிபரங்களை கிழேயும்  www.tamilcompetition.org எனும் எம் இணையத்தளத்திலும்  காணமுடியும்விண்ணப்பப் படிவங்களை தமிழ் பாடசாலைகளுக்குடாக அல்லது தபால் மூலமாக சமர்ப்பிக்கலாம்.இப்போட்டி குறித்த தகவலை உங்கள் ஊடகத்தின் ஊடாக எம்மவர்களை சென்றடையச் செய்யுமாறு தயவுடன் கேட்டுகொள்கின்றோம்.


'
தமிழ் ஊக்குவிப்புப் போட்டி'...
-- கடந்த இருபது வருடங்களாக புலம்பெயர்ந்து வாழுகின்ற  தேசத்தில் தமிழ் ஊட்டலை    
  ஊக்குவிப்பதற்காய் நடாத்தப்படுகின்றது.  
-- மாநில மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் நடைபெறுகின்ற ஒரேயொரு தமிழ் போட்டி
-- பங்குபற்றுபவர் எல்லோர்க்கும் வெற்றிக்கிண்ணமும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.
-- மாணவர்கள் தமிழில் பேசுவதை, வாசிப்பதை மற்றும் எழுதுவதை ஊக்குவிப்பதோடு  
  தனிமனித ஆளுமை விருத்திக்கு களம் அமைத்துக்  கொடுக்கின்றது.
-- ஏழு வயதுப் பிரிவுகளில் அமைந்த கவிதை மனனம்வாய்மொழித்தொடர்பாடல்,
  எழுத்தறிவுபேச்சு போன்ற பல்வேறுபட்ட போட்டிகளை உள்ளடக்கியது
முதன்முறையாக தேசியப் போட்டிகள் இவ்வாண்டு விக்டோரியாவில் நடைபெறவுள்ளன.
விக்டோரிய மாநிலப் போட்டிகள்
01 August 2015 (Saturday)
09 August 2015 (Sunday)
15 August 2015 (Saturday)
விண்ணப்ப முடிவுத் திகதி  : 28/06/2015
தேசியப் போட்டி
 26 September 2015 (Saturday)

தேசிய மற்றும் விக்டோரிய மாநில பரிசளிப்பு விழா 27 September 2015 (Sunday)



விண்ணப்பப் படிவங்களை தமிழ் பாடசாலைகளுக்குடாக அல்லது தபால் மூலமாக (PO Box 313,  Webb Street, Narre Warren, VIC 3805) சமர்ப்பிக்கலாம்.

நன்றி

சிவசுதன்
--
தமிழ் ஊக்குவிப்பு போட்டி குழு விக்டோரியா
ஆஸ்திரேலிய பட்டதாரிகள் தமிழர் சங்கம்
PO Box 313,  Webb Street, Narre Warren, VIC 3805.
TP:  03 9449 7887 , 0403 474 145, 0470 689 158, 0429 120 973, 0403 215 723
தமிழ்ப் பணியில் இருபத்தொரு வருடங்கள் - புலம்பெயர் தேசத்தில் தமிழ் ஊட்டலை ஊக்குவிப்போம்'

No comments: