விழுதல் என்பது எழுகையே" - பகுதி 36 ச.நித்தியானந்தன் ,இலங்கை

.
எழுத்தாளர் அறிமுகம் 


பெயர் சகாதேவன் நித்தியானந்தன் 
ஆரம்பக் கல்வி பண்ணாகம் மெய்கண்டான் மகாவித்தியாலயம்
உயர்கல்வி யாழப்பாணம் இந்துக்கல்லூரி 
அரசபணி பதவி நிலை உத்தியோகத்தர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 
கலைப்பணி 
சுமார் பத்துக்கு உட்பட்ட நாடகங்கள் எழுதி நடித்தமை
சொந்தப்பெயரிலும்
நாரதன்
அங்குசன்
சனீஸ்வரன்
என்ற புனை பெயர்களிலும் கவிதைகள் யாழ் உதயன் சஞ்சீவி மித்திரன் போன்ற அச்சு ஊடகங்களிலும்
இணையத்தில் கவிதைகள்இகதை
பண்ணாகம்.கொம் அக்கினிக்குஞ்சு.கொம் பதிவு.கொம் சங்கதி-   தமிழ் மிறர்- இனிஒரு- சரிதம் – தமிழ்வின் – காலச்சுவடு- தமிழ் சி.என. என் -அருவி போன்றவற்றிலும் வெளியாகியிருக்கின்றன.

தகவல்த் தொகுப்பு
பண்ணாகம் திரு.இக.கிருட்ணமூர்த்தி
திரு.எலையா முருகதாசன்
தமிழ் எழுத்தாளர் இணைய அகம் -யேர்மனி

கதை பகுதி 36  தொடர்கிறது
வீழ்ந்துவிட்டோம் என்று நீ நினைக்காதே
வெட்டினாலும் வாழை முளைக்கும் மறக்காதே
தாழ்ந்துவிட்டோம் என்று நீ கலங்காதே
நம்பிக்கைதான் வாழ்க்கை அது மறக்காதே
சீலனின் மனம் அங்கலாய்த்தது. 
தொலைபேசி அழைப்பு மணி அடித்து ஓய்ந்தது. தொடர்ந்து முயற்சி செய்கிறார்கள் ஒரு தரம், இரண்டு தரம் இல்லை மணி அடிக்கிறது யாரும் எடுக்கவில்லை 
என்ன வாழ்க்கையடா சாமி.
வாழ்க்கையென்றால் சில சோதனைகள் வேதனைகள் இருக்கத்தான் செய்யும் சோதனையே வாழ்க்கை என்றால் 


சீலனின் மனம் பிதற்றிக் கொண்டேயிருந்தது
கலா,
அம்மா,
தங்கை,
தவம் ,
டேவிட் அங்கிள் ,
பானு,
விறுமாண்டி
சிவம் 
எல்லோரும் தட்டாமாலையாக மனதில் சுழன்று கொண்டிருந்தார்கள்.  
சாந்தன் தொலைபேசியில் மீண்டும் மீண்டும் முயன்று கொண்டிருந்தான். பலனில்லை என்பது தெரிந்தது.
அம்மா என்ன செய்கிறாளோ தெரியவில்லை.
தொலைபேசி பணம் உடுப்புகள் எல்லாம் இழந்து சொந்தப் பேரிழந்து இப்போது மாரிமுத்து என்ற பேருடன்
”சீலன் என்ரை குஞ்சு” அம்மா கூப்பிடுவது காதில் ஒலித்தது.
 ”சீல்” என்றுதான் கலாவும் ஆசை வந்தால் அழைப்பாள்.
நாங்கள் ஊரிழந்தவர்கள், உறவிழந்தவர்கள், நாடிழந்தவர்கள், நாதியிழந்தவர்கள்
இப்போது பேரிழந்தவர்கள் 
இந்தாடா மச்சான் டேவிட் அங்கிளிடம் எல்லா விசயமும் சொல்லிப்போட்டன்
அவரோடை கதை சாந்தன் தொலைபேசியை தருகிறான்
”அங்கிள்” குரல் தளு தளுக்கிறது. கண்கள் கண்ணீரைச் சொரிகின்றன. வாய் புலம்புகின்றது.
மறுமுனையில் அங்கிள்
எடேயப்பா சீலன் ஒண்டுக்கும் கவலைப்படாதை நான் சாந்தனிடம் எல்லாம் சொல்லிப்போட்டன் இப்ப மணிகிராமில் இரண்டாயிரம் அனுப்பிவிடுகிறன் போனொன்டும் வாங்கி உடுப்புகள் சாமான்களும் வாங்குடா தம்பி. நடந்ததை நினைச்சு கலங்காதை
இனி உனக்கு புது வாழக்கை பழைய எல்லாம் போகட்டும். சாந்தனிடம் கதைத்திருக்கிறன் அவன் மூலமா ஒரு வேலைக்கும் தங்கிற இடம் ஒன்றுக்கும் ஏற்பாடு பண்ணிறன். நீ வேலை செய் மக்னொடால்ஸசுக்கு போறன் உன்ரை அரியர்ஸ் சம்பளங்களை வேண்டி அனுப்பிறன்.
” அங்கிள் அம்மா...”
கவலைப்படாதை தம்பி வெள்ளவத்தை இராமகிருஸ்;ண மிசன் மனேஜர் என்ரை வேண்டப்பட்டவர்தான். அவரிட்டை தொடர்பு கொண்டு உன்ரை அம்மாவின் போன் நம்பர் வேண்டி தாறன். எல்லாம் சாந்தனிட்டை கதைச்சிருக்கிறன். இரண்டு நாளிலை நான் உம்மை வந்து சந்திக்கிறன். போன் வாங்கின உடனை போன் பண்ணும் என்ன தேவை என்டாலும் என்னட்டை சொல்லும்
”..........................”
”என்ன சீலன் என்ன சொல்லும்”
அங்கிள் என்ரை பேர் இப்ப மாரிமுத்து இப்ப.... நான்.... பேரிழந்தவன்.....
எடேய் சீலன் இங்கை யார்தான் சொந்தப் பேரிலை நிற்கினம் உதெல்லாம் ஒரு விசயமே இல்லை. கவலைப்படாதை தம்பி நாங்கள் இருக்கிறம் முதல் உன்ரை சாமான்களை நீயிருந்த சிவத்தின் வீட்டை போய் எடுக்க முடியுமோ என்று பார்க்கிறன். அவன் சிவம் ஊரறிஞ்ச கள்ளன் அவனிட்டை சீட்டு கட்டிறன் எண்டு சொல்லியிருந்தா நான் கட்ட விட்டிருக்கமாட்டன்.
சரி தம்பி உன்னை நான் குழப்ப விரும்பவில்லை இப்ப சாந்தனிடம் காசை வாங்கு சாந்தன் சொல்லிற இடத்திலை தற்காலிகமாக தங்கியிரு. உன்ரை வேலைக்கும் அவனிட்டை சொல்லியிருக்கு அவன் பாத்துக்கொள்வான் பிறகு போன் பண்ணு தம்பி வைக்கிறன்.
வைத்துவிட்டார்
அதன் பின் சாந்தன் தன் பணமும் சேர்த்து 3000 பிராங்காக கொடுத்ததும் அதன்பின் தற்காலிக ரூம் ஒன்று எடுத்து சாந்தன் மூலமாக அதில் தங்கவைக்கப்பட்டதும். புதிய ஆடைகள் போன் என்பன வாங்கியது விரைவாக நடந்தேறியது.
சாந்தன் ஆறுதல் கூறிவிட்டு போய்விட்டான். புது போன் சிம் அக்டிவேட் ஆக 3 மணி நேரம் செல்லும் என்பதால் யாருடனும் தொடர்பு கொள்ள முடியாது. அறையில் பேசாமல் படுக்கும்படிnயும் வெளியில் வீணாக தரிய வேண்டாம் என்றும் சாந்தன் அறிவுறுத்தலுக்கேற்ப கட்டிலில் சரிகிறேன் மாரிமுத்து என்கிற சீலன்.
அம்மா இப்ப என்ன செய்வா...? எனது போன் நம்பருக்கு முயன்று அது வேலை செய்யாமல் போக சிவம் வீட்டு பொது தொலைபேசிக்கு முயன்று நடந்ததை அறிந்திருப்பாவோ அல்லது சிவம் வீடு பொலிசாரின் கட்டுப்பாட்டில்தான் இருக்குமோ.
ஒரு வேளை சிவம் செத்திருந்தால்
சுவிசிற்கு வந்து கொலைக் குற்றம் வேறா. ஏசியிலும் பொல பொல என்று வேர்த்தது.
மனம் அழுதது
இரண்டு மூன்று வேலை செய்து வாயைக்கட்டி வயிற்றைக் கட்டி சிவத்திடம் சீட்டுக்காசு இருபதாயிரம் பிராங்குகளுக்கு மேல் கட்டியிருப்பான்.
எல்லாம் கனிந்து வரும்போல இருக்கும் போது பேரிடி போல எல்லாமே முடிந்துவிட்டது
தவம் அண்ணை கூறியது ஞாபகம் வந்தது
இங்கை யாரையும் நம்பாதையும் சீலன்
முக்கியமா இலங்கைத்தமிழரை நம்பாதையும். பெரிய கள்ளர் உவங்கள்தான்.
சிவத்திற்கும் முற்பிறப்புக்கடனோ என மனம் அங்கலாய்த்தது.
தூக்கம் பாதி துக்கம் பாதி ஏக்கம் மீதியாக சீலன் என்கிற மாரிமுத்துவிற்கு மனம் அங்கலாயத்துக் கொண்டிருந்தது. தூக்கம் வரவில்லை
புரண்டு புரண்டு படுக்கிறான்.
அழுதழுது கண்ணீரும் வற்றிவிட்டது.
” அம்மா வெள்ளவத்தை பெனான்டோ வீதியில் பிச்சை எடுக்கிறாள்”
” தவம் அங்கிள் சிவத்தை குத்திக் கொல்கிறார்”
”முரளி கலாவின் கழுத்தில் தாலி கட்டுகிறான்” 
திடுக்கிட்டு விழிக்கிறான் சீலன் 
எல்லாம் கனவு
தொடரும் பகுதி 37

No comments: