அழு -கவிதை - நோர்வே நக்கீரா

.


அம்மா!!! 
நான் பிறந்தபோது அழுதாய்
நானும் அழுதேன்
தடவிக்கொடுத்து தாய்மை தந்தாய்

நாம் அழுதபோது
அனைவரும் ஆர்ப்பரித்தனர்
ஒருவரின் துன்பத்தில் தானே
இன்னொருவர் இன்பம்.
ஒராயிரம் ஏழைகளின் கண்ணீரில்தாணே
ஒரு பணக்காரன் சிரிக்கிறான்

இன்று மூச்சை விட்டு
அழுகையை நிறுத்தினாய்
மூச்சையாகியும்
அழுதுகொண்டே இருக்கின்றேன்.
அனைவரும் அழுகின்றனர் 
உன்னைத்தவிர

அழுகையை நிறுத்தியது
நான் காலம்பூராக அழுவதற்கா?
என்னை அழுவதற்குப் பழக்கிவிட்டு
நீமட்டும் நின்மதியாகத் து}ங்கிவிட்டாயே
எப்படி சுயநலக்காரியானாய் தாயே.

நோர்வே நக்கீரா 19.11.2014

No comments: