உலகச் செய்திகள்


கடத்தப்பட்ட 200 பாடசாலை சிறுமிகளும் போராளிக் குழு உறுப்பினர்களுக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டுள்ளனர் : போகோ ஹராம்

சிரியாவில் பாடசாலை மீது ஷெல் தாக்குதல் : 13 சிறுவர்கள் பலி

ஐரோப்பாவிற்கு சட்டவிரோத படகு பயணம் : கடலில் மூழ்கி 24 குடியேற்றவாசிகள் பலி
----------------------------------------------------------------------------------------------
கடத்தப்பட்ட 200 பாடசாலை சிறுமிகளும் போராளிக் குழு உறுப்பினர்களுக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டுள்ளனர் : போகோ ஹராம்

03/11/2014  நைஜீ­ரி­யாவில் போகோ ஹராம் போரா­ளிக்­கு­ழுவால் கடத்­தப்­பட்ட 200க்கு மேற்­பட்ட சிறு­மி­களை தமது போரா­ளிக்­குழு உறுப்­பி­னர்­க­ளுக்கு அந்­தக்­ குழு திரு­மணம் செய்து வைத்­துள்­ள­தாக மேற்­படி குழுவின் தலைவர் என தன்­னைத்­தானே உரிமை கோரும் நபர் ஒருவர் தெரி­வித்­துள்ளார்.




அபூ­பக்கர் ஷிகாயு என்ற அந் நபர் தெரிவிக்கையில், கடந்த ஏப்ரல் மாதம் வட­கி­ழக்கு சிபொக் நக­ரி­லி­ருந்து கடத்­தப்­பட்ட 219 சிறு­மி­களும் தற்­போது தமது கண­வர்­மாரின் வீடு­க­ளி­லுள்­ள­தாக கூறினார்.

''அவர்கள் அனை­வரும் இஸ்­லா­மிய மதத்­துக்கு மத­மாற்­றப்­பட்­டுள்­ள­துடன் புனித குர்ஆன் நூலின் இரு அத்­தி­யா­யங்­க­ளையும் மனனம் செய்­துள்­ளனர்'' என அவர் தெரி­வித்தார்.
''நாங்கள் அவர்­க­ளுக்கு திரு­மணம் செய்து வைத்­துள்ளோம். அவர்கள் புகுந்த வீடு­களில் தற்­போது உள்­ளனர். 200 சிபொக் பாட­சாலை மாண­வி­களும் மத­மாற்­றப்­பட்­டதை நீங்கள் அறி­ய­வில்­லையா?'' என அவர் வின­வினார்.
சனிக்­கி­ழமை வெளி­யி­டப்­பட்ட புதிய வீடியோ காட்­சி­யி­லேயே அபூ­பக்கர் ஷிகாயு இவ்­வாறு தெரி­வித்­துள்ளார். அபூ­பக்கர் ஷிகாயு என்ற மேற்­படி போரா­ளிக்­குழு தலை­வரை தாம் ஒரு வரு­டத்­திற்கு முன் கொன்­றதாக நைஜீ­ரிய இரா­ணுவம் தெரி­வித்­தி­ருந்த நிலை­யி­லேயே அவ­ரது இந்­தப் ­பு­திய வீடியோ காட்சி வெளி­யா­கி­யுள்­ளது.

போகோ ஹராம் போரா­ளி­க­ளுடன் போர் நிறுத்த உடன்­ப­டிக்­கை­யொன்றை மேற்­கொண்­டுள்­ள­தாக நைஜீ­ரிய அர­சாங்கம் அண்­மையில் அறி­வித்த நிலையில் அதனை அந்தப் போராளிக்குழு நிராகரித்துள்ளதுடன் வன்முறை தாக்குதல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது. நன்றி வீரகேசரி 





சிரியாவில் பாடசாலை மீது ஷெல் தாக்குதல் : 13 சிறுவர்கள் பலி

06/11/2014  வட கிழக்கு சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள கபன் பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட ஷெல் தாக்குதலில் 13 சிறுவர்கள் பலியானதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்துள்ளவர்களின் பலரின் நிலைமை கவலைக் கிடமாகவுள்ளதால் பலியானவர்கள் தொகையில் மேலும் அதிகரிப்பு ஏற்படலாம் என அஞ்சப்படுவதாக சிரிய மனித உரிமைகள் அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
மேற்படி தாக்குதலுக்கு சிரிய ஜனாதிபதி பஷார் அல் அஸாத்துக்கு விசுவாசமான படைகளே காரணம் என அந்நாட்டு செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
மேற்படி தாக்குதலின் போது ஷெல்கள் பாடசாலையொன்றின் மீது விழுந்து வெடித்ததாக அந்நாட்டின் செயற்பாட்டாளர்களின் வலைப் பின்னலான சிரிய புரட்சி பொது  ஆணையகம் தெரிவித்தது. 
கபன் பிரதேசத்திலுள்ள கிளர்ச்சியாளர்களும் இராணுவமும் இந்த வருட ஆரம்பத்தில் உடன்படிக்கையொன்றை எட்டிய போதும் வன்முறைகள் இடம்பெறுவது தொடர்வதாக கூறப்படுகிறது.
சிரியாவில் மக்கள் எழுச்சி ஆரம்பமானது முதற்கொண்டு இதுவரை சுமார் 190,000 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.        நன்றி வீரகேசரி 










ஐரோப்பாவிற்கு சட்டவிரோத படகு பயணம் : கடலில் மூழ்கி 24 குடியேற்றவாசிகள் பலி



04/11/2014   ஐரோப்­பிய ஒன்­றி­யத்­துக்கு சட்டவிரோத படகுப் பய­ணத்தை மேற்­கொண்ட 40 க்கு மேற்­பட்ட குடி­யேற்றவாசிகள் 24 பேர் திங்­கட்­கி­ழமை கடலில் மூழ்­கி­ உயிரிழந்துள்ளனர்.
துருக்­கிய இஸ்தான்புல்­லுக்கு அப்பால் கருங்­க­டலில் அவர்கள் பய­ணித்த படகு மூழ்­கி­யுள்­ளது.
அவர்கள் பொஸ்­போரஸ் நீரி­ணை­யூ­டாக ரோமா­னி­யா­வுக்கு பய­ணித்­த­தாக கூறப்­ப­டு­கி­றது.
அந்தப் படகில் பய­ணித்­த­வர்கள் ஆப்­கானைச் சேர்ந்­த­வர்கள் எனவும் அவர்கள் ஆட்கடத்­தலில் ஈடு­ப­டு­ப­வர்­க­ளுக்கு பல்­லா­யி­ரக்­க­ணக்­கான யூரோ பணத்தை கட்­ட­ண­மாகசெலுத்தி இந்தப் படகுப் பய­ணத்தை மேற்­கொண்­டி­ருந்­த­தாகவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
அந்த சட்­ட­வி­ரோத குடி­யேற்றவாசி­களில் 7 பேர் மீட்­கப்­பட்­டுள்­ள­னர்.
மேற்படி படகுப் பயணத்தை மேற்கொண்டவர்களில் 12 சிறுவர்களும் பெண்களும் உள்ளடங்குகின்றனர்.        நன்றி வீரகேசரி 


No comments: