இலங்கை மாணவர் கல்வி நிதியம் 25 ஆவது ஆண்டுப்பொதுக்கூட்டம் 16.11.14

.
                          

இலங்கையில்   நீடித்த போரினால்  பெற்றவர்களையும்  குடும்பத்தின்  மூல உழைப்பாளிகளையும்   இழந்த  ஏழைத்தமிழ்  மாணவர்களுக்கு அவுஸ்திரேலியாவிலிருந்து   நீண்டகாலமாக  உதவிவரும்  இலங்கை மாணவர்   கல்வி  நிதியத்தின்  25  ஆவது   ஆண்டுப்பொதுக்கூட்டமும்  தகவல்   அமர்வு  மற்றும்   நிதிய  உறுப்பினர்   ஒன்றுகூடலும்   எதிர்வரும் 16-11-2014  ஆம்   திகதி  ஞாயிற்றுக்கிழமை  மாலை  5 மணிக்கு மெல்பனில் Vermont  South  Community  House  (Karobran  Drive, Vermont South – Victoria 3133)   மண்டபத்தில்  நடைபெறும்.
நிதியத்தின்  நடப்பாண்டு  தலைவர்  திருமதி  அருண்.விஜயராணியின்  தலைமையில்  நடைபெறவுள்ள  25  ஆவது  ஆண்டுப்பொதுக்கூட்டத்தில்
24   ஆவது  ஆண்டுப்பொதுக்கூட்ட  குறிப்புகள்   2013 – 2014   ஆண்டறிக்கை – நிதியறிக்கை   என்பன   சமர்ப்பிக்கப்படும்.   அதனைத்தொடர்ந்து   2014 – 2016 காலப்பகுதிக்கான    புதிய  பரிபாலன  சபை   தெரிவு செய்யப்படும்.
கல்வி நிதியத்தின்  உறுப்பினர்கள் -  பாதிக்கப்பட்ட   மாணவர்களுக்கு உதவவிரும்பும்   அன்பர்கள்    கல்வி    நிதியத்தின்   25   ஆவது ஆண்டுப்பொதுக்கூட்டத்தில்   கலந்துகொள்ளுமாறு   அன்புடன்  அழைக்கப்படுகின்றனர்.
மேலதிக   விபரங்களுக்கு:   
திருமதி அருண்விஜயராணி -  தலைவர்        (  03) 9499 7176
திரு. எஸ்.கொர்ணேலியஸ்  -  (செயலாளர்)      0425 728839  
திருமதி  வித்தியா  ஸ்ரீஸ்கந்தராஜா - ( நிதிச்செயலாளர்)   0404 808 250
திரு.லெ. முருகபூபதி  -  (துணை நிதிச்செயலாளர்)       0416 625 766
----0---






No comments: