.
இலங்கையில் நீடித்த போரினால் பெற்றவர்களையும் குடும்பத்தின் மூல உழைப்பாளிகளையும் இழந்த ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு அவுஸ்திரேலியாவிலிருந்து நீண்டகாலமாக
உதவிவரும் இலங்கை மாணவர்
கல்வி நிதியத்தின் 25 ஆவது ஆண்டுப்பொதுக்கூட்டமும் தகவல்
அமர்வு மற்றும் நிதிய உறுப்பினர்
ஒன்றுகூடலும் எதிர்வரும் 16-11-2014 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
மாலை
5 மணிக்கு மெல்பனில் Vermont South
Community House (Karobran
Drive, Vermont South – Victoria 3133)
மண்டபத்தில் நடைபெறும்.
நிதியத்தின் நடப்பாண்டு தலைவர் திருமதி அருண்.விஜயராணியின் தலைமையில் நடைபெறவுள்ள 25 ஆவது
ஆண்டுப்பொதுக்கூட்டத்தில்
24 ஆவது ஆண்டுப்பொதுக்கூட்ட
குறிப்புகள் 2013 –
2014 ஆண்டறிக்கை – நிதியறிக்கை என்பன
சமர்ப்பிக்கப்படும். அதனைத்தொடர்ந்து 2014
– 2016 காலப்பகுதிக்கான புதிய பரிபாலன சபை தெரிவு
செய்யப்படும்.
கல்வி நிதியத்தின் உறுப்பினர்கள் - பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவவிரும்பும் அன்பர்கள் கல்வி நிதியத்தின் 25 ஆவது ஆண்டுப்பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன்
அழைக்கப்படுகின்றனர்.
மேலதிக விபரங்களுக்கு:
திருமதி
அருண்விஜயராணி - தலைவர் ( 03) 9499 7176
திரு.
எஸ்.கொர்ணேலியஸ் - (செயலாளர்)
0425 728839
திருமதி
வித்தியா ஸ்ரீஸ்கந்தராஜா - ( நிதிச்செயலாளர்) 0404
808 250
திரு.லெ.
முருகபூபதி - (துணை நிதிச்செயலாளர்) 0416
625 766
----0---
No comments:
Post a Comment