என் காத்திருப்பு உனக்கானதே..!

.

ஒவ்வொரு இரவும் பகலும்
உன் நினைவோடு வாழ்கிறேன்
உனது காதல் உனது ஸ்பரிசம்
உன் அரவணைப்பு ஒன்றிற்காகவே
தனிமையில் ஏங்கும்
ஒருத்தியாகவே வாழ்கின்றேன்
உன்னோடு என் முதல் சந்திப்பில்
என் விருப்பத்தை தெரிவித்தபோது
ஏனோ தெரியவில்லை
என்னை வெறுத்து ஒதுக்கினாய்
என் காத்திருப்பு உனக்கானதே
என்று உருகி நின்றேன்
என் மரணம் வரை உனக்காக
காத்திருப்பாயா என்றாய்
உனக்காக காத்திருப்பதை விட
என் மரணம் எனக்கு சுமையானதல்ல
உனக்காக ஏங்கித் தொலைக்கும்
குழந்தையுள்ளம் கொண்டதே எனதுள்ளம்


நீ மட்டும் என் வாழ்வில்
இல்லையென்றால்
தினம் தினம் என் இதயம்
இரத்தக் கண்ணீர் சிந்தும்
ஒன்று மட்டும் உனக்காக கூறுகிறேன்
தப்புக்கணக்கு எனக்குள் ஏனென்று
நீ என்னை பார்த்து ஏளனம் செய்யலாம்
என் காதல் நிரந்தரமில்லை
என்றும் கூறலாம்
நான் உன்னையே நேசிக்கிறேன்
உன்னைப் மறக்கப் போவதில்லை
என் காதல் நினைவுப் பயணம்
அர்த்தமில்லாதது என்றும்
நீ நினைக்கலாம்
உன்னை யாசிக்கும் எனக்குள்
என் மூச்சுக் காற்றோடு மட்டுமே
உன் உரசல்கள் இருக்க வேண்டும்
என்ற எண்ணத்தின்
அர்த்தமுள்ள என் பயணத்தில்
நாளை என்னைத் தேடி வருவாய் - என்ற
அந்த நம்பிகையோடு தான்
என் வாழ்கை தொடருகிறது
அது என் தப்புக் கணக்கல்ல
நிதானமான கணக்கு
ஒருவேளை நான் விரும்பாத காதலில்
உனக்கேனடி இந்த தப்புக்கணக்கென்று
என்று மீண்டும் மீண்டும் நீ கேட்கலாம்
நாளை என் இறுதி மூச்சு காற்றோடு கலந்தாலும்
உன் நினைவுகளோடு வாழ்ந்து விட்டேன்
என்ற திருப்தி எனக்குள் இருக்கும்
அது கூட கைகூடாது - என்ற
நினைவுகள் உனக்குள் இருந்தால்
மறு ஜென்மத்திலும் உன்னையே தொடருவேன்
என்ற நம்பிக்கையை சுமக்கிறேன்
nantri :lankasripoems

No comments: