இலங்கைச் செய்திகள்


பொது பல சேனாவிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் தொடர்பு: அமெரிக்கா

யாழ். ஊடகவியலாளர்களிடம் மூன்று மணிநேரம் பொலிஸார் விசாரணை

பாப்பாண்டவரின் இலங்கை விஜயம் : திகதியை உறுதிசெய்தது வத்திக்கான்

இலங்கை அகதிகளை ஆஸி.க்கு அனுப்பிய இருவர் கைது

இலங்கை அகதிகள் கடலில் தடுத்து வைக்கப்பட்டமை சரியானதே

யுத்தத்தின் பின்னர் வடக்குப் பகுதியில் பௌத்த வழிபாட்டுத்தலங்கள் அதிகரிப்பு




==============================================

பொது பல சேனாவிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் தொடர்பு: அமெரிக்கா


29/07/2014 பொது பல சேனாவிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் தொடர்பிருப்பதாக இருப்பதாக அமெரிக்காவின் 2013 மத சுதந்திரம் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுபல சேனா தொடர்ந்தும் இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வெளிவிவகார அமைச்சரினால் நேற்று வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் ஏனைய பௌத்த தேசியவாத குழுக்களினால் மேற்கொள்ளப்படும் வன்முறை நடவடிக்கைகளுக்கு பின்னால் பொது பல சேனாவே இருப்பதாக பல தகவல்கள் தெரிவிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசாங்கம் மத சுதந்திரத்தை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டாலும் நடைமுறையில் சில பிரச்சினைகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத தொடர்புகளை அடிப்படையாக வைத்து சமூக துஸ் பிரயோகங்களும் பாராபட்சங்களும் காணப்படுவதாகவும், மத சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
நன்றி வீரகேசரி









யாழ். ஊடகவியலாளர்களிடம் மூன்று மணிநேரம் பொலிஸார் விசாரணை

29/07/2014  யாழ்.குடா­நாட்டைச் சேர்ந்த மூன்று ஊட­க­வி­ய­லா­ளர்­கள் மூன்று மணி நேரமாக இன்று செவ்வாய்க்கிழமை ஓமந்தை பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த வெள்­ளிக்­கி­ழமை ஓமந்தை சோதனைச் சாவ­டியில் வழி­ம­றிக்­கப்­பட்டு பொலிஸ் விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தப்­பட்ட ஏழு ஊட­க­விய லாளர்­களில் 3 பேரிடமே விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த சனிக்­கி­ழமை கொழும்பில் நடை­பெ­ற­வி­ருந்த ஊட­க­வி­ய­லா­ளர்க ளுக்­கான பாது­காப்­பாக அறிக்­கை­யிடல் என்ற பயிற்சிப் பட்­ட­றைக்­காக யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து 16 ஊட­க­வி­ய­லா­ளர்கள் இரு வாக­னங்­களில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை இரவு பய­ண­மா­னார்கள். இதில் ஒரு வாக­னத்தில் பய­ணித்த ஏழு ஊட­க­வி­ய­லா­ளர்கள் மாங்­கு­ளத்தில் இடை ­ம­றிக்­கப்­பட்டு சோத ­னை­யி­டப்­பட்ட பின்னர் மீண்டும் ஓமந்தைச் சோத னைச் சாவ­டியில் மறிக்­கப்­பட்டு வாக னம் சோத­னை­யி­டப்­பட்­டது. அப்­போது அவர்­களின் வாக­னத்தில் கஞ்சா இருந்­த­தாகக் குற்றம் சாட்­டப்­பட்டு பொலி­ஸா­ரினால் ஓமந்தை பொலிஸ் நிலை­யத்­திற்கு அழைத்துச் செல்­லப்­பட்­டனர்.
ஊடகப் பயிற்­சிக்­காகச் செல்லும் தம்மை பொலிஸார் இடை­ம­றித்து பொய்க்­குற்றச் சாட்டை சுமத்­து­வ­தாகத் தெரி­வித்து ஊட­க­வி­ய­லா­ளர்கள் ஏழு பேரும் வீதியில் அமர்ந்து ஆர்ப்­பாட்டம் செய்­தனர்.
இத­னை­ய­டுத்து ஊட­க­வி­ய­லா­ளர்கள் விடு­விக்­கப்­பட்­ட­துடன்இ வாகனச் சாரதி மட்டும் பொலிஸ் நிலை­யத்தில் தடுத்து வைக்­கப்­பட்டார். இதன் பின்னர் கொழும்­பி­லி­ருந்து நேற்­று­முன்­தினம் யாழ்ப்பாணம் திரும்பிய குறித்த ஏழு ஊடகவியலாளர்களில் மூன்று பேருக்கு இன்று ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக வருமாறு தொலைபேசி மூலம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இன்று பகல் 11 மணிக்கு வருகை தந்த ஊடகவியலாளர்கள் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் உட்பட்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் மதியம் 2 மணிவரை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
நன்றி வீரகேசரி












பாப்பாண்டவரின் இலங்கை விஜயம் : திகதியை உறுதிசெய்தது வத்திக்கான்

29/07/2014   இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸிற்கான விஜயத்தை பாப்பாண்டவர் பிரான்சிஸ், எதிர்வரும் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12 திகதி முதல் 19ஆம் திகதி வரையில் மேற்கொளவார் என வத்திக்கான் உறுதிப்படுத்தியுள்ளது.
பாப்பாண்டவரின் இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸிற்கான விஜயம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்போது அவர், பிலிப்பைன்ஸில் சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது வத்திக்கான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பாப்பாண்டவர் இலங்கையில் 12ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை விஜயத்தில் ஈடுபடுவார் எனவும் அதன் பின்னர் பிலிப்பைன்ஸிற்கான விஜயத்தை மேற்கொள்வார் எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி வீரகேசரி










இலங்கை அகதிகளை ஆஸி.க்கு அனுப்பிய இருவர் கைது

28/07/2014   இலங்கைப் புக­லிடக் கோரிக்­கை­யா­ளர்­களை அவுஸ்­தி­ரே­லி­யா­விற்கு கடத்­திய சந்­தே­கத்தின் பேரில் இருவர் இந்­தி­யாவில் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.
புதுச்­சேரி பொலிஸ் சீ.பி.-சீ.ஐ.டி. பிரி­வினர் குறித்த இரண்டு பேரையும் கைது செய்­துள்­ளனர். புதுச்­சே­ரி­யி­லி­ருந்து படகு மூலம் இலங்கைப் புக­லிடக் கோரிக்­கை­யா­ளர்கள் அழைத்துச் செல்­லப்­பட்­ட­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
இவ்­வாறு 157 இலங்கைப் புக­லிடக் கோரிக்­கை­யா­ளர்­களை படகு மூலம் அழைத்துச் செல்ல நட­வ­டிக்கை எடுத்­த­வர்­களே கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.
குருஞ்­சிப்­பாக்­கத்தைச் சேர்ந்த ராஜீ மற்றும் வாம்­பாகீர் பாளை­யத்தைச் சேர்ந்த மான்­ஜினி ஆகி­யோரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.
கைது செய்­யப்­பட்ட இரு­வரும் படகு உரி­மை­யா­ளர்கள் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
நன்றி வீரகேசரி










இலங்கை அகதிகள் கடலில் தடுத்து வைக்கப்பட்டமை சரியானதே

28/07/2014   இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா சென்ற இலங்கை அகதிகளை கடலில் தடுத்து வைக்கப்பட்டமை சரியானதே என அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட் தெரிவித்துள்ளார்.
அண்மையில் அவுஸ்திரேலியா நோக்கிப் பயணித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் 157 பேரை, அந்நாட்டு அதிகாரிகள் கடலிலேயே தடுத்து வைத்திருந்தனர்.
சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுப்பதற்கு அரசாங்கம் தொடர்ச்சியாக நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச சட்டங்களின் அடிப்படையிலேயே சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கடல் பாதுகாப்பு விதிகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்கும் ஒவ்வொரு படகும் சர்வதேச ஆட்கடத்தல்காரர்களை ஊக்குவிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்கும் எந்தவொரு நபருக்கும் நிரந்தர குடியுரிமை வழங்கப்படாது என அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி வீரகேசரி











யுத்தத்தின் பின்னர் வடக்குப் பகுதியில் பௌத்த வழிபாட்டுத்தலங்கள் அதிகரிப்பு

30/07/2014  27 வருட கால யுத்­தத்தின் பின்னர் வடக்கில் பௌத்த வழி­பாட்டு தலங்­களை படை­யினர் தொடர்ச்­சி­யாக அமைத்­து­வ­ரு­கின்­றனர். யாழ்ப்­பாணம் மற்றும் கிளி­நொச்­சியில் அமைக்­கப்­பட்­டுள்ள பௌத்த மத வழி­பாட்டுத் தலங்­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது என்று அமெ­ரிக்கா தெரி­வித்­துள்­ளது.
பொது­ப­ல­சேனா அமைப்­புக்கும் அர­சாங்­கத்­துக்கும் இடையில் மிகவும் வலு­வான தொடர்­புகள் இருப்­பதை உள்ளூர் ஊட­கங்­களும் அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களும் அவ­தா­னித்­துள்­ளன.
மேலும் இலங்­கையில் கடந்­த­ வ­ருடம் ஆல­யங்கள் மற்றும் பள்­ளி­வா­சல்கள் மீதான தாக்­கு­தல்கள் அதி­க­ரித்­துள்­ளன என்றும் அமெ­ரிக்கா தெரி­வித்­துள்­ளது.
கடும்­போக்­கு­வாத அமைப்­புக்கள் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­கின்ற வன்­மு­றை­களின் பின்­ன­ணியில் பொது­ப­ல­சே­னாவின் அலை­களே உள்­ளன என்றும் அமெ­ரிக்கா குறிப்­பிட்­டுள்­ளது.
அமெ­ரிக்­கா­வினால் நேற்று முன்­தினம் வெளி­யி­டப்­பட்ட உலக மத சுதந்­திரம் தொடர்­பான வரு­டாந்த அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
அமெ­ரிக்க இரா­ஜாங்க செய­லாளர் ஜோன் கெரி­யினால் உலக மத சுதந்­திரம் குறித்த அறிக்கை வெளி­யி­டப்­பட்­டது. மேற்­படி வரு­டாந்த அறிக்­கையில் 9 பக்­கங்­களில் இலங்கை தொடர்பில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது ;
நடை­மு­றையில் தோல்வி
இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பு மற்றும் சட்­டங்­களின் ஊடாக உத்­தி­யோ­க­பூர்­வ­மாக மத சுதந்­திரம் பாது­காக்­கப்­பட்­டாலும் நடை­மு­றையில் உள்ளூர் அதி­கா­ரிகள் மத வன்­மு­றை­களை தடுப்­பதில் தோல்­வி­கண்­டுள்­ளனர். குறிப்­பாக மத சிறு­பான்­மை­யி­னத்­த­வர்கள் மீது தாக்­குதல் நடத்­தப்­படும் சம்­ப­வங்கள் மற்றும் குற்­ற­வா­ளிகள் சட்­ட­ததின் முன் நிறுத்­தப்­ப­டாமை என்­ப­வற்றை குறிப்­பி­டலாம்.
அதி­கா­ரிகள் உதவி
தம்­புள்ளை இந்து ஆலயம் மீதான தாக்­கு­தல்கள் மற்றும் கிரான்பாஸ் பள்­ளி­வாசல் மீதான தாக்­கு­தல்கள் என்­ப­ன­வற்றை தடுப்­பதில் அதி­கா­ரிகள் தோல்­வி­கண்­டுள்­ளனர். மத சிறு­பான்­மை­யி­னரை இலக்கு வைத்து மேற்­கொள்­ளப்­படும் சம்­ப­வங்­களில் அர­சாங்க அதி­கா­ரிகள் குறைந்த பட்ச உத­வி­களை குழுக்­க­ளுக்கு வழங்­கு­வ­தாக அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள் குற்றம் சாட்­டி­யுள்­ளன.
பள்­ளி­வா­சல்கள் ஆல­யங்கள் தாக்­கப்­பட்­டுள்­ளன
மத அடை­யாளம் நம்­பிக்கை மற்றும் நடை­முறை ஆகி­ய­வற்றை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டு சமூக துஷ்­பி­ர­யோ­கங்கள் இடம்­பெற்­றுள்­ள­தா­கவும் அறிக்­கை­யி­டப்­பட்­டுள்­ளது. மத சதந்­திரம் மீதான மதிப்பில் வீழ்ச்சி ஏற்­பட்­டுள்­ளது. முஸ்­லிம்­க­ளையும் கிறிஸ்­த­வர்­க­ளையும் இலக்கு வைத்து பிர­சா­ர­களை கடும்­போக்­கு­வாத அமைப்­புக்கள் முன்­னெ­டுத்­துள்­ளன. இவ்­வா­றான குழுக்கள் பள்­ளி­வா­சல்­க­ளையும் ஆல­யங்­க­ளையும் தாக்­கி­யுள்­ளன.
அமெ­ரிக்க தூத­ரக அதி­கா­ரிகள் மத சுதந்­திரம் தொடர்­பான கரி­ச­னை­களை வெளி­யிட்­ட­துடன் குறிப்­பாக ஆல­யங்கள் பள்­ளி­வா­சல்கள் மீதான தாக்­கு­தல்கள் தொடர்பில் சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை கைது செய்­யு­மாறும் அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­தினர். மத குழுக்­களின் பிர­தி­நி­தி­களை தூது­வரும் தூத­ரக அதி­கா­ரி­களும் சந்­தித்து மத சுதந்­திர கரி­ச­னைகள் குறித்து கலந்­து­ரை­யா­டி­யுள்­ள­துடன் யுத்­தத்­துக்குப் பின்­ன­ரான நல்­லி­ணக்க செயற்­பா­டுகள் தொடர்­பா­கவும் ஆராய்ந்­துள்­ளனர். அமெ­ரிக்க தூத­ரகம் மத நல்­லி­ணக்க கலந்­து­ரை­யா­டல்­க­ளையும் கூட்டு ஈடு­பாட்­டையும் முன்­னெ­டுத்து நல்­லி­ணக்க முயற்­சி­க­ளுக்கு உதவ பல திட்­டங்­களை முன்­னெ­டுத்­தது.
அதி­கா­ரிகள் தயக்கம்
இலங்­கையின் மொத்த சனத் தொகையில் 70 வீத­மா­ன­வர்கள் பௌத்­தர்­க­ளாக உள்­ளனர். 15 வீத­மானோர் இந்­துக்­க­ளாக உள்­ளனர். அத்­துடன் 8 வீத கிறிஸ்­த­வர்­களும் 7 வீத முஸ்­லிம்­களும் உள்­ளனர். வடக்கில் அதி­க­ளவில் இந்­துக்கள் உள்­ளனர். மேற்கில் அதி­க­ளவில் கிறிஸ்­த­வர்­களும் கிழக்கில் அதி­க­ளவில் முஸ்­லிம்­களும் உள்­ளனர்.அர­சி­ய­ல­மைப்­பின்­படி யாரும் எந்த மதத்­தையும் பின்­பற்ற உரி­மை­யு­டை­ய­வர்கள். பௌத்த மதத்­துக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­பட்­டுள்­ளது. அர­சாங்கம் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக மத சுதந்­தி­ரத்தை அங்­கீ­க­ரித்­தாலும் நடை­மு­றையில் சில துறை­களில் பிரச்­சி­னைகள் உள்­ளன. ஆல­யங்கள் இந்து கோயில்கள் பள்­ளி­வா­சல்கள் மீதான தாக்­கு­த­லுக்கு பொறுப்­பா­ன­வர்கள் குறித்து விசா­ரிக்க அதி­கா­ரிகள் தயக்கம் காட்­டி­வ­ரு­வ­தாக அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள் குற்றம் சாட்­டு­கின்­றன.
தம்­புள்ளை பத்­தி­ர­காளி அம்மன் கோயில்
தம்­புள்ளை பத்­தி­ர­காளி அம்மன் கோயில் அமைந்­துள்ள பிர­தே­சத்தை பௌத்த புனித பிர­தே­ச­மாக அறி­விக்க ஒக்­டோபர் மாதம் 29 ஆம் திகதி நகர அபி­வி­ருத்தி அமைச்சு முயற்­சித்­தது. இதனால் பல தசாப்­தங்­க­ளாக இந்த கோயிலை சுற்றி இருந்த சுமார் 40 குடும்­பங்கள் அகற்­றப்­பட்­டன. மாற்று இடங்கள் வழங்­கப்­படும் என்ற வாக்­கு­று­தி­யுடன் இந்த ஏற்­பாடு முன்­னெ­டுக்­கப்­பட்­டாலும் அதி­கா­ரிகள் அந்த வாக்­கு­று­தியை நிறை­வேற்­ற­வில்லை. மேலும் தம்­புள்­ளையில் பள்­ளி­வாசல் ஒன்றும் புனித பிர­தே­சத்தில் அமைந்­துள்­ள­தா­கவும் அத­னையும் அகற்­ற­வேண்டும் என்று பௌத்­தர்கள் கோரி­யுள்­ளனர்.
வலு­வான தொடர்பு
பொது­ப­ல­சேனா அமைப்­புக்கும் அர­சாங்­கத்­துக்கு இடையில் மிகவும் வலு­வான தொடர்­புகள் இருப்­பதை உள்ளூர் ஊட­கங்­களும் அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களும் அவ­தா­னித்­துள்­ளன. குறிப்­பாக பாது­காப்புச் செய­லா­ள­ருக்கும் இந்த அமைப்­புக்கும் இடை­யி­லான தொடர்பு குறித்தும் கூறப்­பட்­டுள்­ளது. பாது­காப்புச் செய­லாளர் பொது­பல சேனாவின் பொது நிகழ்வில் கலந்­து­கொண்­டி­ருந்தார். பொது­பல சேனாவின் அழுத்தம் கார­ண­மாக நகர சபைகள் மாடு­களை அறுப்­பதை நிறுத்தும் வகையில் விதி­மு­றை­களை நிறை­வேற்­று­வ­தற்கு ஆரம்­பித்­தன.
வடக்கில் பௌத்த தலங்கள்
மேலும் அதி­க­மான கிறிஸ்­தவ ஆல­யங்கள் அவற்றின் சட்­டத்­தன்மை குறித்து விசா­ரிக்­கப்­பட்­ட­தாக கிறிஸ்­தவ அமைப்பு தெரி­வித்­துள்­ளது. 27 வருட கால யுத்­தத்தின் பின்னர் வடக்கில் பௌத்த வழி­பாட்டு தலங்­களை படை­யினர் தொடர்ச்­சி­யாக அமைத்­து­வ­ரு­கின்­றனர். இது அரச அனு­ச­ர­ணை­யு­ட­னான சிங்­கள குடி­யேற்­றங்­களை வெளிக்­காட்­டு­வ­தாக தமிழ் அமைப்­புக்கள் தெரி­வித்­துள்­ளன. யாழ்ப்­பாணம் மற்றும் கிளி­நொச்­சியில் அமைக்­கப்­பட்­டுள்ள பௌத்த மத வழி­பாட்டுத் தலங்­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளன.
கைது செய்ய பொலிஸார் தயக்கம்
பௌத்த கடும்­போக்­கு­வாத அமைப்­புக்கள் மத சிறு­பான்­மை­யி­னத்­த­வர்­களை இலக்­கு­வைத்து மேற்­கொள்­கின்ற வன்­மு­றைகள் குறித்து மனித உரிமை அமைப்­புக்­களும் மத சிறு­பான்மை குழு­வி­னரும் கரி­சனை வெளி­யிட்­டுள்­ளனர். மத சிறு­பான்மை பகு­திகள் மீதான குற்றச் செயல்­களை தூண்­டி­விட்­ட­வர்­களை கைது செய்­வதில் பொலிஸார் தோல்வி கண்­டுள்­ளனர்.
கிராண்பாஸ் பள்­ளி­வாசல் விவ­காரம்
கிறிஸ்­த­வர்கள் மற்றும் முஸ்­லிம்கள் மீது தாக்­குதல் நடத்­திய சம்­ப­வங்­க­ளுடன் தொடர்­பு­டைய பௌத்த பிக்­கு­மார்­களை கைது செய்ய அர­சாங்கம் தயக்கம் காட்­டி­வ­ரு­கின்­றது. பிக்­கு­மார்கள் பொது­வா­கவே அர­சாங்­கத்தின் பாது­காப்­புடன் செயற்­பட்­டு­வ­ரு­கின்­றனர். ஆகஸ்ட் 10 ஆம்­தி­கதி 50 க்கும் 60 க்கும் உட்­பட்ட பிக்­குகள் கிராண்பாஸ் பள்­ளி­வா­சலை தாக்­கினர். பலர் காய­ம­டைந்து மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்­டனர். பொலிஸார் அங்கு இருந்­தனர். எவ­ரையும் கைது செய்­ய­வில்லை.
கொட்­டாவ சம்­பவம்
மார்ச் 24 ஆம் திகதி பிக்கு ஒரு­வரின் தலை­மை­யி­லான 100 பேர் கொட்­டாவ பகு­தியில் உள்ள கிறிஸ்­தவ ஆலயம் ஒன்றை தாக்­கினர். எவரும் கைது செய்­யப்­ப­ட­வில்லை.
கடும்­போக்­கு­வாத அமைப்­புக்கள் முஸ்­லிம்­க­ளுக்கு எதிராக மேற்கொள்கின்ற வன்முறைகளின் பின்னணியில் பொதுபலசேனாவின் அலைகள் உள்ளன. பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் முஸ்லிம்களுக்கு எதிரான ஹலால் விவகாரம் போன்றவற்றின் பின்னணியில் கடும்போக்குவாத குழுக்கள் உள்ளன. பொதுபல சேனா ராவணா பலயவுடன் இணைந்து செயற்படுகின்றது. எனினும் தாக்குதல் குறித்த குற்றச்சாட்டுக்களை பொது பல சேனா நிராகரித்துள்ளது.
60 தாக்குதல்கள்
பல்வேறுபட்ட மத குழுக்களைச் சார்ந்தவர்கள் மற்றவர்களின் மத நம்பிக்கைகள் குறித்து பொறுமையாக இருந்தாலும் நம்பிக்கையின்மையும் அச்சமும் அதிகரித்துள்ளன. குறிப்பாக மத சிறுபான்மையினத்தவர்களில் இந்த நிலைமை உள்ளது. ஆலயங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.கடந்த வருடம் கிறிஸ்தவர்கள் மற்றும் ஆலயங்களில் பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவினரின் 60 தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக கிறிஸ்தவ குழுக்கள் அறிக்கையிட்டுள்ளன.
நன்றி வீரகேசரி




No comments: