உலகச் செய்திகள்


அல்-கொய்தா தாக்குதல் அச்சுறுத்தலால் 25 அமெரிக்க தூதரகங்கள் மூடப்பட்டன

ஜம்மு காஷ்மீர் எல்லையில் இன்று அதிகாலை இந்தியா, பாகிஸ்தான் இரானுவத்தினர் மோதல்

நவுறு தீவில் உள்ளவர்களுடன் தொடர்பு துண்டிப்பு: மட்டக்களப்பு உறவினர்கள்

சிரி­யாவில் படை­யினர் தாக்­குதல் 62 பேர் உயி­ரி­ழப்பு; தொடரும் மோதல்கள் 

 கலிபோர்னியாவில் காட்டுத் தீ
======================================================================
அல்-கொய்தா தாக்குதல் அச்சுறுத்தலால் 25 அமெரிக்க தூதரகங்கள் மூடப்பட்டன

5/8/2013  அமெ­ரிக்­கா­வா­னது அல் - கொய்தா போரா­ளி­களால் தாக்­கு­தல்கள் நடத்­தப்­ப­டலாம் என்ற அச்­சத்தில் மத்­திய கிழக்கு உள்­ள­டங்­க­லான நாடு­க­ளி­லுள்ள தனது 25 தூத­ர­கங்கள் மற்றும் பிர­தி­நி­திகள் அலு­வ­ல­கங்­களை ஞாயிற்றுக்கிழமை தற்­கா­லி­க­மாக மூடி­யுள்­ளது.
அதே­ச­மயம் அமெ­ரிக்க இரா­ஜாங்க திணைக்­க­ளத்தால் கடந்த வெள்­ளிக்­கி­ழமை பிறப்­பிக்­கப்­பட்ட உலக பயண எச்­ச­ரிக்­கை­யா­னது இந்த மாத இறுதி வரை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது.
குறிப்­பாக மத்­திய கிழக்கு மற்றும் வட ஆபி­ரிக்­காவில் அல் - கொய்தா போரா­ளி­களால் தாக்­குதல் நடத்­தப்­ப­டலாம் என அஞ்­சப்­ப­டு­வ­தாக அமெ­ரிக்க இரா­ஜாங்க திணைக்­களம் குறிப்­பிட்­டுள்­ளது.


மேற்படி முடிவுக்கு பல முக்கிய காரணங்கள் உள்ளதாக கருதப்படுகின்றது.
அல்- கொய்தா தலைவர்களுக்கிடையிலான இரகசிய உரையாடல்கள் சிலவற்றை அமெரிக்க அதிகாரிகள் ஒட்டுக்கேட்டதாகவும் அதில் அமெரிக்க தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் தொடர்பாக தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதேபோல் கடந்த சில வாரங்களுக்குள் பாகிஸ்தான், லிபியா மற்றும் ஈராக்கில் இடம்பெற்ற சிறையுடைப்பு சம்பவங்களில் நூற்றுக்கணக்கான அல்- கொய்தா போராளிகள் தப்பிச்சென்றுள்ளனர்.
இதுதவிர ரம்சான் மாதம் எதிர்வரும் சில தினங்களில் நிறைவடைகின்றமை போன்ற காரணிகள் சுட்டிக்காட்டப்படுகின்றன.
இந்­நி­லையில் அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபாமா, இந்த விவ­காரம் தொடர்பில் கலந்­து­ரை­யாட சிரேஷ்ட பாது­காப்பு குழு­வி­னரை சனிக்­கி­ழமை இரவு சந்­தித்­துள்ளார்.

தேசிய பாது­காப்பு ஆலோ­சகர் சூஸன் ரைஸின் தலை­மையில் இடம்­பெற்ற அந்த சந்­திப்பில், பாது­காப்பு திணைக்­களம் மற்றும் உள்­நாட்டு பாது­காப்பு பிரிவின் செய­லா­ளர்கள், 'எப்.பி.ஐ.', 'சி.ஐ. ஏ' மற்றும் தேசிய பாது­காப்பு முகவர் நிலைய தலை­வர்கள் பங்­கேற்­றனர்.
பாதுகாப்பு நடவடிக்கையின் பிரகாரம் மூடப்­பட்ட தூத­ர­கங்­களில் ஐக்­கிய அரபு எமிரேட்ஸ், அல்­ஜீ­ரியா, ஜோர்தான், ஈராக், எகிப்து, சவூதி அரே­பியா, டஜி­போரி, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், சூடான், குவைத், பாஹ்ரெயின், ஓமான், மெளரிடானியா, யேமன், லிபியா ஆகிய நாடுகளில் செயற்பட்டு வரும் அமெரிக்க தூதரகங்கள் உள்ளடங்குகின்றன.  நன்றி வீரகேசரி  




ஜம்மு காஷ்மீர் எல்லையில் இன்று அதிகாலை இந்தியா, பாகிஸ்தான் இரானுவத்தினர் மோதல்

7/8/2013 ஜம்மு காஷ்மீர் எல்லையில் இன்று அதிகாலை இந்தியா, பாகிஸ்தான் இராணுவத்தினரிடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்தது.
இதில் 2 பாகிஸ்தான் வீரர்கள் படுகாயமடைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டைக் கோட்டை கடந்து இந்திய பகுதிக்குள் ஊடுருவி பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 5 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
இதைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் அதிகரித்தது. இந்த நிலையில் இன்று காலை ஊரி செக்டார் பகுதியில் கமல்கோட் என்ற இடத்தில் இரு இராணுவத்தினரிடையேயும் கடும் துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்துள்ளது.
சுமார் ஒன்றரை மணி நேரம் இம்மோதல் நீடித்திருக்கிறது. இதில் பாகிஸ்தான் இராணுவத்தைச் சேர்ந்த 2  வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளதாக அந்நாடு உறுதி செய்துள்ளது.
தொடர்ந்தும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது..நன்றி வீரகேசரி 







நவுறு தீவில் உள்ளவர்களுடன் தொடர்பு துண்டிப்பு: மட்டக்களப்பு உறவினர்கள்

6 ஆகஸ்ட், 2013 

நவுறுவில் அண்மையில் நடந்த கலவரத்தில் தஞ்சக் கோரிக்கையாளர் தங்குமிடம் தீக்கிரையாகியது.
நவுறுவில் அண்மையில் நடந்த கலவரத்தில் தஞ்சக் கோரிக்கையாளர் தங்குமிடம் தீக்கிரையாகியது.
ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரிச் சென்று நவுறு தீவில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கும் அவர்களில் சிலரது குடும்பங்களுக்குமிடையிலான தொடர்புகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்தும் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கடந்த ஜூலை மாதம் 19ஆம் தேதி ஆஸ்திரேலிய புகலிட கோரிக்கையாளர்கள் நவுறு தீவில் தங்கியிருந்த முகாமில் இடம்பெற்ற கலவரத்தின் பின்னரே அங்கு தங்கியிருந்தவர்களினால் தொடர்பு கொள்ள முடியவில்லை என கூறப்படுகின்றது.
ஏற்கனவே நவுறு தீவில் தங்கியிருந்த நாட்களில் தினமும் தொலைபேசியில் தங்களுடன் தொடர்பில் இருந்த தனது சகோதரர்கள் இருவரும் இறுதியாக ஜூலை 23ம் திகதி தொடர்பு கொண்டதாகவும் அதன் பின்னர் தொடர்புகள் இல்லை என மட்டக்களப்பபு மாவட்டத்தை சேர்ந்த பெண்ணொருவர் பிபிசி தமிழோசைக்கு கூறினார்.
தனது சகோதரர்களில் ஒருவர் புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் என்றும், இரு சகோதரர்களினதும் புகலிட கோரிக்கை மனு தொடர்பான விசாரணைகள் முடிவடைந்து விட்ட நிலையில் அது தொடர்பான முடிவை அவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.
கடைசியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது தங்களை நவுறு தீவிலுள்ள வேறு முகாமொன்றுக்கு இடமாற்றம் செய்யப்படவிருப்பதாகவும் அங்கு தொலைபேசி வசதிகள் இருந்தால்தான தொடர்பு கொள்ள முடியும் என்றும் சகோதரர்கள் தெரிவித்திருந்ததாக அப்பெண் குறிப்பிட்டார்.
ஆனால் இதுவரை தொடர்பு இல்லை என்றும், அவர் கவலை வெளியிட்டார்.
53 வயதான தாயொருவர் , தனது மகன் நவுறுதீவில் சென்ற ஆகஸ்ட் மாதம் தொடக்கம் தினமும் இரு தடவைக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்வார் என்றும் ஆனால் இப்போது தொடர்புகள் இல்லாத இல்லை என்றும் கூறுகிறார். இதனால் உளரீதியாக தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.  நன்றி BBC தமிழ்






சிரி­யாவில் படை­யினர் தாக்­குதல் 62 பேர் உயி­ரி­ழப்பு; தொடரும் மோதல்கள்

8/8/2013   சிரிய படை­யினர் தலை­நகர் டமஸ்­க­ஸுக்கு அருகில் நேற்று நடத்­திய தாக்­கு­தலில் குறைந்­தது 62 பேர் பலி­யா­கி­யுள்­ள­துடன் பலர் காய­ம­டைந்­துள்­ள­தாக சிரிய மனித உரி­மைகள் அவ­தான நிலையம் தெரி­விக்­கி­றது.
தொழிற்­றுறை நக­ரான அட்­ராவில் அதி­காலை வேளையில் இந்தத் தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டுள்­ளது.
பலி­யா­ன­வர்­களில் அநேகர் இளை­ஞர்கள் எனவும் மேற்­படி தாக்­குதல் சம்­ப­வத்­தை­ய­டுத்து 8 பேர் காணாமல் போயுள்­ள­தா­கவும் மனித உரிமைகள் அவ­தான நிலையம் கூறு­கி­றது.
அந்­நாட்டு இரா­ணு­வத்­தினர் இந்த தாக்­குதல் சம்­பவம் குறித்து விப­ரிக்­கையில், அல் நுஷ்ரா முன்னணி என்ற அமைப்பைச் சேர்ந்த பயங்­க­ர­வாத குழுவொன்றை இலக்கு வைத்தே தாம் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளனர்.  நன்றி வீரகேசரி








கலிபோர்னியாவில் காட்டுத் தீ

9/8/2013   தென் கலிபோர்னியாவில் காட்டுத் தீ காரணமாக 10,000 ஏக்கர் காட்டுபகுதி எரிந்து சாம்பலாகியுள்ளது.

பேனிங் பகுதியின் சேன் ஜாசிந்தோ மலைத்தொடர் பகுதியிலிருந்து சுமார் 1,500 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

கடந்த புதன் கிழமையிலிருந்து காட்டுத் தீ தொடர்ந்து பரவி வருகின்றது. மேலும் 1000 தீயணைப்பு வீரர்கள் இணைந்து தீயைக் கட்டுப்படுத்த முயன்று வருகின்றனர்.

மணித்தியாலத்துக்கு 40 மீற்றர் வேகத்தில் காற்று வீசுவதனால் தீ வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 15 வீடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளதாகவும், தீயைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் திணறி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தீயினால் ஒரு நபர் முற்றாக தீக்காயத்துக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


நன்றி வீரகேசரி


No comments: