விண்வெளிக்கு இரண்டாவது தடவையாக குரங்கை வெற்றிகரமாக அனுப்பிய ஈரான்
துண்டிக்கப்பட்ட கரத்தை ஒரு மாதத்தின் பின் பொருத்தி சீன மருத்துவர்கள் சாதனை
ஈராக்கில் ஷியா யாத்திரீகர்கள் மீது தாக்குதல்: 66 பேர் பலி
முசாபர்நகர் நிவாரண முகாம்களில் தங்கியிருந்த 30 குழந்தைகள் பலி
பண மோகத்தால் இளைஞரை பிணமாக்கிய பெண்கள்
சோமாலியாவில் 4 மருத்துவர்கள் சுட்டுக்கொலை
தென் சூடானிய பிரதான நகரை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்
=======================================================================
விண்வெளிக்கு இரண்டாவது தடவையாக குரங்கை வெற்றிகரமாக அனுப்பிய ஈரான்
துண்டிக்கப்பட்ட கரத்தை ஒரு மாதத்தின் பின் பொருத்தி சீன மருத்துவர்கள் சாதனை
ஈராக்கில் ஷியா யாத்திரீகர்கள் மீது தாக்குதல்: 66 பேர் பலி
தென் சூடானிய தலைநகரில் உக்கிர மோதல்: 26 பேர் பலி; 130 பேர் காயம்
முசாபர்நகர் நிவாரண முகாம்களில் தங்கியிருந்த 30 குழந்தைகள் பலி
பண மோகத்தால் இளைஞரை பிணமாக்கிய பெண்கள்
சோமாலியாவில் 4 மருத்துவர்கள் சுட்டுக்கொலை
தென் சூடானிய பிரதான நகரை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்
=======================================================================
விண்வெளிக்கு இரண்டாவது தடவையாக குரங்கை வெற்றிகரமாக அனுப்பிய ஈரான்
16/12/2013 ஈரானானது
விண்வெளிக்கு மனிதருடனான பயணத்தை முன்னெடுப்பதற்கான தனது
நிகழ்ச்சித்திட்டத்தின் அங்கமாக இந்த வருடத்தில் இரண்டாவது
தடவையாக குரங்கொன்றை வெற்றிகரமாக அனுப்பி வைத்துள்ளதாக
அந்நாட்டு ஜனாதிபதி ஹஸன் ரோவ்ஹானி தெரிவித்தார்.
பர்காம் என்ற மேற்படி குரங்கு விண்வெளியில் ஆரோக்கியமாகவுள்ளதாக அவர் கூறினார்.
பர்காம் என்ற மேற்படி குரங்கு விண்வெளியில் ஆரோக்கியமாகவுள்ளதாக அவர் கூறினார்.
அந்நாடு இதற்கு முன் முதல் தடவையாக குரங்கொன்றை விண்வெளிக்கு
அனுப்பிய போது, அனுப்பப்பட்ட குரங்கு ஒன்றாகவும் தரையிறங்கிய
குரங்கு வேறொன்றாகவும் காட்டப்பட்டமை பெரும் சர்ச்சையை
ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஈரானானது தனது விண்வெளி நிகழ்ச்சித் திட்டத்தை ஏவுகணை
தாக்குதல்களுக்கு பயன்படுத்தக்கூடும் என மேற்குலக நாடுகள் அச்சம்
கொண்டுள்ளன.
இந் நிலையில் விண்வெளிக்கு குரங்கை அனுப்பும் செயற்கிரமத்தில்
பங்கேற்ற விஞ்ஞானிகளுக்கு ஈரானிய ஜனாதிபதி பாராட்டைத் தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
துண்டிக்கப்பட்ட கரத்தை ஒரு மாதத்தின் பின் பொருத்தி சீன மருத்துவர்கள் சாதனை
17/12/2013 விபத்தொன்றின்
துண்டிக்கப்பட்ட நபரொருவர் கரத்தை அவரது கணுக்காலில் பொருத்தி
வைத்திருந்து ஒரு மாத காலமாக பாதுகாத்த பின்னர் அதனை வெற்றிகரமாக அவரது
இழந்த கரப் பகுதியுடன் மீண்டும் இணைத்து சீன மருத்துவர்கள் சாதனை
படைத்துள்ளனர்.
ஹுனான் மாகாணத்தில் சஞ்டி நகரிலுள்ள மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்களே இந்த சாதனையை படைத்துள்ளனர்.
ஸியவோ வெயி என்ற மேற்படி நபரின் வலது கரம் அவரது பணியிடத்தில் இயந்திரமொன்றில் சிக்கி துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில் சக தொழிலாளர்கள் அவரை இயந்திரப் பகுதியிலிருந்து விடுவித்து அவரது துண்டிக்கப்பட்ட கரம் சகிதம் அவரை அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஸியவோ வெயி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரது கரப்பகுதி உயிருடன் இருந்த போதும் அவருக்கு ஏற்பட்டிருந்த கடும் காயம் காரணமாக அதனை மீளவும் அவருக்கு உடனடியாக பொருத்துவது சாத்தியமற்று இருந்தது.
இதனால் செய்வதறியாது திகைத்த மருத்துவர்கள் பிராந்தியத்திலுள்ள பெரிய மருத்துவமனைக்கு அவரை கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தனர்.
இதனையடுத்து விபத்து இடம்பெற்ற 7 மணித்தியாலங்களில் சங்ஷா நகரிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஸியவோ வெயிக்கு அறுவைச்சிசிக்கையை மேற்கொண்ட மருத்துவர்கள் அவரது துண்டிக்கப்பட்ட கரத்தை அவரது கணுக்காலில் பொருத்தி அது இறந்து விடாது காப்பாற்றினர்.
இந்நிலையில் ஒரு மாதம் கழித்து அவரது துண்டிக்கப்பட்ட பகுதியிலான இரத்த ஓட்டம் சீராகியதும் கணுக்காலில் பொருத்தப்பட்டிருந்த கரம் மீளவும் அதற்குரிய இடத்தில் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது. நன்றி வீரகேசரி
ஈராக்கில் ஷியா யாத்திரீகர்கள் மீது தாக்குதல்: 66 பேர் பலி
17/12/2013 ஈராக்கில் ஷியா யாத்திரீகர்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதல் மற்றும் கார் குண்டு வெடிப்பு சம்பவங்களில் சிக்கி 66 பேர் பரிதாபமாக பலியாகினர்.
முஸ்லிம்களின் ஷியா-சன்னி பிரிவினருக்கிடையிலான குலப்பகை ஈராக்கில் தலைவிரித்து தாண்டவமாடி வருகிறது. இதன் எதிரொலியாக இரு பிரிவினரும் சிறுபான்மையாக வாழும் பகுதிகளில் பெரும்பான்மை சமுதாயத்தினர் பேராதிக்கம் செலுத்தி வருகின்றனர். இதன் விளைவாக ஏராளமான அப்பாவி பொதுமக்கள் நாள்தோறும் பலியாகி வருவது ஈராக்கில் தொடர்கதையாகிவிட்டது.
இந்த தொடர்கதையின் புதிய அத்தியாயமாக ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள ரஷித் பகுதியில் ஷியா யத்ரீகர்களை குறி வைத்து நிகழ்த்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 22 ஷியா யாத்திரீகர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர்.
இதேபோல், மொசுல் நகரத்தில் ஷியா யத்திரீகர்கள் சென்ற பஸ் மீது துப்பாக்கிகளால் சுட்ட சன்னி பிரிவினர் 12 பேரை சுட்டுக் கொன்றனர். 5 கார்களின் மீது நடத்தப்பட்ட வெடி குண்டு தாக்குதல்களில் 17 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 50 பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திர்கித் நகரில் உள்ள உள்ளாட்சி துறை அலுவலகத்தின் மீது கார் குண்டு தாக்குதல் நடத்தி அதனை கைப்பற்றிக் கொண்ட சிலர், உள்ளே இருந்த 40 பணியாளர்களையும் சிறை பிடித்தனர். அவர்களை விடுவிக்க பொலிசார் நடத்திய தாக்குதலில் 7 பேர் பலியாகினர்.
திர்கித் நகரின் வழியாக செல்லும் எண்ணை குழாய்க்கு காவலாக நின்ற 3 பொலிசாரும் கிர்குக் நகரின் வழியாக செல்லும் எண்ணை குழாய்க்கு காவலாக நின்ற 2 பொலிசாரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். சலாஹெதீன் மாகாணத்தில் உள்ள பைஜி பொலிஸ் நிலையத்தை கைப்பற்றிக் கொண்ட தீவிரவாதிகள் உள்ளே பணியில் இருந்த 2 பொலிசாரை சுட்டுக் கொன்றனர்.
பின்னர், விரைந்து வந்த அதிரடிப் படையினர் நடத்திய எதிர் தாக்குதலில் 3 பொலிசார் உள்பட 6 பேர் பலியாகினர். நன்றி வீரகேசரி
ஹுனான் மாகாணத்தில் சஞ்டி நகரிலுள்ள மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்களே இந்த சாதனையை படைத்துள்ளனர்.
ஸியவோ வெயி என்ற மேற்படி நபரின் வலது கரம் அவரது பணியிடத்தில் இயந்திரமொன்றில் சிக்கி துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில் சக தொழிலாளர்கள் அவரை இயந்திரப் பகுதியிலிருந்து விடுவித்து அவரது துண்டிக்கப்பட்ட கரம் சகிதம் அவரை அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஸியவோ வெயி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரது கரப்பகுதி உயிருடன் இருந்த போதும் அவருக்கு ஏற்பட்டிருந்த கடும் காயம் காரணமாக அதனை மீளவும் அவருக்கு உடனடியாக பொருத்துவது சாத்தியமற்று இருந்தது.
இதனால் செய்வதறியாது திகைத்த மருத்துவர்கள் பிராந்தியத்திலுள்ள பெரிய மருத்துவமனைக்கு அவரை கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தனர்.
இதனையடுத்து விபத்து இடம்பெற்ற 7 மணித்தியாலங்களில் சங்ஷா நகரிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஸியவோ வெயிக்கு அறுவைச்சிசிக்கையை மேற்கொண்ட மருத்துவர்கள் அவரது துண்டிக்கப்பட்ட கரத்தை அவரது கணுக்காலில் பொருத்தி அது இறந்து விடாது காப்பாற்றினர்.
இந்நிலையில் ஒரு மாதம் கழித்து அவரது துண்டிக்கப்பட்ட பகுதியிலான இரத்த ஓட்டம் சீராகியதும் கணுக்காலில் பொருத்தப்பட்டிருந்த கரம் மீளவும் அதற்குரிய இடத்தில் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது. நன்றி வீரகேசரி
ஈராக்கில் ஷியா யாத்திரீகர்கள் மீது தாக்குதல்: 66 பேர் பலி
17/12/2013 ஈராக்கில் ஷியா யாத்திரீகர்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதல் மற்றும் கார் குண்டு வெடிப்பு சம்பவங்களில் சிக்கி 66 பேர் பரிதாபமாக பலியாகினர்.
முஸ்லிம்களின் ஷியா-சன்னி பிரிவினருக்கிடையிலான குலப்பகை ஈராக்கில் தலைவிரித்து தாண்டவமாடி வருகிறது. இதன் எதிரொலியாக இரு பிரிவினரும் சிறுபான்மையாக வாழும் பகுதிகளில் பெரும்பான்மை சமுதாயத்தினர் பேராதிக்கம் செலுத்தி வருகின்றனர். இதன் விளைவாக ஏராளமான அப்பாவி பொதுமக்கள் நாள்தோறும் பலியாகி வருவது ஈராக்கில் தொடர்கதையாகிவிட்டது.
இந்த தொடர்கதையின் புதிய அத்தியாயமாக ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள ரஷித் பகுதியில் ஷியா யத்ரீகர்களை குறி வைத்து நிகழ்த்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 22 ஷியா யாத்திரீகர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர்.
இதேபோல், மொசுல் நகரத்தில் ஷியா யத்திரீகர்கள் சென்ற பஸ் மீது துப்பாக்கிகளால் சுட்ட சன்னி பிரிவினர் 12 பேரை சுட்டுக் கொன்றனர். 5 கார்களின் மீது நடத்தப்பட்ட வெடி குண்டு தாக்குதல்களில் 17 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 50 பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திர்கித் நகரில் உள்ள உள்ளாட்சி துறை அலுவலகத்தின் மீது கார் குண்டு தாக்குதல் நடத்தி அதனை கைப்பற்றிக் கொண்ட சிலர், உள்ளே இருந்த 40 பணியாளர்களையும் சிறை பிடித்தனர். அவர்களை விடுவிக்க பொலிசார் நடத்திய தாக்குதலில் 7 பேர் பலியாகினர்.
திர்கித் நகரின் வழியாக செல்லும் எண்ணை குழாய்க்கு காவலாக நின்ற 3 பொலிசாரும் கிர்குக் நகரின் வழியாக செல்லும் எண்ணை குழாய்க்கு காவலாக நின்ற 2 பொலிசாரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். சலாஹெதீன் மாகாணத்தில் உள்ள பைஜி பொலிஸ் நிலையத்தை கைப்பற்றிக் கொண்ட தீவிரவாதிகள் உள்ளே பணியில் இருந்த 2 பொலிசாரை சுட்டுக் கொன்றனர்.
பின்னர், விரைந்து வந்த அதிரடிப் படையினர் நடத்திய எதிர் தாக்குதலில் 3 பொலிசார் உள்பட 6 பேர் பலியாகினர். நன்றி வீரகேசரி
தென் சூடானிய தலைநகரில் உக்கிர மோதல்: 26 பேர் பலி; 130 பேர் காயம்
18/12/2013 தென்
சூடானிய தலைநகர் ஜுபாவில் செவ்வாய்க்கிழமை உக்கிர மோதல்
இடம்பெற்றுள்ளது. அதிகாலை வேளை முதல் அங்கு இடம்பெற்ற துப்பாக்கிச்
சமரால் மக்களில் பலர் அச்சம் காரணமாக வீடுகளுக்குள்
முடங்கியிருந்ததுடன், சிலர் நகரை விட்டு வெளியேறும் முயற்சியில்
ஈடுபட்டிருந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த மோதல்களில் குறைந்தது 26 பேர் பலியானதுடன் 130 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
அந் நகரின் வெவ்வேறு பிரதேசங்களிலும் துப்பாக்கிச் சூட்டு சமர் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக கூறப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை பின்னிரவு புதிதாக ஆரம்பமான இந்த பிந்திய மோதல்களுக்கு தனது எதிராளியான முன்னாள் உப ஜனாதிபதி றியக் மாசருக்கு ஆதரவான படையினரே காரணம் என தென் சூடான் ஜனாதிபதி சல்வா கிர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
றியக் மாசர் கடந்த ஜூலை மாதம் இராணுவ சதிப் புரட்சியொன்றை முன்னெடுக்க முயற்சித்த குற்றச்சாட்டில் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
இந் நிலையில் தென் சூடானில் இடம்பெற்று வரும் கலவரங்கள் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் ஐக்கிய நாடுகள் அலுவலகங்களில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.
பல பிரதேசவாசிகள் இராணுவ தளங்களுக்கு அண்மையிலுள்ள தளங்களில் வசிப்பதால் தமது உயிரை பாதுகாப்பதற்கு இடம்பெயர வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகியுள்ளனர். நன்றி வீரகேசரி
முசாபர்நகர் நிவாரண முகாம்களில் தங்கியிருந்த 30 குழந்தைகள் பலி
18/12/2013 உத்தரபிரதேச மாநிலத்தில் கலவரத்தில் பாதிக்கப்பட்டு முசாபர்நகர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டவர்களில் 30 குழந்தைகள் பரிதாபகரமாகப் பலியாகியுள்ளன.
இவர்கள் அனைவரும் கடும் குளிர் காரணமாக இறந்துள்ளனர் என கூறப்படுகிறது.
கலவரம் பாதித்து 3 மாதங்கள் ஆகியும் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் நிவாரண முகாம்களிலேயே தங்கியுள்ளனர். இந்நிலையில், மாநில அரசு குழந்தைகள் இறந்ததாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உள்துறை செயலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ள அறிக்கையிலும் இதே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
பண மோகத்தால் இளைஞரை பிணமாக்கிய பெண்கள்
தென் சூடானிய பிரதான நகரை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்
இந்த மோதல்களில் குறைந்தது 26 பேர் பலியானதுடன் 130 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
அந் நகரின் வெவ்வேறு பிரதேசங்களிலும் துப்பாக்கிச் சூட்டு சமர் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக கூறப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை பின்னிரவு புதிதாக ஆரம்பமான இந்த பிந்திய மோதல்களுக்கு தனது எதிராளியான முன்னாள் உப ஜனாதிபதி றியக் மாசருக்கு ஆதரவான படையினரே காரணம் என தென் சூடான் ஜனாதிபதி சல்வா கிர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
றியக் மாசர் கடந்த ஜூலை மாதம் இராணுவ சதிப் புரட்சியொன்றை முன்னெடுக்க முயற்சித்த குற்றச்சாட்டில் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
இந் நிலையில் தென் சூடானில் இடம்பெற்று வரும் கலவரங்கள் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் ஐக்கிய நாடுகள் அலுவலகங்களில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.
பல பிரதேசவாசிகள் இராணுவ தளங்களுக்கு அண்மையிலுள்ள தளங்களில் வசிப்பதால் தமது உயிரை பாதுகாப்பதற்கு இடம்பெயர வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகியுள்ளனர். நன்றி வீரகேசரி
முசாபர்நகர் நிவாரண முகாம்களில் தங்கியிருந்த 30 குழந்தைகள் பலி
18/12/2013 உத்தரபிரதேச மாநிலத்தில் கலவரத்தில் பாதிக்கப்பட்டு முசாபர்நகர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டவர்களில் 30 குழந்தைகள் பரிதாபகரமாகப் பலியாகியுள்ளன.
இவர்கள் அனைவரும் கடும் குளிர் காரணமாக இறந்துள்ளனர் என கூறப்படுகிறது.
கலவரம் பாதித்து 3 மாதங்கள் ஆகியும் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் நிவாரண முகாம்களிலேயே தங்கியுள்ளனர். இந்நிலையில், மாநில அரசு குழந்தைகள் இறந்ததாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உள்துறை செயலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ள அறிக்கையிலும் இதே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
பண மோகத்தால் இளைஞரை பிணமாக்கிய பெண்கள்
18/12/2013 நியூசிலாந்தில்து இந்தியா வம்சாவழியைச் சேர்ந்த வாலிபரை உறவுக்கு
அழைத்துச் சென்று கொலை செய்த இரு பெண்களுக்கு நியூசி நீதிமன்றம் 8 ஆண்டு
சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
கொலையான அமந்தீப் சிங்(22) என்ற அந்த வாலிபர் நியூசிலாந்தின் கிஸ்போர்ன்
நகரில் வசித்து வந்தார். திருமணமான இவர், கிஸ்போர்ன் நகரின் வழியாக காரில்
சென்றுக் கொண்டிருந்த போது சாலையோரமாக நடந்து சென்ற கிரிஸ்டல்
போக்கை(25)என்ற பெண் அமந்தீப் சிங்கிடம் காரில் பயணிக்க உதவி கோரினார்.
அவரும் சம்மதித்து அந்த பெண்ணை காரில் ஏற்றிக் கொண்டார். போகும் வழியில்
இருவருக்கும் இடையில் நடந்த பேச்சில் கிரிஸ்டலை அமந்தீப் சிங்குக்கு
மிகவும் பிடித்துப் போய்விட்டது. இருவரும் தொலைபேசி இலக்கங்களை பரிமாறிக்
கொண்டனர்.
அதன் பின்னர், குறுந்தகவல் மூலமாக இருவரின் நட்பு மேலும் நெருக்கமானது.
ஒரு கட்டத்தில், கிரிஸ்டல் போக்கை அமந்தீப் சிங் உறவுக்கு அழைத்தார்.
முதலில் மறுப்பது போல் பாவனை காட்டிய கிரிஸ்டல், திடீரென்று அமந்தீப்
சிங்கிற்கு ஒரு குறுந்தகவல் அனுப்பினார். தனது நிலைப்பாட்டை மாற்றிக்
கொண்டதாகவும் தனது வீட்டிற்கு வந்தால் உல்லாசமாக இருக்கலாம் எனவும்
கிரிஸ்டல் தெரிவித்தார். இதனையடுத்து, நள்ளிரவில் அமந்தீப் சிங் தனது
காரில் கிரிஸ்டல் வீட்டிற்கு தனியாக சென்றார்.
கிரிஸ்டலின் வீட்டில் இன்னொரு இளம் பெண்ணும் உடன் இருந்தார். "எய்ட்டி
கடற்கரைக்கு சென்று நாம் 3 பேரும் உல்லாசமாக இருக்கலாம்" என்று அமந்தீப்
சிங்கின் மனதில் கிரிஸ்டல் கூறவே அமந்தீப் சிங், 2 பெண்களையும் காரில்
ஏற்றிக் கொண்டு கெய்ட்டி கடற்கரைக்கு சென்றார்.
இதற்கிடையில், அமந்தீப் சிங்கை காணவில்லை என அவரது குடும்பத்தார்
பொலிஸாருக்கு புகார் அளித்தனர். புகாரையடுத்து விசாரணை நடத்திவந்த
பொலிஸார், எய்ட்டி கடற்கரையில் உள்ள ஒரு புதர் மறைவில் இருந்து அமந்தீப்
சிங்கின் அழுகிப்போன பிரேதத்தை கண்டெடுத்தனர். பிரேத பரிசோதனையில் அமந்தீப்
சிங் அடித்து கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அவரை கிரிஸ்டலும் அவரது
தோழியும் அடித்து கொன்றுவிட்டு, அமந்தீப் சிங்கின் காசட்டை மற்றும் காரை
இருவரும் திருடிச் சென்றதையும், அந்த காசட்டை மூலம் ஏ.டி.எம்.மில் இருந்து 2
பெண்களும் பணம் எடுக்க முயன்றதையும் பொலிஸார் கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து, அவர்களை கைது செய்த பொலிஸார், கிஸ்போர்ன் உயர்
நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். பொலிஸ் தரப்பு சாட்சியாக அமந்தீப் சிங்
மற்றும் கிரிஸ்டல் ஆகியோருக்கு இடையில் நிகழ்ந்த 166 குறுந்தகவல்கள்
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு
வழங்கப்பட்டது. விபச்சாரத்திற்கு வாலிபரை ஆசைகாட்டி வரவழைத்து, பணம்
பறிக்கும் நோக்கத்தில் அடித்துக் கொன்றுவிட்டு, காரையும், காசட்டையும்
திருடிய குற்றத்திற்காக 2 பெண்களுக்கும் தலா 8 ஆண்டு 8 மாதங்கள் சிறை
தண்டனை வழங்கி நீதிபதி முர்ரே கில்பர்ட் தீர்ப்பளித்தார். நன்றி வீரகேசரி
சோமாலியாவில் 4 மருத்துவர்கள் சுட்டுக்கொலை
20/12/2013 சோமாலிய தலைநகர் மொகாடிஷுவில் 3 சிரிய மருத்துவர்களும் ஒரு
சோமாலிய மருத்துவரும் துப்பாக்கிதாரிகளால் சுட்டுக்
கொல்லப்பட்டுள்ளனர்.
அவர்கள் மருத்துவ நிலையமொன்றை நோக்கி காரில் சென்ற வேளையிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அத்துடன் மேற்படி தாக்குதலில் அவர்களது மெய்ப்பாதுகாவலர்கள்
இருவர் பலியாகியுள்ளதுடன் சோமாலியா மருத்துவரும்
படுகாயமடைந்துள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கு அல் – கொய்தாவுடன் தொடர்புடைய அல்- – ஷபாப் போராளிகளே காரணமென குற்றஞ்சாட்டப்படுகிறது.
எனினும் தாம் அத்தாக்குதலை நடத்தவில்லை என அல் -– ஷபாப் போராளிக் குழுவின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளனர். நன்றி வீரகேசரி
தென் சூடானிய பிரதான நகரை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்
20/12/2013 தென்
சூடானின் முன்னாள் உப ஜனாதிபதி றெயிக் மாசருக்கு விசுவாசமான
கிளர்ச்சியாளர்கள், பிரதான நகரான பொரை கைப்பற்றியுள்ளதாக
அந்நாட்டு இராணுவம் வியாழக்கிழமை தெரிவித்தது.
அந்நாட்டில் முன்னெடுக்கப்பட்டு தோல்வியைத் தழுவியதாக கூறப்படும் இராணுவப் புரட்சியொன்றையடுத்து அங்கு தொடர்ந்து மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.
எமது படையினர், பொர் நகரின் கட்டுப்பாட்டை றெயிக் மாசரின் படையினரிடம் புதன்கிழமை பின்னிரவு இழந்துள்ளதாக இராணுவ பேச்சாளர் பிலிப் அகுயர் தெரிவித்தார்.
புதன்கிழமை இரவு முழுவதும் துப்பாக்கிச்சூடுகள் இடம்பெற்றன. ஆனால் அந் நகரில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்ற தகவல் எமக்கு கிடைக்கவில்லை என அவர் கூறினார்.
தலைநகர் ஜுபாவின் வடக்கே சுமார் 200 கிலோ மீற்றர் தொலைவில் பொர் நகர் அமைந்துள்ளது.
மாசர் இராணுவ சதிப்புரட்சியை முன்னெடுக்க முயன்றதாக தென் சூடானிய ஜனாதிபதி சல்வா கிர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் ஜனாதிபதியால் பணிநீக்கம் செய்யப்பட்ட மாசர், மேற்படி குற்றச்சாட்டுக்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.
கிர் மேற்படி குற்றச்சாட்டை தனது அரசியல் எதிராளிகளை நசுக்க ஒரு மன்னிப்பாக பயன்படுத்துவதாக அவர் கூறினார்.
சூடானில் 1983 – 2005 ஆம் ஆண்டு கால உள்நாட்டுப் போரின் போது இரு தரப்பிலும் போராடிய மாசர், 1991 ஆம் ஆண்டு பொர்ரில் இடம்பெற்ற கொடூர படுகொலைகளுக்கு தலைமை தாங்கியதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார்.
முதல் நாள் புதன்கிழமை பொர் நகரிலும் தொரித் நகரிலும் உக்கிர மோதல்கள் இடம் பெற்ற போதும் தற்போது அந்நகர்களில் அமைதி நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
தென் சூடானில் கிளர்ந்துள்ள உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அரசியல் பேச்சுவார்த்தையில் ஈடுபட ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிலையில் மாசருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட விரும்புவதாக தெரிவித்துள்ள கிர், ஆனால் அந்தப் பேச்சுவார்த்தையின் பெறுபேறு தொடர்பில் தனக்கு தெரியாதுள்ளதாக கூறினார்.
மோதல்கள் காரணமாக ஜுபா நகரிலுள்ள ஐக்கிய நாடுகள் தூதரகத்தில் சுமார் 20000 பேர் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளதை ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் உறுதிப்படுத்தியுள்ளார். நன்றி வீரகேசரி
அந்நாட்டில் முன்னெடுக்கப்பட்டு தோல்வியைத் தழுவியதாக கூறப்படும் இராணுவப் புரட்சியொன்றையடுத்து அங்கு தொடர்ந்து மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.
எமது படையினர், பொர் நகரின் கட்டுப்பாட்டை றெயிக் மாசரின் படையினரிடம் புதன்கிழமை பின்னிரவு இழந்துள்ளதாக இராணுவ பேச்சாளர் பிலிப் அகுயர் தெரிவித்தார்.
புதன்கிழமை இரவு முழுவதும் துப்பாக்கிச்சூடுகள் இடம்பெற்றன. ஆனால் அந் நகரில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்ற தகவல் எமக்கு கிடைக்கவில்லை என அவர் கூறினார்.
தலைநகர் ஜுபாவின் வடக்கே சுமார் 200 கிலோ மீற்றர் தொலைவில் பொர் நகர் அமைந்துள்ளது.
மாசர் இராணுவ சதிப்புரட்சியை முன்னெடுக்க முயன்றதாக தென் சூடானிய ஜனாதிபதி சல்வா கிர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் ஜனாதிபதியால் பணிநீக்கம் செய்யப்பட்ட மாசர், மேற்படி குற்றச்சாட்டுக்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.
கிர் மேற்படி குற்றச்சாட்டை தனது அரசியல் எதிராளிகளை நசுக்க ஒரு மன்னிப்பாக பயன்படுத்துவதாக அவர் கூறினார்.
சூடானில் 1983 – 2005 ஆம் ஆண்டு கால உள்நாட்டுப் போரின் போது இரு தரப்பிலும் போராடிய மாசர், 1991 ஆம் ஆண்டு பொர்ரில் இடம்பெற்ற கொடூர படுகொலைகளுக்கு தலைமை தாங்கியதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார்.
முதல் நாள் புதன்கிழமை பொர் நகரிலும் தொரித் நகரிலும் உக்கிர மோதல்கள் இடம் பெற்ற போதும் தற்போது அந்நகர்களில் அமைதி நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
தென் சூடானில் கிளர்ந்துள்ள உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அரசியல் பேச்சுவார்த்தையில் ஈடுபட ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிலையில் மாசருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட விரும்புவதாக தெரிவித்துள்ள கிர், ஆனால் அந்தப் பேச்சுவார்த்தையின் பெறுபேறு தொடர்பில் தனக்கு தெரியாதுள்ளதாக கூறினார்.
மோதல்கள் காரணமாக ஜுபா நகரிலுள்ள ஐக்கிய நாடுகள் தூதரகத்தில் சுமார் 20000 பேர் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளதை ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் உறுதிப்படுத்தியுள்ளார். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment