யாழில் மலேரியா தடுப்பு
இலங்கையில் கஞ்சா போதைப்பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
மன்னார் தாழ்வுபாட்டு கிராமத்தில் 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான கஞ்சா போதைப்பொருள் மீட்பு
தெஹிவளையில் மூன்று பள்ளிகளில் தொழுகைகளுக்கு பொலிஸார் தடை : மறுக்கின்றார் பேச்சாளர்
வவுனியா அட்டம்பகஸ்கட சிறுவர் இல்லத்தை மறு அறிவித்தல்வரை மூடுவதற்கு உத்தரவு
உள்நாட்டு, வெளிநாட்டுக் கலைஞர்கள் வழங்கும் மாபெரும் பரத நாட்டிய நிகழ்வு
யாழில் மலேரியா தடுப்பு
16/12/2013

சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருந்து இந்தியாவுக்கு பயணத்தை
மேற்க் கொள்பவர்களுக்க மலேரியா கட்டுப்பாட்டு மருந்து குளிகை கொடுக்கும்
நடவடிக்கைகள் சுகாதார வைத்தியதிகாரியினால் மேற்க்கொள்ளப்படவுள்ளது.
யாழ்ப்பாணத்தில் சமீபகாலமாக மலேரியா நோய்த்தாக்கத்திற்கு உள்ளானவர்களில்
பெரும்பாலனாவர்கள் இந்தியா சென்று திரும்பியவர்கள் என இனம்
காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் இருந்த ஐயப்பசுவாமி உற்சவத்திற்கு மற்றும்
சுற்றுலாவுக்கு செல்பவர்களும் முன்கூட்டியே மருந்துகளை உட்கொண்டு செல்வதன்
மூலம் யாழ்ப்பாணத்தில் மலேரியா பரவுவதை தடுக்கமுடியும் என்ற அடிப்படையில்
இந்த நடவடிக்கையை சங்கானை சுகதார வைத்திய அதிகாரி மேற்க் கொண்டுள்ளார்.
நாளை 17 ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கை சங்கானை பணிமனையில்
ஆரம்பமாகவுள்ளதாகவும் இந்தியா செல்லவுள்ளவர்கள் இதனை மேற்க் கொண்டு
சென்றால் பாதுகாப்பெனவும் சங்கானை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி
தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
இலங்கையில் கஞ்சா போதைப்பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
17/12/2013 இலங்கையில் கஞ்சாப் போதைப் பொருள்
பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள்
கட்டுப்பாட்டுச்சபை குறிப்பிடுகிறது.

இது குறித்து அச்சபையின் உதவிப் பணிப்பாளர் பத்ராணி சேனநாயக்க தெரிவிப்பதாவது,
இலங்கையில் 2011 ஆம் ஆண்டை விடவும் அதன் பின்னரான வருடங்களில் கஞ்சாப்
போதைப்பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளது.
கஞ்சாப் பாவனையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த
வருடம் 11 வீதத்தினால் அதிகரித்துள்ளது. ஒரு இலட்சம் சனத்தொகையில் 184 பேர்
கஞ்சா போதைப் பொருள் பாவிப்பவர்களாக உள்ளனர்.
கஞ்சாப் பாவனையின் போது கைது செய்யப்படுபவர்களில் அதிகளவிலானோர் மேல்
மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர். புள்ளி விபரங்களின் படி, கடந்த வருடம் கஞ்சா
பாவனையில் ஈடுபட்டு கைது செய்யபட்டவர்களில் 61 வீதமானோர் மேல் மாகாணத்தைச்
சேர்ந்தவர்களாகவும், 11 வீதத்தினர் தென் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாகவும்,
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் 6 வீதமாகவும் உள்ளனர்.
அது மாத்திரமின்றி மாவட்ட மட்டத்தில் 50 வீதமானோர் கொழும்பு மாவட்டத்தைச்
சேர்ந்தவர்களாகவும் 7 வீதத்தினர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாகவும் 6
வீதத்தினர் அம்பாந்தோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளதாக அவர்
சுட்டிக்காட்டுகிறார்.
அத்துடன் நாட்டில் சட்டவிரோதமாக 500 ஹெக்டேயரில் கஞ்சா உற்பத்தி
செய்யப்படுகிறது. கிழக்கு மற்றும் தென் மாகாண வறள்வலயங்களில் கஞ்சா
அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. கஞ்சா பாவனையாளர்களில் இள வயதினர்
அதிகளவிலுள்ளமை கவலையளிப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.நன்றி வீரகேசரி
மன்னார் தாழ்வுபாட்டு கிராமத்தில் 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான கஞ்சா போதைப்பொருள் மீட்பு
16/12/2013
மன்னார் தாழ்வுபாட்டு கிராமத்தில் 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான கஞ்சா போதைப்பொருள் மீட்பு
16/12/2013

மன்னார் தாழ்வுபாட்டு கிராமத்தில் சுமார் 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான
கேரளா கஞ்சா போதைப்பொருளுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு விசேட
அதிரடிப்படையினரினால் இருவர் செய்யப்பட்டுள்ளனர்.
37 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் வத்தளை மற்றும் கல்முனை ஆகிய
பிரதேசங்களைச் சேர்ந்த இருவரே இவ்வாறு விசேட அதிரடிப்படையினரினால் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களிடமிருந்து கஞ்சா போதைப்பொருள் மீட்க்கப்பட்டதுடன்
மன்னார் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.நன்றி வீரகேசரி
தெஹிவளையில் மூன்று பள்ளிகளில் தொழுகைகளுக்கு பொலிஸார் தடை : மறுக்கின்றார் பேச்சாளர்
18/12/2013
தெஹிவளை -- கல்கிசை மாநகரசபைக்கு
உட்பட்ட பிரதேசங்களில் அமைந்திருக்கும் மூன்று பள்ளிவாசல்களில்
தொழுகைகளை மேற்கொள்ள வேண்டாமென நேற்று செவ்வாய்க்கிழமை பொலிஸாரால்
அறிவிக்கப்பட்டதையடுத்து அங்கு வாழ் முஸ்லிம்கள் மத்தியில் சற்று
பதற்றமான சூழல் தென்பட்டது.

தொழுகைகள் நடத்தப்படும் பட்சத்தில் தேவையற்ற பிரச்சினைகள்
உருவாகலாமென்ற அச்சத்தின் காரணத்தினாலேயே அத்திடிய மஸ்ஜித்துல்
ஹிபா, களுபோவில மஸ்ஜித்துல் தாரூல் சாபீய், தெஹிவளை தாரூல் அர்க்கம்
ஆகிய மூன்று பள்ளிவாசல்களிலும் தொழுகைகளை நடத்த வேண்டா மென பொலிஸ்
தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன்
தெரிவித்துள்ளார்.
குறித்த பள்ளிவாசல்கள் அமைந்திருக்கும் பிரதேசங்களில் உள்ள சில
பெளத்த மத குருமாரும்இ பெளத்தர்களும் இணைந்து மேற்படி பள்ளிவாசல்கள்
மூன்றும் சட்டவிரோதமானவை என பொலிஸாரிடம்
முறையிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதேவேளை, இவ்விவகாரம்
தொடர்பில் இன்று புதன்கிழமை சம்பந்தப்பட்டோருடன்
பேச்சுவார்த்தையொன்று மேற்கொள்ளப்படவிருப்பதாகவும்
தேவைப்படும் பட்சத்தில் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலர்
ஆகியோரின் கவனத்துக்கு கொண்டுவர விருப்பதாகவும் அமை ச்சர் றிஷாத்
பதியுதீன் தெரிவித்துள் ளார்.
பொலிஸார் மறுப்பு
இதேவேளை, தெஹிவளை பிரதேச பள்ளிவாசல்களில் தொழுகைகளை
மேற்கொள்ளவேண்டாமென பொலிஸா ரால் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினை
மறுத்துள்ள பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோகண,
பள்ளிவாசல்களில் தொழுகைகளை மேற்கொள்ள வேண்டாமென கூறுவதற்கு
பொலிஸாருக்கு அதிகாரம் கிடையாது. அல்லது தொழுகைகளை தடை செவதற்கான
அதிகாரமும் இல்லை என்று குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
எந்த பள்ளிவாசலிலும் பொலிஸார் தொழுகையை தடை செய்யவில்லை. தெஹிவளை
பிரதேசத்தில் அவ்வாறு எந்த சம்பவமும் இடம்பெறவில்லை. எனினும்
கொஹுவல பிரதேசத்தில், குர் ஆன் மத்ரஸாவாக நடத்தி வரப்பட்ட இடம்
ஒன்று தற்போது தொழுகைக்காக பயன்படுத்தப்பட்டுவருவதாக பெளத்த
பிக்கு ஒருவர் பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளார். அந்த முறைப்பாடு
தொடர்பில் விசாரணை செ ய்ய பெளத்த, முஸ்லிம் தரப்புப் பிரதி நிதிகளை இன்று
புத்தசான மற்றும் மதவிவகார அமைச்சுக்கு வருமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இதனை தவிர எந்த சம்பவமும் அங்கு இடம்பெறவில்லை.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொலிஸார் பள்ளி வாசலில் தொழுகைக்கு தடை விதிக் கவில்லை என தெரிவித்தார். நன்றி வீரகேசரி
வவுனியா அட்டம்பகஸ்கட சிறுவர் இல்லத்தை மறு அறிவித்தல்வரை மூடுவதற்கு உத்தரவு
வவுனியா அட்டம்பகஸ்கட சிறுவர் இல்லத்தை மறு அறிவித்தல்வரை மூடுவதற்கு உத்தரவு
18/12/2013 வவுனியா
அட்டம்பகஸ்கட செத்செவன சிறுவர் இல்லத்தின் செயற்பாடுகளுக்குத்
தடைவிதித்துள்ள வவுனியா மாவட்ட நீதிமன்றம், மறு அறிவித்தல் வரையில்
அதனை மூடி வைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
அட்டம்பகஸ்கட
சிறுவர் இல்லத்தில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்ற சிறுவர்
மீதான துன்புறுத்தல்கள் மற்றும் சிறுவர் மீதான பாலியல் துஷ்பிரயோகம்
தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அந்த இல்லத்தின் நிர்வாகியான
மதகுரு கல்யாணதிஸ்ஸ தேரரை மேலும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில்
வைக்குமாறு வவுனியா மாவட்ட நீதிவான் வி.இராமகமலன்
உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் நேற்று வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் எடுக்கப்பட்டபோது, சந்தேக நபராகிய மதகுரு, அவருடைய இல்லத்தில் இருந்த தன்னை அவர் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்தார் என்று ஒரு சிறுவன் செய்திருந்த முறைப்பாடுபற்றிய வழக்கில் அவரைக் கைது செய்து 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
அதேநேரம் செத்செவன இல்லத்து சிறுவர்களைப் பல வழிகளில் துன்புறுத்தினார் என சாட்டப்பட்டிருந்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் அவரைப் பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று அவரது சார்பில் வாதாடிய சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை நிராகரித்த நீதிவான் சந்தேக நபரை மேலும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் நலன்களைக் கவனிப்பதற்காக சட்டத்தரணிகளான இராஜகுலேந்திரா வி.என்.தம்பு ஆகியோர் ஆஜராகி சந்தேக நபருக்குப் பிணை வழங்குவதை எதிர்த்திருந்தனர்.
அட்டம்பகஸ்கட சிறுவர் இல்லம் சிறுவர் இல்ல விதிமுறைகள், ஒழுங்குகளைக் கடைப்பிடித்து நடத்தப்படவில்லை என்று நீதிமன்றத்தின் கவனத்திற்கு சிறுவர் நன்னடத்தைப்பிரிவு அதிகாரிகள் கொண்டு வந்ததையடுத்து, அந்த சிறுவர் இல்லத்தின் செயற்பாடுகளுக்குத் தடைவிதித்து, அதனை மறு அறிவித்தல் வரை மூடுமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கின் சந்தேக நபர், சிறுவர்களைத் துன்புறுத்தினார், பாலியல் துஷ்பிரயோகத்திற்கு அவர்களை உட்படுத்தினார் என்று மேலும் மேலும் அவருக்கு எதிராக முறைப்பாடுகள் வருவது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கும், பொலிசாருக்கும் உத்தரவிட்ட நீதிமன்றம் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் சம்பந்தப்பட்ட அதிகாரியை அடுத்த தவணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் இந்த வழக்குகள் தொடர்பிலான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. நன்றி வீரகேசரி
உள்நாட்டு, வெளிநாட்டுக் கலைஞர்கள் வழங்கும் மாபெரும் பரத நாட்டிய நிகழ்வு

இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் நேற்று வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் எடுக்கப்பட்டபோது, சந்தேக நபராகிய மதகுரு, அவருடைய இல்லத்தில் இருந்த தன்னை அவர் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்தார் என்று ஒரு சிறுவன் செய்திருந்த முறைப்பாடுபற்றிய வழக்கில் அவரைக் கைது செய்து 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
அதேநேரம் செத்செவன இல்லத்து சிறுவர்களைப் பல வழிகளில் துன்புறுத்தினார் என சாட்டப்பட்டிருந்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் அவரைப் பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று அவரது சார்பில் வாதாடிய சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை நிராகரித்த நீதிவான் சந்தேக நபரை மேலும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் நலன்களைக் கவனிப்பதற்காக சட்டத்தரணிகளான இராஜகுலேந்திரா வி.என்.தம்பு ஆகியோர் ஆஜராகி சந்தேக நபருக்குப் பிணை வழங்குவதை எதிர்த்திருந்தனர்.
அட்டம்பகஸ்கட சிறுவர் இல்லம் சிறுவர் இல்ல விதிமுறைகள், ஒழுங்குகளைக் கடைப்பிடித்து நடத்தப்படவில்லை என்று நீதிமன்றத்தின் கவனத்திற்கு சிறுவர் நன்னடத்தைப்பிரிவு அதிகாரிகள் கொண்டு வந்ததையடுத்து, அந்த சிறுவர் இல்லத்தின் செயற்பாடுகளுக்குத் தடைவிதித்து, அதனை மறு அறிவித்தல் வரை மூடுமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கின் சந்தேக நபர், சிறுவர்களைத் துன்புறுத்தினார், பாலியல் துஷ்பிரயோகத்திற்கு அவர்களை உட்படுத்தினார் என்று மேலும் மேலும் அவருக்கு எதிராக முறைப்பாடுகள் வருவது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கும், பொலிசாருக்கும் உத்தரவிட்ட நீதிமன்றம் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் சம்பந்தப்பட்ட அதிகாரியை அடுத்த தவணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் இந்த வழக்குகள் தொடர்பிலான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. நன்றி வீரகேசரி
உள்நாட்டு, வெளிநாட்டுக் கலைஞர்கள் வழங்கும் மாபெரும் பரத நாட்டிய நிகழ்வு
20/12/2013 இலங்கை
தமிழ் மக்களின் பாரம்பரிய கலாசாரங்களை பறைசாற்றும் வகையில்
டென்மார்க், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளை சேர்ந்த இலங்கை கலைஞர்கள்
மற்றும் இலங்கையில் 5 மாகாணங்களையும் உள்ளடக்கிய கலைஞர்களும்
ஒன்றிணைந்து நாளை கொழும்பு பம்பலப்பிட்டி கதிரேஷன் மண்டபத்தில்
விழா ஒன்றினை நிகழ்த்தவுள்ளனர்.
அண்ணாமலை பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் பம்பாய் சர்வதேச திறந்த பல்கலைக்கழகங்களில் நாட்டியத்துறையில் பலபட்டங்களைப் பெற்றவரும் ஜெயாஞ்சலி இன்டர்.நெஷனல் நிறுவனத்தின் நிறுவுனருமான பிரதீஷ் குமாரின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் இலங்கையில் 5 மாகாணங்களை சேர்ந்த புகழ்பெற்ற ஆசிரியர்களின் மாணவர்களும் அவுஸ்திரேலியா, டென்மார்க் நாட்டைச் சேர்ந்த இலங்கை கலைஞர்களும் கலந்து .சிறப்பிக்கவுள்ளனர்.
மேலும் இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வெளிநாட்டு பிரதிநிதி திரு.திருமதி. பேநாட் கில்ரோய் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இலங்கையிலிருந்து சுமார் 6 மாகாணங்களை சேர்ந்த பரதநாட்டிய குழுவினர் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர். அவர்களில் மேல்மாகாணத்திலிருந்து ஸ்ரீமதி வாசுகி ஜெகதீஸ்வரன் மற்றும் சூரியகலா சந்திரிக்கா ஜீவானந்தனின் மாணவர்களும், ஊவா மாகாணத்திலிருந்து பண்டாரவளை ஸ்ரீதரியின் மாணவர்களும் , மத்தியமாகாணம் கண்டியிலிருந்து ஸ்ரீமதி வைஜந்தி மாலா செல்வரட்ணத்தின் மாணவர்களும், கிழக்கு மாகாணம் திருமலையிலிருந்து ரேணுகா செல்வபுத்திரனின் மாணவர்களும் , மட்டக்களப்பிலிருந்து
உஷாதேவி கனகசுந்தரத்தின் மாணவர்களும் , வடமாகாணத்திலிருந்து சூரியாழினி வீரசிங்கத்தின் மாணவர்களும், டென்மார்க்கிலிருந்து இலங்கையைச் சேர்ந்த ஸ்ரீமதி கௌரி வசந்தி ஆசிரியையின் மாணவர்களும், அவுஸ்திரேலியா, மெல்போனில் இருந்து சாந்தி இராஜேந்திரனின் மாணவர்களும் இணைந்து இந்த நாட்டிய விழாவில் பங்கேற்கவுள்ளனர்.நன்றி வீரகேசரி
அண்ணாமலை பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் பம்பாய் சர்வதேச திறந்த பல்கலைக்கழகங்களில் நாட்டியத்துறையில் பலபட்டங்களைப் பெற்றவரும் ஜெயாஞ்சலி இன்டர்.நெஷனல் நிறுவனத்தின் நிறுவுனருமான பிரதீஷ் குமாரின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் இலங்கையில் 5 மாகாணங்களை சேர்ந்த புகழ்பெற்ற ஆசிரியர்களின் மாணவர்களும் அவுஸ்திரேலியா, டென்மார்க் நாட்டைச் சேர்ந்த இலங்கை கலைஞர்களும் கலந்து .சிறப்பிக்கவுள்ளனர்.
மேலும் இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வெளிநாட்டு பிரதிநிதி திரு.திருமதி. பேநாட் கில்ரோய் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இலங்கையிலிருந்து சுமார் 6 மாகாணங்களை சேர்ந்த பரதநாட்டிய குழுவினர் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர். அவர்களில் மேல்மாகாணத்திலிருந்து ஸ்ரீமதி வாசுகி ஜெகதீஸ்வரன் மற்றும் சூரியகலா சந்திரிக்கா ஜீவானந்தனின் மாணவர்களும், ஊவா மாகாணத்திலிருந்து பண்டாரவளை ஸ்ரீதரியின் மாணவர்களும் , மத்தியமாகாணம் கண்டியிலிருந்து ஸ்ரீமதி வைஜந்தி மாலா செல்வரட்ணத்தின் மாணவர்களும், கிழக்கு மாகாணம் திருமலையிலிருந்து ரேணுகா செல்வபுத்திரனின் மாணவர்களும் , மட்டக்களப்பிலிருந்து
உஷாதேவி கனகசுந்தரத்தின் மாணவர்களும் , வடமாகாணத்திலிருந்து சூரியாழினி வீரசிங்கத்தின் மாணவர்களும், டென்மார்க்கிலிருந்து இலங்கையைச் சேர்ந்த ஸ்ரீமதி கௌரி வசந்தி ஆசிரியையின் மாணவர்களும், அவுஸ்திரேலியா, மெல்போனில் இருந்து சாந்தி இராஜேந்திரனின் மாணவர்களும் இணைந்து இந்த நாட்டிய விழாவில் பங்கேற்கவுள்ளனர்.நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment