தமிழ் சினிமா


'ஆரம்பம்" அனுபவத்தை பகிர்கிறார் நடிகை அக்ஷரா


உலகெங்கும் வசூல் சாதனை புரிந்து வரும் 'ஆரம்பம்" படத்தில் மத்திய மந்திரி மகளாக நடித்து அஜித் குமாரின் கண்ணாடியை கழற்ற சொல்லும் காட்சியில் ரசிகர்களின் கோபத்துக்கு ஆளானவர் அக்ஷரா.
இவர் ஆரம்பம் படம் குறித்த அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்.
நான் அஜித் சாருடைய தீவிர ரசிகை. அவருடன் நடிக்க வேண்டும் என்று மிக ஆவலாய் காத்து கொண்டு இருந்தவள். என் நல்ல நேரம் அந்த தருணம் என் திரை உலக பயணத்தில் ஆரம்பத்திலே அமைந்தது.
அஜித் சாருடைய ரசிகர்கள் பலம் திரை அரங்கில் அந்த காட்சியை பார்க்கும் போது தான் தெரிந்தது. பயமாக இருந்தது என்றால் மிகை ஆகாது.
அந்த காட்சியில் நடிக்கும் போதே அஜித் சார்தான் என்னை தைரியமூட்டினார் என்றும் இப்போது எனக்கு இந்த அளவுக்கு நல்ல பெயர் கிடைத்திருப்பதற்கு அவரே காரணம் எனவும் கூறியுள்ளார்.
மேலும் நான் ஒரு பரத கலைஞர். சிறு வயதில் இருந்தே நடிப்பில் ஆர்வம் உண்டு. நாடோடிகள் இந்தி பதிப்பான 'Rang Race'  படத்தில் நடித்து உள்ளேன். எனக்கு பிடித்த நடிகர் பிரட்லி கூப்பர்.
பிடித்த நடிகை கரீனா கபூர், அவருடைய மெல்லிய இடை வாகும் அவர் தன்னை கட்டுக் கோப்பாக வைத்து இருக்கும் அழகையும் நான் என்றுமே ரசிப்பவள்.
விளையாட்டுத் துறையில் எனக்கு மிகவும் ஈடுபாடு உண்டு. நான் தேசிய அளவில் கை பந்து போட்டியில் கலந்து கொண்டவள்.
விளையாட்டு துறையில் உள்ளதனாலோ என்னவோ எனக்கு மன உறுதியும் திடமும் அதிகம். அந்த உறுதியோடு தமிழ் திரை உலகில் ஒரு நிரந்தரமான முக்கிய இடத்தை பிடிப்பேன் என்கிறார் அக்ஷரா. நன்றி வீரகேசரி 


No comments: