இலங்கையில் நீடித்த போரில் பெற்றவர்களை இழந்த ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு அவுஸ்திரேலியாவிலிருந்து உதவிவரும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் நிதிக்கொடுப்பனவு நிகழ்வும் தகவல் அமர்வும் மாணவர் ஒன்று கூடலும் அண்மையில் திருகோணமலை, செங்கலடி, கல்முனை ஆகிய பிரதேசங்களில் நடைபெற்றன.
கடந்த பலவருட காலமாக அவுஸ்திரேலியாவில் இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் திருகோணமலையில் நிலாவெளியில் இயங்கும் நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஊடாக கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் கிழக்கு பல்கலைக்கழகத்திலும் பல மாணவர்களுக்கு உதவிவருகிறது.



கல்முனை பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலத்தில் மாணவர் தகவல் அமர்வு வித்தியாலய அதிபர் திருமதி சிவமணி நற்குணசிங்கம் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. குறிப்பிட்ட நிகழ்வுகளில் சில காட்சிகளை படங்களில் காணலாம்.
No comments:
Post a Comment