நீயே நிழலென்று - ஸ்ரீரஞ்சனி - சிறுகதை

.


தொலைபேசி ஒலிப்பிய மணிச்சத்தம் கேட்டதும் மீன் வெட்டிக் கொண்டிருந்தகையை அவசரமாகக் கழுவி விட்டுஅது தீபாவாகத் தானிருக்கும் என்றுஆர்வத்துடன் ஓடிச் செல்கிறேன் நான்ஆனால் அது வழமையாக வரும் மாதாந்தகிறிஸ்தவ ஆராதனை பற்றிய பிரச்சாரத்துக்கான மின்கணிணி அழைப்பு எனதொலைபேசி இலக்கத்தைப் பார்த்ததும் புரிகிறதுஎனக்குத் தேவையற்ற அந்தச்செய்தி தொலைபேசியில் பதியப்படாமல் இருப்பதற்காக றிசீவரைத் தூக்கி மீண்டும்வைத்துவந்த லைனைக் கட் பண்ணி விட்டு மீண்டும் குசினிக்குள் போகிறேன்.இருந்தாலும் அவள் சொன்ன மாதிரி எப்படியும் இன்று போன் பன்ணுவாள் என்பதில்எனக்கு எந்தவித ஐயமும் இருக்கவில்லை.
அந்த நினைவைத் தொடர்ந்து தீபா பல்கலைக்கழகம் போக முன் சினேகிதர்களுடன்காம்பிங்க்குப் போன போதுஎதிர்பாராமல் வந்து மனதில் நிறைவை ஏற்படுத்தியஅவளின் கோல் ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது.

'மம்கௌ டிட் யுவர் அப்பொயின்ற்மேன்ற் கோ?'
'பிள்ளைக்கு எப்பிடி ஞாபகம் வந்ததுஎங்கையிருந்து போன் எடுக்கிறாய்?'
'இங்கையிருக்கிற ஒரு கடையிலிலை இருந்து போன் பண்ணுறன்என்ன நடந்ததுஎண்டு கேக்கிறதுக்காண்டியும்உங்களோடை கதைக்கிறதுக்காண்டியும் ஒரு மூண்டுமைல் தூரம் ஓடி வந்தனான.;'
' மை பேபிற் வாஸ் ஒகேஅவ்வளவு தூரம் தனிய ஓடி வந்தனியே?'
'யேஸ் லவ் யுஎன்ன நடந்தது எண்டு எனக்கு தெரியோணும் போலிருந்தது.'
'அம்மாவுக்கு டே சேஜறி நடந்த போது ஆறு வயசுக் குட்டியாய் இருந்த போதே கெற்வெல் காட் செய்து கொண்டு வந்தவள் எல்லே என்ரை பிள்ளை,' மனசு சிலிர்த்துக்கொள்கிறதுஉண்மையிலேயே அவளுக்கு என்னில் அத்தனை பாசம் தான்.

ஏதாவது சாப்பிடக் கொடுத்தால், 'நல்லா இருக்குதுதாங்ஸ்நீங்கள்சாப்பிட்டியனியளே?' என பாராட்டும் கரிசனையுமாக கேட்பாள்வீட்டில் நிற்கும்பொழுதுகளில் 'அம்மா நான் சாப்பாடு செய்யப் போறன்உங்களுக்கு நூடில்ஸ்சாப்பிட வேணும் போலிருக்கா அல்லது ஏதாவது சான்ட்விச் செய்யட்டா?' என்பாள். 'கடைக்கு நீங்கள் மட்டும் போக வேண்டாம்நானும் வருகிறேன் போட்டு வந்து கோம்வேக் செய்யலாம் டோன்ற் வான்ற் யு பி எலோன்,' பிடிவாதாமாய்ச் சொல்வாள்.
அப்படி அவள் என்னுடன் ஒட்டிக்கொண்டு இருந்ததால் தான் இப்ப இப்படி இருக்கும்தனிமையைத் தாங்க முடியவில்லை என்ற நிதர்சனத்தில் மனது மிக வலிக்கிறது.

கலியாணம் செய்து ஐந்து வருடங்களாகியும் கர்ப்பம் தங்கவில்லைஅதற்காகப் பலவேண்டுதல்கள்ஆயிரம் பரிசோதனைகள்அதை விட மற்றவர்களின் கேள்விகள்,குடையல்கள் என்று இருந்த போது எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்குமாய்ப்போல் எதிர்பாராத ஆச்சரியமாய் தீபா என் வயிற்றில் வந்த போது எனக்கு வந்தஆனந்தம் அளவிட முடியாதது.

அன்றிலிருந்து வேலையைக் கலியாணம் கட்டியினியளோஎன்னைக் கட்டினியளோஎன அவரிடம் போட்ட சண்டைகளுக்கும் கூட முற்றுப்புள்ளி வந்ததுஅவளை என்கைகளில் வாங்கிய கணத்திலிருந்து அவரைக் காணவில்லை என தவித்துஏங்கிப்பின்னர் அந்தக் காத்திருப்பு எரிச்சலைத் தர அவருடன் பிரச்சனைப்பட்ட பொழுதுகள்போய் அவர் வீட்டுக்கு பிந்தி வந்தால் நல்லம் என மனம் எண்ணும் அளவுக்குதீபாவுடன் என் வாழ்க்கை ஐக்கியமாய்ப் போய் விட்டது.
காலையில் பாடசாலைக்குப் போய் மாலை 2 மணிக்கு வீட்டுக்கு வந்த பின் இரவுபடுக்கும் வரை அவளுடன் விளையாடுவதில் எனக்கு நேரம் எப்படி போவது என்றேதெரிவதில்லை.
பின்னர் அவளுக்கு மூன்று வயதான போது விஸ்வருபம் எடுத்த நாட்டுப் பிரச்சனைஎம்மை நாட்டை விட்டுத் துரத்தி கனடாவில் தஞ்சம் கேட்க வைத்ததுஅங்கு செய்ததொழிலை இங்கு தேட வேண்டுமானல் மேலும் படிக்க வேண்டும் என்று ஆன போதுவிடியவெள்ளன நித்திரையில் பிள்ளையை இழுத்துக் கொண்டு போய் பிள்ளைகள்காப்பகத்தில் விட்டுவிட்டு அதற்காகப் படிக்க போவதையோ அல்லது வேறுவேலைக்கு ஓடுவதையோ என்னால் கற்பனை பண்ணிப் பார்க்கவும் முடியவில்லை.
'ஒரு பிள்ளை தானே நான் வீட்டில் இருக்கிறேன் நீங்கள் உழைத்தால் போதும்எனகணவனிடம் சம்மதம் வாங்கிக் கொண்டேன்.
ஒருநாள் நாங்கள் இருந்த தொடர் மாடிக்கட்டிடத்தின் முன் இருந்த நூலகத்துக்குப்போய் 'மூன்று வயதுப் பிள்ளையை உள்ளே கூட்டி கொண்டு வரலாமோஎன நான்அசட்டுத்தனமாய்க் கேட்கிறேன்அந்த நூலகர் பிள்ளையின் பெயரில் 'லைபிரரிக்காட்கூட எடுக்கலாம் என கனடாவில் பிள்ளைகளுக்கும் இலக்கியத்துக்கும்கொடுக்கப்ப்டும் முக்கியத்துவத்தைக் கோடிட்டுக் காட்டுகிறார்பிறகென்ன எங்கள்பொழுதுகள் அங்கு ஆனந்தமாய்க் கழிகின்றன.

தீபா பாலர் வகுப்பை ஆரம்பித்த போது பெரிய கதைப் புத்தகங்கள் வாசிக்குமளவுக்குஅவளின் வாசிப்புத்திறன் விஸ்தரித்திருந்ததுஅப்போது அந்தப் பாடசாலையில்ஆரம்பித்த ஒரு பரீட்சார்த்த வாசிப்புப் பயிற்சியின் வெற்றியைப் பற்றிமற்றவர்களுக்கும் அறிவிப்பதற்கு அவர்கள் செய்த விளம்பரத்தில் an immigrant child in JK can read chapter books without any hesitance என வருகிறதுஇதனால் அவளின்கெட்டித்தனம் செய்தியாகபல பெற்றோர் என்னை ஒரு வெற்றியாளராகப்பார்க்கின்றனர்எப்படி நான் அவளைப் படிப்பிக்கிறேன்தங்கள் பிள்ளைகளுக்கு தாம்எப்படி உதவலாம் என என்னைப் பல விசாரணைகள் செய்கின்றனர்நானும்புளகாங்கித்துப் போகிறேன்அவளின் வெற்றி மட்டும் என் வாழ்வுக்குப் போதுமானதுஎன மனம் நிரம்பி விடுகிறது.

முதலாம் வகுப்பில் அவளுக்கும் மட்டும் அவளின் ஆசிரியர் பிரத்தியேகமாய்கொடுத்த project ல் Red Panda பற்றி எழுத அவள் முடிவெடுக்கிறாள்நூலகரிடம்போய் Red Panda பற்றிய புத்தகங்கள் அங்கு இருக்குமா என அவரின்மின்கணிணியில் உள்ள பதிவுகளில் தேடிப் பார்த்துச் சொல்ல முடியுமா எனக்கேட்கிறோம்.

அவர் ஒரு குறித்த இலக்கத்தைத் தந்து அந்த இலக்கத்தின் கீழ் தான் Red Panda சம்பந்தமான எல்லாப் புத்தகங்களும் இருக்கும் என்கிறார்அதற்குத் தீபா Red Pandaஒரு Panda இல்லை,' எனச் சொன்ன போது அவருக்கே அது செய்தியாக இருக்கிறது.அவளின் அறிவில் அவர் வியந்து போகிறார்.

 'தீபாஉனக்கு எப்படித் தெரியும்ரீச்சர் சொன்னவவா?' என ஆவலுடனும்பெருமையுடனும் கேட்கிறேன்.

'இல்லை ரீவியிலை பார்த்தனான்,' என்கிறாள்இப்படி அவளின் அறிவை,ஞாபகசக்தியைபுத்திக் கூர்மையைப் பார்த்து வியந்த சந்தர்ப்பங்கள் ஏராளம்அவள்கேட்கும் கேள்விகளுக்கு பதில் தெரியாமல் பதில் தேடி நான் ஆராய்ந்த பொழுதுகள்கணக்கில் அடங்காதவைஅவளின் பாசமும் கெட்டித்தனமும்அமைதியானசுபாபமும் இவளைப் பிள்ளையாகப் பெற நான் என்ன புண்ணியம் செய்தேன் எனஎப்போதும் என்னைக் கண் மல்க வைக்கும்அவளின் சான்றிதள்களையும்தேர்ச்சித்தாள்களையும் வங்கியில் பாதுகாப்பான இடத்தில் வைத்து அதுவே எமதுசொத்தாக மனம் மகிழ்கிறோம்.

ஒவ்வொரு முறையும் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு முடிந்து வந்த பின் ஆசிரியர்அவளைப்பற்றிச் சொல்லிப் பாராட்டியவை யாவும் பல தடவைகள் மீள மனதில் ஓடிஒரு இனம் புரியா மகிழ்வைக் கொண்டு வரும்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் Science centre, museum என்று அவளுடன் போவதும்நாள் முழுக்க அங்கு கழிப்பதும் எமது வாடிக்கையாகினகோடை விடுமுறை வந்துவிட்டால் Wonderland, Ontario Place, strawberry picking, camping என்று போய் நானும்அவளுடன் என்னை மறந்து மகிழ்வது தான் எமது வாழ்க்கையாகிறதுபோதாதற்குpiano வகுப்புக்கள் swimming பயிற்சிகள் என்று எப்போதுமே ஓட்டம் தான்.

பின்னர் அவள் வளர்ந்த பின் 'கை உளையுதுகால் உளையுதுசோம்பலாயிருக்குது'என நான் சொன்ன பொழுதுகளில் என் உடல் வலுவைப் பேணஎன்னை இழுத்துக்கொண்டு வீட்டைச் சுற்றிச் சுற்றி அவள் ஓடிய ஓட்டங்கள்... இப்படிப் பல நினைவுகள்மாறி மாறி வந்து கண்ணீரை கொட்ட வைத்துக் கொண்டிருந்தன.

மருத்துவக்கல்லூரியில் அவள் விசேட சித்தியடைந்து மேற்படிப்புக்காகபுலமைப்பரிசில் கிடைத்து அமெரிக்காவுக்குப் போய் பத்து மாதங்கள் ஆகிவிட்டன.எனக்கு இன்னமும் அதை ஏற்கும் மனப்பக்குவம் வரவில்லைஅது மட்டுமன்றி மனஅழுத்தம் என்று குளிசை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்குப் வந்து விட்டேன்.

சென்ற முறை இது பற்றிக் கவுன்சிலருடன் கதைத்தவை நினைவுக்கு வருகின்றன. 'சரிஉங்களுக்கே உங்கடை பிரச்சனை விளங்குதுபிள்ளைக்காக வாழ்ந்து போட்டுஇப்ப இப்படி இருக்கிறது எந்த வித நோக்கமும் இல்லாத வாழ்வு எண்டு நீங்கள்நினைக்கிறியள்அது உங்களுக்கு சலிப்பைஏமாற்றத்தைத் தருது.'

'ஓம்நீங்கள் சொன்ன மாதிரி தொண்டர் வேலைக்கு போறனான்ஆனாலும் அதுபெரிசாய் உதவேல்லை,' மீண்டும் கண்ணீர் தடைசெய்ய முடியாமல் ஓடுகிறது.

'இந்த விரக்தியிலிருந்து வெறுமையிலிருந்து மீள என்ன செய்யலாம் எண்டு நீங்கள்நினைக்கிறீர்கள்?'

மௌனமாய் இருக்கிறேன்.

கவுன்சிலரே தொடர்கிறார், 'ம்உங்கடை மனம் நிறைஞ்சு போற மாதிரி ஏதாவதுஒண்டோடை ஒட்டிப் போகவேணும்மகளோடை போய் இருந்தால் நல்லம் எண்டுநினைக்கிறியளோஅதுக்கு வழி இருக்குதோ அல்லது இங்கை உங்களுக்கு எண்டுஒரு வாழ்வை உருவாக்கப் பாருங்கோஎதையும் யோசியாமல் மனம் லயித்துசெய்யக்கூடியதாய் ஏதாவது படிக்கலாம் அல்லது வேலை செய்யலாம்ஏன் ஒருபிள்ளையைத் தத்தெடுத்து கூட வளர்க்கலாம்இந்த மன நெருக்கீட்டிலிருந்துஇருந்து வெளியேற வேணும் இல்லையாயோசித்துப் பாருங்கோஅடுத்த முறைவரும் போது ஒவ்வொன்றைப் பற்றியும் விரிவாய்க் கதைப்பம்,'

அப்படி கவுன்சிலர் சொன்னது பற்றி யோசித்துப் பாக்கிறேன்.

பல்கலைக்கழகத்திற்கு போன பின் தானே தன் வேலை எல்லாம் செய்யப் பழகி,என்னில் தங்காமல் வாழ தீபா பழகிக்கொண்டாள்நான் விடிய எழும்பிசாப்பிட்டிட்டியாசாப்பாடு எடுத்தியா எண்டு கேட்டால்சில வேளைகளில் அவளுக்குஎரிச்சல் கூட வந்திருக்கிறதுஅப்பவெல்லாம் அவளின் மற்றவர்களில் தங்கியிராததன்மையைப் பற்றி மகிழாமல், 'என் தேவையை நாடுகிறாள் இல்லையே என்றுகவலைப்பட்டிருக்கிறேன';. இப்ப என்னில் ஒரு பகுதியை இழந்தது போல் என்னசெய்வதெனறு தெரியாமல் குழம்பிப் போய் நிற்கிறேன்அவளின் அசைவை எப்போஎன் கருப்பையில் நான் உணர்ந்தேனோ அன்றிலிருந்து நான் அம்மாவாக மட்டுமேஇருந்திருக்கிறேன்.
என்னைப் பற்றி எந்த நினைவும் இல்லாமல்எனக்கென ஒரு அடையாளமும்;ல்லாமல,; வெறும் தீபாவின் அம்மாவாக மட்டுமா வாழ்ந்ததால் தான் எனக்கெனஒரு இலக்கு இல்லாது என் வாழ்க்கைப் படகு ஆட்டம் காண்கிறது என்பது புரிகிறது.வாழ்க்கை பல பக்கங்களைக் கொண்டது எல்லாவற்றிலும் ஒரு சமநிலையானஅணுகுமுறை இருந்திருக்க வேண்டும் என்பதும் விளங்குகிறது.

மீண்டும் தொலைபேசி மணி ஒலிக்கிறது.
அது தீபா தான்.
'அம்மா எப்படியிருக்கிறீங்கள்?' அவளின் குரல் என் காதுகளில் தேனாய் ஒலிக்கிறது. 'நல்லாய் இருக்கிறன்நீ எப்படி இருக்கிறாய்?' குரலில் மனம் நிறைந்த மகிழ்வுடன்கேட்கிறேன்.

'ஒவ்வொரு முறையும் நான் கதைக்கேக்கை நீங்கள் அழுகிறதுபிறகு அதைநினைச்சு நான் கவலைப்படுகிறது பற்றியெல்லாம் யோசித்துப் பாத்தன்அப்பாவும்தன்ரை வேலையை விட்டுவிட்டு இங்கே வரமாட்டன் என்கிறார்நீங்களும் அவரைவிட்டுவிட்டு எப்படி வாறது என்று யோசிக்கிறியள்என்ரை படிப்பு முடிய இன்னும் 2வருஷம் இருக்குதுஅது தான் அப்பாவோடை கதைச்சுப் பாத்தன்இங்கை ஆறுமாசம்உங்கை ஆறு மாசம் நீங்கள் இருக்கலாம் எண்டு அவர் ஒத்துக்கொண்டிட்டார,;'
மிகச் சந்தோஷமாகச் சொல்கிறாள் அவள்.

'தீபாக்குஞ்சுநான் உன்னை எவ்வளவு மனக்கஷ்டப்படுத்திப் போட்டனெண்டுவிளங்குதுஅப்பாவுக்கு சமைச்சுச் சாப்பிட்டுப் பழக்கமில்லைசாப்பாட்டுக்குஎன்னிலை தங்கியிருந்து அவருக்குப் பழகிப் போச்சுதுஅங்கை நான் வந்தால் பிறகுஅதைப் பற்றி வேறை கவலைப்பட வேணும்அதோடை நீயும் நான் தனியஇருக்கிறன் எண்டு நேரத்துக்கு வீட்டை வர வேணுமே எண்டு பரிதவிப்பாய்அதைவிட அப்படி இரண்டு வருஷத்திலை படிப்பு முடிஞ்சதும் நீ அவசரப்பட்டு இங்கை ஓடிவர வேணும் எண்டுமில்லை.'

'அம்மாஅப்ப என்ன தான் செய்யலாம் என்றியள்.'

'நானும் யோசித்துப் பார்த்தனான்இவ்வளவு நாளும் நான் என்னை வளர்க்கேல்லைஇப்ப இந்தச் சந்தர்ப்பத்தைப் பாவிச்சு அதைச் செய்வம் எண்டு நினைக்கிறன்.அதாலை இனி என்னைப் பற்றிக் கவலைப்படாதை.'

'அம்மா உண்மையாகவா சொல்லுறியள்எனக்காண்டிச் சொல்லேல்லைத் தானே?நீங்கள் உங்களுக்காண்டி வாழ வேணும் எண்டு நான் எவ்வளவு ஆசைப்பட்டனான்,'அவளின் குரலில் மகிழ்ச்சி கொப்பளிக்கிறது.

'ஓம்நான் இனி எனக்கெண்டு ஒரு வாழ்வை வாழுவம் எண்டு யோசிக்கிறன்அடுத்தமுறை கதைக்கேக்கை ஒரு சப்பிரைஸ் உனக்குக் கிடைக்கும்இப்ப சொல்லு உன்ரைலைவ்வைப் பற்றிமோகன் என்னவாம்படிச்சு முடிச்ச பிறகு தான் கலியாணம்எண்டதுக்கு சம்மதமாமோஇல்லாட்டில் கட்டிப்போட்டும் படிக்கலாம் தானே!யோசித்துப்பார்அம்மாவுக்கு எல்லாம் சம்மதம் தான்இது உன்ரை வாழ்வுஉனக்குப்பிடிச்ச மாதிரி நீ முடிவு செய்மற்றவையைப் பற்றி அதிகம் போசிக்காதை,'
மனதார அவளுக்கு அதைச் சொல்லும் போது அதை எனக்கு நானே சொல்வதுமாதிரியும் என் காதினுள் அது ஒலிக்கிறது.

நன்றி:

No comments: