இறக்கைகள் -கவிதை - ராமலஷ்மி

.

நாம் பறந்தபடி நாட்கள் பறப்பதாக
அடிக்கடி சொல்லிக் கொள்கிறோம்.

பறந்த நாட்கள் ஒன்றன்மேல் ஒன்றாக
அடுக்கிக் கொண்டே வரப்படுகின்றன
மாதங்களாகவும் வருடங்களாகவும்.

அவற்றின் இடுக்குகளில் மாட்டிக் கொண்டு
சோபையிழந்து சிரிக்கின்றன
அர்த்தமற்றப் பெருமிதங்களும்
கொண்டாடிய சம்பவங்களும்
உயர்வாய் நினைத்த சேகரிப்புகளும்.

எதையோ தேடப்போனபோது
அகப்பட்டன
அனுபவப் பாடங்களும்
தொடர்பறுந்த நட்புகளும்
தவறவிட்டப் பல
அற்புதத் தருணங்களும்.

இறக்கைகளைக் கழற்றி விட்டு
நடக்கத் தொடங்கிய என் கைகளை
ஒரு குழந்தையின் குதூகலத்துடன்
பற்றிக் கொண்டு

தளிர்நடை போடுகிறது காலம்.

 
Nantri: Muthusaram

No comments: