இலங்கைச் செய்திகள்


ஆஸி. நோக்கிச் சென்ற பலரது நிலை இதுவரை தெரியாத நிலையில் குடும்பத்தார் பரிதவிப்பு
 

பான் கீ மூன்– மன்மோகனை சந்திக்காது ஜனாதிபதி மஹிந்த நாடு திரும்பினார்

இலங்கையர்களின் பாதுகாப்புக்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்: இந்தியா

யாழ். வேம்படி மகளீர் பாடசாலை மாணவிகள் ஆர்ப்பாட்டம்

யாழ்.வேம்படி மகளிர் கல்லூரி அதிபர் சர்ச்சைக்குத் தீர்வுகாணுங்கள்: பழைய மாணவர் கண்டனப் பேரணி

அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் 27ஆம் ஆண்டு நினைவுதினம்

யாத்திரிகர்கள் மீதான தாக்குதலை கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்

நம்பிக்கையுடன் மீண்டும் வாழ்க்கையை துவக்கியுள்ளோம்: இலங்கை தமிழர்கள் திருப்தி

பயங்கரவாதத்துக்கு பின்னான நல்லிணக்கம்: ஸ்ரீலங்காவின் அனுபவம்

ஆஸி. நோக்கிச் சென்ற பலரது நிலை இதுவரை தெரியாத நிலையில் குடும்பத்தார் பரிதவிப்பு

மன்னார் மாவட்டத்தில் இருந்து கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியா சென்ற பலரது நிலைமை இதுவரை என்னவென்று தெரியாத நிலையில் அவர்களுடைய குடும்பங்களும்,உறவினர்களும் பெரும் துயரத்தில் வாழ்ந்து வருவதாகத் தெரிய வருகின்றது.

தற்போது நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல இலட்சம் ரூபா பணத்தைக் கொடுத்து படகுகள் மூலம் அவுஸ்திரேலியா செல்கின்றனர்.




இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் அவுஸ்திரேலியா செல்வதாக சென்றுள்ளனர்.

இவர்களில் பலர் ஆஸி.யை சென்றடைந்த நிலையில் தமது குடும்பத்தாருடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளனர்.

ஆனால் அதிகளவானவர்கள் இதுவரை எவ்வித தொடர்புகளும் இன்றி இருப்பதாக உறவினர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் இருந்து கடந்த மூன்று மாதங்களாக ஆஸி. நோக்கி சென்றுள்ளனர்.

இவ்வாறு சென்றவர்களில் அதிகளவானவர்கள் கடற்தொழிலில் ஈடுபடுபவர்கள் ஆவர்.

இவர்கள் படகுக்கட்டணமாக 5 இலட்சம் ரூபா தொடக்கம் 9 இலட்சம் ரூபா வரை செலுத்தியே சென்றுள்ளனர்.

பலர் கடலில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் யாழ்ப்பாணம்,திருகோணமலை,கிளிநொச்சி,நீர் கொழும்பு கடற்கரையூடாகத் தமது பயணங்களை மேற்கொண்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மன்னார் மூர்வீதி,பனங்கட்டுக்கோட்டு,வங்காலை,
பேசாலை,தலைமன்னார் உட்பட மன்னார் மாவட்டத்தின் சகல பாகங்களில் இருந்தும் அதிகளவான தமிழர்கள் ஆஸி. நோக்கிச் சென்றுள்ளனர்.

கடந்த 2 மாதங்களுக்கு முன் சென்ற பலர் இது வரை தமது குடும்பத்தினருடனும்,உறவினர்களுடனும் எதுவித தொடர்பையும் ஏற்படுத்தவில்லை என அவர்களுடைய உறவினர்கள் அச்சம் தெரிவித்துள்ளதோடு இவர்களுடைய நிலைவரம் தொடர்பில் எங்கு முறையிடுவது எனத் தெரியாத நிலையில் உறவினர்கள் நிர்க்கதியாகியுள்ளனர்.   நன்றி வீரகேசரி 


  பான் கீ மூன்– மன்மோகனை சந்திக்காது ஜனாதிபதி மஹிந்த நாடு திரும்பினார்
By General
2012-09-03 0

ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை நியமித்த இருவர் கொண்ட குழு ௭திர்வரும் 14 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கின்ற நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தை சந்திக்காமலேயே நாடு திரும்பியுள்ளார்.

பான் கீ மூனை மட்டுமன்றி இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்திக்காமல் கடந்த சனிக்கிழமை நாடு திரும்பியுள்ளார்.அணிசேரா நாடுகளின் 16 ஆவது மாநாட்டில் பங்கேற்பதற்காக தெஹ்ரான் சென்ற ஜனாதிபதி அங்கு வைத்து இவ்விருவரையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார் ௭னப் பரவலாக ௭திர்பார்க்கப்பட்டிருந்தது.

௭னினும்  அவ்விருவரையும் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை ௭ன்று தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் ஜனாதிபதி கடும் அதிருப்தி கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.தெஹ்ரானில் தங்கியிருந்த காலத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு முஸ்லிம் நாடுகளின் தலைவர்களை மட்டுமே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்புக் கிட்டியுள்ளது.

அதன் அடிப்படையில் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமிட் கர்ஷாய், பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் சர்தாரி, ஈரான் ஜனாதிபதி மஹ்மூத் அஹமட் நிஜாட், லெபனான் ஜனாதிபதி ஜெனரல் மிஷெல் சுலைமான் ஆகியோரையும் ஈரான் ஆன்மிகத் தலைவர் ஆயத்துல்லாஹ் அலி கொமய்னியையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

முஸ்லிம் நாட்டு தலைவர்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இருநாட்டு உறவுகளை மேம்படுத்தி கொள்வது தொடர்பிலேயே கூடுதலான கவனம் செலுத்தப்பட்டது ௭ன்று ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ௭திர்வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதி இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.    நன்றி வீரகேசரி 



  இலங்கையர்களின் பாதுகாப்புக்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்: இந்தியா
By General
2012-09-05 0

இந்தியாவுக்கு வரும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தேவை யான அனைத்து நடவடிக்கைகளையும் தான் மேற்கொள்ளவுள்ளதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையினால் விடுக்கப்பட்ட பயண ௭ச்சரிக்கை குறித்து ஊடகங்கள் ௭ழுப்பிய கேள் விக்கு பதிலளிக்கையில் கொழும்பிலு ள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இவ்வாறு தெரிவித்துள்ளது. இலங்கையர்கள் தமிழ்நாட்டுக்குப் பயணம் செய்வது குறித்து இலங்கை அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட பயண ௭ச்சரிக்கையை நாம் கவனத்திற்கொண்டுள்ளோம் ௭ன இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு உட்பட இந்தியாவுக்கு செல்லும் இலங்கையர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாநில அரசாங்கங்களின் நெருக்கமான கலந்தாலோசனையுடன் அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசாங்கம் மேற்கொண்டுள்ளது ௭ன்பதை நான் தெரிவிக்க விரும்புகிறேன் ௭ன அவர் கூறினார்.

சில முக்கிய விஜயங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முன்னறிவிக்கப்படாமல் இட ம் பெற்றமையும் சில சந்தர்ப்பங்களில் அவதானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ‘‘இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நெருக்கமான வரலாற்று, கலாசார, இனத்துவ மற்றும் சிவில் உறவுகளில் மக்களுக்கும் மக்களுக்கும் இடையிலான தொட ர்பு முக்கிய அங்கமாகும் ௭ன்பதை நான் கண்டுள்ளேன். கொழும்பிலுள்ள ௭மது உயர்ஸ்தானிகராலயம் கடந்த வருடம் சுமார் 200,000 இலங்கையர்களுக்கு விஸா வழங்கியுள்ளது. 2011 ஆம் ஆண்டு சுமார் 175,000 இலங்கையர்களுக்கு விஸா வழங்கியுள்ளது ௭ன அவர் கூறியுள்ளார்.     நன்றி வீரகேசரி 


யாழ். வேம்படி மகளீர் பாடசாலை மாணவிகள் ஆர்ப்பாட்டம் 

05/09/2012
vempadi-1யாழ். வேம்படி மகளீர் உயர்தர பாடசாலைமுன் பழைய மாணவிகள் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை 8.30 மணியளவில் ஆரம்பமான ஆர்ப்பாட்டம் தற்போதும் இடம்பெற்று வருகின்றது. இதில் வேம்படிக்கு வேண்டும் நிரந்தர அதிபர், கல்விப் குழப்பநிலையினை நியாயமாக தீர்த்து வை! பொதுச் சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட அதிபரிடம் பெறுப்புக்களை கையளி, கல்வி அதிகாரிகளே ஏன் இந்த அலட்சியம் உடனடியாக பொறுப்புகளை கையளி கல்வித் தரத்தை நிலைநிறுத்து போன்ற பதாதைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய அதிகாரிகள் வந்து தீர்வு வழங்கும் வரை எமது போராட்டம் தொடரும் எனஅவர்கள் எச்சரித்துள்ளனர். பொதுச்சேவை ஆணைக்குழுவினால் புதிய அதிபராக நியமிக்கப்பட்டுள்ள வேணுகா சண்முகரத்தினத்திடம் பொறுப்புக்களை கையளிக்க வேண்டும் எனக் கோரியே இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி தேனீ 

யாழ்.வேம்படி மகளிர் கல்லூரி அதிபர் சர்ச்சைக்குத் தீர்வுகாணுங்கள்: பழைய மாணவர் கண்டனப் பேரணி
By General
2012-09-06

யாழ்.வேம்படி மகளிர் கல்லூரியில் கடந்த மூன்று மாதங்களாக நிலவிவரும் அதிபர் சர்ச்சைக்கு விரைவாகத் தீர்வுகாண வேண்டுமெனக்கோரி நேற்றுக் கல்லூரியின் பழைய மாணவர்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
காலை 8 மணிக்கு பாடசாலையின் வளாகத்துக்கு முன்பாக ஒன்றுகூடிய பழைய மாணவர்களும் பெற்றோர்களும் நலன்விரும்பிகளும் இக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கல்வி அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையால் யாழ்.கல்வித்தரம் வீழ்ச்சியடைவதாகவும் இப்பாடசாலையில் நிலவிவரும் நிர்வாக ஒழுங்கீனத்துக்கு நாடளாவிய ரீதியில் கவனயீர்ப்பை ஏற்படுத்துவதற்காகவுமே இப்போராட்டத்தினை நடத்துவதாகக் கோரி தொடர்புடைய அதிகாரிகளுக்கு மகஜர் ஒன்றினையும் அனுப்பி வைத்துள்ளனர்.
அந்த மகஜரின் முழுமையான விபரம் வருமாறு,
வேணுகா சண்முகரட்ணம் பொதுச்சேவை ஆணைக்குழுவினால் மேற்படி பதவிக்கு நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து 2.7.2012ஆம் திகதியன்று தனது பதவியினைப் பொறுப்பேற்றார்.
ஆயினும் அவரிடம் பிரதி அதிபரால் பொறுப்புக்கள் கையளிக்கப்படாதமை தொடர்பாக பல முறையீடுகள் அனுப்பப்பட்டன. இதன் காரணமாக ஜனாதிபதி செயலகம், பொதுச்சேவை ஆணைக்குழு, கல்வியமைச்சரின் பிரத்தியேக செயலர், கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஆகியோரிடமிருந்து அறிவுறுத்தற் கடிதங்கள் அனுப்பப்பட்ட போதும் எமது பாடசாலையின் நிலையை ஸ்திரப்படுத்துவதற்கு யாழ்.கல்வி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. யாழ்ப்பாணத்தின் கல்வித்தரத்தை உறுதிப்படுத்தவேண்டிய பொறுப்பும் கடமையும் அரசாங்க உத்தியோகத்தர் என்ற வகையில் இவர்களுக்கே உண்டு.
வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை பழைய மாணவர் சங்கத்தினராகிய நாங்கள் ஏறத்தாள மூன்று மாத காலமாக எமது பாடசாலையின் அதிபர் நியமனம் தொடர்பாக நிலவி வரும் குழப்ப நிலையினால் பெரிதும் வேதனையுறுகின்றோம். பொறுப்பான பதவியில் உள்ள உத்தியோகத்தர்கள் இவ்வாறாக தமது கடமையினைச் செய்யாதிருப்பது மிகவும் விரக்திக்குரியதாகும்.
யாழ்.கல்வித் திணைக்களம், மாகாணக் கல்விஅமைச்சு என்பன விடுமுறை காலத்திற்குள்ளும் நடவடிக்கை ஏடுக்காததை சுட்டிக்காட்டி ஒரு வேலைநாள் அவகாசம் அளித்து 3.9.2012 ஆம் திகதி அன்று கடிதமொன்றை வழங்கியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை,
கல்வி அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மை யாழ்ப்பாணத்தின் கல்வித் தராதரத்தினை வீழ்ச்சிக்கும், பாடசாலைகளின் நிர்வாக ஒழுங்கீனத்துக்கும் அடிகோலும், இந்த நிலைமை இன்னும் மூன்று மாதத்தில் க.பொ.த.சாதாரண தரப்பரீட்சையை எதிர்நோக்கவுள்ள மாணவர்களின் கல்வியினைப் பெரிதும் பாதிக்கும், இதனால் பாதிப்புறுவது எமது கல்லூரியின் புகழும் மாணவர்களின் கல்வித்தரமும், கல்வி அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையைச் சுட்டிக்காட்டி நாடளாவிய ரீதியில் கவனயீர்ப்பை ஏற்படுத்தல், கடந்த தவணைப் பரீட்சை விடைத்தாளைப் பார்வையிடப் பெற்றோர் அழைக்கப்படாமை, பாடசாலையில் நிறுவுனர் தினம், பரிசளிப்பு விழா உட்பட பல வருடாந்த நிகழ்வுகள் நடத்தப்படாமை, பிரதானமாக பாடசாலையில் ஆசிரியர்கள், மாணவர்களின் உள ரீதியான பாதிப்பும் நிர்வாகச் சீர்குலைவும், முறையான அதிபர் இருக்கும் போது இடமாற்றம் பெற்ற பிரதி அதிபர், அதிபர் என்ற ரீதியில் கையொப்பமிடும் ஆவணங்கள் செல்லுபடியற்றதாகும் தன்மை. இதற்கு கல்வி அதிகாரிகளும் துணை போவது கண்டிக்கத்தக்கது.
போன்ற கோரிக்கைகளையும் முன்வைத்து யாழ்.வேம்படி மகளிர் கல்லூரியின் அதிபர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு கோருகின்றோம் என்றுள்ளது.நன்றி வீரகேசரி




அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் 27ஆம் ஆண்டு நினைவுதினம்-
Tharmalingamஇலங்கை நாடாளுமன்றத்தில் 1960ம் ஆண்டுமுதல் 1983ம் ஆண்டுவரையில் தொடர்ந்து 23 ஆண்டுகள் உடுவில், மானிப்பாய் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினராக மக்களுக்கு சேவையாற்றி அவர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடத்தைப் பெற்ற விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் 27ம் ஆண்டு நினைவுதினம் நேற்று முன்தினம் 02.09.2012ல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் காலை 7.30 மணியளவில் அமரர் தர்மலிங்கம் நினைவுக்குழுவினரின் ஏற்பாட்டில் யாழ் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு மலரஞ்சலியும் தொடர்ந்து மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளுராட்சிசபை தலைவர்கள், உறுப்பினர்கள், தமிழரசுக்கட்சி பிரமுகர்கள் மற்றும் அமரரின் நெருங்கிய நண்பர்கள், அரசியல்-சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட ஆதரவாளர்களும், பெருந்திரளான பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர். பின்னர் மாலை 4.30 மணிக்கு சுன்னாகம் பொது நூல்நிலைய மண்டபத்தில் மானிப்பாய் பிரதேசசபை துணைத் தலைவர் திரு. கௌரிகாந்தன் தலைமையில் நினைவுரை நிகழ்வுகள் இடம்பெற்றன. இதில் சுன்னாகம் பிரதேசசபை தலைவர் திரு.பிரகாஷ், வலிகாமம் மேற்கு பிரதேசசபை தலைவர் திருமதி.ந.ஐங்கரன், தமிழரசுக்கட்சி இளைஞர் அணி தலைவர் கஜதீபன், வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.வை.பாலச்சந்திரன் உட்பட மானிப்பாய் தொகுதி வாழ் சமூக முக்கியஸ்தர்களும் அன்னாரின் நெருங்கிய நண்பர்கள் பலரும் அவரது புதல்வரும் புளொட் அமைப்பின் தலைவருமான திரு.த.சித்தார்த்தனும் நினைவுரைகளை ஆற்றியிருந்தனர். நன்றி தேனீ







யாத்திரிகர்கள் மீதான தாக்குதலை கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்
By General
2012-09-06 1

தமிழகத்தில் இலங்கை யாத்திரிகர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் எதிர்காலத்தில் இவ்வாறான நடவடிக்கைகள் தவிர்க்கப்படவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தும் கொழும்பு புறக்கோட்டை வர்த்தகர்கள் இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டதுடன் பேரணியொன்றையும் நடத்தினர்.


கொழும்பு, காலி முகத்திடலில் ஆரம்பமான பேரணி இந்தியத் தூதரகம் வரை சென்றது. புறக்கோட்டை வர்த்தக சங்கங்களின் சார்பாக இந்திய உயர்ஸ்தானிகருக்கு மகஜர் ஒன்றும் இதன்போது கையளிக்கப்பட்டது.
Pics By: Suranthiran









நன்றி வீரகேசரி 

நம்பிக்கையுடன் மீண்டும் வாழ்க்கையை துவக்கியுள்ளோம்: இலங்கை தமிழர்கள் திருப்தி

sltamilயாழ்ப்பாணம்: உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு, இந்தியா கட்டித் தந்துள்ள வீடுகள் வசதியாக இருப்பதாக, அங்கு வசிப்போர் தெரிவித்தனர். வீட்டைச் சுற்றியுள்ள பகுதியில், காய்கறித் தோட்டம் அமைத்து, அதை வாழ்வாதாரமாக பயன்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டு உள்ளனர்.

இலங்கையில் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு, இந்தியா, 50 ஆயிரம் வீடுகளை கட்ட உதவி அளித்து உள்ளது. இதில், முதல்கட்டமாக, 1,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன.

கால் ஏக்கரில் வீடு: இதன் ஒரு பகுதியாக, கண்டி-யாழ்ப்பாணம் "ஏ 9' நெடுஞ்சாலையில், முகமாலை அருகே, புதுக்காடு, கரந்தையில், 50 வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. ஒவ்வொரு வீடும் கால் ஏக்கர் நிலப் பரப்புக்குள் கட்டப்பட்டு உள்ளது.

இங்கு குடியேறி உள்ள, தர்மகுலசிங்கம்-யோகேஸ்வரி தம்பதியர் கூறுகையில், ""கடந்த ஆண்டு இங்கு குடியேறினோம். இந்த வீடும், இடமும் வசதியாக உள்ளன. மின் இணைப்பு இன்னும் வழங்கப்படவில்லை. அதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த பகுதிக்கு அருகே உள்ள ஊரில் தான், நாங்கள் வசித்து வந்தோம். இங்கிருந்து கொண்டே சொந்த ஊரில் வேளாண் பணிகளை துவக்கி உள்ளோம்,'' என்றனர். இவர்களைப் போல், இங்குள்ள பலர் தங்கள் சொந்த ஊர்களில், வேளாண் பணிகளை துவக்கி உள்ளனர்.

போரில் பலியான குழந்தை: இங்கு வசிக்கும், விக்னேச ராசா என்பவர் கூறுகையில், ""என் சொந்த ஊரில் காணியை குத்தகைக்கு எடுத்து, அதில் விவசாயம் செய்கிறேன். மிளகாய், சிறு பயிறுகளை பயிரிட்டுள்ளேன். என்னுடைய ஆறு மாத குழந்தை, போரில் குண்டடி பட்டு இறந்துவிட்டது. அந்த சோகம் தீரவில்லை என்றாலும், நம்பிக்கையுடன் மீண்டும் ஒரு முறை வாழ்க்கையைத் துவங்க முயல்கிறேன். இது நிறைவேறுமா என்பது, எனக்கு தெரியவில்லை. இறைவன் கையில் தான் உள்ளது,'' என்றார். ஒவ்வொரு வீட்டுமனையும், கால் ஏக்கர் பரப்பில் அமைந்து உள்ளதால், குடியிருப்போர், தோட்டங்களை அமைத்து, தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகின்றனர். தோட்டங்களில், காய்கறி, பூக்கள், சிறு தானியங்களை சாகுபடி செய்கின்றனர்.

அமைதி நீடிக்க வேண்டும்: குடிநீர் தேவைக்காக வெட்டப்பட்டுள்ள பொது கிணற்றில் இருந்து, குடத்தில் தண்ணீர் சுமந்து வந்து, சாகுபடிக்கும் பயன்படுத்துகின்றனர். இதுகுறித்து, கனகமணி தங்கராசா என்பவர் கூறுகையில், ""இறுதிகட்ட போரின் போது, முள்ளிவாய்க்கால் பகுதியில், என் கணவர் தங்கராசா குண்டு அடிபட்டு இறந்தார். அங்கேயே மண்ணைத் தோண்டி உடலைப் போட்டேன். எந்த சடங்கும் செய்வதற்கான வாய்ப்பு இல்லை. போர் முடிந்து மீள் குடியேற்றத்தின் போது, இந்தியா உதவியுடன் கட்டியுள்ள இந்த வீட்டை தந்தனர். வீடு வசதியாக உள்ளது,'' என்றார். மேலும், ""வீட்டைச் சுற்றி காய்கறித் தோட்டம் அமைக்கும் முயற்சியில் உள்ளேன். இதை ஆதாரமாக கொண்டு பிழைத்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது. பக்கத்து ஊரில் உள்ள சிதைந்து போன பழைய வீட்டை புனரமைக்கும் பணியில், என் பிள்ளைகள் ஈடுபட்டுள்ளனர். எங்கள் நிலத்தில் மீண்டும் சாகுபடி செய்யவும் முயல்கிறோம். அமைதி நீடித்தால் நாங்கள் வாழ முடியும்,'' என்றார். இங்குள்ள பெரும்பாலானோர், குடும்ப உறுப்பினர்களை போரில் இழந்து உள்ளனர். தர்மகுலசிங்கம்-யோகேஸ்வரி தம்பதியினர், தங்கள் 21 வயது மகனை இழந்தனர். இந்த காயங்கள் ஆறுவதற்கு பல ஆண்டுகள் ஆகும்.

கட்டுமானத்தில் குளறுபடிகள்: குண்டுவீச்சினால், தொடர்ந்து இடம் பெயர்ந்து கொண்டு இருந்த இவர்களுக்கு, புதிய வீடுகள், புதிய வாழ்க்கைக்கு மையமாக அமைந்து உள்ளன. நிறைகள் பல இருப்பினும், இவை இந்திய கட்டுமானம் என்பதால், சில குறைகளும் உள்ளன. கட்டுமானப் பொருட்களை பயன்படுத்துவதில் குளறுபடிகள் நடந்துள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சில வீடுகளின் கதவுகள் பெயர்ந்து நிற்கின்றன. கூரைக்கு காட்டு கம்புகளை பயன்படுத்தியதால், அவை உளுத்துவிட்டன. அதற்கு பதிலாக முற்றிய பனை மரத்தை பயன்படுத்தி இருக்கலாம். அது நீண்ட நாட்களுக்கு உழைக்கும்; செலவும் குறைந்திருக்கும் என்று, அந்த பகுதியில் வசிப்போர் தெரிவித்தனர்.
- தினமலர் -  நன்றி தேனீ 





பயங்கரவாதத்துக்கு பின்னான நல்லிணக்கம்: ஸ்ரீலங்காவின் அனுபவம்
அசங்க அபேகுணவர்தன மற்றும் றோகான் குணரத்ன
(பகுதி 1)
அறிமுகம்
உலகெங்கும் உள்ள கொள்கை மற்றும் தீர்மானம் மேற்கொள்வோர், இன மற்றும் மத சம்பந்தமான பதற்றங்கள்தான், மோதல்களாக வெடிக்கின்றன என்பதை கெட்டியாகப் பிடித்துக் கொண்டுள்ளார்கள். இன்று இன மற்றும் மத வன்முறைகள் உலகெங்கும் நடைபெறும் மோதல்களில் முக்கிய பங்கினை வகிக்கின்றன. மோதல்களில் 70 – 80 விகிதமானவை, இன மற்றும் மத சமூகங்களுக்கு எதிரான வன்முறையை சட்டபூர்வமாக்கவும் மற்றும் பிரிவினையை நாடவும் முற்படுவதை அழிவுத்தன்மையுடைய சித்தாந்தங்களே பின்னின்று இயக்குகின்றன. ஆயுத மோதல்கள் முடிவடைந்து நீண்ட காலம் கடந்தும், வீரியமுள்ள இந்த சித்தாந்தங்கள் நீடித்து வருகின்றன.
மோதல்கள் முடிவடைந்த நாடுகளில், இதேபோன்ற சித்தாந்தங்கள் விதைக்கப்பட்டு, பழிவாங்கும் நோக்கத்துடன் மோதல்கள் மீண்டும் திரும்பும் ஆபத்தை உருவாக்குகின்றன. இது ஒரு புற்றுநோய் போன்றது. இதன் புத்துயிராக்கத்தை தடுப்பதற்கு அரசாங்கங்கள் மற்றும் அதன் பங்காளிகள் ஆகியோர் மோதலுக்கான முக்கியத்துவம் குறைவடைவதற்கான முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கான மூலோபாயங்கள் போராளிகளுடைய இதயங்களையும் மனங்களையும் வெல்வதோடு, பாதிக்கப்பட்ட சமூகத்தினரோடு நட்புறவுப் பாலத்தை அமைப்பதுமே ஆகும். போராளிகளையும் மற்றும் சமூகத்தில் மிகவும் பாதிக்கப்பட்டவர்களையும் அணுகாவிட்டால் மோதலின் முக்கியத்துவம் அதிகரிக்கவே செய்யும்.
சூழல்
உலகத்திலுள்ள மிகவும் அழகான நாடுகளில் ஒன்றான ஸ்ரீலங்கா, தமிழீழ விடுதலை புலிகளுடன் (எல்.ரீ.ரீ.ஈ) மூன்று தசாப்தங்களாக போராட்டம் நடத்தியது. பயங்கரவாத மற்றும் கிளர்ச்சிக் குழுவாக பெயர் பெற்ற எல்.ரீ.ரீ.ஈ அமெரிக்கா, கனடா, ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா,மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது. எல்.ரீ.ரீ.ஈ இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டிருந்தாலும், அதனால் அரசியல் ரீதியாக தீவிரமயமாக்கி திரட்டிய மக்களை, பிரதான நீரோட்டத்துக்குள் இழுத்துவர வேண்டும். எல்.ரீ.ரீ.ஈ யின் மூலோபாயம் தமிழ் சமூகத்தினரை ஒட்டுமொத்தமாக தீவிரமயமாக்குவதாக இருந்தது. எல்.ரீ.ரீ.ஈ யின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் “எல்.ரீ.ரீ.ஈ தமிழ் மக்களைவிட வேறானதில்லை எல்.ரீ.ரீ.ஈ  மக்களின் இயக்கம். புலிகள் இயக்கம் மக்களுக்கானது, மக்கள் புலிகளுடையவர்கள்” (1) எனக் குறிப்பிட்டிருந்தார். புலிகளின் அரசியல் பிரிவின் முக்கிய அங்கத்தவர்களின் ஊடக பிரிவுகள் மற்றும் சர்வதேச செயலகம் என்பன புலிகளின் திரளான தீவிரமயமாக்கல் திட்டத்துக்கான ஆதரவு தெரிவிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தை உருவாக்கியிருந்தனர். இன்று அரசாங்கம் மற்றும் அதன் Kilinochchi-7பங்காளிகளின் மூலோபாயம் மக்களை மனிதாபிமான உதவிகள், சமூக பொருளாதார அபிவிருத்தி மற்றும் அரசியல் ஈடுபாடுகள் எனும் மூன்று வித்தியாசமான வழிகளில் ஈடுபடுத்துவதன் மூலம் அவர்களை சென்றடைவதுதான்.
அரசியல் வன்முறைகளை குறிப்பாக பயங்கரவாதம், மற்றும் எல்.ரீ.ரீ.ஈ நிலத்துக்கு கீழும் மேலுமாக கட்டமைப்புக்களை உருவாக்க மற்றும் பராமரிக்க செய்துள்ள முதலீடுகள் என்பனவற்றை நிலைநிறுத்துவதற்கு உகந்த ஒரு சூழலை உருவாக்க வேண்டும். எல்.ரீ.ரீ.ஈ யின் போராட்ட அமைப்புகள் மற்றும் கலங்கள் என்பன 2009ல் கலைக்கப் பட்டன, ஆனால் எல்.ரீ.ரீ.ஈ யின் சித்தாந்தங்கள், எஞ்சிய பிரிவுகள், மற்றும் அதன் விரிவாக்கங்கள் என்பன இன்னமும் உயிர்வாழ்கின்றன. பெருந்தொகையான தமிழ் மக்கள் எல்.ரீ.ரீ.ஈ யின் சித்தாந்தங்கள் மற்றும் செயல்பாடுகள் என்பனவற்றை விட்டு விலகிவிட்ட போதிலும், சமூகத்தின் சிறிய பகுதியினர் மற்றும் வெளிநாட்டில் உள்ள அதன் உட்கட்டமைப்புகள் என்பன உறுதியாக உள்ளன. வெளிநாட்டில் உள்ள அவைகள் ஸ்ரீலங்காவின் குற்றவியல் நீதிக்கோ அல்லது சிறைச்சாலை அமைப்புகளுக்கோ உடனடியாக எட்டக்கூடிய நிலையில் இல்லை. செயற்பாட்டு அச்சுறுத்தல்கள் அழிக்கப்பட்டுவிட்ட போதிலும் எல்.ரீ.ரீ.ஈ யின் பிரிவினைவாத சிந்தனை, வெறுப்பு மற்றும் சந்தேகம் என்பன இன்னமும் இருந்து வருகின்றன. இந்த உள்நாட்டு சவால்களுக்கு மேலதிகமாக ஸ்ரீலங்கா அநேக வெளிநாட்டு சவால்களையும் எதிர் கொள்கிறது.
உள்நாட்டில் எல்.ரீ.ரீ.ஈ அழிக்கப்பட்ட பின்னர், சர்வதேச அரங்கில் உயிர்வாழ்வதற்கும் மற்றும் போராட்டத்தை தொடர்வதற்கும் எல்.ரீ.ரீ.ஈ யின் கடை நிலைக்கு சற்று முந்திய தலைவர்கள் அதே கட்டமைப்புகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். மேற்கில் உள்ள எல்.ரீ.ரீ.ஈ யின் முன்னணி அமைப்புகள் தங்கள் பணபலத்தையும், வாக்குப்பலத்தையும் பயன்படுத்தி ஸ்ரீலங்காவை பற்றிய திரிபான ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். அவர்களில் வாஷிங்டனில் உள்ள ஒபாமாவுக்கான தமிழர்கள், நியுயார்க்கில் உள்ள தமிழீழ நாடுகடந்த அரசாங்கம், ஐக்கிய இராச்சியத்தில் உள்ள உலகத் தமிழர் பேரவை மற்றும் உலகெங்கும் உள்ள அதன் துணை அமைப்புகள் என்பனவும் அடங்கும்.
உலகத் தமிழர் பேரவை மற்றும் தமிழீழ நாடு கடந்த அரசாங்கத்தின் ஒரு பகுதியினர் ஆகியோர் பிரபாகரனின் வாரிசான நோர்வேயின் ஒஸ்லோவில் வாழும் நெடியவன் என்கிற பேரின்பநாயகம் சிவபரன் என்பவருடன் இணைந்து பணியாற்றி வருகின்றன. மேற்கில் இயங்கிவரும் எல்.ரீ.ரீ.ஈ யின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை தலைவர்கள், ஸ்ரீலங்காவில் அமைதியற்ற நிலையை உருவாக்குவதற்கும்  மற்றும் பயங்கரவாதத்துக்கு உயிர் கொடுக்கும் முயற்சியையும் உருவாக்க முயன்று வருகிறார்கள். உலகெங்கும் வாழும் மில்லியன் கணக்கான பலமான தமிழ் புலம் பெயர்ந்தவர்களிடையே உள்ள தமிழ் இளைஞர்களை அவர்கள் தீவிரமாக்க வழி தேடுகிறார்கள். இதற்கு மேலும் வட அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா, மற்றும் அவுஸ்திரேலியா என்பனவற்றை தளமாகக கொண்ட எல்.ரீ.ரீ.ஈ யின் கலங்கள், ஸ்ரீலங்காவில் நல்லிணக்கத்துக்கும் மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கும் இடையூறு செய்ய விரும்புகின்றன.
பின்புலம்
எல்.ரீ.ரீ.ஈ யுடனான அரசாங்கத்தின் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் எல்.ரீ.ரீ.ஈ ஒரு மனிதாபிமானப் பேரழிவை இயக்க முயன்றது. அப்படியான ஒரு நெருக்கடி நிலையை ஏற்படுத்தினால் மேற்கத்தைய சமூகம் நிச்யமாக தலையீடு செய்யும் என்பது எல்.ரீ.ரீ.ஈ க்குத் தெரிந்திருந்தது. பாதுகாப்பு படைகள் முன்னேறி வந்தபோது, அரசாங்கத்தால் பிரகடனப் படுத்தப்பட்டிருந்த தாக்குதலற்ற வலயத்துக்குள் தமிழ் பொதுமக்களை தங்களுடன் சேர்ந்து நகர்ந்து வருமாறு எல்.ரீ.ரீ.ஈ கட்டாயப்படுத்தியது. 2009 ன் ஆரம்பத்தில் அரசாங்கத்தால் பிரகடனப் படுத்தப்பட்டிருந்த தாக்குதலற்ற வலயத்துக்குள் எல்.ரீ.ரீ.ஈ தலைமை கிட்டத்தட்ட 300,000 சாதாரண தமிழ் பொதுமக்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தது.
மானிடப் பேரழிவை தடுப்பதற்காக பாதுகாப்பு படையினர் nanthikadal-2எல்.ரீ.ரீ.ஈ யினரின் பாதுகாப்பு அரண்களை முறியடித்து பொதுமக்கள் தொகையிரை மீட்டனர். அதேவேளை உள்ளக இடம் பெயர்ந்தவர்கள் (ஐ.டி.பி) நலன்புரி நிலையங்களிலும், எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் மறுவாழ்வு மையங்களிலும் தங்க வைக்கப்பட்டனர். தங்கள் இடங்களை கைவிட்டு பின்வாங்கிச் செல்லும்போது கட்டிடங்கள் போன்றவற்றை தகர்த்தழிக்கும் வரண்ட நிலக் கொள்கையை எல்.ரீ.ரீ.ஈ பின்பற்றியதால் அரசாங்கம், எல்.ரீ.ரீ.ஈ யின் ஆதிக்கத்தில் இருந்த பகுதிகளை புனரமைக்க வேண்டியிருந்தது. அந்தப் பிரதேசங்களில் உள்ள பொதுமக்கள் குடியிருக்காத பகுதிகளில் எல்.ரீ.ரீ.ஈ நிலக்கண்ணி வெடிகளை விதைத்திருந்தது, அரசாங்கம் தனது பங்காளர்களுடன் சேர்ந்து அவைகளை அகற்றி மனிதக் குடியிருப்புக்கு ஏற்ற வகையில் பாதுகாப்பாக மக்களிடம் வழங்க வேண்டியிருந்தது. அதற்கு மேலும்,எல்.ரீ.ரீ.ஈ பொதுமக்களிடம் அவர்களின் வீட்டுக் கூரைகளையும் கதவுகளையும் அகற்றும்படி கட்டளையிட்டிருந்ததால் அரசாங்கம் அவர்கள் வீடுகளை கட்டுவதற்கு உதவி செய்யவேண்டியிருந்தது. எல்.ரீ.ரீ.ஈ யினர் பொதுமக்களிடையே ஊடுருவி இருந்ததால் அரசாங்கம் பொதுமக்களை நன்கு வடிகட்டி எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களை மறுவாழ்வு வழங்குவதற்காக பிரித்தெடுக்க வேண்டியிருந்தது.
பல தசாப்தங்களாக நடைபெற்ற மோதலினால் முனைவாக்கம் பெற்றிருந்த ஸ்ரீலங்கா சமூகத்தை ஐக்கியப்படுத்துவதற்கு அரசாங்கம் தனியார் துறையினருடனும் மற்றும் சமூக அமைப்புடனும் அரசாங்கம் இணைந்து பங்காற்றி,பாதிக்கப்பட்ட சமூகத்தினரது இதயங்களில் நல்லிணக்கத்தை வளர்ப்பதற்காக தொடர்ச்சியாக பல திட்டங்களில் ஈடுபடவேண்டியிருந்தது. பங்காளர்களுடன் இணைந்து பணியாற்றும்போது, அரசாங்கம் பயங்கரவாதிகள் மற்றும் கிளாச்pயாளர்களின் புனர்வாழ்வினை மீளமைப்பதுடன் சாதாரண பொதுமக்களிடம் நல்லிணக்கத்தின் ஆரம்ப முயற்சிகள் சென்றடைவதிலும் கவனம் செலுத்தியது. எல்.ரீ.ரீ.ஈ க்கு எதிரான போரின் இறுதிக் கட்டத்தில் இடப் பெயர்வுக்கு உள்ளான பொதுமக்களில் ஏறக்குறைய 265,000 பேர் இரண்டரை வருட காலத்துக்குள் மீளக் குடியமர்த்தப்பட்டு விட்டனர். மீள் குடியேற்ற அமைச்சின் தகவலின்படி, 2012 மே,08 ல் 6,031பேர் மட்டுமே மீள் குடியேற்ற முகாம்களில் மீதமாக இருந்தார்கள். கைது செய்யப்பட்ட அல்லது சரணடைந்த 12,000 பயங்கரவாதிகள் மற்;றும் கிளர்ச்சியாளர்களில் 11,500 பேர்கள் புனர்வாழ்வு வழங்கப்பட்டு சமூகத்துடன் மீள இணைக்கப்பட்டுள்ளனர்.
இன்று முன்னெப்போதுமில்லாத அளவு வடக்கில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது, நாட்டின் இதர பகுதியின் 7 விகித பொருளாதார வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில், யாழ்ப்பாணத்தில் 22 விகித வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. எனினும் அரசாங்கம் அதேநேரம் தமிழ் அரசியல் கட்சிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதில் முக்கியமான சவால்களை எதிர்நோக்குகின்றது.வரலாற்று தடைகளையும் மீறி தமிழ் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த பல தமிழ் அரசியல்வாதிகள் முன்பு எல்.ரீ.ரீ.ஈயுடன் இணக்கமாக இருந்தவர்கள் உட்பட நல்லிணக்கத்துடன் வாழவே விரும்புகிறார்கள். தமிழ் அரசியல் தலைமை எனும் மரத்தை எல்.ரீ.ரீ.ஈ வெட்டிச் சாய்த்துவிட்டது,பிரதான நீரோட்டத்தில் இணையக் கூடிய தமிழ் அரசியல்வாதிகளை வளர்க்க வேண்டிய தேவை உள்ளது, விசேடமாக அனைத்து சமூகங்களுக்கும் சேவையாற்றக்கூடிய வளர்ந்து வரும் இளைய தலைவர்கள்.
மோதலில் பாதிக்கப்பட்டவர்களின் மீள் குடியேற்றம்
மனிதாபிமான உதவிகளின் கீழ் உள்ளக இடம் பெயாந்தவர்களின் மீள்குடியேற்றம் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் மீள்குடியேற்ற அமைச்சின் தலைமையில் நடைபெற்று வருகின்றPT-2து,கிழக்கின் எல்.ரீ.ரீ.ஈயினது முன்னாள் ஒருங்கிணைக்கப் பட்ட தளபதியும் முன்னாள் சிறுவர் போராளியுமாக இருந்த கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் மீள்குடியேற்ற பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார், அவர் எல்.ரீ.ரீ.ஈ யில் இருந்து பிரிந்து வந்து ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உதவித் தலைவராக இணைந்துள்ளார். இந்த அமைச்சு,தங்குமிட வசதி, சமைத்த உணவு,உலர் உணவு(ஆறுமாதங்களுக்கு மேலாக) நீர்,சுகாதார வசதிகள்,கல்வி,மற்றும் சௌக்கிய உதவிகள் என்பனவற்றை வழங்குவதில் கவனம் செலுத்தி வருகின்றது.நீண்டகால அபிவிருத்தி நிகழ்ச்சிகள் மற்றும் திட்டங்கள் என்பனவற்றுக்கான ஒழுங்கு கட்டுப்பாட்டு வழிமுறை உதவிகளை வழங்கி அவற்றை கண்காணிப்பதுடன் அதற்கு இசைவான சூழலை உருவாக்குவதற்கும் அமைச்சு உதவிவருகிறது. பாதிக்கப்பட்ட இடங்களில் சமூக பொருளாதார தேவைகளை மீளப்பெறும் நோக்கில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலைத்து நிற்கக்கூடிய வாழ்வாதார வாய்ப்புகளையும் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளையும் உருவாக்குவதில் அமைச்சு முதலீடு செய்து வருகிறது. அவையாவன நீர் வழங்கல்,சுகாதார மையங்கள், விவசாயத்ததுக்கு நீர் வழங்குவதற்காக வாய்க்கால்களையும் குளங்களையும் புனரமைத்தல்;, தொழில் திறமையை மற்றும் தொழில் பயிற்சியை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பினை இளைஞர்களுக்கு வழங்குதல்,மற்றும் பொருளாதார வலயங்கள் மற்றும் தொழில் ப+ங்கா அமைத்தல் போன்றவை.மீன்பிடிக்கும் கால்நடை வளர்ப்புக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
மீள்குடியேற்ற அமைச்சு இடம் பெயர்ந்தவர்களுக்காக புதிய நிரந்தர வீடுகளையும் கூட அமைத்துக் கொடுத்துள்ளது.இப்போது நடைபெற்று வரும் திட்டமாக வளர்ச்சித் திட்டங்களில் அடித்தள மட்டத்தை சேர்ந்தவர்களும் பங்கேற்கும் வகையிலான திட்டங்களை ஆரம்பிப்பதில் விசேட கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.2015ம் ஆண்டின் மில்லியனியம் அபிவிருத்தி இலக்கின் மாதிரி கிராமங்களை உருவாக்கும்  முழு இலக்கினை எட்டும் வகையில் பாதிக்கப்பட்ட சமூகத்தின் சுறுசுறுப்பான பங்கேற்பார்கள்; மற்றும் இதர பங்காளர்களின் உதவியுடன் மில்லியனியம் அபிவிருத்தி இலக்கின் மாதிரி கிராமங்களை உருவாக்கும் திட்டங்கள் செயலாக்கப்பட்டு வருகின்றன.
அபிவிருத்தி பங்காளிகளை கருத்தில் கொள்ளும்போது உள்ளக இடம் பெயர்ந்தோர்கள் பொருளாதார மீட்புக்கு பெரும் பங்களித்து வருகிறார்கள்.தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு அமைச்சு அதிகளவில் உதவி வருகிறது.அது உள்ளுர் மக்களுக்கு ஆதாயம்; தரும் வசதிகளை உறுதிப்படுத்தி வருகிறது.
எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களின் புனர்வாழ்வு
தேசிய நல்லிணக்க நடவடிக்கைகளின் முதற்படி  இடம் பெயர்ந்த பொதுமக்களை மீளக் குடியமர்த்தல் மற்றும் முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களுக்கு உதவி புரிதல் என்பனவாகும்.புனர்வாழ்வு பெற்ற 12,000 முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களில்,11,500 பேர் மீளக் குடியமர்த்தப்பட்டு விட்டார்கள்.ஸ்ரீலங்கா புனர்வாழ்வு நடவடிக்கை ஆறு முக்கிய பிரிவுகளைக் கொண்டது. அவையாவன :
    1)சமய மற்றும் ஆன்மீக புனர்வாழ்வு
    2)கல்வி சார்ந்த புனர்வாழ்வு
    3)தொழிற் பயிற்சி புனர்வாழ்வு
    4)சமூக மற்றும் குடும்ப புனர்வாழ்வு
    5)பொழுதுபோக்கு சம்பந்தமான புனர்வாழ்வு
    6)உளவியல் சம்பந்தமான புனர்வாழ்வு
பொதுமக்களை கொலை செய்து, பொது இடங்களில் குண்டுகளை வெடிக்க வைத்து, சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகளை தாக்கி,மற்றும் இராணுவம்,அரசியல் தலைவர்கள், மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்கள் ஆகியோரை கொலை செய்த எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களை ஸ்ரீலங்கா அரசாங்கம் எவ்வாறு கையாளப் போகிறது என்பது ஆரம்பத்தில் தெளிவற்றதாகவே இருந்தது.தண்டிக்கும் நீதியை வழங்கும் பாதையை தேர்ந்தெடுத்து எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள்மீது வழக்கு தொடுப்பதற்குப் பதிலாக,நீதியை நிலைநாட்டும் மூலோபாயம் மேற்கொள்ளப்பட்டது அதன்படி எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களுக்கு மறவாழ்வு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்கள். அன்புடன்கூடிய பரிவு வடிவ கலாச்சாரம் அங்கு உள்வாங்கப்பட்டது,எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களுக்கு வாழ்வதற்கான ஒரு இரண்டாவது சந்தர்ப்பம்; வழங்கப்பட்டதை எந்த ஒரு ஸ்ரீலங்கனும் எதிர்க்கவில்லை. சில எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் கடந்த காலங்களில் கொலைச் சம்பவங்களில் தொடர்பு பட்டிருந்தால்கூட,ஸ்ரீலங்கா அரசாங்கம் மற்றும் பெருமளவு மக்களின் பதில் அவர்களை திரும்பவும் பிரதான வாழ்க்கைக்கு கொண்டு வரவேண்டும் என்பதாகவே இருந்தது. மறுவாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் மீள ஒருங்கிணைக்கப்பட்ட முன்னாள் புலிகளில் எவரும் திரும்பவும் வன்முறையை நாடவில்லை.

சமயம் மற்றும் ஆன்மீக புனர்வாழ்வின்கீழ் பயனாளிகளுக்குப் பிரதிபலிக்கும் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் போதனைகளைக் கேட்பதுடன் சமயப் புத்தகங்களை வாசிப்பதும் தியானமும் செய்கிறார்கள். கல்விப் புனர்வாழ்வின் கீழ் பயனாளிகளுக்கு கல்வி கற்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது.அவர்களில் 60 விகிதமானோர்கள் மட்டுமே கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை மட்டும் கல்வி கற்றுள்ளோர்கள்.அவர்களில் அநேகர் கல்வியறிவற்றவர்கள்.மோதலின் முடிவில் தவறாக வழி நடத்தப்பட்ட இந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் கல்வி கற்று,உற்பத்தி திறனுள்ளவர்களாக தங்களை மாற்றிக் கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டன. பல வழிகளிலும் இந்த புனர்வாழ்வு மையங்கள் கல்வி பயில்விக்கும் நிறுவனங்களாகவே மாறியுள்ளன.

forl-712,000 தமிழ் புலிகளில் சுமார் 500 பேர் வரை 18 வயதுக்கு கீழ்பட்ட சிறுவாகள். ஸ்ரீலங்கா அரசாங்கம் அவர்களுக்கு கல்வி பயிலும் வாய்ப்பினை வழங்கியது.தொழிற் பயிற்சியை விரும்பியவர்களைத் தவிர,அநேகமாக அனைவரும் கொழும்புக்கு அருகில் உள்ள மதிப்பு மிக்க பாடசாலையான இரத்மலான இந்துக் கல்லூரியில் சேர்க்கப்பட்டார்கள். சிறிதளவு பிள்ளைகள் பல்கலைக்கழக படிப்புக்கும் தகுதி பெற்றார்கள்.அவர்களில் சிலர் பல்கலைக்கழகங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கும் அனுமதி பெற்றனர்.தொழிற் பயிற்சி திட்டத்தின்கீழ்,அவர்களுக்கு புதிய தொழில்களில் சந்தர்ப்பம் வழங்குவதில் தனியார் துறையினர் மிக முக்கியமான பங்கினை வகித்தார்கள். சமூக மற்றும் குடும்ப புனர்வாழ்வின்கீழ்,குடும்ப அங்கத்தவர்களின் வருகைகள்; உட்பட அவர்களுடன் தொடர்புகள் மேற்கொள்ளப்பட்டன. பொழுதுபோக்கு புனர்வாழ்வு திட்டத்தின் கீழ் பயனாளிகள் விளையாட்டுகளைக் கற்றதுடன் விளையாடியும் வந்தனர்.பல்வேறுபட்ட இனக்குழுவின் அங்கத்தவர்களுடன் இணைந்து கலப்பு குழுவாக அவாகள் விளையாடினார்கள், அதனால் அவர்களுக்கிடையில் புதிய நட்புறவு மலர்ந்தது.உளவியல் புனர்வாழ்வின் கீழ் பயனாளிகள் படைப்புக் கலை மற்றும் வழிகாட்டுதல் திட்டங்களில் ஈடுபட்டனர். அரசாங்கத்தில் மற்றும் தனியார் துறைகளில் , பொழுதுபோக்கு மற்றும் ஊடககங்கள் போன்ற துறைகளில் உள்ள மிக முக்கியமான அங்கத்தவர்கள் வந்து பயனாளிகளுக்கு பாடம் நடத்தினார்கள்.அவர்களது சொந்த இனம் மற்றும் சமயங்களில் உள்ள முன்மாதிரியானவர்கள் அவர்களுக்கு நம்பிக்கைகளை ஏற்படுத்தினார்கள். ஸ்ரீலங்கா இராணுவத்தால் நடத்தப்படும் குறைந்த செலவிலான புனர்வாழ்வுத் திட்டங்களுக்கு சர்வதேச குடியேற்றத்துக்கான அமைப்பு (ஐ.ஓ.எம்),யுனிசெப் ,மற்றும் பல மேற்கு நாடுகளையும் மற்றும் இதர நாடுகளையும் சேர்ந்த அமைப்புகள் உதவிகளை வழங்கின.
நல்லிணக்கத்துக்கான பங்காளர்கள்

எல்.ரீ.ரீ.ஈ யினை தோற்கடித்த பின்னர் ஸ்ரீலங்கா அரசாங்கம் பன்முகத் தன்மையுள்ள ஒரு நல்லிணக்க முயற்சியை ஆரம்பித்தது.இதற்கான ஆரம்ப முயற்சிகளுக்கு, நல்லிணக்கத்துக்கான ஜனாதிபதியின் ஆலோசகரின் அலுவலகத்திலுள்ள தேசிய நல்லிணக்க பிரிவு,சர்வதேச உறவுகள் மற்றும் மூலோபாயக் கற்கைகளுக்காக லக்ஸ்மன் கதிர்காமர் நிறுவனம்,மற்றும் பல அங்கங்களும் பொறுப்பு வகித்தன. சமாதான நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்பு செயலகத்தின் செயலாளர் நாயகம்,அதேபோல.அழிவு மேலாண்மை மற்றும் மனித உரிமைகள் அமைச்சகத்தின் செயலாளருமாக பதவி வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினரான பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க நல்லிணக்கத்தக்கான ஜனாதிபதியின் ஆலோசகராக (2) நியமிக்கப்பட்டார். தேசிய நல்லிணக்க பிரிவினரின் தலைமையில் நல்லிணக்கம் பற்றிய நூற்றுக்கும் மேற்பட்ட நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன.

12 ஆகஸ்ட் 2005ல் எல்.ரீ.ரீ.ஈ யினால் கொலை செய்யப்பட்ட ஸ்ரீலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரை கௌரவிக்கும் வகையில் கதிர்காமர் மையம் என பெயர் சூட்டப்பட்ட மையத்துக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களில் ஒரு பகுதி நல்லிணக்கத்தை ஏற்படுத்தவதற்குரியதாகும்.எல்லோராலும் மிகவும் நேசிக்கப்பட்ட ஸ்ரீலங்கா தமிழரான திரு.கதிர்காமரின் கருத்துகள் ஸ்ரீலங்காவிலுள்ள சகல சமூகங்களும் கண்ணியத்துடன் சமமாக வாழவேண்டும் என்பதாக இருந்தது. சமூகத்தின் பல்வேறு பிரிவினரிடையே நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்காக,(3) கதிர்காமர் நிறுவனம் தொடர்ச்சியான பல நிகழ்வுகளை நடத்தியது.அந்த நிறுவனம் உருவாக்கிய பிரிவுகள் 1.வர்த்தகம், 2.கல்வி, 3.உயர் கல்வி, 4.ஊடகம், 5. சமயம், 6. சமூகம், 7. வாலிபம், 8. புலம் பெயர்வு, 9. பெண்கள்,10. விளையாட்டு,11. அரசியல் கட்சிகள்,12.பாதுகாப்பு படைகள்,13.புனர்வாழ்வு, 14. தொழிற் சங்கங்கள்,15.தகவல் தொழில் நுட்பம்,16. சர்வதேச தொண்டு நிறுவனங்கள்,17. கலை மற்றும் கலாச்சாரம் என்பன.

24 நவம்பர் 2011ல் கதிர்காமர் நிறுவனம் அதன் ஆரம்ப மாநாடாக,நல்லிணக்க தேசிய மாநாட்டை நடத்தியது. அதை தொடர்ந்து விசேட கருத்துகளின் தேசிய நல்லிணக்க மாநாடு இடம் பெற்றது. உதாரணத்தக்கு நல்லிணக்கத்தில் வர்த்தக சமூகத்தின் பங்கு எனும்  26 பெப்ரவரி 2012ல் நடந்த மாநாடு முக்கியமாக வடக்கு மற்றறும் கிழக்கில்  முதலீடு செய்துள்ள மற்றும் சமகாலத்தில் முதலீடு செய்துவரும முக்கிய வர்த்தகத் தலைவர்களை ஒன்று சேர்க்கின்றது. கதிர்காமர் நிறுவனம் மேலும் கல்வியில் நல்லிணக்கத்தின் பங்கினைப்பற்றிய மாநாடு 13 மார்ச் 2012ல் நடந்தது,அதில் வடக்கு மற்றும் தெற்கு பாடசாலைகளிடையே பரிமாற்றத் திட்டங்களை பயன்படுத்திய பாடசாலைகள் உட்பட பல்வேறு பாடசாலைகளின் அதிபர்கள் பங்கேற்றார்கள்,அதில் திருக்குடும்ப கன்னியர்மட முன்னாள் அதிபர் சகோதரி. கனிஸ் பெர்ணாண்டோ,ஸகிரா கல்லூரியின் முன்னாள் அதிபர் திரு.ஜாவேட் ய+சுப் மற்றும் மகளிர் கல்லூரி அதிபர், திருமதி.நிர்மலி விக்கிரமசிங்க என்பவாகளும் உட்படுவார்கள். பல்வேறு இன மற்று சமய சமூகங்களை சேர்ந்த சிறுவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் முன்மாதிரியாக திகழ்ந்தவர்கள்.

 நன்றி தேனீ    (தொடரும்)

No comments: