உலகச் செய்திகள்


 ஈரான் மீது அமெரிக்க மேலும் பொருளாதாரத் தடை
 1/8/2012
  ஈரான் மீது அமெரிக்கா மேலும் ஒரு புதிய பொருளாதாரத்தடையை விதித்துள்ளது.

இதனால் அந்நாட்டு எண்ணெய் ஏற்றுமதி மற்றும் எரிசக்தி்த்துறைகள் பெரும் இழப்பீட்டை சந்திக்க உள்ளதாக அவதானிகள் எச்சரித்துள்ளனர்.

அணு ஆயுதங்கள் தயாரிப்பதாகவும், அணுசோதனை நடத்துவதாகவும் ஈரான் மீது அமெரிக்கா ‌பல்வேறு பொருளாதாரத்தடையை விதித்தது.

இதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் ஆதரவளித்துள்ளன.

இந்நிலையில் புதிய தடையையும் விதித்துள்ளது.

இது குறி்த்து அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூறுகையில், ஈரான் மீது ஏற்கனவே பொருளாதாத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது இ‌தனை நீட்டித்தும், எண்ணெய் வர்த்தகம் மீதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஈரானின் பெட்றோலியப் பொருட்களை வாங்கதலும்,இறக்குமதி செய்தலும் நிறுத்தி வைக்கப்படுகிறது என்றார்.

அமெரிக்காவின் இந்த முடிவு ஈரானுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இந்நடவடிக்கை சீனா கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது. 
நன்றி வீரகேசரி  

No comments: