குட்டிக் கதை ஒன்று..

.
ஒரு நாள் உடல் உறுப்புகள் எல்லாம் ஒன்று சேர்ந்த வயிற்றைப் பற்றிக் குறைபேசிக்கொண்டிருந்தன.
என்னடா இது நாமெல்லாம் உழைக்க இந்த வயிறு மட்டும் எந்த வேலையும் செய்யாமல் உண்டு உண்டு வயிறுவளர்க்கிறதே என்று..
இந்த சத்தம் வயிற்றுக்கும் கேட்டது. 

வயிறு உடல் உறுப்புகளைப் பார்த்துக் கேட்டது..
'ஏம்பா என்னை எல்லோரும் சேர்ந்து திட்டுறீங்க? நான் என்ன எந்த வேலையுமே செய்யாமலா இருக்கிறேன்..

நானும்தான் வேலை செய்கிறேன்என்றது..
அதற்கு எல்லா உறுப்புகளும் ஒன்று சேர்ந்து சத்தமிட்டன..
ஆமாமா... நீயும் உழைப்பது உன் தொப்பையைப் பார்த்தாலே தெரியுதே என்று..

நாங்களெல்லாம் சேர்ந்து ஒரு முடிவெடுத்திருக்கிறோம் என்றது தொண்டை 

என்ன என்று அச்சத்தோடு கேட்டது வயிறு..

உதடுகள் பேசின..

இனிமேல் நாங்களும் உனக்காக உழைக்கப்போவதில்லை! நீ எப்படி வயிறு வளர்க்கிறாய் என்பதைத்தான் பார்க்கப்போகிறோம் என்று..
வயிறு எதுவும் பேசவில்லை... அமைதியாக இருந்தது.

நாட்கள் சில சென்றன..

உணவு உட்கொள்ளாததால் ...


கண்கள் ஒளி மங்கின!
நாக்கும் உதடுகள் உலர்ந்து போயின!
கைகளும் கால்களும் அசைய மறுத்தன!
சீரண உறுப்புகள் உல்லாம் மரண ஓலமிட்டன!
வயிறு மட்டும் உறுப்புகளைப் பார்த்துச் சத்தம் போட்டுச் சிரித்தது!

அப்போது மூளை வந்து கட்டளையிட்டது..

'சரி சரி சண்டை போடாதீங்கப்பா'என்று

இந்தக் கதை சுட்டும் வயிறு தான் நம் நாடு
உடல் உறுப்புகள் தான் நாம் என்று புரிந்துகொண்டால் சண்டைகளுக்கான காரணம் என்ன என்பது விளங்கும்...

நன்றி:gunathamizh.blogspot

No comments: