உலக சைவப் பேரவை அவுஸ்திரேலியா விடுத்துள்ள அறிவித்தல்

.
திருமுறை முற்றோதல்


07.11.2010 ஞாயிற்றுக்கிழமை

உலக சைவப் பேரவை அவுஸ்த்திரேலியாக் கிளையின் மாதாந்த திருமுறை முற்றோதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 07.11.2010 காலை 10.30 மணி முதல் 12.30 மணிவரை நடைபெறவுள்ளது. அன்று காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை திருவடித் திருத்தாண்டகத்தில் திருஅதிகை பதிகத்திற்கு (ஆறாம் திருமுறை ஆறாம் பதிகம்) திருமதி பாலம் லக்ஷ்மணன் அவர்களால் விளக்கம் கூறப்பட்டு பின்னர் ஆறாம் திருமுறையில் பத்தாம் பதிகம் தொடக்கம் திருமுறைப்பாடல்கள் கூட்டுவழிபாட்டு முறையில் பாராயணம் செய்யப்படவுள்ளன.

சிவநேயச்செல்வர்கள் அனைவரையும் இவ்வழிபாட்டில் கலந்து எமது வாழ்நாளில் பன்னிரு திருமுறைகளிலும் உள்ள 18இ000 இற்கு மேற்பட்ட பாடல்களையும் ஓதி வழிபட்டு திருவருள் பெறுமாறு உலக சைவப் பேரவையின் அவுஸ்திரேலியாக் கிளை கேட்டுக்கொள்கின்றது.

இடம்: ஹோம்புஷ் ஆரம்ப பாடசாலை
(Cnr Burlington Rd & Rochester St), Homebush)

நேரம்: 07.11.10 ஞாயிற்றுக்கிழமை

காலை 9.15 முதல் 10.15 வரை

திருஅதிகை பதிக விளக்கம்

(திருமதி பாலம் லக்ஷ்மணன் அவர்கள்)

காலை 10.30 முதல் 12.30 வரை

திருமுறை முற்றோதல் மேலதிக விபரங்களுக்கு:

திரு க சபாநாதன் Tel: 96427767
திரு சி சிவஞானசுந்தரம் Tel: 96425406
திரு மா அருச்சுனமணி Tel: 87460635

No comments: